පොදු අනුභූතිය பொது அறிவுகள் GENERAL KNOWLEDGE
பொதுவான விடயங்களே இங்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசியல், விளையாட்டு மற்றும் மேலதிக பொது அறிவுகளையும் தகவல்களையும் உரிய பக்கங்களில் சென்று பெற்றுக்கொள்க.
விமான ஜன்னல்கள் கோள வடிவில் வடிவமைக்கப்படுவது ஏன்?
https://yourkattankudy.com/2018/04/27/plane-technology-2/
விமானத்தில் பிராணவாயு எங்கிருந்து கிடைக்கிறது
https://yourkattankudy.com/2018/04/26/plane-technology/
பூமியில் 11.7 கோடி ஏரிகள்
பூமியில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 11.7 கோடி என சுவீடனைச் சேர்ந்த பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.
சுவீடனின் உமேயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் விஞ்ஞானி டேவிட் ஸீகெல், உலகிலுள்ள ஏரிகளின் எண்ணிக்கை குறித்து வேறு சில ஆராய்ச்சியாளர்களுடன் நடத்திய ஆய்வு முடிவுகள் ஜpயோஃபிஸிகல் ரிஸர்ச் லெட்டர்ஸ் எனும் புவியியல் ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ள விவரம்:
உலகிலுள்ள ஏரிகளில் பெரும்பாலானவை பூமியின் வட பகுதியில் உள்ளன. தென் பகுதியில் நிலப்பகுதி குறைவென்பதால் ஏரிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது.
பூமியில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 11.7 கோடி எனத் தெரிய வந்துள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த பரப்பளவு 50 இலட்சம் சதுர கிலோ மீட்டராகும். இவை பூமியில் 3.7 சதவீத இடத்தைப் பிடித்துள்ளன. ஒன்பது கோடி ஏரிகள் அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை பரப்புள்ளவை.
செயற்கைக்கோள் மூலமாகப் பெறப்பட்ட படங்களை சுப்பர் கம்ப்யூட்டர்கள் கொண்டு ஆய்வு செய்து இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் அன்டார்டிகா, கிரீன்லேண்ட் ஆகிய பகுதிகள் உட்படுத்தப்படவில்லை. உலகின் மிகப் பெரிய ஏரி எனக் கருதக் கூடிய கஸ்பியன் கடல் இந்த ஆய்வில் குறிப்பிடப்படவில்லை. கஸ்பியன் கடலின் பரப்பு 3,71,000 சதுர கிலோ மீட்டராகும்.
பிரமாண்டமான விமானங்களை வீழ்த்தும் பறவைகள்!
தூசிஅளவான எறும்பினால் மிகப் பெரிய யானையையே அசைக்க முடிகிறது. இது எந்தளவு அதிசயமோ அதேபோல் தான் சிறிய பறவையினால் பிரமாண்டமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகும் தகவலும் நம்பமுடியாத உண்மையாகிவிட்டது.
வருடாந்தம் பறவைகள் மோதி விமானங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் பதிவாகின்றன. புறா, காகம், மயில், பருந்து என பல்வேறு பறவைகளினால் விமான விபத்துக்கள் சம்பவிக்கின்றன.
முதல் விபத்து
முதலில் பதிவான இப்படிப்பட்ட ஒரு விபத்து 1912ல் கலிஃபோர்னியாவில் நடந்தது. கடல் காகம் (சீகல்) பறவை ஒன்று மோதி விமானம் பாதிப்படையஇ விமான ஓட்டிகள் மரணமடைந்தனர். பறவையால் விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழந்தது அதுவே முதன்முறை.
பெரும்பாலும் விமானம் தரைத் தளத்துக்கு அருகில் வரும் போதுதான் (புறப்படும் நேரத்திலும். வந்துசேரும் நேரத்திலும்) பறவைகள் அவற்றின் மீது மோதுகின்றன. அமெரிக்காவில் மட்டுமே சென்ற ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளால் விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
சமீபகாலமாகப் பறவைகளுக்கும் அலுமினியப் பறவைகளுக்கும் நடக்கும் இந்த விபத்துக்கள் அதிகமாகி வருவதற்குப் பல காரணங்கள். விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது முக்கிய காரணம்.
தொழில்நுட்பக் காரணம்
தவிர பழைய விமானங்களில் பிஸ்டன் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை இயக்கும்போது (விமானத்தின் முன் பின் புறங்களில்) அதிக சப்தம் உருவாகும். இதனால் தங்களை அணுகும் ஆபத்தை உணர்ந்து பறவைகள் விலகிச் செல்ல வாய்ய்பு இருந்தது. தவிர விமானத்தின் மீது பறவை மோதினாலும் விமானத்தின் பிஸ்டன் இன்ஜின் அருகே பொருத்தப்பட்டுள்ள புரொபெல்லர்கள் சுற்றிக்கொண்டே இருப்பதால். பறவையின் ஒரு பகுதியை அவை வெட்டிவிடும். அல்லது பறவையை அந்த இடத்திலிருந்து தள்ளிவிடும். இதனால் விமானத்துக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தது.
ஆனால் ஜெட் இன்ஜின்கள் அறிமுகமான பிறகு காட்சிகள் மாறின. இவற்றின் வேகம் அதிகம். எழுப்பும் ஒலியோ மிகக் குறைவு. தவிர ஜெட் இன்ஜின்கள் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. எனவே இவை காற்றோடு பறவையையும் உள்ளே உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் இன்ஜின் திடீரெனச் செயலிழந்துவிடும் ஆபத்து உருவாகிறது.
சில சமயம் இன்ஜினில் உள்ள விசிறியின் இறக்கை மீது பறவை வேகமாக மோதும்போது. அந்த இறக்கை நகர்ந்து அருகிலுள்ள மற்றொரு இறக்கையின் விசையுடன் மோதலாம். இந்தக் காரணங்களால் மொத்த விமானமும் நிலைகுலைந்து விழுந்து பயணிகள் இறந்த சம்பவங்களும் உண்டு.
பறவை நடமாட்டம்
பொதுவாகவே விமான நிலையங்களில் பறவைகள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதி பெரும்பாலும் புறநகர் பகுதியாக இருக்கும். கடுமையான இடநெருக்கடி கொண்ட நகரங்களைவிட புறநர் பகுதிகளில் வசிப்பதையே பறவைகளும் விரும்புகின்றன. தவிர விமான நிலையங்களுக்கு அருகே குளங்கள்இ கால்வாய்கள் போன்ற நீர் நிலைகள் இருப்பது சாதாரணமாக உள்ளது. மேலும் விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் சில பகுதிகள் குப்பை கொட்டப்படும் இடங்களாகவும் இருப்பதுண்டு. அதிலுள்ள கழிவுகள் இறைச்சித் துண்டுகள்இ அப்பகுதிகளுக்கு வந்து சேரும் பூச்சிகளை உண்பதற்காகவும் பறவைகள் அங்கேயே வட்டமடிக்கின்றன.
விமானத் தளங்களில் பறவை நடமாட்டம் அதிகமாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அங்கிருந்து சுற்றுப்புறம் முழுவதும் பரந்து விரிந்து பளிச்சென்று தெரிகிறது. எனவே இரைகொல்லிப் பறவை தாக்க வந்தால் இரைப் பறவையால் உடனடியாகத் தப்பித்துவிட முடியும். இந்த வசதியாலும் விமானத் தளங்களைப் பறவைகள் அதிகம் நாடுகின்றன.
விரட்டும் நடவடிக்கைகள்
ஆனால். இந்தப் பறவைகளை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பலவும் இயற்கைக்கு முரணானவை. விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மரம்இ செடிகளை அப்புறப்படுத்துகிறார்கள். இதன் மூலம் பறவைகளுக்குத் தேவையான உணவு குறைகிறது. அவை கூடு கட்டுவதற்கான இடங்களும் அழிக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் பூச்சி மருந்துகளை ஏராளமாக அடிக்கிறார்கள். இதன் மூலமாகவும் பறவைகளின் உணவு (பூச்சிகள்) அழிக்கப்படுகின்றன.
பறவைகளுடைய எதிரிகளின் குரல்களைப் பதிவு செய்து அவ்வப்போது ஒலிக்கவிடுவதன் மூலம் பறவைகளை மிரண்டு ஓடச் செய்கிறார்கள். வெடி வெடித்தும் இதைச் சாதிக்கிறார்கள்.
பறவைகள் தங்கள் தினசரி இரை தேடலைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் வைத்துக்கொள்ளும். அந்த நேரங்களில் விமானம் புறப்படவோ வந்து சேரவோ இல்லாதபடி அவற்றின் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்.
ஆய கலைகளை அறுபத்து நான்கு என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவை எது என பலருக்கு தெரியாது. அவைகளின் பட்டியல்:
உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா.
ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக்கொள்ளும் மருந்து உண்ணும் உணவுகளே இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச் சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும், மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏயும் அதன் வேர்களில் வைட்டமின் சீயும் இருக்கின்றன.
கீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலி ஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.
இரும்புச் சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை. உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச் சத்து இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரீச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.
பாதாம்: இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுஸ்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.
பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசனி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும். மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.
வருடத்தின் பெரும் பகுதிக்காலம் இருண்டு கிடக்கும் தென்துருவம்
தென் துருவம் (South Pole) என்பது, புவியின் தென் அரைக்கோளத்தில் உள்ள அதன் சுழல் அச்சும், மேற்பரப்பும் சந்திக்கும் புள்ளியைக் குறிக்கும். இதை புவியியல் தென் துருவம் என்றும் புவிசார் தென் துருவம் என்றும் அழைப்பதுண்டு.
இது புவியின் தென் அரைக்கோளத்தின் தென் கோடியில் அமைந்துள்ள புள்ளியாகும். இது வட துருவத்துக்கு நேர் எதிரே, அண்டார்ட்டிக்கா கண்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 1956 இல் ஐக்கிய அமெரிக்கா, அமுண்ட்சென் – ஸ்கொட் தென் துருவ நிலையம் எனும் நிரந்தரமான நிலையம் ஒன்றை அமைத்தது. அன்று முதல் இந்நிலையத்தில் பணியாட்கள் நிரந்தரமாக பணிபுரிகின்றனர்.
சடங்கார்ந்த தென் முனையம் என்பது ஒளிப்படங்கள் எடுப்பதற்காக தென் முனைய நிலையத்தில் குறிக்கப்பட்டுள்ள இடமாகும். இது புவிசார் தென்முனையத்திலிருந்து சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஓர் அடிப்பீடத்தின் மேல் உலோக கோளமொன்றும் அதனைச் சுற்றி அண்டார்ட்டிக்கா உடன்பாட்டில் ஒப்பமிட்டுள்ள நாடுகளின் கொடிகளும் நாட்டப்பட்டுள்ளன.
தென் துருவத்தை எட்டுவது மிகவும் கடினமான செயலாகும். பெருங்கடற் பகுதியாக உள்ள வட துருவத்தைப் போலன்றி தென் துருவம் மலைப்பாங்கான கண்டப்பகுதியாகும். மேலும் மிகவும் உயரத்தில் புயல் காற்று நிலவும் இடத்தில் அமைந்துள்ளது. மனிதர்கள் வாழும் பகுதிகளிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது.
அண்மையிலுள்ள கடற்பகுதியிலிருந்து நில ஆய்வாளர்கள் ஆயிரம் மைல்களுக்கும் மேலாக பனிபடர்ந்த நிலப்பகுதியில் மலையேற்றங்கள் நடத்தி பீடபூமியை அடைய வேண்டும். இதனால் இப்பகுதிக்கு ஆய்வுக்கு பல நூற்றாண்டுகளாக யாரும் செல்லவில்லை.
1820 இல், புவி ஆய்வாளர்கள் முதன் முதலாக அண்டார்டிக்கா கண்டத்தை கண்டறிந்தனர். இவர்களில் முதலாவதாக ரஷ்யாவைச் சேர்ந்த ஃபாடி பெல்லிங்சாசென், மிக்கைல் லொசரெவ் அடங்கிய குழுவினர் இருந்தனர். ஓராண்டு கழித்து அமெரிக்கரான ஜோன் டேவிஸ் இக்கண்டத்தில் காலடி பதித்த முதலாமவராக சாதனை படைத்தார்.
அண்டார்ட்டிக்கா கடற்கரையின் புவியியலை 19வது நூற்றாண்டின் பிற்பகுதி வரை யாரும் புரிந்துகொள்ளவில்லை. 1839 – 40 இல் அங்கு தேடலாய்வு நிகழ்த்திய அமெரிக்க கடற்படை அதிகாரி சார்ள்ஸ் வில்க்ஸ் அண்டார்ட்டிக்காவைத் தனி கண்டமாக அறிவித்தார். மாறாக 1839 – 43 இல் இங்கு தேடலாய்வு நிகழ்த்திய ஜேம்ஸ் கிளார்க்கு ரோசு தென்துருவம் வரை தன்னால் கப்பலிலேயே செல்ல முடியும் என்று நம்பி தனது முயற்சியில் தோல்வியடைந்தார்.
1901 – 04 இல் பிரித்தானிய தேடலாளர் ரெபேட் பால்கன் இஸ்காட் முதன் முதலாக அண்டார்டிகா கடற்கரையிலிருந்து தென் துருவம் வரையான வழித்தடம் ஒன்றை கண்டறிய முயன்றார். எர்னெசுட் சாக்கெல்டனுடனும் எட்வர்ட் வில்சனுடனும் இணைந்து தெற்கில் எவ்வளவு தொலைவு செல்ல முடியுமோ அவ்வளவு செல்லலாம் எனத் துவங்கினார் எனினும் தோல்வியுடன் திரும்பினர்.
புவிசார் தென் முனையத்தை அடைந்த முதல் மனிதர்களாக நோர்வேயின் அமுன்சென்னின் குழுவினர் டிசம்பர் 14, 1911 இல் சாதனை புரிந்தனர். அமுன்சென் தாம் தங்கியிருந்த இடத்தை போல்ஹைம் எனப் பெயரிட்டார். இவ்விடத்தைச் சுற்றிய புவிப்பகுதிக்கு நோர்வேயின் மன்னர் ஹாக்கோன் Vயியி நினைவாக ‘மன்னர் ஹாக்கோன் Vயியி விட்டே எனப் பெயரிட்டார்.
ரொபர்ட் பால்கன் இஸ்காட்டும் மீண்டும் தனது இரண்டாவது முயற்சியாகவும் அமுன்சென்னுக்குப் போட்டியாகவும் துருவத் தேடலில் இறங்கினார். இஸ்காட்டும் அவரது நான்கு நண்பர்களும் ஜனவரி 17, 1912 அன்று, அமுன்சென் துருவத்தை எட்டிய 34 வது நாளில், தென் துருவத்தை அடைந்தனர். அவர்கள் நால்வருமே திரும்புகையில் பசியாலும் மிகுந்த குளிராலும் மடிந்தனர்.
1914 இல் எர்னெஸ்ட் சாக்கெல்டன் தென் முனையத்தின் வழியாக அண்டார்க்காவை கடக்க முயற்சித்தார். ஆனால் அவரது கப்பல் 11 மாதங்களுக்குப் பிறகு கடற்பனியில் உறைந்து மூழ்கியது. நிலப்பரப்பின் மீதான பயணம் மேற்கொள்ளப்படவில்லை.
அமெரிக்க வான்படை அதிகாரி ரிச்சட் எவலின் பெயர்ட் அவரது வானூர்தி ஓட்டியின் துணையுடன் நவம்பர் 29, 1928 அன்று தென்துருவத்தின் மேல் பறந்த முதலாமவராகச் சாதனை புரிந்தார்.
இதற்குப் பின்னர் 31 அக்டோபர் 1956 வரை மனிதர்கள் யாரும் தென் முனையத்தின் மீது கால் பதிக்கவில்லை. அன்றைய நாளில் அமெரிக்க கடற்படை அட்மிரல் ஜோர்ஜ் ஜே. துஃபேக் கடற்படை வானூர்தியில் சென்று அங்கு இறங்கினார்.
1956 – 57 ஆம் ஆண்டுகளில் வான்வழியே எடுத்துச் செல்லப்பட்ட கட்டடப் பொருட்களைக் கொண்டு அமுண்ட்சென் – ஸ்காட் தென் துருவ நிலையம் நிறுவப்பட்டது. அது முதல் ஆய்வாளர்களும் ஆதரவு பணியாளர்களும் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு இந்த நிலையம் இயங்கி வருகிறது.
தெற்கத்திய குளிர்காலத்தில் (மார்ச் – செப்டம்பர்) தென் முனையத்தில் சூரிய ஒளியே படுவதில்லை. இடைப்பட்ட மே, ஜுலை மாதங்களில் மிகவும் இருண்டதாக (நிலவொளியைத் தவிர்த்து) காணப்படும். மார்ச், ஏப்ரலிலும் ஆகஸ்ட், செப்டம்பரிலும் நீண்ட அந்திக்காலங்களைக் காணலாம்.
கோடைக்காலத்தில் (செப்டம்பர் – மார்ச்), சூரியன் தொடர்ந்து தொடுவானத்தில் காணப்படும். அந்தக் காலத்தில் சூரியன் எதிர்கடிகாரச் சுற்றில் நகர்வதாகத் தெரியும். எப்போதுமே கீழ்வானில் தெரியும் சூரியன் டிசம்பரில் உயர்ந்த நிலையாக 23.5 பாகை வரை எட்டும். புவிப்பரப்பில் படும் சூரிய ஒளி வெண்ணிற பனிப்பரப்பால் எதிரொளிக்கப்படும்.
சூரிய ஒளியின் வெப்பம் கிட்டாததாலும் 2,800 மீட்டர்கள் (9 அடி) உயரத்தில் உள்ளதாலும் புவியில் மிகக் குளிர்மையான இடங்களில் ஒன்றாக தென் துருவம் விளங்குகிறது. இருப்பினும் தென்துருவம் உலகின் மிகக் குளிர்ச்சியான இடமில்லை. அண்டார்டிக்காவிலுள்ள வோசுடாக் நிலையமே இப்பெருமைக்குரியதாகும்.
இது தென் துருவத்தை விட உயரத்தில் உள்ளது. தென் துருவ வெப்பநிலை வடதுருவ வெப்பநிலையை விட குளிர்மையாக உள்ளது. இது கண்டநிலப் பரப்பின் மத்தியில் உயரத்தில் அமைந்திருப்பதால் ஏற்படுகிறது. வடதுருவம் ஓர் பெருங்கடலின் மத்தியில் கடல் மட்டத்தில் அமைந்துள்ளதால் பெருங்கடல் வெப்பத்தை சேமிக்கும் பரப்பாக செயல்பட்டு அங்கு கடுமையான குளிர்நிலை எட்டுவதில்லை.
தென்துருவத்தில் பாலைவன வானிலை நிலவுகிறது. மழை பெய்வதில்லை. காற்றின் ஈரப்பதன் சூன்யத்தை அண்மித்துள்ளது. இருப்பினும் வலுவான காற்று அடிப்பதால் பனிப்பொழிவு நிகழும் வாய்ப்பு உள்ளது.
புவியின் பல்வேறு பகுதிகளிலும் உள்நாட்டு நேரம் அங்குள்ள நிலநிரைக்கோட்டைக்கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. இதனால் நாளின் நேரங்கள் சூரியன் விண்ணில் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன. நடுப்பகலில் சூரியன் அவ்விடத்தில் உச்சியில் இருக்கும். இத்தகைய கோட்பாடு தென்முனையத்தில் பிழையுறுகிறது.
இங்கு கதிரவன் ஆண்டுக்கு ஒருமுறையே விடிந்து சாய்கிறான். அனைத்து நிலநிரைக்கோடுகளும் நேர வலயங்களும் இங்கு இணைகின்றன. எனவே தென் முனையத்தை எந்தவொரு நேர வலயத்திலும் சேர்க்க முடியாது.
இங்கு நிலவும் மிகக் கடுமையான வானிலையால் இங்கேயே உருவான தாவரங்களும் விலங்கினங்களும் எதுவுமில்லை. அரிதாக வழிமாறிய இசுகுவா எனப்படும் கடற் பறவைகளும் பெட்றல் எனப்படும் அண்டார்ட்டிக்கா பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.
2000 இல் தென் முனைய பனிக்கட்டிகளில் நுண்ணுயிரிகள் வாழ்வதாக கண்டறியப்பட்டது. இருப்பினும் அறிவியலாளர்கள் இவை இங்கேயே உருவாகியிருக்கும் எனக் கருதவில்லை.
கப்பல் மிதப்பது எப்படி?
ஒரு கிராமமே மிதந்து செல்வது போன்று பல தொன் எடையுள்ள பொருட் களையும் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி? என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.
சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களும் அதிக எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற் பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற் பகுதி தண்ணீரில் அமிழும்.
10 ஆயிரம் தொன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற் பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள்.
அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆக்கிமிடிஸ் கருதினார்.
கப்பல் கடலில் செல்லும் போது கடல் மட்ட நீர் இருக்க வேண்டிய இடத்தை கப்பலின் வெளிப்பக்கத்தில் கோடு இட்டு காட்டப்பட்டிருக்கும். இந்த நீர் மட்டத்திற்கு மேல் கடல் நீர் மட்டம் கூடினால் கப்பல் மூழ்கும் ஆபத்து உள்ளது. அதுபோல் இவ் நீர் மட்டத்திற்கு கீழ் கடல் நீர் இருந்தாலும் கப்பல் சரியக்கூடிய ஆபத்து உள்ளது.
உப்பு குறைவான கடலில் (அடர்த்தி குறைந்த) சென்று கொண்டிருக்கும் கப்பல் அடர்த்தி கூடிய உப்புக் கடலில் செல்லும் போது கூட மிதக்கின்றது அதன் போது கப்பலின் கடல் நீர் மட்டத்தினை சரி செய்வதற்காக அடித்தளத்தில் நீர் நிரப்பி நீர் மட்டத்தினை சரிசெய்கின்றார்கள்.
26 ஆங்கில எழுத்துக்களையும் பயன்படுத்தி உருவாக்கிய சிறிய சொற்றொடர்
ஆங்கிலத்திலுள்ள 26 எழுத்துக்களும் வரும் வகையில் வசனமொன்றை அமைத்தால் எப்படியிருக்கும். அவ்வாறு அமைக்கப்பட்ட மிகச்சிறிய சொற்தொடர் என்ன தெரியுமா?
டெலக்ஸ் ஒபரேட்டர்களுக்காக வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி ‘தி க்விக் பிரெளன் பொக்ஸ் ஜம்ப்ஸ் ஓவர் தி லேஸி டொக்’ (The Quick Brown Fox Jumps Over The Lazy Dog) என்ற 35 எழுத்துக்களைக் கொண்ட சொற்றொடரை உருவாக்கியது. ஆயினும் எல்லா எழுத்துக்களையும் பயன்படுத்தி உருவாக்கிய மிகச் சிறிய சொற்றொடர் இதுவல்ல.
‘ஜேக்டோஸ் லவ் மை பிக் ஸ்ஃபின்க்ஸ் ஒஃப் க்வார்ட்ஸ்’ (Jackdaws Love My Big Sphinx Of Quartz) என்ற 31 எழுத்துக்களைக் கொண்ட இச்சொற்றொடரே மிகச் சிறியது என்று கருதப்படுகிறது. இதை உருவாக்கியவர் யார் என்பது தெரியவில்லை.
மூடநம்பிக்கைகளால் மக்கள் கட்டுண்டிருந்த வேளையில் யதார்த்தமான கொள்கையை முன்வைத்தவர் கொப்பர்னிக்கர்ஸ்
நிக்கொலஸ் கொப்பர்கனிக்கஸ் ஒரு வானியலா ளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார்.
கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றி கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர்.
கிரேக்க நாட்டின் சிறந்தவானியல் அறிஞரான தொலமி கி.பி. 140 இல் புவி மையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை.
பின்பு அரிஸ்ரோட்டில் என்ற கிரேக்க வானவியலாளர், புவி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார். ஆனால் இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு முரணானது எனக் கருதப்பட்டதால் அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
நிக்கொலஸ் கொப்பர்னிக்கஸ் சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என்று ஆராய்ந்து கூறினார். இவர் போலந்தில் பிறந்தவர்.
இவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த பலதுறை நிபுணர், கணிதவியலாளர், வானியலாளர், சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற சட்ட நிபுணர், மருத்துவர், நான்கு மொழிகள் அறிந்திருந்த மொழி பெயர்ப்பாளர், பழங்கலை அறிஞர், கலைஞர், கத்தோலிக்க குரு, ஆளுநர், அரசு தூதர் மற்றும் பொருளியலாளர் ஆவார்.
நிக்கொலஸ் கொப்பர்னிக்கஸ் போலந்து நாட்டின் ராயல் புருசியாவில் தோர்ன் என்ற நகரில் 1473 பெப்ரவரி 19 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை கிராக்கொவ் நகரில் பெரிய வணிகர் ஆவார். தாயார் பார்பரா வாட்சன்ராட் தோர்ன். நகரின் மிகப்பெரிய செல்வந்தரின் மகள். இத்தம்பதிகளுக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் நிக்கொலஸ்.
இவரது தந்தை கிராக்கொவ் நகரிலிருந்து தோர்ன் நகருக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு மரியாதைக்குரிய குடிமகனாக இருந்தார். செம்பு வியாபாரம் செய்து செல்வந்த வணிகராகத் திகழ்ந்த இவர், நிக்கொலாஸ¤க்குப் பத்து வயதாகும் போது காலமானார். இவரது தாயார் பார்பரா வாட்சன்ராட் பற்றி அதிகம் அறியக் கிடைக்கவில்லை. எனினும், கணவருக்கு முன்னரே இவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது.
தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் நிக்கொலஸ¤ம் அவரது மூன்று உடன் பிறப்புக்களும் (ஒரு சகோதரன், இரண்டு சகோதரின்) அவர்களது தாய் மாமனொருவரால் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இறுதி வரை இவர் திருமணமே செய்யாது தனது ஆய்விலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தார்.
இலத்தீன் இடாய்ச்சு, போலந்து, இத்தாலியம், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.
1491 இல் கொப்பர்னிக்கஸ் கிராக்கொவ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். இங்கே தான் அவருக்கு வானியலுடன் பழக்கம் ஏற்பட்டது. இவரது ஆசிரியராக இருந்த அல்பேர்ட் புருட்செவ்ஸ்கி என்பவரின் உதவியால் அவருக்கு வானியலில் ஆர்வம் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் சில காலம் தோர்னில் தங்கியிருந்த பின்னர் இத்தாலிக்குச் சென்று அங்குள்ள பொலொக்னாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
அவரது கல்விக்குப் பண உதவி புரிந்த அவரது மாமனார், கொப்பர்னிக்கஸ் ஒரு பேராயராகவும் வரவேண்டுமென விரும்பினார். அங்கே படித்துக்கொண்டிருந்த போது பிரபல வானியலாளராக இருந்த ஆசிரியர் டொமெனிக்கோ மரியா நோவராடா பெராராவைச் சந்தித்தார். கொப்பர்னிக்கஸ் அவரிடம் படித்ததோடு அவருடைய சீடராகவும், உதவியாளராகவும் ஆனார்.
