This is your ….
Politics free website,
No site supports,
Truth and trusted news only.
Web: http://www.yourkattankudy.com
E-Mail: yourkattankudy@gmail.com
Web Since: 04/02/2012
Thank you for contact us
This is your ….
Politics free website,
No site supports,
Truth and trusted news only.
Web: http://www.yourkattankudy.com
E-Mail: yourkattankudy@gmail.com
Web Since: 04/02/2012
Thank you for contact us
காத்தான்குடி மீடியாக்களின் கவனத்துக்கு :
காத்தான்குடி மீடியா பேரங்கள் (வாரஉரைகல் உட்பட ) சஜி நஜீதா விவாகாரத்தை பூதாகரமாக்கி -அப்பெண்ணை ஒரு சந்தைப்பொருளாக்கி சேறுபூசிவிட்டனர்.
அதுமட்டுமல்ல, ஊரில் ,வெளியே தலை காட்டமுடியாத அளவுக்கு அப்பெண்ணுக்கும் ,அவர் குடும்பத்தினருக்கும் கீழ்த்தரமான ஒரு அவப் பெயரை உருவாக்கிய முழுப்பொறுப்பும் காத்தான்குடி மீடியாக்களையே சாரும் இதனை மறுக்க முடியாது ,பொறுப்பெற்றே ஆகவேண்டும் –
இது மிக்க கவலைதரும் விடயமாகும் ,இது பத்திரிக்கை தர்மமல்ல என்பதை சொல்லிக்காட்ட வேண்டுமா ?
பேனாவின் வலிமையை அறிந்துள்ள நீங்கள் ,ஏன் ?அதன் கூர்மையை உணரவில்லை
மாறாக ,சென்ற காலங்களில்
அமைச்சரின் மகனின் விவகாரமோ,வாத்தியாரின் விளையாட்டோ ,பல ஊழல் செய்திகள் ,பள்ளிவாசல் விவகாரம் ,ஹஜ் உம்ரா விவாகாரங்கள் ,வீடுபுகுந்து ஒரு பெண்ணை அடித்து தாக்கிய விவகாரங்களெல்லாம் ஓரிரு தடவைகள் எழுதியதுடன் நின்றுவிட்டது
காரணம் பயமா ? இல்லை ஒப்பந்தங்களாகிவிட்டதாலா ?
(நம்பமுடியாத கூட்டங்கள் தானே இந்த மீடியாக்கள் -பக்கச்சார்பே இந்த மீடியாக்களின் பிழைப்பு ஆகிவிட்டது )
இவ்விடயம், கருத்தில்கொண்டு தவிர்க்கப்பட வேண்டியாதாகும் -அத்துடன் பத்திரிக்கை தர்மமுமாகும்
அப்பெண்ணை சஜி க்குஇருவருக்குமான தண்டனையின் பின் மணம் முடித்துகொடுத்திருக்க ஆதரித்திருக்க வேண்டும் ,ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும் ,அதை விட்டுவிட்டு ………… உலக தமிழ்பேசும் இனத்துக்கு நஜீதாவை ஒரு வேசியைப்போல காட்டிவிட்டீர்கள்
இதுதான் உங்கள் தர்மமா?
தப்புநடந்திருக்கலாம் ,அதற்காக உங்கள் குருதியில் பிறந்த பெண்ணை ,உங்களின் பிழைப்பு ஆக்கிகொண்டீர்களே ,இது வேறாக புரியவில்லை ?
நஜீதா, ஒரு பெண் என்பதை மறந்து விட்ட காத்தான்குடி மீடியாக்கள்
இந்த நஜீதா இந்த காத்தான்குடி மீடியாக்களின் உடன்பிறந்த சகோதரியாக,மகளாக இருந்திருந்தால் பிரசுரித்திருப்பீர்களா ?
காத்தான்குடி மிடியாக்களே இனிமேலாவது ,
நல்லதை செய்வதே நல்லது ,
உதவிசெய்ய வக்கில்லாவிட்டால் உபத்திரவம் செய்யாமல் இருங்கள்
இதுகூட சமூகத்துக்கு செய்யும் உங்களின் பேருதவியாகும் .
இஃது
ameernawas ஓமான்
VAALTHTHUKKAL UNKAL PANI THODARATTUM>>>>>>>>>>>>>>>>>>>>>>>
I will be also join in your organization & i Wii be start this this organization in Andhra pradesh in anantapur because of muslims is very poor no one can help us iam also helping my self