கொழும்பு: அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்ய சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளார். சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக, அவரது ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றும் தீவிரவாதத்தை தூண்டுகின்ற அமைப்புகளாக கருதப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம் (JMI) மற்றும் விலாயத் அஸ்செய்லானி ஆகிய அமைப்புகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு அது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அமைப்புகள் வருமாறு,
1. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)
2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)
3. ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ)
4. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)
5. ஜம்மியதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா (JASM)
6. தாருல் அதார் @ ஜாமிஉல் அதார் (Dharul Adhar @ Jamiul Adhar)
7. ஶ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM)
8. ISIS (Islamic State of Iraq & Syria)
9. AL-Qaeda
10. Save the Pearls
11. Super Muslim
1. United Thawheed Jamma ‘ath – UTJ
2. Ceylon Thawheed Jamma ‘ath – CTJ
3. Srilanka Thawheed Jamma ‘ath – SLTJ
4. All Ceylon Thawheed Jamma ‘ath – ACTJ
5. JamiyathuI Ansaari Sunnaththul Mohomadiya – JASM
6. Dharul Adhar @ Jamiul Adhar
7. Srilanka Islamic Student Movement- SLISM
8. Islamic State of Iraq & Syria – ISIS
9. AL-Qaeda
10. Save the Pearls
11. Super Muslim