தொலமியின் கொள்கையில் கதிரவனும் கோள்களும் புவியை பெரிய வட்டப் பரிதிகளில் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. அரிஸ்டோட்டில் பூமி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என ஆராய்ந்து கூறினார்.
நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற தத்துவங்களை அவர் ஒப்புக்கொண்டார். இவர் புவிக்கும் நிலவுக்கும் இடையில் புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன் என்ற நிலையான கோள்கள் உள்ளன என்றும், இவை புவியை மையமாகக் கொண்டு நிலையான ஒரு கிடைமட்ட வட்டப் பாதையில் இயங்குகின்றன என்றும் கூறினார்.
சூரியனும் கோள்களும் பூமியை சுற்றி வருவதாக நம்பியிருந்த உலகை தனது பக்கம் திருப்பிய வானியல் மேதை |
கொப்பர்னிக்கஸின் சூரிய மையக் கொள்கை எளிமையானது. எனினும் கிரேக்கர்களு டைய சிந்தனைகளின் தாக்கம் இவருடைய கொள்கையிலும் இருந்தது.
கொப்பர்னிக்கஸ் கொள்கையின் படி கோள்களின் பெரிய வட்டமும், சிறிய வட்டப் பரிதிகளும் சூரியனை மையமாகக் கொண்டவை. கோள்களின் பின்னோக்கிய நகர்வையும் அவற்றின் ஒளி வேறுபாடுகளையும் விளக்கச் சிறிய வட்டப் பரிதிகளையும் தனது கொள்கையில் புகுத்தியிருந்தார். அது மட்டுமின்றி விண்மீன்கள் வெகு தொலைவில் வானக் கூரையில் அமைந்திருப்பதாகவும் இவர் குறிப்பிட்டார்.
கொப்பர்னிக்கஸின் சுழற்சிக் கொள்கை ஏழு பகுதிகளைக் கொண்டது.
1. வானக் கோளத்திற்குப் பொதுவானதோர் மையம் இல்லை (குறிப்பாகப் பூமிதான் அனைத்திற்கும் மையம் என்பது தவறு.)
2. புவியின் மையம் பேரண்டத்தின் மையம் அல்ல. அது புவி ஈர்ப்பு மையமும் சந்திரனின் சுழற்சிப் பாதையின் மையமுமே ஆகும்.
3. அனைத்துக் கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன.
4. புவியிலிருந்து சூரியன் உள்ள தொலைவு புவியிலிருந்து வெகு தொலைவிலுள்ள விண்மீன்கள் இருக்கும் வான் கூரையின் தொலைவுடன் ஒப்பிடும் போது கட்புலனாகாத அளவு சிறியதாக இருக்கிறது.
5. புவி, தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவிலுள்ள விண்மீன்கள் நகருவதாகத் தோன்றுகின்றன.
உண்மையில் விண்மீன்கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன.
6. சூரியனின் நகர்வு உண்மையில் சூரியனின் நகர்வல்ல. புவி நகர்வதால் தோன்றும் உணர்வு.
7. கோள்களின் பின்னோக்கிய நகர்வுத் தோற்றமும் முன்னோக்கிய நகர்வுத் தோற்றமும் அவற்றினுடை யதல்ல. அவை புவியின் நகர்வால் உருவாக்கப்படுவையே.
கொப்பர் நிக்கஸின் கருத்து அக்காலப் பொது மக்களாலும் வானியலாளர்களாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. “புவி பேரண்டத்தின் மையமல்ல. சூரியனைச் சுற்றும் கோள்கள் போலப் புவியும் ஒரு சாதாரணக் கோள்தான்” என்பதை மதவாதிகளும் வானவியலாளர்களும் ஏற்கவில்லை. மேலும் அவரது நூல் இலத்தீன் மொழியில் இருந்ததால், பெரும்பாலான மக்களால் அதனைப் படித்துணர முடியவில்லை. இதனால் இவரது நூல் பெருமையடையாமலே இருந்தது.
இத்தாலிய வானியல் அறிஞர்களான கலிலியோ கலிலி (கி.பி. 1564 – 1642), புரூனோ போன்றோர் கொப்பர் நிக்கஸின் கொள்கைகளை ஏற்று அதனை நிறுவும் முயற்சியில் இறங்கியவுடன் தான் உலகின் பார்வை கொப்பர் நிக்கஸின் நூல் மேல் விழுந்தது. அதிலுள்ள மத நம்பிக்கைகளுக்கு எதிரான கொள்கைகள் மதவாதிகளால் உணரப்பட்டன.
நூல் வெளிவந்து 73 ஆண்டுகள் கழித்தே கி.பி. 1616 இல் இந்நூல் தடை செய்யப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இத்தடை விலக்கப்படவில்லை.கொப்பர்னிக்கஸ் ஒரு மருத்துவராகவும், ஒரு நீதிபதியாகவும், ஆளுநராகவும், பொருளாதார நிபுணராகவும், கணிதவியலாளராகவும் விளங்கியதுடன் கத்தோலிக்க மத குருவாகவும் இருந்தார். எனினும் மதக் கொள்கைகளுக்கு எதிரான சூரிய மையக் கொள்கையை அவர் வெளியிடத் தயங்கவில்லை.
கொப்பர்னிக்கஸ் 1543 இல் இறக்கும் சந்தர்ப்பத்தில் பக்கவாதம் தாக்கிக் ஆழ்மயக்க நிலையில் இருந்தார். ஆழ்நிலை மயக்கத்தில் அவர் இருந்த போது அவரது நூல் அச்சிட்டு எடுத்துவரப்பட்டு அவரது கரங்களில் வைக்கப்பட்டது. உடனே அவர் தனது ஆழ்மயக்க நிலையில் இருந்து மீண்டும், விழிப்புணர்வு பெற்றுத் தனது வாழ்நாள் சாதனையான அந்நூலைப் பார்த்த பின் தான் இறந்தார் என்று கூறப்படுகிறது.
நீர்மூழ்கிக் கப்பல் (Submarine)
கடலில் நடைபெறும் போர்களில் ஒற்றர்களைப் போல செயல்படுபவையே இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள். கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார்.
நீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலம் என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகு தொலைவு செல்லக்கூடிய நீரூர்தி ஆகும். பரிசோதனைகளுக்காகப் பல நீர்மூழ்கிகள் முன்னர் உருவாக்கப்பட்டாலும், முழுமையான நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு 19 ஆம் நூற்றாண்டிலேயே அமைக்கப்பட்டது. முதல் உலகப் போரில் பல நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒரு சில மணி நேரம் மட்டுமே மூழ்கக்கூடிய மிகச் சிறிய கலங்களில் இருந்து, நீரின் அடியிலேயே 6 மாதங்கள் வரை தங்கி இருக்கவல்ல மிகப் பெரிய நீர்மூழ்கிக் கலங்கள் வரை பல்வேறு அளவுகளில் உருவாக்கப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்கள், மனிதர்கள் உயர் தொழில்நுட்ப உதவியின்றி மூழ்கக்கூடிய ஆழத்தை விட, பல நூறு மடங்கு ஆழத்தில் மூழ்கி பயணிக்கக் கூடியவை.
பல பெரிய நீர்மூழ்கிக் கப்பல்கள் உருளை வடிவிலான உடலையும் கூம்பு வடிவிலான முனைகளையும், கப்பலின் நடு உடலில் நெடுமட்டமாக உள்ள கட்டமைப்பில் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் பெரிஸ்கோப் கருவி ஆகியவற்றையும் கொண்டுள்ளன.
இந்நெடுமட்டக் கட்டமைப்பு துடுப்பு (பிin) என்றும் அழைக்கப்படுகிறது. சூழலும் விசிறி வடிவிலான உந்துக்கருவி (அல்லது நீர்த்தாரை) மற்றும் பல்வேறு நீரியக்கக் கட்டுப்பாட்டுத் துடுப்புகள், சாரளைகள் ஆகியவை கப்பலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன. சிறிய, வெகு ஆழம் மூழ்கவல்ல, சிறப்பு நீர்மூழ்கிகள் குறிப்பிடத்தக்க வகையில் மேல்கூறிய வடிவங்களிலிருந்து மாறுபடுகின்றன.
நீர்மூழ்கிக் கப்பல்கள் போரில், பகைவர் கப்பல்களைத் தாக்குதல், விமானந் தாங்கிக் கப்பல்களின் பாதுகாப்பு அரணாக விளங்குதல், முற்றுகையை முறியடித்தல், எறிகணைத் தளமாகச் செயல்படுதல், அணுகுண்டு தாக்குதலில் ஈடுபடுதல் நீரில் இருந்தபடியே நிலப்பகுதியைத் தாக்குதல், இரகசியமாகச் சிறப்புப் படைகளை முக்கிய பகுதிகளில் இறக்கி வியூகம் அமைத்தல் ஆகிய பல பணிகளைச் செய்ய வல்லவை.
இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிக் கப்பல்கள் பகைவர் கப்பல்களை மூழ்கடிக்கவே பெரிதும் உபயோகப்படுத்தப்பட்டன. இக்கப்பல்களில், நீர்மூழ்கிக் குண்டுகளும், மேல்தள பீரங்கிகளும் போர் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
தற்போதய நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர் நிலைகளில் உள்ள இலக்குகளை மட்டுமல்லாது தொலைதூர நில இலக்குகளையும் தாக்கி அழிக்க வல்லவை.
கப்பல் கடலில் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கின்றோம். கடலுக்கு உள்ளே செல்லும் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் உள்ளே சென்று பார்ப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு எப்படித்தான் அது செயற்படுகிறது?
சாக்கடலில் எவரும் இலகுவில் மிதக்கலாம்: நீச்சல் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை
சாக்கடல்; இறந்த கடல் (Dead Sea) (உப்புக் கடல்) என்றெல்லாம் அழைக்கப்படும் நீர் நிலையானது மேற்குக்கரை இஸ்ரேல் ஜோர்தான் ஆகியவற்றின் எல்லையில் பெரும்பிளவுப் பள்ளத்தாக்கின் ஜோர் தானியப் பகுதியில் அமைந்துள்ளது.
இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்த கடல் என அழைக் கப்படுகிறது.
முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 377 மீற்றர் (1237 அடி) ஆழமுடைய சாக்கடல் பொதுவான கடல் நீரிலுள்ள உப்புத் தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீற்றர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.
உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது அரிது. எனவே சாக்கடல் என்னும் பெயர் எழுந்தது. சாக்கடலின் நீளம் 67 கி. மீ. (42 மைல்). மிகுதியான அகலம் 18 கி. மீ. (11 மைல்) இதற்கு ஜோர்தான் ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.
சாக்கடல் நீரிலுள்ள கனிமங்களாவன,
மக்னீசியம் குளோரைட் 53%, பொட்டாசியம் குளோரைட் 37%, சோடியம் குளோரைட் (சாதாரண உப்பு) 8% பல்வேறு உப்புக்கள் 2% இதன் உவர்தன்மை மாறிக்கொண்டி ருந்தாலும் அண்ணளவாக 31.5% அதிகளவு உப்பிருப்பதால் நீரில் அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. இந்நீரை விட மக்னீசியம் குளோரைட் 53% பொட்டாசியம் குளோரைட் 37%, சோடியம் குளோரைட் (சாதாரண உப்பு) 8% பல்வேறு உப்புக்கள் 2%.
இதன் உவர்த்தன்மை மாறிக்கொண்டி ருந்தாலும் அண்ணளவாக 31.5% அதிகளவு உப்பிருப்பதால் நீரின் அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. இந்நீரை விட அடர்த்தி குறைவாயுள்ள எதுவும் சாக்கடல் நீரில் மிதக்கும். மனிதர்கள் கூட நன்னீர் கடல் நீரில் போன்று அமிழ்ந்து விடாது மிதப்பர். பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படல் மாசுபடாத வளியமுக்கம் அதிகமாயிருத்தல், அதி ஊதாக் கதிர்களின் வீச்சுக் குறைவாயிருத்தல் என்பன உடல் நலத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைவதால் உடல் மற்றும் அழகுச் சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் சாக்கடல் விளங்குகிறது.
அதிகளவு உவர்ப்புத் தன்மையுடைய நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியாவிட்டாலும் மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. மழைக்காலத்தில் உப்புத் தன்மை சற்றுக் குறைவதால் குறுகிய காலத்திற்கு சாக்கடலில் உயிரிகள் வாழும். 1980 ஆம் ஆண்டில் மழைக் காலத்தின் பின் சாக்கடல் செந்நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது. பெருமளவில் காணப்பட்ட டுனலியெல்லா என்கிற ஒரு வகைப் பாசியை உண்ட சிவப்பு நிறங்களைக் கொண்ட நுண்ணுயிரிகளே செந்நிறத்திற்குக் காரணம் என அறிவியலாளர் கண்டறிந்தனர்.
1960 வரை சாக்கடலின் மேற்பகுதியில் உப்புத் தன்மை குறைவாயும். ஆழப் பகுதிகளுக்குச் செல்லச் செல்ல ஒப்புத்தன்மை அதிகமாயும் காணப்படடது. நீர்ப்பாசனத்துக்காக ஜோர்டான் ஆறு திசைதிருப்பப்பட்டதாலும் மழை குறைந்ததாலும் சாக்கடல் பெறும் நீரின் அளவு குறைந்தது. 1975 ஆம் ஆண்டளவிலிருந்து சாக்கடலின் மேற்பகுதி உவர்ப்புத்தன்மை அதிகமுள்ளதாக மாறியது. ஆனால் மேற்பகுதி நீரின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் கீழ்ப் பகுதியை விட வெதுவெதுப்பாய் இருப்பதால் அடர்த்தி குறைவாக இருக்கிறது.
அடர்த்தி குறைந்த நீர் மேல் பகுதியில் இருக்கிறது. மேல் பகுதியின் நீர் குளிர்ந்ததும் இதுவரை இரு வேறு வெப்பநிலைகளைக் கொண்டிருந்த மேல் கீழ் பகுதிகளின் நீர் கலந்தன. இதனால் முன்னெப்போதும் இல்லாதவாறு முழுக் கடலுமே ஒரே வெப்பநிலையுடையதாக மாறியுள்ளது.
இதன் நீர் அதிகளவு உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.
1. சுற்றியுள்ள பகுதியின் ஆறுகள் இக்கடலில் கலத்தல் (ஆற்று நீரிலுள்ள கனிம உப்புக்கள்) 2 ஆவியாதல் மூலம் மட்டுமே இக்கடலிலிருந்து நீர் வெளியேறுதல்.
சாக்கடல் பகுதியில் பல்லினப் பறவைகளும் ஒட்டகம், முயல், நரி, சிறுத்தை போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. இஸ்ரேல், ஜோர்டான் நாடுகள் இயற்கைப் புகலிடங்களை (சரணாலயங்களை) இப்பகுதியில் அமைத்துள்ளன. ஒரு காலத்தில் பப்பைரஸ் மற்றும் தென்னை மர இனத் தாவரங்கள் பெருமளவில் காணப்பட்டன.
உலகிலேயே மிக நீண்ட காலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ (எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது.
விவிலியத்தில் குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க் கரைக்கண்மையில் அமைந்துள்ளன என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக் கொண்டு அழகுசாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ, உரிமம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
சமுத்திரங்களில் வேறுபட்ட உப்பு செறிவு
உலகில் அனைத்து சமுத்திரங்களுமே ஒரே விதமான உப்பு செறிவைக் கொண்டிருப்பதில்லை. சில சமுத்திரங் கள் குறைந்த உப்பு செறிவையும் சில சமுத்திரங்கள் கூடிய உப்பு செறிவை யும் கொண்டிருக்கும்.
சரக்குக் கப்பல்களைப் பொறுத்த வரை சமுத்திரங்களின் உப்புச் செறிவு கவனத்துக்குக்குரியதாகும். செறிவான உப்புகொண்ட சமுத்திரத் தினால் செல்கின்ற கப்பல் மேலெழுந்து மிதக்கும். உப்புச் செறிவு குறைந்த கடலினால் செல்கின்ற கப்பல் சற்று தாழ்ந்தபடி மிதக்கும். எனவே கப்பலில் சரக்குகளை ஏற்றும்போது உலகின் அனைத்து சமுத்திரங்களையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
உப்பு செறிவு மிகவும் குறைந்த கடலினால் செல்லும்போது சரக்குக் கப்பல் மேலும் அமிழும் அபாயம் உள்ளதைக் கவனத்தில் கொண்டே பொருட்கள் ஏற்றப்பட வேண்டும். எனவே கப்பலின் வெளிப் புறத்தில் எல்லைக் கோடு ஒன்று வரையப்பட்டுள்ளது. இக்கோட்டுக்கு மேல் கப்பல் அமிழும்படியாக சரக்கு கள் ஏற்றப்படலாகாது. இக்கோடு ‘பிலிம்சோல்’ கோடு எனப்படுகிறது.
கொலை செய்யும் தாவரம்
மற்றைய தாவரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துக்களை உறிஞ்சி வாழ்கின்ற தாவரங்களை ஒட்டுண்ணித் தாவரங்கள் என்பர்.
ஒட்டுண்ணித் தாவரங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். குறையொட்டுண்ணித் தாவரம், நிறையொட்டுண்ணித் தாவரம் என்பனவே அவையாகும்.
குறையொட்டுண்ணித் தாவரத்துக்கு நமது நாட்டிலுள்ள குருவிச்சை உதாரணமாகும். நிறையொட்டுண்ணித் தாவரத்துக்கு உதாரணம் தூத்துமக்கொத்தான்.
இது ஆபத்தானது. இத்தாவரம் தனது நூறு வீத உணவையும் தான் ஒட்டிக் கொண்டுள்ள தாவரத்திலிருந்து (விருந்து வழங்கி) உறிஞ்சிக் கொள்ளும். காலப் போக்கில் அத்தாவரம் இறந்து போக தூத்துமக்கொத்தானும் உணவின்றி மாண்டு போகும்.
கொலையையும் செய்து தற்கொலையும் செய்து கொள்கிறது தூத்துமக்கொத்தான்.
வெட்டவெளியிலும், மரத்தின் கீழும் இடிமின்னலின் போது நிற்கலாகாது!
இடிமின்னல் வேளையின் போது வெட்ட வெளியில் நிற்கக் கூடாது; மரத்தின் கீழ் நிற்கலாகாது. கையில் உலோகப் பொருட்களை வைத்துக் கொண்டு வெளியே நடமாடக் கூடாது என்றெல்லாம் எச்சரிக்கிறார்கள்.
முகில்களில் காவப்பட்டுச் செல்கின்ற மின்னேற்றத்தினால்தான் மின்னல் ஏற்படுகிறதென்பது அனைவருக்கும் தெரியும். மின்னலின் போது உருவாவது அதிகூடிய வலுவுடைய மின்சக்தியாகும்.
மின்சாரமானது எப்போதும் நிலத்துக்கு அவசரமாகக் கடத்தப்படவே செய்யும், மின்னலின் போது தோன்றும் மின்சாரமானது நிலத்துக்குக் கடத்தப்பட்டுவதற்கு எத்த னிக்கும் போது நிலத்திலிருந்து உயரமான பொருளே அதற்குக் கிட்டியதாக உள் ளது. எனவே மரம், வெட்டவெளி மனி தன் போன்ற ஏதேனும் ஊடகத்துக்கூடாகவே நிலத்துக்குக் கடத்தப்பட எத்தனிக்கும்.
மகுடியை இசைத்ததும் பாம்பு ஆடுவது ஏன்?
பாம்புகளுக்குச் செவிகள் கிடையாது. காற்றில் கலந்து வருகின்ற ஓசையை உணரும் திறன் பாம்புகளுக்குக் கிடையாது.
ஆனாலும் தமிழில் ‘கட்செவி’ என்று பாம்பைக் குறிப்பிடுவதுண்டு. அதாவது, பாம்புகள் தமது கண்ணால் தான் ஒலியை உணருவதாக அக்கால மக்கள் நம்பியிருக்கக் கூடும்.
பாம்புகளுக்குச் செவிகள் இல்லையென்றால் அவை எவ்வாறு ஓசையை உணர்கின்றன?
தரையின் ஊடான அதிர்வுகளை கிரகித்துக்கொள்ளும் திறன் பாம்புக்கு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எதிரிகள் தாக்குவதற்கு வரும் போது தரை யின் ஊடான அதிர்வை உள்வாங்கிக்கொண்டே பாம்பு தப்பியோடுகிறது. அல்லது திருப்பித் தாக்குவதற்கு வருகிறது. அப்படியானால் பாம்பாட்டியின் மகுடி இசைக்கு பாம்பு எவ்வாறு ஆடுகிறது என்ற கேள்வி எழலாம். அதுவும் பழங்கால நம்பிக்கை தான்.
மகுடி இசை கேட்டு பாம்பு ஆடுவதில்லை. மகுடியை அப்படியும் இப்படியும் பாம்பாட்டி அசைப்பதனால் பழக்க தோஷத்திலேயே பாம்பும் ஆடுகிறது. இது தான் உண்மை.
இரவில் இருட்டில் நடக்கும் போது காலடியை தரையில் நன்கு ஊன்றி வைத்து நடக்குமாறு கிராமங்களில் கூறுவதுண்டு. வழியில் பாம்பு கிடந்தால் அதிர்வை உணர்ந்து விலகி விடுமென்ற நம்பிக்கை தான் அது.
கடல் நீரில் தங்கம்
பூமியில் 100 மில்லியன் தொன் எடைக்கு மேற்பட்ட தங்கம் இருக்கின்றதாம். உலகம் முழுவதும் உள்ள கடல் நீரில் 27 மில்லியன் தொன் எடை தங்கம் இருக்கின்றதாம். இயற்கையில் இதுவரையில் கிடைத்த பெரிய தங்கப் பாளத்தின் எடை 909 கிலோ. 1869 இல் அவுஸ்திரேலியாவில் இது கண்டெடுக்கப்பட்டது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தை மிக மெல்லிய கம்பியாக 80 கி. மீட்டர் நீளத்திற்கு நீட்டலாம். தங்கத்தை பழங்கால சீனர்கள் தீமை செய்யும் பேய்களாகவே கருதினார்கள். பழைய ஏற்பாட்டில் தங்கம் என்ற சொல் 415 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதன் முதலில் தங்க நாணயம் கி.மு. 560-546 இல் துருக்கி மன்னரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
தென்னையின் மகத்துவம்
தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் மிகப் பழங்காலந்தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
மலேசிய பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும் மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்குத் தீவுக் கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 இலட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டு விளைச்சல் 14 ஆயிரம் கோடி தேங்காய்கள்.
பிலிப்பைன்ஸ் தீவுகளே தேங்காய் விளையும் பகுதிகளில் முதன்மையாகத் திகழ்கின்றன. அங்கு 20 இலட்சம் ஏக்கரில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 300 கோடி தேங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. பரப்பளவைப் பொறுத்தவரை இது உலக அளவில் மூன்றாவது. விளைச்சலில் இரண்டாவது.
தென்னை உயரமான தாவரம். நெட்டைத் தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7வது ஆண்டில் இருந்து 10வது ஆண்டுக்குள் காய்க்கத் தொடங்கும்.
குட்டை வகைகள் நடப் பட்டு 3 அல்லது 4 ஆண் டுகளுக்குள் காய்க்கத் தொடங்கும். இவற்றின் ஆயுள் 30 – 35 ஆண்டுகள். செழிப்பான வண்ட லோடு ஓரளவுக்குப் பெரு மணல் கலந்த நல்ல மண் ணில் தென்னை மிகவும் செழிப்பாக வளரும்.
சரளை மண்ணிலும், குறுமண்ணிலும், கருங் களியிலும், மணற்பாங்கான இடத்திலும் நல்ல பயன் தரும் வகையில் பயிர் செய்யலாம். அந்த இடங்கள் கட்டாந்தரையாக இல்லாமலும் தண்ணீர் தேங்காமல் வடிந்து போகக் கூடியவையாகவும் இருப்பது அவசியம். குட்டைத் தென்னை வகைகள் குறுகிய காலத் துக்குள் பலன் தரத் தொடங்கினாலும் அவற்றில் தரமான தேங்காய் உண்டாவதில்லை. கொப்பரையும் கிடைப்பதில்லை. இவற்றை நோய்களும் பூச்சிகளும் தொற்றும் அபாயமும் உண்டு.
இந்தக் குறைபாடுகளால் குட்டைத் தென்னை தோப்பாக வளர்க்க ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. இருந்தபோதும் கவர்ச்சியான செவ்விளநீர் தென்னை சிவப்புநிறக் காய் கறிகளின் அழகுக்காகவும், இள நீருக்காகவும் பயிர் செய்யப் படுகிறது.
கொச்சி, சீனா, அந்தமான், லட்சத் தீவுகள், பிலிப்பைன்ஸ் தீவுகள், சிங்கப்பூர், ஜாவா, மலேசியா போன்ற இடங்களில் காணப்படும் தென்னைகள் இயல்பாகவே நல்ல பொருளா தாரப் பலன் அளிக்கக்கூடியவை.
அந்தமான் பெருங்காய், கப்படம் என்னும் வகைகளில் உருவாகும் தேங்காய்கள் மிகப் பெரியவை. லட்சத்தீவில் பயிராகும் தேங்காய் மிகச் சிறியதாக இருக்கும். காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நெட்டை இனம், குட்டை இனம் இரண்டையும் இணைத்து புதிய வகை உருவாக்கப்பட்டது. இது அதிக எண்ணிக்கையில் நல்ல கொப்பரைகளோடு விரைவில் காய்க்கும் தன்மை கொண்டது.
இந்தியாவின் மேற்குக் கரைப் பகுதியில் 150 அங்குலத்துக்கு மேல் மழை பெய்யும் பகுதியிலும் தென்னை வளர்கிறது. கர்நாடகத்திலும், பிலிப்பைன்சில் 40 அங்குலத்துக்குக் குறைவாக மழை பெய்யும் சில பகுதிகளிலும் தென்னை வளர்கிறது.
தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும் போது சமையலுக்குப் பயன்படுகிறது. காய்ந்த பின் கொப்பரையாக மாறி எண்ணெய் கொடுக்கிறது. தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
எகிப்திய பிரமிட்டுகளை அடிமைகள் கட்டினார்களா?
எகிப்து பிரமிட்டுகளைப் பற்றிய ஒரு காணொளியில் சில எலும்பு அகழ்வாராய்ச்சிகளைக் காட்டினார்கள், குடும்பம் குடும்பமாக வருடக் கணக்கில் பிரமிட்டுக்கருகே வாழ்ந்து, தொன் கணக்கில் கல் சுமந்து முதுகெலும்பு வளைந்தே போன பெயரற்ற அடிமைகளின் எலும்புகள்.
இது ஒரு பிழையான கருத்து, எகிப்தின் பிரமிட்டுகளை கட்டியவர்கள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து, பல ஆண்டுகளாக தீவிரமாக ஆராய்ச்சி செய்தவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர் லேஹ்னர் என்பவர்.
அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்டவை எகிப்திய பிரமிட்டுகள் என்ற எண்ணம் வெகுஜனங்களிடம் ஹொலிவுட் படங்களால் நிறுவப்பட்ட ஒன்று. எகிப்திய பிரமிட்டுகளைக் கட்டியவர்கள் வாழ்ந்த இடங்களைத் தோண்டி எடுத்த போது ஆய்வாளர் லேஹ்னர் ஆச்சர்யப்படும் பல விடயங்களைக் கண்டார்.
முதலாவது, இந்த வேலையாட்கள் வசித்த வீடுகள் வசதியானவை 15×45 அடி அகல, நீளம் கொண்ட வசதியான வீடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட இன்ன பிற விவரங்கள்:
இந்த நகரில் வாழ்ந்தவர்களுக்குத் தேவையான மிகவும் வசதியானவர்கள் மட்டுமே உண்ணக் கூடிய மாமிச வகைகளை தரும் பிராணிகளை வளர்த்துத் தர தனி நகரங்கள் இருந்தன. தண்ணீர் இல்லாத இடத்தில் இவர்கள் வேலை செய்ததால் இவர்களது நகரங்களுக்குத் தொடர்ந்து கழுதை மூலம் தண்ணீர் தர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களது வீடுகளில் அலங்கார ஓவியங்களும், கூடைகளும், இசைக் கருவிகளும் இருந்தன.
பிரமிட்டுகளைக் கட்டுவது மிகக் கடுமையான வேலையாக இருந்தாலும், எகிப்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவ விழுமியங்களில் ஒன்று தன், பிரபுவுக்கு வேலை செய்வது. அது பெருமையாகக் கருதப்பட்டது. எகிப்தியர்கள் இதை, ‘பாக்’ எனக் குறிப்பிடுகிறார்கள். தனக்கு மேல் உள்ள பிரபுவுக்கு தான் செய்ய வேண்டிய கடமை மிகப் பெரிய அதிகாரிகள் கூட, அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு, ‘பாக்’ செய்ய கடமைப்பட்டு இருந்தார்கள். அதனால், அக்கால எகிப்திய சமுதாயத்திலும் கலையை மதிக்கும் ஒரு விழுமியம் இருந்தது, என ஊகிக்கிறார் லேஹ்னர்.
உண்மையில் நானும் அப்படித்தான் நினைத்தேன், எகிப்தில் அடிமை முறை இருந்திருக்காலாம். ஆனால் பிரமிட்டுகளின் கலைநுட்பங்களை அடிமைகள் செய்திருக்க முடியாது என்று அவர்கள் கலைஞர்களாக, அச்சமூகத்தால் சலுகைகள் அளிக்கப்பட்டு பேணப்பட்டவர்களாகவே இருந்திருக்க வேண்டும் என்று எகிப்தைப் பற்றிய ஐரோப்பிய ஆய்வுகளின் பினாலுள்ள மனநிலை என்பது கசப்பு நிறைந்த முன்முடிவுதான்.
அதற்கான காரணங்கள் இரண்டு ஒன்று ஒரு கறுப்பு நாகரீகம் அத்தகைய தொன்மையும், பண்பாட்டுச் சிறப்பும் கொண்டிருப்பதற்கு எதிரான காழ்ப்பு. எகிப்திய நாகரீகம் ஐரோப்பாவால் கண்டடையப்பட்ட காலகட்டத்தில் அங்கே வெள்ளைய இனமேட்டிமைவாதம் உச்ச கட்டத்தில் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஐரோப்பியர் அக்காலகட்டத்தில் கண்டுகொண்ட எல்லா தொன்மை நாகரீகங்களையும் அவர்களுக்கு வழக்கமான ஒரு சட்டகத்தைக் கொண்டே விளக்க முற்பட்டார்கள். அதாவது ஒரு கறுப்புச் சமூகம் அதைவிட மேலான வெள்ளைச் சமூகத்தால் வெற்றிகொள்ளப்பட்டு அதன் விளைவாக நாகரீக வெற்றியை அடையும். அந்தச் சட்டகத்துக்குள் கொஞ்சம் கூட அடைக்க முடியாத ஒன்றாக இருந்தது எகிப்திய நாகரீகம்.
இன்னொரு காரணம் கிறித்தவ நூல் மரபு எகிப்திய பாரோக்களைப் பற்றி அளித்த சித்திரம். யூதர்கள் பாரோ மன்னர்களின் கீழ் அடிமைகளாக இருந்தார்கள், அங்கிருந்து கடவுளருளால் தப்பினார்கள் என்பது அவர்களின் குலக்கதை. அது பைபிளின் பகுதியாக இருப்பதனால் எல்லா கிறிஸ்வர்களிடமும் எகிப்து பற்றிய கொடூரமான ஒற்றைப்படைச் சித்திரம் உருவாகியிருந்தது.
இந்த முன் முடிவுகளுடன் தான் எகிப்திய நாகரீகம் அணுகப்பட்டது. எகிப்திய நாகரீகத்தின் சாதனைகளை அடிமை முறையின் வெற்றியாக மட்டுமே சித்தரிக்கும் வழக்கம் உருவானது.
நாம் ஆபிரிக்காவைப்பற்றி கொண்டுள்ள புரிதல்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள் அவர்களின் உள்நோக்கங்களின் அடிப்படையில் நமக்களித்தவை. நம்மைப் பற்றிய புரிதல்களையும் அப்படித்தான் அவர்கள் உலகுக்கு அளிக்கிறார்கள்.
தொலைபேசி பிறந்த கதை
தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய் பேசவும் இயலாதவர். எனினும், உதட்டின் அசைவுகளை வைத்து எப்படி சொல்ல வந்த கருத்தை விளக்கலாம் என்று நூல் எழுதிப் புகழ்பெற்ற அசெலக்சாண்டர் மெல்வில்பில் என்பவராவார்.
கிரகாம்பெல் 1871 ம் ஆண்டு அமெரிக்காவில் செவிடர் ஊமைப் பள்ளியின் ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது செவிட்டுத் தன்மையை நீக்கி ஒலி உணர்வதற்கான சாதனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். காது கேட்கும் திறனற்றவர்களை செயற்கைக் காதினால் கேட்க வைக்க முடியுமா என்ற உந்துதல் ஏற்பட பிணக்கிடங்கிலிருந்து காதினை அறுத்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
தனது உதவிக்காக தோமஸ் வொட்சன் என்பவரை வைத்திருந்தார். போஸ்டன் நகரில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் கம்பி மூலம் ஒலியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.
1874ம் ஆண்டு கிரகாம்பெல் மாடியில் ஒரு அறையிலும் வொட்சன் கீழே ஒரு அறையிலும் அமர்ந்தனர். இயந்திரம் முன்பிருந்து சில மாற்றங்களைச் செய்தார் பெல். எதிர்பார்த்தபடி இயந்திரம் வேலை செய்யவில்லை. எனவே, வெறுப்பில் கோபத்தில் எழுந்தார். அருகிலிருந்த அமிலக் குடுவை கீழே சாய்ந்து அவரது உடையில் கொட்டியது. உடனே, உதவிக்கு வரும்படி வொட்சனை உரக்கக் கத்தி அழைத்தார்.
பெல் அழைத்தது கீழே அறையிலிருந்த வொட்சனுக்குக் கேட்டது. காரணம் ட்ரான்மிசன் என்னும் இயந்திரத்தின் முன் நின்று பெல் கத்தினார். இவ்வளவு விரைவில் ஆராய்ச்சியின் பயன் கிடைத்ததை எண்ணி வொட்சனும் பெல்லும் மகிழ்ந்தனர்.
மக்களிடம் தங்கள் கண்டு பிடிப்பை எடுத்துக்கூறிய போது யாரும் நம்பவில்லை. பின்பு பிலடெல்பியாவில் ஆய்வு செய்து காட்டினர். விக்டோரியா மகாராணியார் முன்பு செயல்படுத்திக் காட்டினர். பலர் தொலைபேசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனவே, பேடண்ட் உரிமைக்காக பெல் போராட வேண்டியிருந்தது. பல ஆராய்ச்சிகளுக்குப் பின் தொலைபேசியை அறிமுகப்படுத்தினார். அப்போது தொலைப்பேசி வசதி வேண்டி விண்ணப்பித்தோர் 8 பேர்களே. 1922 ல் பெல் இறந்த போது அமெரிக்கர்கள் தொலைபேசிகளை ஒரு நிமிடம் இயங்காமல் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?
மீன்களுக்கு தண்ணீரில் நீந்துவதற்கான திறமை மட்டுமல்ல, தண்ணீரில் அப்படியே அசைவற்று நிற்கக் கூடிய திறமையும் உண்டு. மீன்காட்சி சாலைகளில் உள்ள மீன்களைக் கவனித்துப் பார்த்தால் இது உங்களுக்குத் தெரியும். சில சமயங்களில், உடலில் எப்பகுதியை யும் அசைக்காமல் மீன், தண்ணீரின் மேற்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ அப்படியே அசைவற்று நிற்பதைப் பார்க்கலாம்.
மீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்தியேகமான வாயுப் பை உதவி செய்கிறது. ஏறத்தாழ, ஒரு பலூனின் வடிவில் உள்ள இந்த வாயுப் பை, மீனின் வயிற்றிற்கும், குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது.
மீனின் மொத்த உடற்பரப்பில் ஏறத்தாழ 5 லிருந்து 6 சதவிகிதம் வரை இந்தப் பை இருக்கும். ஒட்சிசன், காபனீரொட்சைட்டு நைதரசன் ஆகிய வாயுக்களின் கலவை இந்தப் பையில் நிறைந்திருக்கும். பைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது.
அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும் போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்து கொண்டிருக்கும். ஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும் தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயுப் பையின் பருமனையும் அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு.
பல்லாண்டுகள் கடந்தும் அழியாத மம்மிகள்
மம்மி என்றால் என்ன? ஆங்கிலேயர்கள் போல சிலர் அம்மாவை மம்மி என்று அழைப்பார்கள் அல்லவா, அந்த மம்மிக்கும் இந்த மம்மிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இங்கு மம்மி என்று சொல்வது உயிரற்ற உடலைத்தான். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் சவம் இந்த மம்மிகள் எகிப்தில் உள்ளன. பிரமிட்டுகளின் நாடுதான் எகிப்து அங்குள்ள மிகப் பெரிய பிரமிட்டுகளைப் பார்த்தால் நாம் வியந்து போவோம்.
அவை கட்டப்படுவதற்கு எத்தனைக் காலம் ஆகியிருக்கும்! எத்தனை எத்தனை வேலையாட்கள் இதற்காக உழைத்திருப்பார்கள்! வருடக் கணக்காக பல்லாயிரக்கணக்கான அடிமைகளைக் கொண்டு கட்டி எழுப்பட்டவைதான் ஒவ்வொரு பிரமிட்டும். பிரமிட்டுகள் என்பது வெறும் கல்லறைகள்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.
புராதன எகிப்தின் சக்கரவர்த்திகள்தான் பாரோக்கள் இவர்களின் இறந்த உடல்களையும் மற்ற ராஜாக்களின் இறந்த உடல்களையும் பிரமிட்டுக்களில் பாதுகாத்து வைத்தார்கள். அந்த இறந்த உடல்கள் மம்மிகள். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பிரமிட்டுகளில் அடக்கம் செய்யப்பட்ட மம்மிகள் இப்போதும் கெட்டுப் போகாமல் இருக்கின்றன.
இறந்த உடல்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கான முறை புராதன எகிப்தியர்களுக்குத் தெரிந்திருந்தது. அழுகச் செய்கின்ற அணுக்களிலிருந்து அவர்கள் இறந்த உடலைக் காப்பாற்றினார்கள். அதற்காக அவர்கள் “ஆஸ்பல்ட்”, “ப்ளாஸம்”, எனும் பாதுகாக்கும் பொருள்களை பிரயோகப்படுத்தினார் கள்.
இவை சில இரசாயனப் பொருட்களாகும். இறந்த உடலிலிரு ந்து குடல் முதலிய உறுப்புகளை நீக்கிய பிறகுதான் பிரஸர்வேட்டிவ் களைப் பிரயோகிப்பார்கள். உடல் பக்குவப்படுவதுவரை இப்படிச் செய்வார்கள். பிறகு, எகிப்தின் காவல் தெய்வமான ஒkரஸின் முகமூடியை இறந்த உடலுக்கு அணிவிப்பார்கள்.
இப்படி பக்குவப்படுத்தப்பட்ட மம்மியை ஒரு மரப்பெட்டியில் வைப்பார்கள். அந்த மரப்பெட்டியை ஒரு கல்லறையில் பத்திரமாக அடக்கம் செய்வார்கள். இறந்த உடலிலிருந்து எடுத்த குடல் முதலிய பொருட்களை ஒரு கற்பாத்திரத்தில் இட்டு, இந்தக் கல்லறையிலேயே அடக்கம் செய்வார்கள். விரைவாக அணுச் சேர்க்கை நடக்கிற குடல்களைக் காப்பாற்றுவதற்கு இரசாயனப் பொருட்களால் இயலாது. அதனால்தான், குடலைத் தனியாகப் பிரிக்கிறார்கள்.
இப்படி மம்மியாக்கப்பட்ட இறந்த உடல்கள் எந்த மாற்றமும் இன்றி இப்போது நிலைத்திருக்கின்றன. இறந்த உடல்களை ஏன் இப்படிப் பாதுகாக்கிறார்கள்? மனிதன், மரணத்திற்குப் பின்னும் வாழ்வதாக எகிப்தியர்கள் நம்பினார்கள். இறந்த உடலை சற்றும் சேதமடையாமல் பாதுகாத்தால், அந்த உடலுக்குரியவருக்கு மேல் உலகத்தில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்! ஆனால் எல்லா இறந்த உடல்களை யும் இப்படிச் செய்ய மாட்டார்கள். இறந்த உடலை மம்மியாக மாற்ற நிறையச் செலவு செய்ய வேண்டி வரும்.
அதனால், ஏழைகளின் இறந்த உடல்கள் மம்மியாக மாற்றப்படுவ தில்லை. சக்கரவர்த்திகளாலும் ராஜாக்களாலும, மேல் உலகில் சேவகர்களும் படைவீரர்களும் இல்லாமல் வாழ முடியுமா? இதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? இறந்த சேவர்களின், படை வீரர்களின் உருவங்களை, மம்மியைப் பாதுகாத்த கல்லறைக்கருகில் செதுக்கி வைத்தார்கள். அப்படி அவர்களுக்கும் மேல் உலகில் புதிய வாழ்க்கை கிடைக்குமாம்!
சலவை இயந்திரம் செயல்படும் விதம்
இன்று நடுத்தர வர்க்க வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியி ருக்கிறது சலவை இயந்திரம். இது எவ் வாறு செயல்படுகிறது என்று தெரியுமா?
சலவை இயந்திரத்தில் துவைக்க வேண்டிய துணி பல துளைகள் கொண்ட இரும்பு உருளைக்குள் போடப்படும். இது சுமார் நாலே கால் கிலோ எடையைத் தாங்கக்கூடியது.
இந்த இரும்பு உருளைக்கு வெளியே மற்றொரு பாத்திரம் உருளையைத் தாங்கும். கதவை மூடிவிட்டு எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டியில் தேவையான நேரத்தை சரி செய்து வைத்துவிட வேண்டும்.
இந்த எலக்ட்ரோ மெக்கானிக்கல் நேரங்காட்டி பல்வேறு வேலைகளைச் செய்யும். அதாவது, துணியை நனைப்பது, நீரின் சூட்டை நிலைநிறுத்துவது, அலசப்பட வேண்டிய, பிழியப்பட வேண்டிய அளவு, துணி யின் தரத்தைப் பொறுத்து சூழல வேண்டிய நேரத்தைக் கணக்கிடுவது போன்று பல வேலைகள் உண்டு.
சலவை இயந்திரத்தின் பொத்தானை அழுத்தியதும் தண்ணீரானது தானியங்கி வால்வு வழியாகச் செலுத்தப்படும். நீரை நிறுத்திச் செலுத்த ஒரு பிரஷர் சுவிட்ச் உள்ளது. இது சமிக்ஞையை அனுப்பும். பிரஷர் சுவிட்சில் உள்ள டயாபிரம், நீர் மட்டத்தில் உள்ள காற் றின் விசையால் மேலே தள்ளப்படுகிறது.
பிறகு மைக்ரோ சுவிட்ச் மூலம் தடுக் கப்பட்டு மின் சுற்று முடிந்து வால்வு மூடிக்கொள்ளும். தண்ணீரின் மட்டம் சில்க் சிந்தெட்டிக் போன்ற வழவழப்பான துணிகளுக்கு அதிகமாகவும் பருத்தி போன்ற முரட்டுத் துணிகளுக்குக் குறைவாகவும் இருக்கும். இந்த நீர்மட்டத்தை குறிப்பாக அதிகரிக்க குறைக்க மைக்ரோ சுவிட்சுகள் உண்டு.
சலவை உருளையை உருளச் செய்வதற்கு என்று ஒரு மோட்டார் உள்ளது. இது சலவை செய்ய காய வைக்க, அலச என்று எல்லாவற்றுக்கும் காரணமாகிறது. 1100 ஆர்.பி.எம். வேகத்தில் இது ஓடும். அலசிப் பிழிந்த தண்ணீரை அகற்ற ஓர் உறிஞ்சும் பம்பு உதவுகிறது. எலக்ட்ரோ மெக்னெட்டின் உதவியால் வேலை ஆரம்பிக்கும் போது கதவு மூடும்.
வேலை முடிந்ததும் தானாகவே கதவு திறக்கவும் செய்யப்படுகிறது. உருளை போன்ற சுழலும் பாகங்களின் இயக்கத்தைச் சமன் செய்து, அதிர்வைக் குறைக்க அதற்கேற்ற ஸ்பிரிங்குகள், அதிர்வுத் தடை உறிஞ்சிகள் உள்ளன.
அதிசய வேர்
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனை யாகிறது. அதன் பெயர், ஜின்செங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.
இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார் கள். மாத்திரை கெப்சூல் ஆக்கி விழுங்குகிறார்கள். தேனீர் கோப்பியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சவர்க்காரத்தி லும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள். காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, புற்றுநோய் சாதாரண ஜலதோஷம் ஆகிய வற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டு களாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948 இல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை இராணுவ வீரர்களுக்கு கொடுத்துப் பார்த்தார். உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார் கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின் செங் வேர் பிரபலமாகிவிட்டது.
சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது. ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வ தேச மாநாடுகள் நடைபெற்று வருகின் றன. இருந்தாலும் சீன, கொரிய டாக்டர் கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கிய மாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
படிப்புத் திறனையும், நினைவாற்ற லையும் ஜின்செங் அதிகப்படுத்தி இருப்பதை அவர்கள் சோதனைகள் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்கள்.
சத்தம் எழுவது எப்படி?
இரைச்சல் 130 ‘டெசிபலை’ எட்டினால் நமது காதுகள் தாங்காது. பொத்திக்கொண்டு விடுவோம். டெசிபல் என்பது சத்தத்தின் அளவை அளவிடப் பயன்படும் ஒர் அலகு. ஒலி அலைகளின் பலத்தைக் குறிப்பது அது.
காற்றில் இருக்கும் இலட்சக்கணக்கான மொலிக்யூல்கள் ஒன்றோடு ஒன்று உரசி மோதிக்கொள்வதால் சப்தம் எழுகிறது.
தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல்லை பெருமைப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் உருவாக்கிய வார்த்தைதான் டெசிபல் என்பது. ஒலி அலைகளில் கிரஹாம்பெல் கொண்ட ஆர்வம்தான் அவர் தொலைபேசியை கண்டுபிடிக்கக் காரணமானது. நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில நிகழ்வுகளின் டெசிபல் அளவு எவ்வளவு தெரியுமா? மரத்தின் இலைகள் காற்றில் இலேசாய் அசைந்து ஒருவித சத்தத்தை உண்டாக்குகின்றன அல்லவா? அதன் அளவு 10 டெசிபல்கள்.
சில அடிகளுக்கு அப்பாலிருந்து ஒருவர் இரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல். தொலைக்காட்சிப் பெட்டியை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சத்த அலைகளைக் கணக்கிட்டால் அது 50 டெசிபல், ஒரு கார் தொழிற்சாலையின் இரைச்சல் 95 டெசிபல், ஒரு நிமிடத்துக்கு 16 ஆயிரம் தடவைகள் சுழலும் விமானத்தின் ‘புரோப்பெல்லர்கள்’ ஏற்படுத்தும் ஓசை 120 டெசிபல்கள்.
குரலில் கவனம் வேண்டும்
நமது குரல் மற்றவர்கள் காதில் எப்படி விழுகிறது என்று யோசித்திருக்கிaர்களா?
ஒரு செய்தித்தாளை எடுத்து ஒரு பந்தியை படியுங்கள். அதை ஓர் ஒலிநாடாவில் பதிவு செய்துகொண்டு மீண்டும் அதைப் போட்டுப் பாருங்கள்.
குரலை ரொம்பவும் உயர்த்தியிருக்கிaர்களா? வார்த்தைகளைச் சேர்த்துச் சேர்த்துப் படிக்கும் பழக்கம் இருக்கிறதா? வாக்கிய முடிவில் தெளிவில்லாமல் குரல் மங்கிவிடுகிறதா? மூக்கால் பேசுவது போல குரல் தொனிக்கிறதா? சாதாரணமாக ஒருவரது குரலில் இந்தக் குறைபாடுகள்தான் காணப்படுவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இவற்றை நம்மால் திருத்திக்கொள்ள முடியுமா? நிச்சயமாய் முடியும்!
உரத்த குரல் ஏற்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? தொண்டையின் சதைப்பகுதிகளில் இறுக்கம் இருப்பதுதான். அதற்குத் தொண்டையைச் சரிசெய்ய வேண்டும். தலையைச் சற்று முன்னால் தளர்த்திக்கொண்டு முதலில் வலது பக்கமும், பின்னர் இடது பக்கமுமாய்ச் சுழற்ற வேண்டும். தொண்டையின் இறுக்கம் இளகிவிடும். மூக்கால் பேசுவது போல் குரல் இருப்பதற்குக் காரணம் தொண்டையில் ஏற்படும் அடைப்பும், பிடிப்பான தாடைப் பகுதிகளும்தான்.
பேசும்போது வாயை நன்கு முழுமையாகத் திறக்காவிட்டால், சப்தம் மூக்கின் வழியே தப்பித்துக்கொண்டு விடுகிறது. இதற்கு பேசுவதற்கு முன் நன்றாக வாயைத் திறந்து ‘ஆ’ என்று சத்தமிட்டுப் பழகலாம். பிடிப்பான தாடைப் பகுதியை ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு அசைத்துப் பழக வேண்டும்.
மனிதன் விண்வெளிக்குள் பிரவேசிக்கும் நீண்ட கால கனவு நனவாகிய வரலாறு
ஆதியில் விண் வெளியில் அதிக தொலை தூரத்தில் பயணிப்ப தென்பது மனிதனின் கனவாகவே காணப் பட்டது எனலாம். இதற்கு காரணம் வாயு மண்ட லத்துக்கு அப்பால் காற்றே கிடையாது. காற்றே இல்லாத வான் வெளி யில் விமானம் பறக்க இயலாது. நாளடைவில் நவீன ரக ரொக்கெட்டுகள் உருவாக்கப்பட்டதும் விண்வெளிப் பயணம் சாத்தியமாகியது. திரவ அல்கஹோலும், திரவ நிலைக்கு மாற்றப்பட்ட பிராண வாயுவும் கலந்த கலவையை பற்ற வைத்து எழுப்பப்படும் உந்து விசையை கொண்டு ரொக்கெட்டுகளை மிக வேகமாக செலுத்தலாம் என்று சோவியத் ரஷ்யா, அமெரிக்க மற்றும் ஜேர்மனிய விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தனர்.
முதல் சாதனை
புளோரிடா கேப் இருந்து ஏவப்பட்ட முதல் ரொக்கெட் முதல் முதலில் வான்வெளியில் 2300 கி.மீ. உயரத்திற்கு ரொக்கெட்டுகளை செலுத்தி சாதனை படைத்தனர். அவை மணிக்கு 1100 கி.மீ. வேகத்தில் செலுத்தப்பட்டன.
விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படும் ரொக்கெட்டு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்வெளியினுள் செல்வதற்கு ஆரம்பத்தில் மணிக்கு குறைந்தது 40000 கி.மீ. வேகத்தில் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதிக வேகத்தில் பறக்கும் போது வாயு மண்டலத்தின் உராய்வு உண்டாகும். நாம் எமது கைகளை இடைவிடாது சற்று நேரம் தேய்த்தால் உராய்வினால் வெப்பம் உண்டாகின்றது. அவ்வாறே உராய்வு மித மிஞ்சினால் அதிக வெப்பம் உண்டாகி ரொக்கெட் எரிந்து சாம்பலாகிறது.
அவ்வாறே வான வெளியிலிருந்து திரும்பி வரும் ரொக்கெட் வாயு மண்டலத்தினுள் பிரவேசிக்கும் பொழுது ஏற்படும் உராய்வினால் எரிந்து விடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. உராய்வினால் எரிந்து போகாத வகையில் ரொக்கெட்டுகளை அதி தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு பாதுகாப்பான ரொக் கெட்டுகளை தயாரிப்பதற்கும் இயக் கவும் விஞ்ஞானிகள் வழிவகுத்தார்கள்.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சி.
1957 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி ஸ்புட்னிக் என்னும் செயற்கை கிரகம் ஒன்றை ரஷ்யா பறக்கவிட்டது. இது சந்திரனைப்போல ஒரு துணைக்கிரகமாக பூமியை சுற்றி வந்தது. ஒரு முறை சுற்றி வர 90 நிமிடங்கள் ஆயின. இதனை தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 3 இல் ரஷ்யா ஏவி விட்ட ஸ்புட்னிக் இர ண்டு என்ற செயற்கை கிரகத்தில் லைக்கா என்ற நாயை வைத்து அனுப்பினர். அது பத்திரமாக பூமிக்கு திரும்பியது. ஸ்புட்னிக் 2 விண்வெளியை சுற்றி வரும் போது நாயின் இதயத்துடிப்பை யும் மூச்சையும் பதிவு செய்தார்கள். இச்சாதனைகளால் விண்வெளி பயணத்திற்கு மனித உடல் ஏற்றது தான் என்பது தெரிய வந்தது.
ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்கா வும் 1958 ஜனவரி 31 Explorer என்ற தனது முதல் செயற்கை கோளை வானத்தில் பறக்கவிட்டது. நாங்கள் வாழ்கின்ற பூமியானது வினாடிக்கு 29.7 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்த வேகத்தை நமது உடல் தாங்கிக்கொள்கிறது. ஆனால் இந்த வேகத்தில் திடீரென்று மாறுதல்கள் ஏற்படும் போது என்ன நடக்கும் என்று தெரியாமல் இருந்தது.
பூமியில் இருந்து புறப்படும் போது ஏற்படும் கடும் வேகத்தின் போதும் பூமியை சுற்றும் போதும் எடையின்மையின் போதும் விண்வெளி பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சாதனங்கள் அமைப்பதில் பொறியியல் வல்லுனர்கள் கடுமையாக ஈடுபட்டனர். வேகம் அதிகரிக்கும் போதும் குறையும் போதும் உடலின் மீது பெருமளவு அழுத்தம் உண்டாகின்றது என்பதைக்கண்டு அதனை நிவர்த்தி செய்ய குறுகிய வழிமுறைகளை வகுத்தனர். விண்வெளி வீரர்களின் உடை அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய வகையில் வடிவ மைக்கப்படுகிறது. பிரதானமாக அதனுள் பிராண வாயு நிரப்பப்படும்.
விமானிகள் வாயு மண்டலமே இல்லாத சந்திரனில் இறங்கும் வேளை அவர்களுடைய உடலுறுப் பிற்குள் இருக்கும் பிராண வாயு பலூன் போல ஊதி வெடிக்காதவாறு பாதுகாக்கப்பட்டிருக்கும். சந்திரனில் நண்பகல் வெப்பநிலை 100 டிகிரி வரை உயர்ந்திருக்கும். இரவில் வெப்பநிலை மைனஸ் 32 பாகை வரை தாழ்ந்து கடும் குளிராக காணப்படும். முற்றிலும் மாறுபாடான இந்த தட்ப வெப்பநிலையை தாங்கிக் கொள்வதற்கு ஏற்றவாறு விண்வெளி வீரர்களின் உடை வடிவமைக் கப்பட்டிருக்கும். இதன்பின் விண்வெளி கலத்தில் மனிதனை வைத்து விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வரும் வழிகளை காண்பதில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர். இதில் வெற்றியும் அடைந்தனர்.
மனிதன் அனுப்பப்பட்டான்
முதலில் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகளே இதில் சாதனை படைத்தனர். அவர்கள் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இல் யூரிககாரின் என்னும் விண்வெளி வீரரை விண்வெளி கலத்தில் வைத்து அனுப்பினர். அவர் சென்ற கலம் எந்தவொரு இடையூறும் இன்றி பூமியில் இருந்து சுமார் 300 கி.மீ. உயரம் சென்று பூமியை 108 நிமிடத்தில் ஒருமுறை சுற்றி விட்டு மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வந்தது.
இதனை அவதானித்த அமெரிக்க விஞ்ஞானிகளும் Alenshepard என்பவரை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி கண்டனர். இதனை தொடர்ந்து சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டனர். ரஷ்யர்களை Luna என்ற விண்வெளிக்கலங்களை செலுத்தி சந்திரனைப் பற்றிய பல அரிய தகவல்களை சேகரித்தனர். சட்டர்ன் 5 ரொக்கெட்டும் சந்திரனுக்கு பயணமும் விண்வெளி பயணத்திற்கு பயன்பட்ட சட்டர்ன் 5 ரொக்கெட் 3 கட்டங்களாக இயங்கியது.
அது மேலே ஏவப்பட்ட பின்னர் இரண்டரை வினாடிகளில் அதன் முதல் கட்டப்பகுதி கீழே விழுந்து விடும். இரண்டாம் கட்ட பகுதிகளில் இயந்திரங்களை இயங்க தொடங்கி நாலு கோடி பதினாறாயிரம் கிலோ கிராம் உந்து விசை அளிக்கும். அடுத்த ஆறரை வினாடிகளுக்கு பிறகு இரண்டாம் கட்டமும் விழுந்துவிடும். மூன்றாம் கட்டப் பகுதியாகிய அப்பலோவின் வெளிக்கலம் தொண்ணூராயிரத்தி எழுநூறு கிலோகிராம் உந்து விசையுடன் விண்வெளியில் பறக்கும்.
இதுதான் சுற்றோட்டப் பாதையை சேர்ந்தவுடன் ரொக்கெட்டுகள் இயங்காமல் நின்றுவிடும். இப்பகுதி எடை அற்ற நிலையில் பூமியை சுற்றி ஓடத் தொடங்கும். குறிப்பிட்ட நேரத்தில் இயந்திர இயங்கத் தொடங்கும். மணிக்கு 38880 கி.மீ. வேகத்தை எட்டி பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு சந்திரனை நோக்கி பறக்கும். சந்திரனை நெருங்கும் போது இதன் வேகம் மணிக்கு 4800 கி.மி. ஆக குறையும் இந்த நிலையில் ரொக்கெட்டுகள் மீண்டும் இயங்காமல் நின்று விடும்.
சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வைப்பதில் வெற்றி அமெரிக்காவுக்கு கிடைத்தது. 1969 ஜுலை 16 இல் நீலாம் ஸ்ட்ரோங், எட்வின் அல்டிரின், மைக்கல் கொலின்ஸ் ஸ்ரோவ் ஆகிய 3 அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்பலோ – 14 என்னும் விண்வெளி கலத்தில் சந்திரனுக்கு புறப்பட்டு சென்றனர். அக்கலம் சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்ததும் கொலின்ஸ் ஆணைக்கூட்டில் (Command Module) இருந்த வண்ணம் சுற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டு இருந்தனர். நீலாம்ஸ்றோங், எட்வின் அல்டிரின் ஆகிய இருவரும் சந்திரன் ஆணைக்கூட்டினுள் (Lunar Module) இறங்கினர்.
அக்கூடு ஆணைக்கூட்டி னின்றும் தன்னை விடுவித்து கொண்டு ஜுலை 20 இல் சந்திரனில் தரை இறங்கியது. முதலில் நீலாம் ஸ்ட்ரோங்கும் அடுத்து எட்வின் அல்டிரினும் சந்திரனில் காலடி வைத்து சுமார் 22 மணிநேரம் அங்கு தங்கி இருந்து பல சோதனைகளை நடத்தினார்கள். அதன் பின்னர் மீண்டும் பழைய படியே சந்திரன் கூட்டில் ஏறி அமர்ந்தார்கள்.
ரொக்கெட் விசையால் மேலேறி அங்கு சுற்றுப்பாதையில் கொலின்சுடன் வலம் வந்து கொண்டிருந்த ஆணைக்கூட்டை நெருங்கி அதனுடன் தம் கூட்டை இணைத்து கொண்டார்கள். இணைப்பு ஏற்பட்டதும் நீலாம்ஸ்ட்ரோங், எட்வின் அல்டிரின் இருவரும் சந்திரன் கூட்டை கைவிட்டு ஆணை கூட்டினுள ஏறிக்கொண்டனர். பின்னர் சந்திரன் கூடு ஆணைக்கூட்டினின்றும் கழன்று தனியாக சந்திரனை சுற்றி வரத் தொடங்கியது.
ஆணைக்கூட்டை மட்டும் கொண்ட அப்பலோ விண்வெளி கலசம் தன் ரொக்கெட்டுகளை இயக்கி சந்திரனை ஈர்ப்பு விசையிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு 3 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கி விரைந்தது. அது பூமியை நெருங்க நெருங்க அதன் வேகத்தை அதிலிருந்து வீரர்கள் குறைத்து கொண்டனர். இறுதியாக அக்கலம் பசுபிக் சமுத்திரத்தில் பரஷ¤ட் மூலம் வந்தடைந்தது. விண்வெளிக்கலம் சந்திரனுக்கு செல்லும் போதும் திரும்பி வரும் போதும் சந்திரனில் விண்வெளி வீரர்கள் தங்கி இருக்கும் போதும் அவர்கள் பூமியில் உள்ள நிலையத்துடன் இடைவிடாது தொடர்பை கொண்டிருப்பார்கள். அதி சக்தி வாய்ந்த தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொலைக்காட்சி சாதனங்கள் இதற்கு பெரிதும் உதவுகின்றன.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள தும்பா என்னுமிடத்தில் 1963 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று நிறுவப்பட்டது. காந்த மண்டலம் பூமத்திய ரேகை பகுதியில் அமைந்துள்ள தும்பா நிலையம் சர்வதேச ஏவுகணை செலுத்தும் தளமாக ஐ.நா. ஆதரவில் பணியாற்றி வருகின்றது.
இதுவே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் ஏவுகணை தளமாகும். முதன் முதலில் 1963 இல் அப்பாஷி என்ற அமெரிக்க ஏவுகணை இங்கிருந்து விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவும், அமெரிக்காவும் இத்துறை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளும் தும்பா தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆந்திர பிரதேசத்தில் ஹரிக்கோட்டா என்னுமிடத்திலும் ஏவுகணை தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துவதில் குடும்பமும் முக்கிய பங்கை வகிக்கிறது
கற்றலானது படிமுறை ஒழுங்கில் நடைபெறும் ஓர் செயற்பாடாகும். இது வாழ்நாள் முழுவதும் இடம்பெறு கின்றது. தாயின் கருவறையில் தொடங்கி இறக்கும்வரை மனிதன் கற்பதாக கல்வியாளர்களும், சமூக வியலாளர்களும் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு பிள்ளையினதும் ஆரம்ப வகுப்பறை தாயின் கருப்பையேயாகும்.
தாயின் உதிரத்தில் கலந்து நாடி வழியாக, உணர்வுகளாய்க் கற்றல் – கற்பித்தல் செயன்முறை இங்கு நடை பெறுகின்றது. தாயின் உடல், உள ஆரோக்கியம், உணவுப் பழக்கவழக்கம், குடும்பக் கட்டமைப்பு, சுகாதாரப் பழக்கவழக்கம், எதிர்பார்ப்புக்கள் மற்றும் அன்னையர்களுக்கான பராமரிப்பு முறைகள் போன்றன இவ் உள்ளக வகுப்பறையைப் போசித்து வருகின்றன.
எனவே பிள்ளையின் எதிர்காலக் கற்றலுக்கான ஆரம்ப அடித்தளத்தினை இடுவதற்குத் தாயின் நலம் தொடர்பில் கூடிய அக்கறை கொள்வது அவசியமாகும்.
பிறக்கும் குழந்தை அழுவதன் யதார்த்தமும் கற்றலாகவே அமைகின்றது. தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களை அறிவதற்காகப் பிள்ளை உற்றுநோக்குவதும், அதனை உணர்வதும் கற்றல் தான் என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு ஒன்று அல்லது ஒன்றரை வயதுவரை பிள்ளை சுயமாகக் கற்கின்றது. இங்கு தாயின்மடி பிள்ளையின் வகுப்பறையாக அமைந்த போதும் படிப்படியாகப் பிள்ளையின் சுதந்திரம் வரையறைக் குட்பட்டு குடும்பத்தின் செல்வாக்கு அதிகரிப்பதைக் காணலாம். எனவே குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பிள்ளையின் கற்றலுக்கான மிகக் காத்திரமான பங்களிப்புக்களை வழங்குவது அவசியமாகும்.
மூன்று வயதுக்கு சற்று முன்னரே புத்தகங்களைச் சுமக்கும் ஓர் உயிரியல் இயந்திரமாக பிள்ளை அடுத்த நிலைக்கு நகர்த்தப்படுகின்றது. கற்ற வர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடு இன்றி ஒவ்வொரு பிள்ளையும் பாலர் பாடசாலைக் கல்வி முறையினுள் நுழைவதற்கு தாய்மார் கணிசமான பங்கினை வகித்து வருகின்றனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட கலைத்திட்டமோ பயிற்சி பெற்ற ஆசிரியர்களோ இல் லாத நிலை எமது முன்பள்ளிகளில் காணப்படுகின்றது. கல்வியியலாளர்கள் மற்றும் உளவியலாளர்களின் அணுகு முறைகளுக்குப் புறம்பாக எவையெல் லாமோ இங்கு கற்பிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக நிலவுகின்ற போதும் இலங்கையில் எழுபது வீதத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இவ்வாறு முன்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். எனவே எமது பிள்ளைகளை முறையாகப் பயிற்று விக்கப்பட்ட ஆசிரியைகள் காணப்படும் முன்பள்ளிகளில் சேர்க்கப்படுவதையும் பிள்ளையின் வயதுக்கு மீறிய செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படா மையையும் உறுதிப்படுத்துவதும் மிக முக்கியமாகும்.
அடுத்து முறைசார் கல்வித் தேவை களை நிறைவு செய்வதற்காக, ஐந்து வயதில் பாடசாலையில் சேர்க்கப்பட்டு முறையான வகுப்பறைக்குள் பிள்ளை கள் உள்Zர்க்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை என பல பொதுத் தடைகளை அல்லது சவால்களை எதிர்கொள்வதும் பாடசாலைக் கல்வியின் பண்புகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. பரீட்சைகள் பிள்ளைகளுக்கு சோதனைகளாகவே அமைந்துவிடுவதாகவும் பலரும் அங்கலாய்க்கின்றனர்.
பிள்ளைகளின் கற்றல் தேவைகளை முழுமைப்படுத்துவதற்குப் பாடசாலை யால் மட்டும் முடியாது என்பதையும் இங்கு நாம் சருத்திற் கொள்ள வேண்டும். மாணவரது கற்றலில் ஒத்தாசை வழங்குவதற்குப் பாடசா லைக்கு மேலதிகமாக ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக குடும்பமும் தனது வகிபங்கினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பாடசாலைக் காலத்துக்கு அப்பாலும் பிள்ளையை முன்னிலைப் படுத்துவதற்குத் தேவையான அறிவு மற்றும் சமூகத்திறன்களை ஏற்படுத் துவதில் பாடசாலையுடன் ஒருங்கி ணைந்த அனுசரணையை குடும்பமும் ஆரம்பத்திலேயே வழங்குவதை உறுதிப்படுத்துவது இன்றியமையாத தாகும். இவ்விடயத்தில் வீட்டினையும் பாடசாலையையும் வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது.
பாடசாலையில் ஆசிரியர்களும் வீட்டில் குடும்பத்தினரும் காட்டும் ஈடுபாடானது பிள்ளையின் அடைவு மற்றும் பரீட்சைப் பெறுபேறுகளில் அதிகரிப்பை ஏற்படுத்தும். பாடசா லைக்கு முறையாக வருதல், பாட சாலையில் தங்கியிருத்தல், பாடங்களில் கருத்தூன்றிப் பங்கெடுத்தல், மற்றும் தொடர்படிப்புக்கான ஊக்கியை வழங்கி கல்வியத் தொடர்தல் என் பவற்றுக்கும் குடும்பம் வழியேற்படுத்திக் கொடுக்கும் என்பதும் மேற்குலக நாடுகளின் ஆய்வு முடிவாகும்.
அடைவு மட்ட மேம்பாட்டில் காத்திரமான பங்கினை வகுப்பறைகள் போன்று வீட்டுச் சூழலும் கொண் டுள்ளது என்பதும் பாடசாலைச் செயற்பாடுகளுக்குச் சமாந்தரமான பங்களிப்பை வழங்காத குடும்பப் பிள்ளைகள் எதிர்மாறான அடைவினைப் பெறுவதும் பொதுவான நிலவரமாகும். எனவே எமது வீட்டு மட்டச் செயற் பாடுகளும் ஒழுங்குகளும் பற்றி நாம் விரிவாக ஆய்ந்தறிந்து நடவ டிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது.
வகுப்பறைக் கற்றல் – கற்பித்தல் செயல்முறையின் போது மட்டும் கற்றலுக்கு உதவுதல் கற்றலின் வெற்றிக்குப் போதாது. பிள்ளையின் கல்வியில் பெற்றோரின் ஈடுபாடானது பாடசாலையில் பிள்ளைகளின் வினையாற்றலையும் அடைவையும் மேம்படுத்துவதற்கு முக்கியமானதாகும். இத்தகைய ஈடுபாடு விரும்பிய கற்றல் விளைவுகளை பிறப்பிப்பதில் பெற்றோரது கல்வி மற்றும் குடும்ப வருமானம் என்பவற்றுடன் ஒப்பிடும் போது மிகவும் வினைத்திறன் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
வீடுகளில் பிள்ளைகள் படிப்பதற்கு மிகப் பொருத்தமான ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அமை தியான சூழல் நிலவுவதையும் நாம் உறுதிப்படுத்தல் வேண்டும். பிள் ளைகளைப் படிக்குமாறு கட்டளையிட்டு விட்டு ஏனையோர் தொலைக்காட் சிகளின் முன் அமர்ந்து தொடர் நாடகங்களைப் பார்த்துக் கொண்டி ருப்பது எந்தவகையிலும் தர்மமாகாது. இதுபற்றி பெற்றோர் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பது போல் அவர்களது செயற்பாடுகளும் காணப்படுகின்றன.
பெற்றோர் மற்றும் குடும்ப உறுப் பினர்களிடையே நல்லிணக்கமும் ஆரோக்கியமான உறவு நிலையும் காண ப்படுவதும் பிள்ளையின் கற்றலில் நேர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. பிள்ளைகளுடன் அடிக்கடி கலந்துரை யாடுவதும் அதனடிப்படையில் அவர் களுக்கான வசதிகளை ஒழுங்கு செய் வதும் அவசியமாகும்.
பெற்றோர் பாடசாலைக்குச் சென்று பிள்ளை தொடர்பாக விசாரித்தல், கருத்துக்களை கேட்பதும் பாடசாலையுட னான உறவுகளை மேம்படுத்துவதும் அவசியமாகும். புகழ்தலும் பாராட் டுதலும் செய்த பணிக்கான உறுதி யையும் அங்கீகாரத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. இவை தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை மேம்படுத் தவும் வழிகோலுகின்றன. பாடசாலைச் செயற்பாடுகளில் பிள்ளைகள் பெற் றுக்கொள்ளும் சிறப்பு நிலைமைகளுக் கான கணிப்பீட்டினை அவர்கள் வீட்டிலும் எதிர்பார்ப்பர். எனவே உரிய சந்தர்ப்பங்களில் பிள்ளைகளைப் புகழ்ந்து பாராட்டுவது அவசியமாகும்.
கற்றல் இயந்திரமயமான செயற்பாடு அல்ல. பொருத்தமான ஓய்வும் பிள் ளைகளுக்கு அவசியமாகும். கற்றலுக்கு முன்னரும் பின்னரும் இத்தகைய ஓய்வு நிலையை உறுதிப்படுத்துவது பெற்றோரின் கடமையாகும். பிள்ளை களைப் படிக்குமாறு கட்டளையிடு வதிலும் நாகரீகம் இருக்க வேண்டும்.
படிபடி என அடிக்கடி நெட்டுருப் பண் ணுவதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோரின் வாசிப்புப் பழக்கமும் பிள்ளையைச் சுயமாகக் கற்பதற்குத் தூண்டுவதாகவும் அமையும். எனவே அதுபற்றி நாம் அக்கறை கொண்டு சந்தர்ப்பம் பார்த்து அல்லது பொருத்தமான கால அட்ட வணைகளை வழங்கி படிக்குமாறு தூண்டுவதுடன் நாமும் அடிக்கடி வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கவும் வேண்டும்.
வீடுகளில் சிறு நூலகங்களை அமை த்து பொருத்தமான உசாத்துணைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். சில வீடுகளில் திறப்புகள் தொலைக்கப்பட்ட அலுமாரிகளில் புத்தகங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளது போன்ற நிலை மைகள் காணப்படுகின்றன. வித்தி யாசமான புத்தகங்களை வாசிக்கவும் சுயமாக சிந்திப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். பிள்ளைகளின் வேறுபட்ட கருத்துக்களையும் கிறுக்கல்களையும் கூட நாம் அங்கீகரிக்கவும் வேண்டும். இவை புத்தாக்கங்களுக்கு வழியமைப்பதாக அமைந்துவிடலாம் என்பதையும் நாம் உணர வேண்டும்.
பிள்ளையின் கல்வி தொடர்பில் குடும்பம் உயர்ந்த இலக்குகள் மற்றும் இலட்சியங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். இது தொடர்பில் பிள்ளை யுடன் கலந்துரையாடுவதன் மூலம் இலகுவாக அவர்களை வழிப்படுத்தவும் முடியும். வீடு, பிள்ளைகளின் சுதந் திரமான செயற்பாட்டுக்குரிய இட மாதலால் அவர்களது பலங்களையும் பலவீனங்களையும் அடையாளம் காணும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள் ளன. எனவே அவர்களது பலவீனங்க ளைப் பலமாக மாற்றுவதற்கான உளவள ஆற்றுப்படுத்தல்களை பெற்றோர் முன்னெடுத்தல் வேண்டும். இதற்கு மிகச் சிறந்த சாதனம் கலந்துரையாடலும் அரவணைப்பு மாகும்.
நேரத்திற்குத் தொழிற்படும் பண் பினையும் பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டும். இளம் வயதிலேயே நேர முகாமை தொடர்பான தேர்ச்சியை ஏற்படுத்தல் அவசியமாகும்.
பிள்ளையின் உயிரோட்டமான செயற்பாடுகளில் விளையாட்டுக்களின் செல்வாக்கும் அதிக பங்கினைக் கொண்டிருக்கின்றது. பிள்ளையின் உடல் உள ஆரோக்கியத்துக்கும் கற்ற லுக்கான தயார் நிலைக்கும் விளை யாட்டுக்கள் உதவுகின்றன. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பதற்கு ஒப்பாக பிள்ளையின் வயது மட்டத்துக்கு ஏற்ற பொருத்தமான விளையாட்டுக்களில் ஈடுபடுத்தி அவர்களது ஆரோக்கியத்தினைப் பேணுவதும் அவசியமாகும்.
பெற்றோர் தமது பிள்ளை தொட ர்பில் அபரிமிதமான தோற் றப்பாட்டினைக் கொண்டிருப்பர். இதன் அடிப்படையிலேயே தமது பிள்ளைகள் பாடசாலை க்குச் செல்கின்றனர் என திடமாக நம்புகின்றனர். இருப்பினும் குறிப்பான சில திறன்களை மட்டும் கற்றுக் கொள்வதற்கே பாடசாலைகள் உதவு கின்றன. எனவே அவர்களின் கற்றல் பலன்களை தாமே இனங்கண்டு வலுவூட்டுதல் அவசியமாகும். அவ் வாறே பரந்த கற்றல் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பிள்ளையின் ஆகக் குறைந்த அடிப் படைமட்ட உடலியல், உளவியல் தேவைகளும் வீட்டில் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
அச்சுறுத்தலற்ற, பாதுகாப்பாக மதிக்கப்படுகின்றேன். என்ற உணர்வு நிலை பிள்ளையிடம் ஏற்படும் வித மாக வீட்டு நிலைமைகள் காணப்படு வது அவசியமாகும். போதுமான பெளதீக இடவெளியும் தேவையான கருவிகளையும் கொண்டிருப்பதுடன் சுயபுரிந்துணர்வு மற்றும் சுயகணிப் புக்கான உறவுநிலை மேம்பாடும் அவசியமாகும்.
எனவே பிள்ளையைப் பாடசாலையில் சேர்த்தோம். இனி எமது எதிர்பார்ப்புக்கு ஏற்ற பிள்ளையாக அவர்களை உருவாக்குகின்ற பொறுப்பு பாடசாலையிடம் கையளிக்கப்பட்டு விட்டது என்ற வார்ப்பு எண்ணக் கருவுடன் இருப்பதைவிடுத்து பாட சாலைக்கு சமாந்தரமான பங்களிப்பை குடும்பமும் மேற்கொள்வது காலத்தின் தேவையாகும்.
பிள்ளையின் கல்வியில் பெற்றோரின் ஈடுபாடு எமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும் மதிக்கப்படுகின்றது. இருப்பினும் சமூகத்தில் எதிர்மறையான வெளிப்புறச் சக்திகளின் செல்வாக்கு அதிகமாக உள்ளதால் அவற்றுக் முகங்கொடுக்கும் வகையில் பெற் றோரின் ஈடுபாடு வலுவூட்டுவதாகவும் வீட்டுச் சூழலை அமைத்துக் கொள்வது எமது பிள்ளைகளின் ஒட்டுமொத்த கற்றல் மேம்பாட்டிற்கும் வழிய மைப்பதாகவும் அமையும்.
எம்.எல். முஹம்மத் லாபிர்
உதவிக் கல்விப் பணிப்பாளர்,
இலங்கை திறந்த பல்கலைக்கழக நிபுணத்துவ ஆலோசகர்.
மனிதனின் வேகம்
நன்றாக ஓடும் ஒருவரால் சுமார் 3 நிமிடம், 50 வினாடி நேரத்தில் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் ஓட முடியும். 1958 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட உலக சாதனை 3 நிமிடம் 36.8 வினாடி.
சாதாரணமாக ஒரு மனிதர் நடக்கும்போது அவர் ஒரு வினாடிக்கு 7 மீற்றர் தூரத்தைக் கடக்கிறார். ஆனால் இந்த வேகங்களை அப்படியே ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஏனென்றால் நடந்து செல்கையில் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு மணிக்கு 5 கிலோ மீற்றர் வேகத்தில் நீங்கள் நடக்க முடியும். ஆனால் ஓடுபவரால் ஒரு குறுகிய நேரத்துக்குத் தான் ஒரே வேகத்தில் ஓட முடியும்.
தரைப்படை துரித நடையில் செல்லும்போது அதன் வேகம், ஓடுபவரின் வேகத்தில் மூன்றில் ஒரு பங்குதான். வினாடிக்கு 2 மீற்றர் அல்லது மணிக்கு ஏறத்தாழ 7 கிலோ மீற்றர்தான். ஆனால் அடிப்படை வீரர்களால் மிக அதிகத் தொலைவு செல்ல முடியும்.
உங்களது சாதாரண நடையின் வேகத்தை, மெல்ல ஊர்வதற்குப் பேர் போன நத்தை அல்லது ஆமையின் ‘வேகத்துடன்’ ஒப்பிட்டுப் பார்ப்பது நிச்சயமாய் உங்களுக்கு வேடிக்கையாய் இருக்கும். நத்தையின் வேகம் வினாடிக்கு 1.5 மில்லி மீற்றர் அல்லது மணிக்கு 5.4 மீற்றர், அதாவது உங்களது வேகத்தை விடச் சரியாக ஓராயிரம் மடங்கு குறைவானது. மெல்ல நகர்வதற்குப் பேர் போன மற்றொரு பிராணியான ஆமையின் வேகமும் அதிகமல்ல. மணிக்கு 70 மீற்றர்தான்!
நத்தை, ஆமை ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் நீங்கள் விரைவாகச் செல்லக்கூடியவர்களே. ஆயினும் உங்களுடைய இயக்கத்தை உங்களைச் சுற்றிலும் உள்ள வேறு பல இயக்கங்களுடன் ஒப்பிட்டால் வேகத்தில் உங்களை மிஞ்சும் இயக்கங்கள் பலவும் இருப்பதைக் காண்பீர்கள்.
சமவெளிகளில் பாயும் பெரும்பாலான நதிகளின் வேகத்தை நீங்கள் சுலபமாக மிஞ்ச முடியும், சாதாரணமாக வீசும் காற்றின் வேகத்துக்கு அதிகம் குறையாத வேகத்தில் நீங்கள் போக முடியும் என்பது உண்மைதான்.
ஆனால் வினாடிக்கு 5 மீற்றர் வேகத்தில் பறக்கும் ஈயை எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் நீங்கள் ‘ஸ்கீ’ எனப்படும் பனிச்சறுக்கு மிதியடிகளை அணிந்துகொண்டால்தான் உங்களுக்கு அது சாத்தியமாகும். வேகமாகச் செல்லும் குதிரை மீது சென்றால் கூட முயலையோ, வேட்டை நாயையோ உங்களால் எட்டிப் பிடிக்க முடியாது. விமானத்தில் சென்றால்தான் கழுகுடன் உங்களால் போட்டியிட முடியும்.
ஆனால் மனிதன் கண்டுபிடித்திருக்கும் இயந்திரங்கள், வேகத்தில் அவனை எதற்கும் இளைக்காதவனாக்கி உள்ளன.
விமானத் தயாரிப்பாளர்கள் ‘ஒலித் தடை’யைத் தாண்டுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். அதாவது வினாடிக்கு 330 மீற்றர் அல்லது மணிக்கு 1200 கி. மீ. என்னும் ஒலியின் வேகத்தையும் கடந்த விமானங்களை உருவாக்குவதற்கு முயற்சிசெய்தனர்.
இன்று அது சாத்தியமாகிவிட்டது. மணிக்கு 2500 கி. மீ. வேகத்தில் செல்லும் விமானம் முதலில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. இன்று சக்திமிக்க ஜெட் இயந்திரங்கள் கொண்ட சிறிய விமானங்கள் மணிக்கு 3 ஆயிரம் கி. மீ. வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கின்றன.
‘ஸ்புட்னிக்’ ரொக்கெட்டின் தொடக்க வேகம் வினாடிக்கு ஏறத்தாழ 8 கி.மீ. பிற்பாடு வினாடிக்கு சுமார் 11 கி.மீ. என்ற அளவுக்கு அது உயர்ந்தது.
மூன்று கண்ணாடிகள்
விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் எப்போதும் மூன்று கண்ணாடிகள் இருக்கும். ஐன்ஸ் டீனைக் காண வந்த நண்பர் ஒருவர், ‘ஏன் மூன்று கண்ணாடிகள் வைத்தி ருக்கிaர்கள்?’ என்று கேட்டார். ‘படிப்ப தற்கு ஒன்றைப் பயன்படுத்துகிறேன். மற்றொன்றை தூரப் பார்வைக்குப் பயன்படுத்துகிறேன்’ என்றார் ஐன்ஸ்டீன். ‘அது சரி. மூன்றாவது கண்ணாடி எதற்கு?’ ‘இரண்டும் அடிக்கடி காணா மல் போய்விடுகின்றன. அவற்றைத் தேட மூன்றாவது கண்ணாடியை உபயோகப்படுத்துவேன்’ என்றார்.
ஓசோன் படை பாதிப்பு
உலகிலேயே அதிகக் குளிர் உள்ள பிரதேசமாக அந்தார்டிகா உள்ளது. அதில் இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. புவி வெப்பமாவதால் அந்தார்டிகா பகுதியில் பனி உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதாகச் செய்திகள் வந்தன.
இப்போது அங்குள்ள ஆழ்கடலில் நீர் வேகமாக வற்றி வருகின்றது என்னும் அதிர்ச்சித் தகவலை கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துளளனர். கடலில் வற்றி வரும் தண்ணீரின் அளவு கடந்த 50 ஆண்டுகளில் 8 மில்லியன் மெட்ரிக் தொன் எனத் தெரிவிக்கின்றனர்.
இப்படி ஆவியாகிப் போன தண்ணீர் அமெரிக்க மிசி சிப்பி ஆற்றின் மொத்த தண்ணீரை விட ஆதிகம் இருக்குமாம். தண்ணீர் வற்றி வருவதற் கான காரணம் குறித்து ஆராய்ச்சியாளர் கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்ற னர். இருப்பினும் புவி வெப்பமாதலும் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையும் தான் காரணம் என புவி ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ள னர். இப்படி புவி வெப்பமாவதற்கு மனிதர்களாகிய நமது ஆசையும், அறியாமையும் தான் முக்கிய காரணம்.
பாராட்டாலும் தீமை ஏற்படும்
குழந்தைகளை உற்சாகப்படுத்த ஒன்றுமே இல்லாமல் பாராட்டுவது சில பெற்றோர், ஆசிரியர்களின் வழக்கம். ஆனால் இந்த ‘வெற்றுப் பாராட்டால்’ நன்மையைவிடத் தீமையே அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நாம் நல்ல எண்ணத்தில் குழந்தைகளைப் பாராட்டினாலும், தகுதியில்லாத நேரத்தில் பாராட்டுவது அவர்களின் சுயமரியாதையைப் பாதிக்கும், ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது நல்லவிதமான பாராட்டுகள் ஒருவர் விரக்தி அடையாமல் தடுக்கும் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் ஒருவரைப் பாராட்டிக்கொண்டே இருப்பது எங்கே தனது வேலையில் பிறர் குறை கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற படபடப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்கிறார்கள். அத்துடன் அது முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுவிடுமாம்.
இது தொடர்பாக, 295 அமெரிக்க மாணவர்களும், 2 ஆயிரத்து 780 ஹொங்கொங் மாணவர்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தங்கள் செயல்பாடுகளுக்கு ஏற்பப் பொருத்தமான பாராட்டைப் பெற்ற மாணவர்களை விட, மிகையான பாராட்டுப் பெற்ற மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாவது தெரியவந்தது.
‘எங்களின் இந்த கண்டுபிடிப்பு, தகுதியில்லாவிட்டாலும் நன்றாகப் பாராட்டுவது நன்மை புரியும் என்ற பொதுவான கருத்துக்கு எதிராக உள்ளது’ என்று வியப்புத் தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
முப்பரிமாண வளையும் தன்மையுடைய ‘மெமரி சிப்’
செவ்வக வடிவமுள்ள சிறு சிறு அட்டைகள் போல இருக்கும் தற்போதைய மெமரி காட்கள் ஒன்று முதல் 64 கிகா கபட் (Giga Byte) அளவு வரையிலான தகவல்களை சேகரித்து வைக்க பயன்படுகின்றன.
வளையும் தன்மையுடன் கண்ணாடி போல இருக்கும் ஒரு அதிநவீன முப்பரிமாண மெமரி சிப்பை உருவாக்கி அசத்தி இருக்கிறார். அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜேம்ஸ் எம்.டூர். மைக்ரோ எஸ்டியை விட குறைவான அளவில், ஆனால் தற்போதுள்ள அளவை விட மேலும் அதிகமான கிகா பைட்களுடன், சுமார் 1000 பரனைட் வெப்பத்திலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் இந்த 3டி மெமரி சிப்பின் விசேடமே என்கிறார் ஆய்வாளர் டூர்.
தற்போதுள்ள மெமரி சிப்களில் இரு முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற மின்னணுவியல் முறைப்படிதான் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. ஆனால் குறைவான பரப்பளவில் அதிக மெமரி அல்லது தகவல்களை சேமிக்க வேண்டுமானால், இரு முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற இரு பரிமாண அளவுக்கு மேலாக மெமரி சிப்பின் உள்ளமைப்புகளை வடிவமைக்க வேண்டும்.
அதாவது 3டி அல்லது முப்பரிமாண நிலைக்குச் செல்ல வேண்டும். முப்பரிமாண மெமரி சிப்பில் மூன்று முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற முறைப்படி மின்னணு தகவல்கள் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முப்பரிமாண மெமரி சிப்கல் மிக அதிகமான on off ratio அளவுகளைக் கொண்டவை.
அதாவது, ஒரு மெமரி சிப் தகவல்களை சேமித்து வைத்து இருக்கும்போதும், காலியாக இருக்கும்போதும் எவ்வளவு மின்சாரம் அதனுள் பாய முடியும் என்பதை குறிக்கும் அளவுகோல்தான் இந்த on off ratio என்பது. அதிக on off ratio அளவுகளைக் கொண்ட சிப்களையே மெமரி சிப் தயாரிப்பாளர்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, சிலிக்கன் ஒக்சைட்டு எனும் இரசாயன பொருளுக்கு மேல் அதிசய பொருள் (miracle material) என்றழைக்கப்படும் மிக மிக மெல்லிய கிராபீன் அல்லது வேறு வகையான காபன் பொருளாலான படிவங்களைக் கொண்டதுதான் மெமரி சிப்.
மெமரி சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு காரணம் கிராபீன்தான் என்று பல காலமாக நம்பிக்கொண்டிருந்தனர் மின்னணுவியல் விஞ்ஞானிகள். ஆனால் இந்த கூற்று முற்றிலும் தவறென்பது சமீபத்தில்தான் தெரியவந்தது.
அதாவது, மெமரி சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு காரணம் கிராபீன் அல்ல, சிலிக்கன் ஒக்சைட்டுதான் என்னும் அறிவியல் உண்மைதான் அது.
வளையும் தன்மையுடன் கண்ணாடி போல இருப்பதால் என்ன பயன்?
தினசரி வாகன ஓட்டுதல், இராணுவ மற்றும் விண்வெளி வாகன பயன்பாட்டுக்கு உதவும் வகையில் சீ த்ரூ விண்ட் iல்டுகளின் மேல் ஒட்டிக்கொள்ள வசதியாய் இருப்பதைச் சொல்லலாம். இதன் மூலம், இந்த 3டி மெமரி சிப்கள் தகவல்களை சேமிப்பதற்கு மட்டுமல்லாமல் வாகனங்களின் கண்ணாடியாகவும் பயன்படுகின்றன. இதனால் இதர கருவிகளுக்கு தேவையான இட வசதியும் அதிகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரசியமாக கடந்த 2011 ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் Russian Progress 44 Cargo என்னும் விண்வெளி ஓடத்தில் இந்த முப்பரிமாண மெமரி சிப் பரிசோதனைக்காக பொருத்தப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விண்வெளி ஓடம் சைபீரியாவுக்கு மேலே சென்று கொண்டிருந்த பொழுது வெடித்துச் சிதறிவிட்டது.
இதைக் கண்டு சற்றும் மனம் தளராத ஆய்வாளர் ஜேம்ஸ் எம்.டூர், அதிக கதிரியக்க சுற்றுச் சூழலைக் கொண்ட விண்வெளியில் இந்த முப்பரிமாண சிப்கன் எப்படி செயல்படுகின்றன என்பதை பரிசோதிக்க, வருகிற 2012 ஜூலை மாதம் மீண்டும் இவற்றை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இண்டியம் டின் ஒச்சைட்டு மற்றும் கண் ணாடியால் ஆன தற்போதுள்ள தொடுதிரை எளிதில் உடையும் தன்மை கொண்டவை. ஆனால் இந்த முப்பரிமாண மெமரி சிப்களைக் கொண்ட பிளாஸ்டிக் தொடுதிரைகளைக் கொண்டு பழைய தொடுதிரைகளை மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் வளையும் தன்மை யுள்ள உடையாத தொடுதிரைகளையும் மெமரி சிப்பையும் ஒன்றாக்கி விடலாம். இதனால் நமக்கு இட வசதி அதிகரிக்கிறது.
கதவு அமைக்கப்படும் விதம்
வீடுகளின் கதவுகள் உள்ளேயும், பொதுக் கட்டடங்களின் கதவுகள் ஏன் வெளியேயும் திறப்பவையாக உள்ளன தெரியுமா? தீயிலிருந்து பாதுகாக்கும் எச்சரிக்கையாகத்தான் பொதுக் கட்டிடங்களின் கதவுகள் வெளியே திறப்பவையாக உள்ளன.
தீ விபத்து போன்ற வேளைகளில் பலரும் கதவின் வழியாக வெளியே வசதியாக கதவு வெளியே திறக்கும்படி அமைக்கப்படுகிறது.
திருட்டை நினைத்து அச்சப்படும் நிறுவனங்களில் மட்டும் நம் வீட்டுக் கதவுகளைப் போல உட்புறம் திறப்பவையாக அமைக்கப்படுகின்றன.
உட்புறம் திறப்பதால் தப்பிக்கச் சிறிது நேரம் ஆகும். தவிர, அந்த கதவுகளுக்கான ‘கீல்’கள் உட்புறமாக இருப்பதால் கொள்ளையர்கள் கதவைப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியாது.
கடலின் ஆழம்
தரையில் இருந்து கடலுக்கு உள்ளே ஓரிரு மைல்கள் வரை இருக்கும் பகுதியை நாடுகளின் எல்லை என வரையறுத்து இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் கடலின் ஆழம் சராசரியாக 600 அடி இருக்கலாம். இதற்கு அப்பால்தான், உண்மையான கடலின் ஆழம் தொடங்குகிறது. இதற்கு ‘காண்டினென்டல் ஷெல்ப்’ என்று பெயர். இந்தப் பகுதியிலும், 3 விழுக்காடுதான் கடல் உள்ளது.
அதற்குப் பிறகுதான் 97 விழுக்காடு கடல் இருக்கிறது. இங்கு ஆழம் 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. இந்தப் பகுதியை ‘அபிஸ்’ என்று அழைக்கிறார்கள். இதன் உள்ளே, பிரமாண்டமான சமவெளிகள், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத்தொடர்கள் எல்லாம் இருக்கின்றன.
சூரிய ஒளி, கடலுக்கு உள்ளே 100 அடி ஆழம் வரையிலும்தான் தெளிவாக இருக்கும். அதற்குக் கீழே போகப்போக சூரிய ஒளி மங்கிக்கொண்டே போகும். கும்மிருட்டுதான்.
கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது? என்ற கேள்வி பல நூற்றாண்டுகளாக மனிதனின் தூக்கத்தைக் கெடுத்தது.
கிரேக்கத் தத்தவமேதை அரிஸ்டோட்டில், ‘கடலுக்கு அடியில் ஏதோ இருக்கிறது’ என்று சொன்னதைக் கேட்ட அவரது சீடர் அலெக்சாண்டர் என்பவர் ஒரு கண்ணாடி பலூன் வடிவத்தைச் செய்து அதற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு, கடலுக்கு உள்ளே சிறிது ஆழத்துக்குச் சென்று வந்தார். அப்போது அவர் பிரமாண்டமான திமிங்கலத்தைப் பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார்.
எந்த ஒரு கருவியின் துணையும் இல்லாமல், மூச்சை அடக்கிக்கொண்டு ஒருவர் 285 அடி ஆழம் வரையிலும் இறங்கி இருக்கிறார். ஒரு கயிற்றில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிலேட்டுப் பலகையைக் கட்டிவிட்டார்கள். அந்தப் பலகைகளில் கையெழுத்துப் போட்டுவிட்டு வரச்சொன்னார்கள். 285 ஆவது சிலேட்டு வரை கையெழுத்துப் போட்டுவிட்டு சுயநினைவை இழந்து விட்டார். இதுதான் மூச்சை அடக்கி கடலில் நீண்ட நேரம் மூழ்கிய சாதனை.
காசநோயை ஆரம்பத்தில் இனங்காண்பதால் உயிராபத்தை முற்றாக தடுக்க முடியும்
உலகளாவிய ரீதியில் மனிதரின் உயிரைப் பறிக்கும் முக்கிய நோய்களில் காசநோயும் ஒன்றாகும். மனித நாகரிகம் தொடங்கிய காலம் முதல் இந்நோயின் தாக்கம் தொடர்கிறது. சுமார் 18 ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த இந்நோய் மிருகங்களிலிருந்து மனிதருக்குத் தொற்றியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்.
எகிப்திய பிரமிட்டுக்களில் வைக்கப்பட்ட கெடாது பதனப்படுத்தப்பட்ட பிணங்களில் (Mummies) இந்நோயை ஏற்படுத்தும் பக்டீரியா கிருமிகள் இருப்பதைக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவை கிறிஸ்துவுக்கு முன் 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும்.
டியுபர்குளோசிஸ் (Tuberculosis) என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். கிறிஸ்துவுக்கு முன் 460 ஆண்டு மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் கிப்பேகிரேடிஸ் இந்த நோய் மிகவும் வேமாகிப் பரவி மரணங்கள் ஏற்படுத்தியதைக் கண்டார். இந்நோய் எலும்பு நக்கி நோய் என்றும் அழைப்பர். இது உடலுக்குள் இருந்து கொண்டு உள் உறுப்புக்களை மெதுவாகத் தாக்குவதால் இதைக் சுட்டெரிக்கும் நோய் (Consumption Disease) என்றே முன்பு அழைத்தனர்.
இது முதலில் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தி (Pulmonary Tuberanlosis) உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஏனைய உறுப்புக்களையும் பாதிக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குன்றும் போதுதான் இந்நோய் தாக்குகிறது. இதனால்தான் சிலரின் உடலுக்குள் காச நோய் பக்டீரியா உட்சென்று இருந்தும் அவர்களை நோய் தாக்குவதில்லை. இதை வளர்ச்சியுறாத காச நோய் (Latent TB) என அழைப்பர்.
உலக சனத் தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் (02 மில்லியன்) இந் நோயால் தாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு விநாடியும் ஒருவர் இந்நோயின் தொற்றுக்கு ஆளாகிறார். ஒவ்வொரு 20 விநாடியும் ஒருவர் இந்நோய் காரணமாக மரணமடைகிறார். வருடம் தோறும் 8 முதல் 10 மில்லியன் புதிய நோயாளர்கள் இனம் காணப்பட்டு இரண்டு மில்லியன் பேர் மரணமடைகின்றனர்.
காச நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த செயல் திட்டங்களைக் கொண்ட நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை இனம் காணப்பட்டுள்ளது. இங்கு 100,000 பேரில் 89 பேர் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஆண்டு தோறும் 11,000 பேர் சிகிச்சை பெற்று 400 பேர் மரணமடைகின்றனர். கடந்த ஆண்டு 2011 10095 காச நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். 80 சதவீதமான காச நோய் நுரையீரலில் ஏற்படுகிறது.
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிடில் இது படிப்படியாக ஏனைய உறுப்புக்களையும் தாக்கும். கண், காது, மூளை, தண்டு வடம் முதுகெலும்பு, எலும்பு, கல்லீரல், இரைப்பை, உணவுக் குழாய், சிறுநீரகம், இருதயம், அட்ரீனல் சுரப்பி, நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, பாலுறுப்புக்கள், தோல், முட்டுக்கள் போன்றவற்றை இந்நோய் பாதிக்கும் இருதயத்தைத் தாக்கினால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். பாலுறுப்புக்களில் ஏற்படும் நோய் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். இரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு (TB Meningitis) மரணம் சம்பவிக்கும்.
87 சதவீதமான காச நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே காணப்படுகின்றனர். கடந்த ஆண்டு (2011) இங்கு 2096 பேர் இனம் காணப்பட்டனர். நான்கு சதவீதமான காச நோய் குழந்தைகளைப் பாதித்துள்ளது. இவர்களிடம் தற்போது இந்நோய் மிகவும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வின்மையே இந்நிலைக்குக் காரணமாகும். 15 வயது முதல் 55 வயது வரையானவர்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு பரம்பரை நோயல்ல. இது ஏனைய மிருகங்கள், பூச்சிகள், நுளம்புகள் மூலம் பரவாது. இது தடுக்கக் கூடியதும், குணப்படுத்தக் கூடியதுமான ஒரு நோயாகும். இந்நோயை ஆரம்பத்தில் கண்டு பிடித்து உரிய சிகிச்சை அளித்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆனா, அதிகமானோர் நோய் முற்றிய கட்டத்திலேயே மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை பெறச் செல்கின்றனர்.
சிலர் வெட்கம் காரணமாக மார்பு நோய் சிகிச்சை நிலையங்களுக்குப் போவ தில்லை. இன்னும் சிலர் கொடுக் கப்பட்ட மருந்தை மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டபடி எடுப்பதில்லை. சிறிது குணம் தென்பட்டவுடன் மருந்தை விட்டு விடுகின்றனர். இதனால் மீண்டும் நோய் தலைதூக்கும். இப்படி நோய் மீண்டும் ஏற்பட்ட பின் சாதாரணமாகக் கொடுக்கப்படும் மருந்து திறன் அற்றதாகிவிடும் ‘இதனால் நோய் குணப்படுத்த முடியாமல் மரணம் ஏற்படும்.
முன்பு பலர் காச நோய் என்றதுமே பீதியடைந்தனர். ஆனால் இன்று அந்நிலை மாறிவிட்டது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் 24 ஆம் திகதி உலக காசநோய் எதிர்ப்புத் தினம் அனுஷ்டிக்கப்பட்டு மக்களிடையே இந்நோய் பற்றிய அறிவையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியமையே இதற்கு முக்கிய காரணமாகும். இந் நோய் ஏற்பட்டால் ஆறு மாதங்களில் பூரணமாக குணப்படுத்திக் கொள்ளலம் என மக்கள் அறிந்திருக்கின்றனர். ஏனைய நோய்களைப் போலன்றி காச நோய் பூரணமாகக் குணப்படுத்தக் கூடியதொரு நோயாகும்.
எயிட்ஸ் நோயாளர்களில் ஐந்தில் ஒருவர் காச நோய் காரணமாகவே மரணமடைகின்றனர். இந்நோயைக் கட்டுப்படுத்தாவிடில் அடுத்த இருபது வருடங்களில் உலகளாவிய ரீதியில் சுமார் ஒரு பில்லியன் பேர் புதிதாக இந் நோயின் தொற்றுக்கு ஆளாவர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும், 2000 மில்லியன் பேர் இந் நோயின் தாக்கத்திற்கு ஆளாகி 35 மில்லியன் பேர் மரணமடைவர். எனினும், உலகளாவிய ரீதியில் 2050 ஆம் ஆண்டில் இந்நோயைப் பூரணமாகக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் நம்புகிறது.
1882 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24 ஆம் திகதி இந்நோயை ஏற்படுத்தும் பக்டீரியாவை ஜேர்மன் நாட்டு மருத்துவர் ரொபட் கொக் கண்டு பிடித்தமை பற்றி அறிவித்தார். இதனால் தான் அத்தினத்தில் உலக காச நோய் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இக் கண்டு பிடிப்பு அக்காலத்தில் காச நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவியது. இவ் அரிய கண்டுபிடிப்புக்காக இவருக்கு 1905 ஆம் ஆண்டில் நோபல் பரிசு கிடைத்தது.
காச நோய் என்ற பயங்கரமான தொற்று நோய் மைகோபக்டீரியம் டியுபர்குளோகிஸ் (Mycobacterium Tuberculosis)என்ற பக்டீரியா நுண் கிருமியால் ஏற்படுகிறது. இந்நோய் தொற்றிய ஆரம்பத்தில் அறிகுறிகள் தென்படாது.
தொற்றுக்கு உள்ளாகி யவர்களில் பத்து சதவீதமானோருக்கே முற்றிய நோய் ஏற்படும். இவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை அளிக்காவிடில் ஐம்பது சதவீதமானோர் மரணமடைய நேரிடுகிறது. இந்நோய் க்கான தடுப்பூசியான பிசிஜி (BCG) மருந்து 1906 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது.
நுரையீரலுக்குள் மண், தூசி, சிறுநீரகச் செயலிழப்பு, நீரிழிவு நோய், புகைத்தல், மது, போதைவஸ்து பாவனை, சுண்ணாம்புச் சத்து குறைபாடு விட்டமின் D குறைபாடு, வாத நோய், எயிட்ஸ், இருதய நோய், கல்லீரல் புற்று, இரத்தப்புற்று, சில மருந்துகள் குறைந்த உடல் எடை வீரியமிக்க மருந்துகள் உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை, நுரையீரல் வியாதிகள் போன்றவை காச நோயை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன.
உணவுகள் மூலமும் காச நோய் ஏற்படுகிறது. மாமிசம் உட்கொள்வோரை விட மரக்கறி உணவு உட்கொள்வோருக்கு காச நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உண்டு. மரக்கறி உணவுகளில் இரும்புச் சத்து, விட்டமின் B 12 விட்டமின் D போன்றவை குறைவு. விட்டமின் D குறைபாடு காசநோயை ஏற்படுத்தும்.
நெஞ்சு நோவு, இருமும் போது சளி நுரையீரல் அடியிலிருந்து வெளிவரல், சளியில் இரத்தம் இருத்தல், மூன்று வாரங்களுக்கு மேற்பட்ட இருமல், சில நேரங்களில் காய்ச்சல், நடுக்கம், அஜீரணம், இரவில் அதிகமாக வியர்த்தல், பசியின்மை, எடை குறைதல், மூச்சு விடக் கஷ்டம், வெளிறிய முகம், சோர்வு, களைப்பு, தோள்பட்டையில் நோ என்பன நுரையீரல் காச நோயின் அறிகுறிகளாகும். 90 சதவீதமான காச நோயாளர்களிடம் எவ்வித அறிகுறிகளும் தென்படாது.
டியுபகின் பசிலஸ் (ஹிubலீrலீlலீ கிaணீillus) என்ற காச நோயை ஏற்படுத்தும் பக்டீரியா ஒரு காச நோயாளி இருமும் போதும், தும்மும் போதும், கதைக்கும் போதும், துப்பும் போதும், முத்தமிடும் போதும், பாடும் போதும், புல்லாங் குழல் வாசிக்கும் போதும் வெளிவிடப்படுகிறது. இது சுகதேகியின் வாய், மூக்கு வழியாக உட்சென்று நுரையீரலில் தங்கி இருக்கும். பின் மெதுவாக மில்லியன் கணக்கில் பெருகி சிறு கொப்பளங்களை நுரையீரலுக்குள் ஏற்படுத்தும்.
இதையே டியுபாகுளோசிஸ் (Tuberele Bacillus) என்பர். இக் கட்டத்தில் உரிய சிகிச்சை அளிக்காவிடில் நோய் முற்றி மீண்டும் இவர் மூலம் நோய் பரவும். இந்நோயை ஏற்படுத்தும் பக்டீரியா சுமார் இரண்டு மணித்தியாலங்கள் மரணிக்காமல் காற்றில் மிதக்கும் சக்தி கொண்டவையாகும். நோயாளி தும்மும் போது இக்கிருமி நீண்ட தூரம் காற்றில் மிதந்து செல்லும்.
எனவே நோயாளி தும்மும் போதும் இருமும் போதும் முழங்கையை மடித்து அதற்குள் தலையை வைத்து கீழே குனிய வேண்டும் அல்லது கைக்குட்டை பாவிக்கலாம். நோயாளியின் பக்கத்தில் இருப்போரும் கைகுட்டையால் வாய், மூக்கை மூட வேண்டும். அவ்விடத்திலிருந்து அகல வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் நோய் தொற்றுவதை ஓரளவு தவிர்க்க முடியும்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு இந் நோய் தடுக்கக் கூடியதும் பூரணமாக குணப்படுத்தக் கூடியதாகும்.
காச நோயின் ஆரம்ப அறிகுறிகளை அவதானித்து மார்பு நோய் சிகிச்சை நிலையம் சென்று எச்சிலைப் பரிசோதனை செய்து தாமதியாது உரிய சிகிச்சை பெற வேண்டும். மேலும், அவரின் வீட்டிலுள்ளோரும், இந்நோய் ஏற்படும் அபாயத்தைக் கொண்டோரும் இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படுவோரும் அவர்களுடன் தொடர்புடையோரும் இப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தடுப்பு மருந்து ஏற்றி சிறார்களை இந்நோய் தொற்றாதவாறு பாதுகாக்க வேண்டும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால் இந்நோய் தாக்காதவாறு பாதுகாக்கும். நாம் உட்கொள்ளும் சில உணவுகளில் அடங்கியுள்ள ஒட்சிடனெதிரிகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து காச நோய் ஏற்படாது தடுப்பதோடு ஏற்பட்ட பின்பும் விரைவில் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை.
வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் உள்ள ஒட்சிடனெதிரிகள் போர் வீரர் போன்று காச நோய் பக்டீரியாக்களுடன் போராடி அவற்றை அழித்து நோய் ஏற்படாது பாதுகாக்கும் வல்லமை கொண்டவையாகும். நோய் ஏற்பட்ட பின்பும் விரைவில் குணப்படுத்தும். நோய் மீண்டும் தாக்காதவாறு பாதுகாக்கும். காச நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முன் காச நோய்க்கு வெங்காயம் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் இதைக் காச நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாகப் பயன்படுத்தினர். எனவே அதிக வெள்ளைப் பூண்டு. மற்றும் வெங்காயம் அடிக்கடி உணவில் சேர்த்தால் காச நோய் எம்மைத் தாக்காதவாறு பாதுகாக்க முடியும். வெள்ளைப் பூண்டு மாத்திரைகளைவிட பச்சையாகச் சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும்.
இவ்வாறு இஞ்சியும் நுரையீரலில் உள்ள சளியை அகற்றி நோய் விரைவில் குணமடைய உதவும். சுண்ணாம்புச் சத்து மற்றும் விற்றமின் வி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய் ஏற்படாது பாதுகாக்கும். எனவே, அதிகம் பால், தயிர் உட்கொள்ள வேண்டும்.
தோடம்பழம், எலுமிச்சை, பப்பாசி போன்றவற்றில் அபரிமிதமாக விட்டமின் வி அடங்கியுள்ளது.
தினம் இரண்டு கோப்பை யோகட் சாப்பிட்டால் தேவையான சுண்ணாம்புச் சத்து கிடைக்கும். காற்றோட்டமுள்ள வீட்டில் வசிக்க வேண்டும். அடிக்கடி கடற்கரைக்குச் சென்று மாசு அடையாத காற்றைச் சுவாசிக்க வேண்டும். மேற்படி நடவடிக்கைகளைக் கையாளுவதால் காச நோய் பரவாது தடுக்க முடியும்.
காச நோய் ஏற்பட்டுள்ளது என அறிந்ததும் பயப்படாது வெட்கப்படாமல் மார்பு நோய் சிகிச்சை நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
(Thinakaran)
நன்றி மறப்பது நன்றன்று
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.
கொ…. கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? தயக்கத்துடன் கேட்டான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள். உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், ‘நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?’
‘கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்…..’ அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
‘மிக மிக நன்றி…..’ சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. வைத்திய அறிக்கையில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள்.
அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல இலட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட கடதாசியில் வைத்தியச் செலவை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள்.
அதன் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, ‘ஒரு கப் பாலில் உங்கள், கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.’ அவளுடைய கண்கள் கசிந்தன.
மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசங்களில் ஒன்று நன்றி சொல்லுதல். அமெரிக்காவில் நீங்கள் காரில் போகிaர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் உங்களை முந்திச் செல்ல நீங்கள் அவருக்கு வழிவிட்டால் அவர் உங்களுக்கு ‘நன்றி’ சொல்லி விட்டுத்தான போவார். சாலையில் ஒருவர் கடக்க நீங்கள் வண்டியை நிறுத்தினால் அவர் ‘நன்றி’ சொல்வார். கடையில் ஒரு பொருள் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு ‘நன்றி’ சொல்வார்கள்.
நன்றி சொல்லும் வழக்கம் அவர்களிடம் ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது. நல்லவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம், தப்பில்லை.
நன்றி என்பது ஒரு சிறிய வார்த்தைதான். ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. அது ஒரு வார்த்தையாய் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விடயம்.
சின்னச் சின்ன விடயங்களில் நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய விடயங்களிலும் நன்றி சொல்ல முடியாது என்கிறது எஸ்தோனிய பழமொழி ஒன்று.
நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உண்டு. ஓர் குறுந்தகவல் ஒரு சிறிய மின்னஞ்சல் வரி கூட உங்கள் நன்றியை எடுத்துச் செல்லலாம்.
எதிர்பாராத நேரத்தில் ஒருவரை ஒரு ‘நன்றி’ மூலம் மகிழச் செய்வது அற்புதமான விடயம். அந்த நபர் செய்த நல்ல பத்து விடயங்களைப் பட்டியலிட்டு, அதற்காக உங்களுடைய மனமார்த்த நன்றியையோ, பரிசையோ அளித்துப் பாருங்கள் அது அந்த நபருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக அமையும்என்பதில் ஐயமில்லை.
நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா? கூட இருப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவதுதான். கூடவே இருப்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லக்கூடாது என நினைத்து விடுகிறோம். நன்றி என்பது அலுவல் சமாசாரங்களுக்கு மட்டுமானது என தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி என எல்லோருக்கும் நன்றி சொல்வதே நல்ல பழக்கம்.
‘தினமும் எனக்கு நீங்க தானே தேனீர் போட்டு தருகிaர்கள் இன்றைக்கு அதற்கு ஒரு சிறிய நன்றியா, நானே தேனீர் போட்டு உங்களை எழுப்புகிறேன்’ என அம்மாவை ஒருநாள் நெகிழச் செய்யுங்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தியுங்கள். உங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணுக்கோ, தோட்டக்காரருக்கோ, காவல்காரருக்கோ, என்றைக்காவது மனதார நன்றி சொல்லியிருக்கிaர்களா?
ஒரு பாராட்டு ஒரு பரிசு, ஒரு மனமார்ந்த நன்றி என அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சிப் பக்கத்தை எழுதியிருக்கிaர்களா? எல்லா மனிதரும் கடவுளின் பிம்பங்கள் என்கிறோம். அதில் பலவீனங்களை எப்போதுமே ஒதுக்கியே வைக்கிறோமே தவிறல்லையா?
சொல்லப்படாத நன்றி எப்படிப்பட்டது தெரியுமா? ‘ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி அதை அருமையாக சுற்றி அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது’ என்கிறார் வில்லியம் ஆர்தர் வேர்ட்.
யாராவது நமக்கு ஒரு கெடுதல் செய்தால் நாள் கிழமை குறித்து மனதுக்குள் கல்வெட்டாய் வைப்பதும், அவர் நமக்குச் செய்த நன்மைகளை காற்றில் எழுதி காணாமல் செய்வதும் நமது பழக்கம். அதை அப்படியே மாற்றிச் செய்து பழக வேண்டும். தீயது செய்தால் காற்றில் எழுது நல்லதெனில் மனதில் எழுது.
வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் ‘நன்றி’ சொல்லும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் நமது செயல்களைப் பார்த்து வளரும். எனவே நாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டியது அடிப்படைத் தேவையாகி விடுகிறது.
நன்றி சொல்ல வேண்டும் எனும் மனம் இருந்தால் உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். நல்லவற்றுக்கு மட்டுமல்லாமல் சோதனைகள், பலவீனங்கள், தோல்விகள் இவற்றுக்குக் கூட நீங்கள் நன்றி செலுத்தலாம்.
ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு. அந்தப் பாடலின் சில வரிகளை இப்படித் தமிழிழ் மொழி பெயர்க்கலாம்.
என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.
என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது. எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.
எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.
எனது பிழைகளுக்காய் நன்றி அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித்தருகின்றன.
எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.
எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின கலிபோர்னியாவில் ஒரு ஹம்பேக் திமிங்கலம் வலையில் சிக்கிக் கொண்டது. உடல் முழுதும் கயிறுகள் சிக்கிக் கொள்ள திமிங்கலத்தால் நீந்த முடியவில்லை. அந்த 50 அடி நீள திமிங்கலத்தின் கட்டுகளை அறுக்க பாதுகாப்பாளர்கள் திட்டமிட்டார்கள்.
திமிங்கலம் மெல்ல வாலை அசைத்தாலே ஒருவர் இறந்து விடலாம். கட்டறுத்தபின் கோபத்தில் அது குதித்தாலும் இறந்து விடலாம். எனும் திகில் நிமிடங்களுடன் ஆட்கள் போராடினார்கள். கயிறுகளை அறுத்தார்கள். திமிங்கலம் கண்களை உருட்டி எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்தது. கட்டுகள் அவிழ்த்து முடித்ததும் ஆனந்தத்தில் கடலுக்குள் நீச்சலடித்தது.
பின் எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு விடயம் நடந்தது. அந்த பிரம்மண்டமான திமிங்கலம் திரும்ப வந்தது. வந்து, கட்டுகளை அவிழ்த்த ஒவ்வொரு நபர் முன்னாலும் சென்று தன் முகத்தினால் அவர்களை மெல்ல முட்டித்தள்ளி தன் நன்றியைச் சொன்னது. எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வள்ளுவர் வரிகள் திமிங்கலத்தின் செயலில் வெளிப்பட்டன. நன்றி அறிவித்தல் திமிங்கலத்திடம் கூட இருக்கிறது என்பதை அமெரிக்கப் பத்திரிகைகள் அப்போது வியப்புடன் வெளியிட்டன.
பிடிவாதக்காரர்களுக்காக நன்றி சொல்வதில் உள்ள மருத்துவத் தகவல்களையும் கையோடு சொல்லி விடுகிறேன்.
2007 இல் நடத்தப்பட்ட டாக்டர் எம்மோஸ் ஆய்வு ஒன்று ‘நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள் மன அழுத்தமற்றவர்களாகவும், நிம்மதியான தூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்’ என்றது. இதனால் அவர்களுடைய உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.
‘நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும்’ என 2010 இல் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு தெரிவித்தது.
அமெரிக்காவிலுள்ள மிச்சகன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று ‘நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் மிகவும் ஆனந்தமாய் இருப்பார்கள்’ என தனது கண்டுபிடிப்பை வெளியிட்டது.
வாழ்க்கை மிக அழகானது. நமது ஜம்புலன்களும் நம்மை வினாடி தோறும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவோ அழகான விடயங்களை, மனிதர்களைக் காண்கிறோம். பேச்சுகளை, இசையைக் கேட்கிறோம். பலவற்றை உணர்கிறோம். சுவைகளை ரசிக்கிறோம். நமது புலன்களின் பரிசளிப்புக்கு நன்றி சொன்னதுண்டா? இல்லாத விடயம் கிடைக்கும்போதுதான் நன்றி சொல்ல வேண்டுமென்பதில்லை. இருக்கின்ற விடயத்துக்காகவே நன்றி சொல்லலாம்.
விடைபெறுதல் என்பது முடிவுரையல்ல. இன்னோர் இடத்தில் சந்திப்போம் என்பதன் உத்தரவாதம்.
நன்றி சொன்னால் பேரழகு! நன்றி சொன்னால் பாரழகு!
‘புளூடூத்’ என்ற பெயர் எப்படி வந்தது?
புளூடூத் (Bluetooth) தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளூடூத் அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளூடூத் எனப் பெயரிட்டனர்.
இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், நோர்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.
தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறிஸ்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.
-Thinakaran
மூழ்காது என்று உத்தரவாதம் பெற்ற டைட்டானிக் கப்பல் முதற் பயணத்தில் மூழ்கியது
விமானப் பயணங்கள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருந் தொகை பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பிரபலமாக இருந்தன. ஜக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் அந்தக் காலத்தில் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் அதியுயர் மேம்பாடு அடைந்திருந்தன.
வைற் ஸ்ரார் லைன் (White Star Line) என்ற ஜக்கிய இராச்சியத்தின் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் கப்பல் நிறுவனம் டைட்டானிக் கப்பலுக்கு உரிமையாளராக இருந்தது. எதுவிதத்திலும் மூழ்காது என்ற உத்தரவாதத்துடன் இந்தக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்குத் தொடங்கியது.
நான்கு புகை போக்கிகளைக் கொண்ட இந்தக் பிரமாண்டமான கப்பலில், கப்பல் விபத்திற்கு உட்பட்டால் “ உயிர்காக்கும் படகுகள்” (Lifeboats) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு செல்லப்பட்டன.
இதற்கு மேற்கூறிய உத்தரவாதமும் அதிக எண்ணிக்கையில் இந்தப் படகுகளை ஏற்றிச் சென்றால் பயணிகளின் நம்பிக்கை கெட்டு விடும் அத்தோடு கப்பலின் அழகும் பாதிக்கப்பட்டு விடும் என்று காரணம் சொல்லப்படுகிறது.
கப்பல் நிறவனத்தின் உத்தரவாதத்தை மீறிய டைட்டானிக் (Titanic) என்ற பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தில் அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப் பாறையுடன் (Iceberg) மோதி 1912 ஏப்ரல் 14ம் நாள் இரு பாகங்களாக உடைந்து மூழ்கியது.
இந்த விபத்தில் 1,517 பேர் உயிரிழந்தனர். உயிர் காக்கும் படகுகள் கூடிய எண்ணிக்கையில் இருந்திருந்தால் இதில் 1,500 உயிர்களாவது காப்பாற்றப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கப்பலில் அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் தொடக்கம் ஜரோப்பாவின் புதிய வாழ்க்கையைத் தேடும் கிராமப் புற மக்களும் பயணித்தனர்.
மேல் தட்டு முதலாம் வகுப்பில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டு வங்கிகளின் சொந்தக்காரர்கள், பரம்பரைச் செல்வந்தர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்.
மலிவுப் பயணம் செய்தோர் வசதிகள் குறைந்த கப்பலின் அடிப்பாகத்தில் பயணித்தனர். ஜரோப்பிய மதக் கலவரங்கள், வேலை நிறுத்தம் செய்ததற்காகத் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள், நிலங்களை இழந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்குச் சென்றனர்.
லெபனோன், சீரியா (Lebanon, Syria) போன்ற மத்திய கிழக்கு நாட்டவர்களும் குடும்பங்களோடு இடம்பெயர்ந்து சென்றனர். பெல்ஜியம், பின்லாந்து, சுவீடன், டென்மார்க், குரோசியா, ஜேர்மனி போன்ற நாட்டவர்களும் புதிய வாழ்வைத் தேடிச் சென்றனர்.
பெருமளவு உயிரிழப்பிற்கு உயிர் காக்கும் படகுகளின் தட்டுபாடு மாத்திரமல்ல டைட்டானிக் கப்பலின் வானொலி இயங்காமல் இருந்ததும் காரணமாக இருக்கிறது. வானொலி நல்ல நிலையில் இருந்திருப்பின் பிற கப்பல்களை உதவிக்கு அழைத்திருக்க முடியும்.
அந்த இரவில் மிதக்கும் பனிப் பாறைகள் பற்றிய எச்சரிக்கையை அத்திலாந்திக் கடலில் சென்ற பிற கப்பல்கள் டைட்டானிக் கப்பல்களுக்கு அனுப்பின ஆனால் வானொலி முடங்கிக் கிடந்ததால் எச்சரிக்கைகள் வீணாகின.
பிரமாண்டமான டைட்டானிக் கப்பலில் இன்னொரு தொழில் நுட்பக் கோளாறு இருந்தது. கப்பலைத் திசை திருப்ப உதவும் சுக்கானுக்கும் (Rudder) சுக்கானைத் திருப்பும் பிடிக்கும் (Tiller) இடையிலான தொடர்பில் 37 நொடி (37 Seconds) நேர வித்தியாசம் இருந்தது.
இதனால் இறுதி நேரத்தில் பனிப் பாறையுடன் மோதுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. டைட்டானிக் விபத்திலிருந்து படிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் இருக்கின்றன நவீன தொழில் நுட்பத்தால் இயற்கையை மோதி வெல்ல முடியாது. எங்கோ ஒரு இடத்தில் மனிதத் தவறு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
இரு துண்டுகளாக உடைந்த கப்பல் இரண்டு மணிக்கும் சற்றுக் கூடிய நேரத்தில் அத்திலாந்திக் கடலின் 12,600 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. இன்றும் அது அங்கேயே கிடக்கிறது. இந்த விபத்து பற்றி ஆய்வு நூல்கள், மேடை நாடகங்கள், திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.
கப்பல் மூழ்கிய 29 நாட்களில் ஒரு பத்து நிமிடப் படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் பிரதம பாகத்தில் நடித்தவர் 22 வயது நடிகை டொறித்தி கிப்சன் ( Dorothy Gibson) இவர் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து காப்பாற்றப்பட்டவர்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது “முதலாவதாகப் பெண்களும் சிறுவர்களும்” (Women and Children) என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. உயிர் காக்கும் படகுகளில் இவர்கள் தான் முதலில் ஏற்றப்பட்டனர். ஆனால் மலிவுப் பயணம் செய்த பல பெண்களும் சிறுவர்களும் காப்பாற்றப் படவில்லை.
சில ஆண்கள் பெண்களையும் சிறுவர்களையும் முந்திக் கொண்டு படகுகளில் ஏறித் தப்பிச் சென்றனர். சில உயர் குடிப் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களைப் பிரிய மறுத்து அவர்களோடு கடலில் மூழ்கினர். பலவிதமான மனித இயல்புகள் அந்த நள்ளிரவில் வெளிப்பட்டன.
டைட்டானிக் மூழ்கிச் சரியாக ஒரு நூற்றாண்டாகிறது. அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப்பாறை ஆபத்தைப் போக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. அவை ஒரே இடத்தில் நிற்காமல் மிதக்கின்றன அவற்றின் பெரும் பகுதி நீர் மட்டத்திற்குக் கீழே இருக்கின்றன.
பனிப்பறைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு வர்ணம் பூசப்படுகின்றன. அவற்றின் மீது குண்டு வீசித் தகர்க்கப் பட்டுள்ளன. றாடர் திரை மூலமாகவும் செய்மதி மூலமாகவும் பனிப் பாறைகள் அவதானிக்கப் படுகின்றன.
ஆனால் வருடமொன்றுக்குச் சராசரி இரண்டு மோதல்கள் நடக்கின்றன. பெப்ரவரி – யூலை மாதங்களில் ஆபத்துக்கள் கூடுதலாக இருக்கின்றன. ஜனவரி 1959ல் 95 பயணிகளோடு ஒரு கப்பல் மூழ்கியது. ஆனால் அந்தப் பக்கத்தில் சென்ற இன்னொரு கப்பல் அவர்களைக் காப்பாற்றியது.
மூழ்கடிக்க முடியாத கப்பல் இன்னும் கட்டப்படவில்லை. வீழ்ந்து நொருங்காத விமானம் இன்னும் உருவாக்கப் படவில்லை. வெடித்துச் சிதறாத அணு உலை இன்னும் நிறுவப்படவில்லை. பனிப் பாறை ஆபத்தும் இன்னும் நீங்கவில்லை.
-Tamilwin
நமக்கும் விலங்குகளுக்கும் கண்களில் என்ன வேறுபாடு?
தூரங்களைச் சரியாகக் கணிக்கவும் ஆழ்பொருள்களைக் காணவும் நம் தலையின் முன்புறத்தில் இரண்டு கண்கள் அமைந்துள்ளன. மரங்களில் கிளைக்குக் கிளை ஆடி அசைந்து இயங்க வேண்டியிருந்ததால் இடை தூரங்களைத் துல்லியமாகக் கணிக்க வேண்டியதாயிற்று. அதனால் அதற்கேற்ப நம் பழம்மூதாதையரின் பக்கவாட்டிலிருந்து கண்கள் முன்பக்கமாக இடம்பெயர்ந்து மாற்றம் பெற்றன. முன்புள்ள இரு கண்களின் தனிப்பட்ட பார்வைக் களங்கள் ஒன்றின் மீது ஒன்று மேற்செல்லும் போது கவிகின்றன. நாம் இரண்டு பிம்பங்கள் ஒன்றின் மேல் ஒன்று ஏறியது போல் காண்கிறோம். ஆனால் இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள தூரத்தால் ஒவ்வொன்றின் பிம்பமும் பொருளின் பக்கத்தைச் சுற்றிக் கொஞ்ச தூரம் செல்ல வேண்டியதாகிறது. இது திட்பக்காட்சிப் பார்வை (stereoscopic vision) அல்லது பார்வை ஆழம் என அழைக்கப்படும். இப்பார்வையை நாமும் வாலில்லாக் குரங்குகளும் கொண்டுள்ளோம். பல விலங்குகளும் மீனும் இந்தச் சிறப்புத் தன்மையைத் தம்பால் கொள்ளவில்லை. அவற்றிற்கு உலகம் தட்டையாய்த் தோன்றும். ஆனால் இவற்றிற்கு விதிவிலக்காக ஆந்தை உள்ளது. நம்மை விடச் சிறந்த நிலையில் திட்பக்காட்சிப் பார்வையுடன் தொலைக்காட்சிப் பார்வையையும் ஆந்தை கொண்டுள்ளது.
அருகிலுள்ள பொருள்களைப் பற்றிய அளவில் நம்முடைய திட்பக் காட்சிப் பார்வையைப் பொறுத்தே நம் தூரக் கணிப்புகள் அமையும். தூரம் அதிகரிக்க அதிகரிக்க இடதுகண், வலதுகண் காட்சிகளின் இடைவெளி அருகிவிடும். ஆகவே நாம் பிறதுணைக் கூறுகளையும் பொறுத்தாக வேண்டும்.
பொருள் மிக தூரத்திலிருந்தால் அது பார்வைக்கு மிகச் சிறியதாய்த் தோன்றும் என்பது அனுபவக் கூற்று. பொருளின் நிறமும் மாறித் தெரியும். இதனுடைய வடிவ விவரங்கள் மறையும். அதனுடைய மேல் வரியும் மங்கும். சேய்மைப் பொருளின் தூரத்தைத் தீர்வு காண்பதற்கு இயலாத தன்மையைத் தருவது போலன்றி அண்மைப்பொருள்கள் அளவை ஒன்றினை நமக்குக் கொடுக்கின்றன. இணைகோடுகள் அடிவானத்தில் குவிகின்றன என்ற மாயத் தோற்றத்தை தொலைக்காட்சி தருகிறது.
தலைசுற்றி மயக்கமுறச் செய்வது எது?
வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலைசுற்றி மயக்கம் ஏற்படும். சமச்சீரைக் கட்டுப்படுத்தும் காதின் உட்பகுதியிலுள்ள உணர்ச்சி நீர்மம் (Sensitive liquid) உடல் சுற்றுவது நின்றபிறகும் தொடர்ந்து சுற்றிக்கொண்டுள்ளது. ஆகையால் சுற்றுப்புறப் பொருள்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக அல்லது ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன. ஆயினும் சில விநாடிகளுக்குள் அந்த நீர்ம நெகிழ்பொருள் சமன் அடைந்து சரியாகிவிடுகிறது.
இந்த உணர்ச்சி கிறுகிறுப்பு (Vertigo) எனவும் அழைக்கப்படும். உயரத்திலிருந்து கொண்டு கீழே பார்ப்பவனுக்கும், கப்பலில் கோகின்ற போது பார்ப்பவனுக்கும் இக்கிறுகிறுப்பு ஏற்படக்கூடும். உட்காதின் நெகிழ் நீர்மத்தின் காரணத்தால் ஏற்பட்ட நரம்பின் விளைவே இது அல்லாமல் பெரும்பாலும் உடல்சார்ந்த தன்மை இதில் இல்லை எனக் கூறலாம். உடலின் எட்டாவது கபால நரம்பின் ஒரு கிளையான வெஸ்டிபுல நரம்பின் பாதிப்பிலும் தலைசுற்றல் ஏற்படும்.
உணவில் உப்பை கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும்
இலங்கையில் தற்போது இருதய நோயினால் இறப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இன்று நாளொன்றுக்கு 150 பேர் மாரடைப்பினாலும், 40 பேர் பாரிசவாதத்தினாலும் மர ணிக்கிறார்கள். இவர்களைவிட மாரடைப்புத் தொடர்பான திடீர் தாக் கங்களினால் நாளொன்றுக்கு 80ற்கும் மேற்பட்டோர் பாரிசவாதத்தி னால் எழுந்து நடமாட முடியாமல் கட்டிலிலேயே இருக்கவேண்டிய அவலநிலையும் தோன்றுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் வயதுவந்த ஒவ்வொரு 100 பேரில் ஒருவர் பாரிசவாதத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். அதியுயர் இரத்த அழுத்தமே ஒருவர் பாரிசவாத நோயாளியாக மாறுவதற்கு பிர தான காரணமாகும். இந்த நோய்த் தாக்கங்களுக்கு ஏற்புடைய வகை யில் பொதுமக்களுக்கு வழிகாட்டல்களையும், விழிப்புணர்வையும் ஏற் படுத்துவதற்கான பாரிசவாத வாரத்தை மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம் திகதிவரை தேசிய பாரிசவாத சங்கம் வெற்றிகர மாக நாடெங்கிலும் நடத்தியது.
நாம் மேலே கொடுத்த மரணிப்பவர்களின் விபரம் அரசாங்க ஆஸ்பத்திரி களில் இறந்தவர்களின் புள்ளிவிபரங்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட போதிலும் நாடெங்கிலுமுள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளிலும் பலர் மாரடைப்பினாலும், பாரிசவாதத்தினாலும் நாளாந்தம் மரணித்து வரு கின்றனர். இவர்களின் புள்ளிவிபரம் இதில் சேர்க்கப்படவில்லை.
பாதுவாக பாரிசவாதத்தினால் பாதிக்கப்படும் நோயாளி ஒருவரை உடன டியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றால் இரண்டு மணி நேரத்துக் குள் அவருக்கான சிகிச்சையை வைத்தியர்கள் ஆரம்பிப்பார்கள். சில பாரிசவாத தாக்குதல்கள் கடுமையாக இருக்காத பட்சத்தில் நோயாளி ஓரிரு வாரங்களில் பாரிசவாதத்திலிருந்து முற்றாக குணமாகுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதாக வைத்தியர்கள் நம்பிக்கை வைத்துள்ளார் கள்.
ஆயினும், பாரிசவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களில் நூற்றுக்கு எண்பது சதவீதத்தினர் ஒருகால் அல்லது ஒருகை வலுவிழந்த நிலை யில் இருப்பதுடன், மேலும் சிலர் பாரிசவாதத்தினால் படுத்த படுக்கை யாக பல்லாண்டு காலமிருந்து இறுதியில் மாண்டுவிடும் அவலநிலை யையும் எதிர்நோக்குகிறார்கள்.
உணவுடன் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்ளுதல் இருதநோய்க்கு பிர தான காரணியாக அமைகின்றது. அத்துடன் மக்கள் பாண், சோஸ், கேக், பிஸ்கட் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய உணவு வகைகளை பெரு ம்பாலும் உண்பதும் இருதநோய் மற்றும் பாரிசவாதத்துக்கு இன்னு மொரு காரணமாகும். சீன உணவில் அதிகமாக உப்பு கலக்கப்படுவத னால் அது இரத்த ஓட்டத்தில் கலந்து நாடி நாளங்களை அடைப்பத ற்கு காரணமாக இருக்கிறது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
எனவே மக்கள் பாரிசவாதத்தை தவிர்க்க வேண்டுமாயின் கூடியவரை உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று இருதயநோய் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
உப்பில்லா பண்டம் குப்பையில் வீசப்படவேண்டுமென்ற கீழைத்தேய மக் களின் பழக்கத்தை நாம் கைவிடுவது அவசியம். பொதுவாக எந்த வொரு உணவிலும் உப்பு சேர்க்கப்படும்போது அது உண்மையான சுவையை ஏற்படுத்துகிறது. ஏதோவொரு உணவில் உப்புக் குறைவாக இருந்தால்கூட அதன் சுவை குறைந்துவிடும். இது ஒரு யதார்த்த பூர்வமான வாதம் தான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப உப்பை சாதாரண மக்கள் கூட மிகக் குறை வாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
கீழைத்தேய மக்கள் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பதத்தை நன்றி உணர்வை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தினாலும் ஒரு மனி தன் தனது வீட்டில் ஒருவருக்கு விருந்துபசாரம் ஒன்றைச் செய்யும் போது அவர் அந்த உணவில் உப்பை கலந்திருப்பதே மனித பண்புக ளுக்கு ஏற்புடைய பழக்கமாகும்.
நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் அந்த நாடு பொருளாதார ரீயி லும் மற்றெல்லா விதத்திலும் வளர்ச்சியடையும். அதற்கேற்ப நம் நாட் டிலும் நோய்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் இப்போது தக்க நடவ டிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. நோய்களைத் தடுப்பதனால் நோயாளிகளுக்கு அரசாங்கம் ஆஸ்பத்திரிகளில் செலவிடும் பண த்தை பெருமளவில் மீதப்படுத்தி அதனை அபிவிருத்திப் பணிகளு க்கு பயன்படுத்தலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரி விக்கிறார்கள்.
இதுபோன்று மது அருந்துதல், சிகரெட் புகைத்தலும் இருதய நோயை ஏற் படுத்துவதற்கு இன்னுமொரு பிரதான காரணமாகும். இவ்விரண்டு தீய பழக்கங்களை கணிசமான அளவு குறைப்பதற்காக அரசாங்கம் சமீபத் தில் மது மற்றும் சிகரெட்களின் விலையை உயர்த்தியிருப்பதும் ஒரு வர வேற்கத்தக்க செயலாகும்.
பாக்கியவான்களே மனித பிறப்பெடுப்பார்கள் என்ற ஒரு ஐதீகம் இருக்கி றது. அவ்விதம் மனிதப் பிறப்பெடுத்த நாம் எங்கள் வாழ்க்கையின் போது நாட்டிற்கும் மனித குலத்திற்கும் நற்பணிகளை செய்து முடித்த பின்னர் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடைபெற வேண்டும். இதுவே வாழ்க்கையின் யதார்த்தம்.
மனிதப் பிறப்பெடுத்த பாக்கியவான்களாகிய மக்கள் பாரிசவாதம் போன்ற நோய்களினால் பல்லாண்டு காலம் படுத்த படுக்கையாக இருந்து தன க்கும், தனது சுற்றத்தாருக்கும் பிரச்சினையாக இருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் மனிதர்களாகிய நாம் மிகவும் அவதானமாக உட்கொண்டு மதுபானம் அருந்துதல், சிகரெட் புகைத்தல் போன்ற தீய பழக்கங்களை தவிர்த்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நட த்துவது அவசியமாகும்.
உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் ஒரு அமைச்சூர் வானவியலாளர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் FRS(11 January 1786-24 october 1869) என்பதாகும். அவர் கண் கண்ணாடிகள் செய்வதில் வல்லவர். ஓர் இயற்பியல்வாதியும் கூட. நவீன அறுவை சிகிச்சையின் தந்தையாகிய ஜோசப் லிஸ்டரின் தந்தையும் கூட. ஜோசப் ஜாக்சன் லிஸ்டரின் தந்தையின் பெயர் ஜான் லிஸ்டர். அன்னையின் பெயர் மேரி. ஜான் லிஸ்டரின் 49 வது வயதில் பிறந்த கடைசி மகன் தான் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். ஜோசப்பிற்கு சிறு வயதிலேயே கண்ணாடிப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
பாடசாலைப் படிப்பை அரைகுறையாய் முடித்த ஜோசப் ஜாக்சன், தனது 14 வது வயதில் தன் தந்தையுடன் இணைந்து லோத்புரி என்ற ஊரில் வயின் வியாபாரத்தைக் கவனித்து வந்தார். அதிலேயே அவர் சிறப்பாக செயல்பட்டார். பிறகு 4 ஆண்டுகளுக்குப் பின், அதன் பங்குதாரராகவும் ஆனார். தனது 32 வது வயதில், 26 வயதுள்ள இசபெல்லா என்பவரை மணந்தார். பிறகு 1821ல் தனது மைத்துனருடன், கப்பல் வணிகத்துக்குப் புறப்பட்டார்.
நுண்நோக்கிகளும், தொலைநோக்கிகளும், முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் நிறைய குறைகள் இருந்தன. முக்கியமாக, உருவங்கள் தெளிவாகத் தெரியாமல், கலங்கலாகத் தெரிந்ததுதான். பல முன்னேற்றங்கள் ஏற்பட்டும் கூட, இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. ஆனால் இறுதியில் லென்சில் ஆப்ரேஷன் எனப்படும் உருவம் கசங்கலாகத் தெரியும் பிரச்சினைக்கு முடிவு கட்டியவர். ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் தான். அருமையாக நுண்ணோக்கி மூலம் பார்க்க வழி செய்த பெருமை இவரையே சேரும். இவர் ஒரு அமைச்சூர் நுண்ணோக்கியல்வாதிதான். ஆனாலும் கூட லென்சின் மூலம் தெளிவாக அருகாமைப் பொருட்களையும், தொலைப் பொருட்களையும் பார்க்க வகை செய்தார். ஜோசப் அற்புதமாக ஒரு நுண்நோக்கியை 1826 ல் உருவாக்கினார். இன்றும் கூட அது லண்டன் அருங்காட்சியகத்தில் பத்திரமாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜோசப்பின் நுண்ணோக்கி உருவாக்கத்தால், 1832ல், இங்கிலாந்தின் ரோயல் கழகத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மிகவும் கெளரவம் மிக்க பொறுப்பாகும். அதன் மூலம் அவர் நுண்ணோக்கி வழியே திசுக்களைப் பார்த்து அதனைப் பற்றிய கல்வியை வளர்த்துக்கொண்டார். அவரது நுண்ணோக்கி உருவாக்கத்துக்குப் பின், உயிரியல் மிக வேகமாக வளர்ந்தது. நுண்ணோக்கி தொழிலும் வளர்ந்தது முதல் முதல் இரத்தத்தின் சிவப்பணுவை உருப்பெருக்கியில் முதன் முதல் கண்டவர். மற்றவர்களுக்கு காண்பித்தவர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் மட்டுமே.
பழுப்பு நிறக் கண்கள் உண்டாவதேன்?
குழந்தை எவ்வாறான தோற்றமுடையதாயிருக்கும் என்பது இதன் உடல் உயிர்மங்களில் (body Cells) உள்ள 46 இணைமரபுக் கீற்றுகளைப் (Genes) பொறுத்தது. இந்த இணை மரபுக் கீற்றுகளில் பாதியைத் தாயிடமிருந்தும் மற்ற பாதியைத் தந்தையிடமிருந்தும் பெறுகிறது. இவற்றுள் சில இணை மரபுக் கீற்றுகளே குழந்தையின் கண் நிறத்தை நிச்சயப்படுத்துகின்றன.
எல்லாக் கண்களும் நீல உயிர்மங்களை உடையன. ஆனால் சில மக்கள் வேறு நிறங்களுடைய உயிர்மங்களை உடையவராய் இருப்பதால் அவர்களுடைய கண்கள் பச்சை, சாம்பல், பழுப்பு, செம்மை கலந்த பழுப்பு (Hazel) ஆகிய நிறங்களையுடையனவாய் இருக்கின்றன. குழந்தைகள் எல்லோரும் நீலக்கண்களையே உடையவர்கள். ஏனென்றால் பிற உயிர்மங்கள் ஏதாவது இருக்குமானால் அந்த உயிர்மங்கள் குழந்தைகள் இரண்டு வயது ஆகும் வரை அவை வளர்ச்சி அடைவதில்லை. சில சமயங்களில் சிலர் ஒரு பகுதி நீலமாகவும் மற்ற பகுதி பழுப்பு அல்லது பச்சையாகவும் கண்கள் கொண்டிருப்பர். இதற்குக் காரணம் அவர்களுடைய பாதிக்கண் வழக்கமான நீல நிறங்கொண்டதாயும் மற்ற பாதி பிற நிறம் கொண்டதாயும் இருப்பதே ஆகும். இரண்டு நீலக் கண்களுடையோர்க்கு நீலக்கண்கள் கொண்ட குழந்தைகள் பிறப்பர். ஏனெனில் நீல உயிர்ம இணைமரபுக் கீற்றுகளே (Blue Cell – genes) அங்கு கடத்தப்படுகின்றன. ஆனால் பெற்றோருள் ஒருவர் பழுப்பு நிறமும் மற்றவர் நீலமும் உடையவரானால் நீலமும் பழுப்பும் கலந்த மரபுரிமை கடந்தாலும் குழந்தையின் கண்கள் நீலநிறங்களை ஆதிக்கம் செலுத்தக் கூடிய அளவு பழுப்பு நிறங்கள் இருந்தாலே இரு நிறங்கொண்ட கண்களை இக்குழந்தைகள் உடையதாய் அமையும். இரண்டு பழுப்பு நிறக்கண்கள் கொண்ட பெற்றோர்களாயினும் போதுமான அளவு பழுப்பு நிறங்கொண்ட இணை மரபுக் கீற்றுகள் கடத்தப்படவில்லையானால் பழுப்பு நிறக்ணக்கள் கொண்ட குழந்தைகள் பிறவா. போதுமான பழுப்பு நிற இணை மரபுக் கீற்றுகள் கடத்தப்பட்டாலே பழுப்பு நிறக் கண்கள் கொண்ட குழந்தைகள் பிறக்கும்.
-Thinakaran
வாயில் வாழும் பக்டீரியாக்கள்
நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பக்டீரியாக்கள் உயிர் வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் கலங்களின் எண்ணிக்கையைப் போல் பத்து மடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா?
அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பக்டீரியா குடும்பமும் உலகின் வேறொரு பகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்று போல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
மனிதனின் சிறு குடலிலும், தோலிலும் குடியிருக்கும் பக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பக்டீரியாக்களைப் பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது- நோய்களின் நுழைவுப் பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது-
ஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப்பட்டன. கலத்தின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 168 rRNA மரபணுக்களில் புதைந்துள்ள இரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்தி வருகின்றனர். வாயில் வாழும் பக்டீரியாக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம் சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. உணவு, கலாசாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பக்டீரியாக்களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.
உமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கி றார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில் லையா? நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய் சுத்தமாகவும் வாழ வேண்டியது அதைவிட முக்கிய மில்லையா?
-Thinakaran
வெப்பமானி எப்போது உருவாக்கப்பட்டது?
செயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினாறாவது நூற்றாண்டு முடியுமுன் இத்தாலிய வான் கணிப்பாளர் (astronomel) கலிலியோவால் (Galileo)முதன் முதலாக உருவாக்கப் பெற்றது. அது முதல் வளி வெப்பமானியாய் (airthermometer)சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகையைப் பயன்படுத்தி அவர் அதனுடைய கணிப்புத் திறனை மிகுதிப்படுத்தினார்.
பெரும்பாலான வெப்பமானிகள் வேலை செய்வதற்கான கோட்பாடு என்னவெனில், ஒழுகு பொருள் அல்லது வளி பயன்படுத்தப்பட்டு வெப்பநிலை மாற்றங்கட்கேற்ப அதன் கொள்கலனாகிய கண்ணாடியை விட விரைவாக விரிவ டைந்து அல்லது குறைந்து நின்று அளந்து காட்டித் தெரியப்படுத்துவதாம்.
எனவே வண்ண ஒழுகுபொருள் குறுக லான இலேசான கண்ணாடிக் குழாய்க் குள் அமைந்து, விரிவின் வேறுபாட்டை ஒழுகுபொருள் படிப்படியான எண்ணிட்ட அளவுகோலில் எங்கு நிற்கிறது என அறிவித்து வெப்ப அளவைத் தெரிவிக் கும். ஏறுத்தாழ 1714 இல் ஜெர்மனிய அறிவியலாளர் கேபிரியல் டேனியல் பேரன்ஹீட் (Gabriel Daniel Fahrenheat) ஒரு வெப்பமானியை வடிவமைத்து முதன் முதலாகப் பாதர சத்தை (Mercury) அளக்கும் இயக்கி யாகப் பயன்படுத்தினார்.
அத்துடன் தன் பெயரால் அழைக்கப்பட்ட 32 பாகையை தண்ணீர் உறைநிலை அளவாக வும் 212 பாகையை கொதிநிலை அள வாகவும் கொண்ட அளவுகோலை அறி முகப்படுத்தினார். பாதரசம் பெரும்பா லான வெப்பமானிகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஏன் எனில் பாதரசத்தின் கொதிநிலை 674 பாகை ஆகவும் கீழ் உறைநிலை – 83 பாகை ஆகவும் இருப்பதாலேயே ஆகும்.
சாராய வகை வெப்பமானி இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ 1731ம் ஆண்டில் ரேனேடே Rene de Reaumur என்ற பிரெஞ்சு இயற்கையறிவு நிபுணரால் இது கண்டு பிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவிடிஷ் வான் கணிப்பாளர் அண்டர்ஸ் செலிசியஸ் Anders Celsius) என்பவர் நூற்றியல் அளவைக் கொண்ட நூற்றியல் வெப்ப மானியை முதலாவதாகப் பயன்படுத்தினார்.
மூளையில் பதிவான சோகத்தை இரப்பர் வைத்து அழிக்கலாம்
மூளையில் பதிவாகி வாட்டி வதைக்கும் சோகங்களை இரப்பர்வைத்து அழிப்பது போல அழிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பழங்கால நினைவுகளை அசைபோட்டு பார்ப்பது சுகம்தான். ஆனால், சிலருக்கு அது சுமையாக அமைந்து விடுகிறது.
கணவன், மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் திடீர் மறைவு, காதல் ஏமாற்றம், தொழில் நஷ்டம், சொத்துகளை இழத்தல் போன்றவற்றை மறக்க முடி யாமல் சிரமப்படுகின்றனர். இது தீராத மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் கனடா வின் மெக்கில் பல்கலையின் நரம்பியல் நிபுணர் டெரன்ஸ் காடர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் தெரியவந்தது பற்றி அவர் கூறியதாவது; தசை பாதிப்பு, விபத்து போன்றவற்றால் சிலர் கையை இழக்கின் றனர். ஆனால் கையை இழந்த பிறகு கூட சில வேளைகளில் அவர்கள் கை வலிப்பதாக உணர்கின்றனர். கை இருந்த போது ஏற்பட்ட வலியின் தாக்கம் இது கடந்து போன தகவலை மூளை அசை போடுவதால் தான், இல்லாத கைகூட அவர்களுக்கு வலிக்கிறது.
இது மட்டுமின்றி, கடந்த கால சம்பவங்கள் சிலருக்கு நிரந் தர சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதுவும் முந்தைய ரகத்தை சேர்ந்ததுதான். புதிதாக ஒரு வலி ஏற்படும்போதோ, சோக நினைவுகளில் மூழ்கும்போதோ மத்திய நரம்பு மண்டலத்தில் பிகேஎம் kட்டா என்ற புரோட்டீன் என்சைம் அளவு அதிகரிக்கிறது.
இதனால் நியூரான் கள் இடையே தகவல்கள் சிறப்பாக பரிமாறப்படுகின்றன. எப்போதோ வலி, சோகம் ஏற்பட்டது பற்றிய தகவல்களை மூளை அலசுகிறது. புதிய வலி, சோகத் துடன் பழைய சோகமும் சேர்ந்துகொள் கிறது. நரம்பு மண்டலத்தில் இந்த என் சைம் அளவை குறைத்தால், என்சைமை இரப்பர் வைத்து அழிப்பது போல அழித்தால் பழைய சோகங்கள், வலிகள் தாக்காது. நீண்ட கால சோகம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இது நல்ல மருத்துவ முறையாக பயன்படும். இவ்வாறு காடர் கூறினார்.
கொஞ்சம் மாற்றித்தான் சிந்திப்போமே!
எனக்கு எப்போதும் தோல்விதான், கொஞ்சம்கூட ராசி இல்லாதவன், வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது, என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம்.
ஒரு வியாபாராத்தைத் தொடங்கி, அதில் சின்னஞ்சிறு சறுக்கல் வந்தால் கூட சோர்ந்து போய்விடும் பலரையும் பார்த்திருப்போம். இதில் உண்மை என்னவெனில், எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாகச் செய்ய நினைத்து அதில் தோல்வி அடைந்தவர்கள் அதே செயலில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்துவிட்டால் வெற்றிக்கனியைச் சுலபமாகச் சுவைக்க முடியும்.
வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்குவதைவிட, நாமே தேடிப்போய் கொடுக்கலாமே என்ற முயற்சியில் இறங்கி, முதல் முதலாக தவணை முறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் சாதனையும் படைத்தது ஒரு நிறுவனம் வீட்டில் இருக்கிற கட்டில் இடத்தை அடைக்கிறதே என்று ஒருவர் சிந்தித்ததன் விளைவு, அது மடக்கு நாற்காலியாக மாறியது. இதனால் மடக்கு நாற்காலிகளின் விற்பனையும் பல மடங்குகளாகப் பெருகியது.
ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகத்தில் உரிமம் பெற்று வீட்டில் வானொலி வைத்துக் கொண்டிருந்த காலங்களில் பாடல்களையோ அல்லது செய்திகளையோ வீட்டில் மட்டும்தான் கேட்க முடிந்தது. மற்ற இடங்களில் கேட்க முடியவில்லையே, அதற்கு என்ன செய்வது என்று மாற்றிச் சிந்தித்ததன் விளைவு, அது பொக்கெட் வானொலியாக மாறியது. இந்த பொக்கெட் அளவிலான வானொலியில் வருகிற சத்தமும் பலருக்கு இடையூறாக இருக்கிறதே என்று சிந்தித்ததன் விளைவு, அது வோக்மேனாகிப் போனது. வானொலி, பொக்கெட், வானொலி, வோக்மேன் இவை மூன்றுமே சிறிது மாற்றிச் சிந்தித்ததன் விளைவால் இவற்றின் விற்பனை அந்தந்தக் காலங்களில் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தின.
விற்பனையின் அளவை அதிகப்படுத்தவும், பல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க பற்பசை நிறுவனம் ஒன்று ஒரு சிறு மாற்றத்தை மட்டும் செய்து பார்த்தது. அது என்னவெனில் பற்பசை வெளிவரும் சிறு துளையை மட்டும் தற்போது இருப்பதைவிட கொஞ்சம் பெரிதாக்கினால் என்னாகும் என்ற வித்தியாசமான சிந்தனையை அமுல்படுத்திப் பார்த்தது. பற்கள் சுத்தமாகின, வாடிக்கையாளர்களும் மகிழ்ந்தார்கள். விற்பனையும் அதிகரித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் இலாபமும் மறைமுகாக அதிகரித்தது.
சவர்க்காரம், ஷாம்பு, ஊதுபத்தி உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுவனங்கள் கூட விநோதமான விளம்பரங்களையும், சின்னச் சின்ன மாற்றங்களையும் செய்து விற்பனையைப் பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன. விலை உயர்ந்த பட்டு ரகங்களைக் கூட, பேரம் பேசாமல் சொன்ன விலைக்குத்தான் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற புதிய திட்டத்தை முதன் முதலில் துணிச்சலாகக் கையாண்டது ஒரு பட்டு நிறுவனம். தரமே நிரந்தரம், அதுதான் எங்கள் தாரக மந்திரம் என்ற வாசகத்தை வாடிக்கையாளர்களின் மீது தெளித்து, அவர்களை உள்வாங்கிக் கொண்டது அந்த பட்டு விற்பனை நிறுவனம்.
வேட்டியே கட்டாத, கட்டத் தெரியாத இளைஞர்களைக் கவர அதே வெள்ளை நிறத்தில் பனியன், கைக்குட்டை, பெல்ட், கைப்பேசி உறை என்று அவர்களின் தேவையை அறிந்து பூர்த்திசெய்து வேட்டி கட்டாதவர்களையும் வேட்டி கட்ட வைத்துவிட்டது ஒரு வெண்ணிற ஆடை தயாரிப்பு நிறுவனம். வேட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறதே என்று கவலைப்படாமல் சிறிது மாற்றிச் சிந்தித்ததன் விளைவால் விற்பனையிலும் புரட்சி செய்திருக்கிறது அந்த நிறுவனம்.
பிரபலமான கடற்கரை ஒன்றில் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் அதன் கப்புகளைக் கண்ட இடங்களில் வீசினார்கள். இவற்றைச் சேகரித்து எடுத்து இடத்தைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்க வேண்டி யிருந்தது. துப்புரவு தொழிலைச் செய்ய போதிய தொழிலாளர்களும் கிடைக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு கட்ட வித்தியாசமாக சிந் தித்தன் விளைவுதான் கோன் ஐஸ்.
ஐஸ்கிரீம் விலையையும் உயர்த்த முடிந்தது. கண்ட இடங்களில் தேவையற்ற குப்பைகள் சேருவதும் இல்லாமல் போனது. நிறுவனத்தின் இலாபமும் பல மடங்கு அதிகரித்தது. நாட்காட்டி, தொலைபேசி குறிப்பேடு, குறிப்பேடு, கடிகாரம், கெமரா, டோர்ச்லைட், அலாரம், மியூசிக் பிளேயர், கணிப்பொறி, நினைவுபடுத்தும் அலாரம், குறுந்தகவல்களைக் குறித்த நேரத்தில் அனுப்பும் வசதி, பொழுதைப் போக்கிட விளையாடும் வசதி, இணைய தளங்களைப் பார்க்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் சின்னஞ்சிறு கையடக்கக் கருவியான கைப்பேசியில் இருப்பதால்தான் இன்று அதன் விற்பனை ஒவ்வோராண்டும் பல கோடிகளைத் தொடுகிறது. சாதாரண பாமரன் முதல் பணம் படைத்தவர்கள் வரை அனைவருக்குமே கைப்பேசி ஓர் அங்கமாகவே மாறிப்போய் விட்டது.
கடுமையான வறுமையிலும் தான் அணியும் கறுப்புக்கோட்டின் கிழிசல்களை வெள்ளை நூலால் தைப்பாராம் மகாகவி பாரதி, கறுப்பில் வெள்ளை நூல் பளிச்சென்று அசிங்கமாகத் தெரிகிறதே என்று அந்த நூல் மீது கறுப்பு மையை தடவிக்கொண்டு வெளியில் வருவாராம்.
அதனால்தானோ என்னவோ அவர் அணிந்திருந்த உடையாலும், எழுதிய பாடல்களாலும் மனிதர் களின் மனங்களை உழுதாரா எனத் தெரியவில்லை. வெள்ளைத் தலைப்பாகையும், முறுக்கிய அரும்பு மீசையும், கருநிறக் கோட்டும் பாட்டுப் பாராதியை அடையாளம் காட்டின.
சட்டை இல்லாத உடலும், அணிந்திருந்த கண்ணாடியும், கையில் இருந்த கைத்தடியும் மகாத்மாவின் மந்திர சக்திகளாகவே இருந்தன. காவி உடையும், அதே நிறத் தலைப்பாகையும் சுவாமி விவேகானந்தரின் விவேகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தின.
இப்படியாக தோற்றத்தில் கூட கொஞ்சம் மாற்றிச் சிந்தித்து அதன்படி செயல்பட்டவர்கள் வாழ்வில் ஓர் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார்கள். எனவே சின்னச் சின்ன விடயங்கள் கூட மிகப்பெரிய மாற்றங்களைத் தந்திருக்கின்றன.
எனவே தோற்றம், பேச்சு, செயல் இவை மூன்றிலும் ஏதேனும் ஒன்றிலோ அல்லது மூன்றிலுமோ கொஞ்சமாவது மாற்றிச் சிந்தித்து. தேவைக்குத் தக்கவாறு, வித்தியாசங்களையும் குழைத்து, செய்யப் பழகி விட்டதால் வெற்றி உங்களைத் தேடி வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.
-Thinakaran.
Saree அணிவது எப்படி?![how-to-wear-saree-1[1]](https://yourkattankudy.files.wordpress.com/2012/02/how-to-wear-saree-11.jpg?w=300&h=168)
![how-to-wear-saree-2[1]](https://yourkattankudy.files.wordpress.com/2012/02/how-to-wear-saree-21.jpg?w=300&h=200)
![how_to_tie_a_tie[1]](https://yourkattankudy.files.wordpress.com/2012/02/how_to_tie_a_tie1.jpg?w=280&h=300)
![20080716-000213-1[1]](https://yourkattankudy.files.wordpress.com/2012/02/20080716-000213-11.jpg?w=300&h=275)
- Battle of Riyadh 13 January – Ibn Saud successfully captures Riyadh.
1904
- Battle of Port Arthur 9 February – Spetznazogovitch fortress; start of Russo-Japanese War
- Battle of Yalu River 2 May – First Japanese land victory against the Russians
- Battle of Nanshan 25–26 May – Japanese defeat Russians in a pitched battle outside of Port Arthur
- Battle of Dairen 30 May – Japanese defeat Russians
- Battle of Te-li-Ssu 14–15 June – Russian attempt to relieve Port Arthur smashed by the Japanese
- Battle of Bekeriyah 15 June – Ibn Saud victory over Rashidis
- Battle of the Yellow Sea 10 August – Russian naval breakout attempt from Port Arthur defeated by Japanese fleet
- Battle of the Japanese Sea 14 August – Japanese forces force Russians to scuttle the cruiser Ryurik
- Battle of Liaoyang 24 August – 4 September – Japanese defeat Russians in the first major battle of the Russo-Japanese War
- Battle of Shinanah 29 September – Ibn Saud victory over Rashidis
- Battle of Sha-ho River 11–15 October – Russian counteroffensive in Manchuria is checked with heavy losses by the Japanese
1914
- Liège 4–17 August – Germans invade Belgium; start of World War I.
- Battle of Mulhouse 9 August – Part of the Battle of the Frontiers, France takes town but then loses it again
- Battle of Lorraine 14 August – German victory in World War I
1917
- Battle of Rafa 9 January – Capture of Turkish garrison in the Sinai.
- First Battle of Gaza 26 March – British fail to advance into Palestine.
- Second Battle of Gaza 19 April – Turkey repels British assault on Gaza-Beersheba line.
- Third Battle of Gaza 31 October – 7 November – British break Turkish defensive line in southern Palestine.
- Battle of Jerusalem 8–26 December – British forces capture Jerusalem from the Ottoman Empire.
World War II (1939-1945)
1947
- Indo-Pakistani War of 1947 – the first war fought between the successor of British India the Dominion of India and newly formed of Pakistan. The war ended in a stalemate
1948
- 1948 Arab–Israeli War – War between Israel and Lebanon, Syria, Transjordan, Egypt and Iraq; many Arab refugees.
1965
- Second Kashmir War – also known as the Indo-Pakistani War of 1965, was the second battle fought between the Republic of India and the Islamic Republic of Pakistan over Kashmir. The war resulted in a UN-mandated ceasefire between the two countries.
- Battle of Lahore Pakistani victory
- Battle of Chawinda and Phillora Pakistani victory
- Battle of ChambPakistani victory
- Battle of Ia Drang 14–18 November – First major encounter between the United States Army and the People’s Army of Vietnam in Vietnam. Over the first two days an American battalion repulses continuous Vietnamese assaults; another battalion, sent to reinforce the first, is ambushed on the fourth day when it withdraws, suffering heavy losses.
1966
Battle of Long Tan 18–19 August – First major action of Australian forces in Vietnam- 1968
- USS Pueblo (AGER-2) capture 23 January North Korea seizes US ship
- Tet Offensive 30 January – North Vietnam loses militarily but turns the tide of US opinion against the war
- Battle of Khe Sanh – January 21 – April 8 – Desperate defense by the US Marines to hold strategically important fire base against huge NVA numbers. Vietnamese Communists fail in their bid to turn the siege into an “American Battle of Dien Bien Phu.”
- 1969
- Football War 14 July – Between El Salvador and Honduras
- Battle of the Bogside12 August – Unarmed Irish residents of the Bogside in Derry City expel British Police and Militia Forces from their area. The riots lasts for 2 days until the British Army is sent in. This event is often described as the beginning of the Troubles, a 30-year guerrilla war.
- 1971
- Indo-Pakistani War of 1971/Bangladesh Liberation War – Mid November – 16 December – India militarily supports East Pakistan (now Bangladesh) in its struggle for independence from West Pakistan (now Pakistan). Backed by the India, the Armed Forces of India defeat Pakistan and liberate Bangladesh.
- Battle of Longewala 5 December – Decisive Indian victory.
- Battle of Hilli – Tactical Indian victory
- Battle of Garibpur – Decisive Indian victory
- Battle of Basantar – Tactical Indian victory
- Operation Trident 4 December Indian Navy attacks Karachi port
- 1972 Battle of Mirbat 19 July – British SAS forces defeat Communist rebels during an attempted coup of Oman.
- 1980
- Iran–Iraq War
- Siege of Abadan November 1980 – September 1981 – Iraq Attacks the Iranian city of Abadan but fails to capture it
- Liberation of Khorramshahr November 1980 – 24 May 1982 – The Iranians recapture of the port city of Khorramshahr from the Iraqis
- Iran–Iraq War
- 1981
- Battle of Dezful Early January 1981– Iranian armored regiments are forced to flee after an Iraqi ambush
- Gulf of Sidra incident 19 August – Two Sukhoi Su-22 were shot down by two US F-14A Tomcats
- 1982
- 1982 Lebanon War 6 June – Israeli invasion of Lebanon
- 1991
- Battle of Khafji 29 January – 1 February. First major ground engagement of the Gulf War.
- Battle of 73 Easting 26–27 February – A decisive tank battle fought between coalition armoured forces against those of the Iraqi Republican Guard.
- Battle of Medina Ridge 27 February – A decisive tank battle fought between the U.S. 1st Armored Division and the 2nd Brigade of the Iraqi Republican Guard.
- Battle of Vukovar 25 August −18 November – Croatian War of Independence.
- Battle of the barracks September – Croatian War of Independence.
- 1992
- Siege of Sarajevo 5 April 1992 – 29 February 1996
- Battle of Gagra 1 October 1992 – 6 October 1992 – Abkhaz insurgents and North Caucasian militants captured Gagra from Georgian forces (War in Abkhazia).
- 1993
- Operation Maslenica 22 January – 1 February – Croatian War of Independence.
- Battle of Kelbajar 27 March – 3 April – Armenians and Azeris fight for territorial disputes
- Battle of Mogadishu– 3–4 October – Policing mission gone wrong, US soldiers trapped against militia in a populated city
- 1994
- Afghanistan’s Islamic State of Afghanistan (United Front) ousted by Islamic Emirate of Afghanistan (Taliban)
- 1995
- First battle of Grozny 31 December 1994 – 8 February 1995 – The Russian Army captures Grozny
- Operation Flash 1–2 May – Croatian War of Independence
- Operation Storm 4–8 August – Croatian War of Independence
- The fall of Manerplaw in the war between the Burmese Army and the KNU
- 1999
- Kargil War – Pakistani paramilitary forces infiltrate into India’s Kargil district triggering full-scale war between the two neighbours. After two months of intense fighting, Pakistan retreats due to political stress
- Battle of Tololing Indian victory
- Battle of Grozny (1999–2000) – The Russian Army sieges Grozny in December, captures it in February 2000
- Battle of Košare 9 April 1999 – 10 June 1999 – Kosovo war. Yugoslav decisive Victory.
இணையம் தோன்றிய வரலாறு
இணையப் பயன்பாடு குறித்து நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும் அதன் தோற்ற வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
1960 ஆம் ஆண்டு வாக்கில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்த போதிலும், ஒரு கணினியிலுள்ள தகவல்களை மற்றொரு கணனியிடம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரவில்லை. இது கணினி பாடத்திட்டங்களை நடத்திவரும் பல பல்கலைக்கழ கங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அமெரிக்காவின் டார்ட்மெளத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்கழகங்கள் ஐ. பி. எம். கணினிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தன. அந்த பல்கலைக்கழகங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்த இப்பிரச்சினை பற்றி ஐ. பி. எம்.க்கு தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சினையே இணையம் உருவானதற்கு அடி கோலியது எனலாம்.
இணையம் தொடங்குவதற்கான செயல்முறை திட்டத்திற்கு அடி கோலியவர் லிக்லைடர் என்பவர் ஆவார். இதனாலேயே இவர் இணையத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கணினியுடனும் தொடர்பு கொண்டு ஒன்றுக்கொன்று மற்றதற்காகச் செயல்படக் கூடும் என்ற செயல் முறையைக் கொண்டு வந்தவர் இவர்தான். அவர் அத்தகைய இணைப்பை உருவாக்கி அதற்கு கலக்டிக் வலையமைப்பு (“Galactic Network”) என்று பெயரிட்டார்.
இது மேற்சொன்ன அந்த பல்கலைக் கழகங்களில் வெற்றிகரமாக சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் அமெரிக்க இரா ணுவத்தில் இரகசிய தகவல்களை உடனுக்குடன் அனுப்பவும், பெறவும் இத்திட்டம் The Advanced Research Projects Agency Network (ARPANET) என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது.
லிக்லைடரின் கலக்டிக் வலைய மைப்புத் திட்டம் 1962இல் DARPA (Defence Advanced Research Projects Agency) என்ற அமைப்பாக உருவானது. அதன் பின் இதனுடன் ARPANET இணைய இன்டர்நெட் உருவானது.
1965 ஆம் ஆண்டு மிக மெதுவாக இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி எம். ஐ. டி. பல்கலையின் பேராசிரியர் லாரன்ஸ் ரொபர்ட்ஸ் (Lawrence G. Roberts) தோமஸ் மெரில் (Thomas Merrill) என்ப வருடன் இணைந்து மாசசுசட்ஸ் என்னும் இடத்தில் இயங்கிய ஹிகீ2 கணினியை கலிபோர்னியாவில் இயங்கிய கி. 32 என்ற கணினியுடன் இணைத்தார். பின்னர் சில தகவல்கள் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பரிமாறப்பட்டது. இது தான் இணையத்தின் முதல் தகவல் பரிமாற்றம். அப்போதைய தொலை பேசி இணைப்புகள் இத்தகைய இணைய இணைப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இணைய தொடர்பில் தகவல்களை அனுப்ப பெகெட் ஸ்விட்சிங் என்னும் வழிமுறை கையாளப்படுகிறது. கோப்புகளில் உள்ள தகவல்கள் பொட்டலம் பொட்டலமாக சேர வேண்டிய சர்வர் கணினிக்கு அனுப்பப்பட்டு அங்கு இணைக்கப் படுகின்றன. லியோனார்ட் கிளெ யின்ராக் என்பவர் இந்த முறையைக் கண்டுபிடித்தார். ஆக்டோபர் 29 1969ல் மாணவர்கள் பலருடன் இணைந்து இதனை இயக்கினார். இயக்கத் தொடங்கியவுடனேயே சிஸ்டம் கிராஷ் ஆனது வேறு ஒரு நிகழ்ச்சி. இப்போது வரை அந்த முறையே பயனப்டுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கணினிக்கான முதல் மவுஸ் 1968ல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெ ற்ற கணினி கண்காட்சியில் Douglas Engeibart என்பவரால் அறி முகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப் பட்டது. இதன் பின்னரே இணைய பயன்பாடு எழுச்சியுற தொடங்கியது எனலாம். பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் புதிய முறைகள் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக 1990 களில் இணையம் மிக பிரபல மடைய தொடங்கியது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு உலகெங்கும் பர வியது. ஐந்து கோடி பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. ஆனால் இணையம் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.
சரி உலகில் அதிக அளவில் இணை யம் பயன்படுத்துவோர் யார் என்று நினைக்கியர்கள். அமெரிக்கா என்றா…?இ தவறு சுவீடன் நாட்டவரே. இங்குள்ள மக்களில் 85 சதவிகிதத்தினர் இணை யத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சதவிகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று ஆராய்ச்சி முடி வொன்று கூறுகிறது.
இணைய பயன்பாட்டில் வரும் www என்பதன் அர்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே (world wide web). ஆனால் இது எப் போதிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தது, யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர் தான் 1990 ஆம் ஆண்டு இந்த சொற்றொடரை உரு வாக்கிப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
-தினகரன்.
UNIVERSITY GRANTS COMMISSION – SRILANKA பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு-இலங்கை
Address: 20, Ward Place, Colombo 07. Sri Lanka
Tep: +94 11 2695301 +94 11 2695302 +94 11 2692357 +94 11 2675854
Email: chairman@ugc.ac.lk
Web: www.ugc.ac.lk
UNIVERSITIES OF SRILANKA
UNIVERSITY OF COLOMBO
Address: ‘College House’, 94, Cumaratunga Munidasa Mawatha, Colombo 03. Sri Lanka
Web: www.cmb.ac.lk
UNIVERSITY OF PERADENIYA
Address: Peradeniya. 20400 Sri Lanka
Web: www.pdn.ac.lk
UNIVERSITY OF SRI JAYAWARDANAPURA
Address: Gangodawila, Nugegoda. Sri Lanka
Web: www.sjp.ac.lk
UNIVERSITY OF KELANIYA
Address: Kelaniya. 11600 Sri Lanka
Web: www.kln.ac.lk
UNIVERSITY OF MORATUWA
Address: Katubedda, Moratuwa. Sri Lanka
Web: www.mrt.ac.lk
UNIVERSITY OF JAFFNA
Address: P.O.Box 57, Thirunelvely, Jaffna. Sri Lanka
Web: www.jfn.ac.lk
UNIVERSITY OF RUHUNU
Address: Wellamadama, Matara. Sri Lanka
Web: www.ruh.ac.lk
THE OPEN UNIVERSITY OF SRILANKA
Address: Nawala, Nugegoda. Sri Lanka
Web: www.ou.ac.lk
EASTERN UNIVERSITY, SRILANKA
Address: Vantharumoolai, Chenkalady. 30350 Sri Lanka
Web: www.esn.ac.lk
SOUTH EASTERN UNIVERSITY OF SRILANKA
Address: University Park, Oluvil. 32360, Sri Lanka
Web: www.seu.ac.lk
RAJARATA UNIVERSITY OF SRILANKA
Address: Mihintale. Sri Lanka
Web: www.rjt.ac.lk
SABRAGAMUWA UNIVERSITY OF SRILANKA
Address: P.O Box 02, Belihuloya. 70140 Sri Lanka
Web: www.sab.ac.lk
WAYAMBA UNIVERSITY OF SRILANKA
Address: Kuliyapitiya. Sri Lanka
Web: www.wyb.ac.lk
UVA WELLASSA UNIVERSITY
Address: 2nd Mile Post, Passara Road, Badulla. 90000 Sri Lanka
Web: www.uwu.ac.lk
UNIVERSITY OF THE VISUAL PERFORMING ARTS
Address: No 21, Albert Crescent, Colombo 07. Sri Lanka
Web: www.vpa.ac.lk
விளையாட்டு சம்பந்தமான பொதுஅறிவுகளும் மேலதிக தகவல்களும் எமது விளையாட்டு/SPORTS பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து மேலதிக தகவல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் அவர்களது கண்டுபிடிப்புக்களும்
இணையத்தள ஆங்கில -தமிழ் அகராதிக்கு: For Online English-Tamil Dictionary: www.tamildict.com Galileo Galilei (1564 – 1642) An Italian Physicist, mathematician, philosopher, astronomer and a revolutionary thinker. Galileo is known as ‘father of modern observational astronomy’ as he was the first to use a telescope. He is hailed to be responsible for the birth of modern science as his theories, ideas and beliefs based on scientific reasoning, started challenging the Church beliefs. He proclaimed Earth revolved around the Sun and suffered severe criticism from the Clergyman in those days. Interesting information about Galileo can be obtained through biography of Galileo Galilei.Sir Issac Newton (1643 – 1727) “All saw the Apple fall but only Newton thought over it” – is a popular quote about Newton. Sir Issac Newton, an English Physicist, known for his most influential work in history of physical sciences, the Principia, gave the revolutionary concept of gravitation and changed the world of Physics. In his book, Newton also mentioned about the three laws of motion and principles of classic mechanics. Among famous scientists names, he is regarded to be at the top.
Thomas Edison (1847 – 1931) Thomas Edison, known as the ‘wizard of Menlo Park’ and the greatest inventor ever to have visited this Earth, is hailed to have patented most number of inventions. Going through Thomas Edison inventions will help you to know his significant contribution.
Albert Einstein (1879 – 1955) This theoretical physicist shook the world with one of the most interesting and intriguing theories in Physics, the theory of relativity. Understanding what is Einstein’s theory of Relativity may not be possible for every one of us but it has given birth to a new branch of relativistic mechanics. Probably, you’ll find Albert Einstein always an integral part of every list of famous scientists names.
Famous Scientists | Life Period | Inventions |
Archimedes | 287-212 BC | Archimedean principle, famous theory of buoyancy and many mathematical and mechanical discoveries. |
Heinrich Hertz | 1857-1894 | Electromagnetic theory of light and electromagnetic waves. |
Andre Marie Ampere | 1775-1836 | Unit of measurement to measure electric current |
Amedeo Avogadro | 1776-1856 | Avogadro’s Law, that is, “equal volumes of different gases, pressure and temperature being equal, contain the same number of molecules”. |
Neils Hendrik David Bohr | 1885-1962 | Bohr Model of Atom |
Johannes Gutenberg | 398-1468 | Letterpress printing press also known as mechanical printing press. |
Albert Einstein | 1879-1955 | Theory of Relativity, photoelectric effect and lots more |
Rudolf Diesel | 1858-1913 | Combustion engine. |
Wilhelm Conrad Rontgen | 1845-1923 | X-ray |
Karl Friedrich von Drais | 1785-1851 | Bicycle |
Peter Henlein | 1479-1542 | Pocket Watch |
Ferdinand Verbiest | 1623-1688 | Verbiest invented the first ever car. |
Graham Bell | 1847-1922 | Graham Bell invented the first practical telephone. |
Philipp Reis | 1834-1874 | Reis is known for the early invention of telephone |
John Logie Baird | 1888-1946 | John Logie Baird invented the television. |
Werner von Siemens | 1816-1892 | Dynamo |
Hans von Ohain | 1911-1998 | Jet engine |
Artur Fischer | 1919 | Fischertechnik |
Felix Hoffmann | 1868-1946 | Aspirin |
Hugo Junkers | 1859-1935 | Civilian avion |
Otto Lilienthal | 1848-1896 | Gliding flights |
Melitta Bentz | 1873-1950 | Coffee Filter |
Konrad Zuse | 1910-1995 | First ‘working’ computer. You can read more on the original idea of computers and also about Charles Babbage who invented the computer. |
Gottlieb Daimler | 1834-1900 | Automobile and internal combustion machine |
Robert Koch | 1843-1910 | Isolation of Bacillus anthracis, tuberculosis bacteria and Vibrio cholerae. Also known for his Koch’s postulates. |
Karlheinz Brandenburg | 1954 | MP3 Technology |
Heinrich Gobel | 1818-1893 | Incandescent light bulb |
Samuel Hahnemann | 1755-1843 | Creation of alternative medicine practice called Homeopathy |
Heinrich Focke | 1890-1979 | Helicopter |
Levi Strauss | 1829-1902 | Jeans |
Otto Hahn | 1879-1968 | Nuclear fission and known as the ‘father of nuclear chemistry’. |
Julius Lothar Meyer | 1830-1895 | First person to draw the periodic table of chemical elements |
Emil Berliner | 1851-1929 | Record Player |
Rudolf Hell | 1901-2002 | Formulated technology for Scanner and Fax |
Fritz Pfleumer | 1881-1945 | Audio tape |
Thomas Edison | 1847-1931 | Electric light bulb. |
Elias Howe | 1819-1867 | Sewing machine |
Laszlo Jozsef Bíro | 1899-1985 | Ballpoint pen |
Garrett Augustus Morgan | 1877-1963 | Traffic signal, respiratory protective mask (gas mask), hair straightening preparation. |
Samuel F. B. Morse | 1791-1872 | Telegraph invention |
Percy Spencer | 1894-1970 | Microwave oven |
Orville Wright, Wilbur Wright | 1871-1948, 1867-1912 | Airplane invention |
Benjamin Franklin | 1706-1790 | One of the founding fathers of America, Franklin is attributed to have invented electricity |
Michael Faraday | 1791-1867 | Faraday the discovered electromagnetic induction, laws of electrolysis, found the fundamental relations between between light and magnetism as well as discovered a new compound of carbon and two new chlorides of carbon. |
Nikola Tesla | 1856-1943 | He was a pioneer in the field of high-tension electricity. He invented the Tesla induction motor, the Tesla coil, a system for wireless communication as well as system that will help conduct electricity without wires. |
William Henry Perkin | 1838-1907 | He was the first English chemist to produce a synthetic dye, mauve. |
SLANG / INFORMAL USAGE WORDS
A1 Top Quality A3 Anywhere , Any time, Any place AC Air Conditioning ACCA Association of Chartered Certified Accountants ACTA Anti-Counterfeiting Trade Agreement AD Anno Domini ADSL Asymmetric Digital Subscriber Line AFL Australian Football League AK 47 Assault rifle ALOL Actually Laughing Out Loud AM Ante Meridiem (before midday) Amplitude Modulation (radio signal) AMD Advanced Micro Devices AMEX American Express ANTI Against AOL American Online APPS Applications (Software) APR Annual Percentage Rate ARIGATO Thank You (Japanese) ARPA Advanced Research Projects Agency (made early internet) ARPANET Advanced Research Projects Agency Network (early internet) ASAP As Soon As Possible ASBO Anti Social Behaviour Order ASIC Application Specific Integrated Circuit ASL Age, Sex, Location ATB All The Best ATI Array Technology Inc. (graphics card maker) ATM Automated Teller Machine (cash machine) ATTN Attention AVI Audio Video Interleaved (media format) AWESOME Amazing, wonderful, cool AZN Asian B&B Bed & Breakfast BC Because B2B Back to Back B2W Back to Work BAKA fool, idiot BBQ Barbecue BC Before Christ BBC British Broadcating Corporation BIZ Business BLT Bacon, Lettuce and Tomato sandwich (Haraam) BMW Bavarian Motor Works (car manufacturer) BRO Brother, buddy, friend BRUV Mate BSC Bachelor of Science (university degree) BUCKS Dollars, money BURK Idiot, fool BUZZ Excitement / Feeling when high C – See Computer language/ Speed of light C# Microsoft programming language” C&C Command and Conquer (game) C&P Copy & Paste C4 Plastic explosive C2C Consumer to Consumer /Cam to Cam CACHE Store for temporary computer files CAD Computer Aided Design CAPTCHA Completely Automated Public Turing Test To Tell Computers and Humans Apart CAT Computed Axial Tomography CBI Californian Bureau of Investigation CC Credit Card/ Carbon Copy/ Crowd Control/ Country Code CCC Coricidin Cough & Cold (Dextromethorophan or DXM). CCNA Cisco Certified Network Associate CCR Creedence Clearwater Revival (band) CCTV Closed-Circuit Television CD Compact Disc CDMA Code Division Multiple Access (voice/data transmission) CDN Canadian CDR Compact Disc Recordable CEO Chief Executive Officer CG Computer Graphics CGI Computer-Generated Imagery CHAO Goodbye (Spanish) CHAP Man CHEERS Thanks /Goodbye CIA Central Intelligence Agency COA Certificate Of Authenticity CPL Cyberathlete Professional League (gaming) CPM Cost Per Thousand CPP C Plus Plus, C++ (programming language) CPR Cardiopulmonary Resuscitation CPU Central Processing Unit DENCH Awesome, cool DESI Someone from the Indian subcontinent DHL Shipping Company DIGITS Telephone number DLL Dynamic Link Library (computer file) DNA Deoxyribonucleic Acid DNS Domain Name Service DOB Date Of Birth DOHC Dual Overhead Cam DOSH Money DSL Digital Subscriber Line DSLR Digital Single Lens Reflex (camera) DUSTY Ugly DVD Digital Versatile Disc DVR Digital Video Recorder EBT Electronic Benefits Transfer ECG Electrocardiogram ECO Ecological/ Enconomical EPL English Premier League EPROM Electronically Programmable ROM ESA European Space Agency ESL English as Second Language ESOL English for Speakers of Other Languages ESPN Entertainment and Sports Programming Network ESRB Entertainment Software Rating Board EST Established ETHERNET same as LAN EU European Union EX Former girlfriend, boyfriend, wife, husband /etc/ Example EXE Windows program file EXPO Exposition, large-scale public exhibition F@ Fat F2F Face to Face F5 Refresh F9 Fine FAT File Allocation Table FAT32 32 bit File Allocation Table FBI Federal Bureau of Investigation FEDEX Federal Express (shipping company) FELLAS Close friends FELLER Fellow, man FETCH Cool, trendy, awesome FIFA Federation International de Football Association FIFO First In First Out FIT Good lokking, hot, sexy FIVE O Police FLAME Insult someone over the internet FLOTUS First Lady Of The United States FM Freqeuncy modulation (radio signal) FOFO Fourty Four caliber gun G2B Go To Bed G2E Go To Eat G2F Go To Fly G8 Great G9 Good Night GAL Girl GAT Gun GBP Great British Pounds (Sterling) GBR Great Britain GCE General Certificate of Education GCSE General Certificate of Secondary Education (UK) GDP Gross Domestic Product GEEZ Jesus GIF Graphics Interchange Format – Picture Format GIT Idiot GMAIL Google web email service GMC General Motors Corporation GONNA Going to GPRS General Packet Radio Services GPS Global Positioning System GPU Graphics Processing Unit GSM Global System for Mobile communications GUI Graphical User Interface GWAP Money GZ Congratulation H1B US employment visa H1N1 Swine flu virus H20 Water X4XOR Hacker H8 Hate HABIBI My darling (Arabic) HACK Break into computer systems or software HAPA Mixed race HD High-Definition HDCP High-bandwidth Digital Content Protection HDD Hard Disk Drive HDMI High Definition Multimedia Interface HEADS People HNOS Home Network Operating System HQ High Quality HR Human Resources HRC Human Rights Campaign HSBC Hong Kong and Shanghai Banking Corporation HSPDA High Speed Packet Data Access HSV2 Herpes Simplex Virus 2 HTC Hit The Cell HTML Hypertext Markup Language HTTP Hyper-Text Transfer Protocol HTTPS Hyper-Text Transfer Protocol Secure I/O Input/Output I18N Internationalization IBAN International Bank Account Number IBM International Business Machines ICC International Cricket Council ICT Information and Communication Technology ID Identity IDE Integrated Device Electronics IKEA Swedish furniture store IMAP Internet Message Access Protocol IMDB Internet Movie Database IMF International Monetary Fund IP Internet Protocol/ Intellectual Property IPOD Mp3 player from Apple IQ Intelligence Quotient ISP Internet Service Provider ISSN International Standard Serial Number IT Information Technology JAVA Programming language JPEG Joint Photographic Experts Group/ Image file format JPG Image file format K OK K33L Kill KBPS KiloBytes per second KEYGEN Software serial number generator KFC Kentucky Fried Chicken KG Kilogram KIWI A person from New Zealand /A small brown bird from New Zealand/ Kiwifruit LAD Guy LAN Local Area Network LBW Leg Before Wicket (cricket) LCD Liquid Crystal Display LED Light Emiting Diode LIFO Last In First Out M$ Microsoft M&S Marks & Spencer MB Megabyte MBA Masters of Business Association MHZ Megahertz MIC Microphone MP Member of Parliament / Military Police MP3 Music file (MPEG Layer 3) MP4 Music/video file (MPEG Layer 4) MPEG Moving Picture Experts Group Audio/visual file format MPH Miles Per Hour MS Microsoft MSDN Microsoft Developer Network MSDOS Microsoft Disk Operating System MSI Mindless Self Indulgence (band) MSM Mainstream Media MSN Microsoft Network N And N8 Night NAKERED Tired, worn out NANA Grandmother NASA National Aeronautics and Space Administration NASCAR National Association for Stock Car Auto Racing NASDAQ National Association of Securities Dealers Automated Quotation NASL Name, Age, Sex, Location NATO North Atlantic Treaty Organization NBA National Basketball Association NDN Indian NETIQUETTE Etiquette on the internet NETWORK Two or more connected computers NGO Non-Governmental Organization NHS National Health Service NIC Network Interface Card OL Online OED Oxford English Dictionary PAN Personal Area Network PATCH Correction applied to a computer program PBUH Peace Be Upon Him PCI Peripheral Component Interconnect PCMCIA Personal Computer Memory Card International Association PCMIA Personal Computer Manufacturer Interface Adaptor PD Public Domain PDA Personal Digital Assistant PDF Portable Document Format PIN Personal Identification Number PIX Pictures PNG Image file format PS/2 Computer port for keyboard or mouse Q Thankyou QANTAS Queensland and Northern Territory Aerial Service RAM Random Access Memory RATM Rage Against the Machine (band) S/N Serial Number SALAM Peace (Arabic) SATA Serial Advanced Technology Attachment SCSI Small Computer System Interface SDK Software Development Kit SDRAM Synchronous Dynamic Random Access Memory SIFS Secret Internet Fatties SIM Subscriber Identity Module SIM CARD Subscriber Identity Module for a mobile phone SOP Standard Operating Procedure SOPA Stop Online Piracy Act SPAM Unsolicted email SQL Structured Query Language (for databases) SYSOP System Operator TCP Transmission Control Protocol TCPIP Transmission Control Protocol / Internet Protocol TOEFL Test Of English as a Foreign Language TXT SMS message UAE United Arab Emirates UHQ Ultra High Quality UK United Kingdom UKBA United Kingdom Border Agency UN United Nation UNESCO United Nations Educational, Scientific and Cultural Organization UNI University UNICEF United Nations Children’s Fund UNIX Computer operating system UPS United Parcel Service / Uninterruptible Power Supply URI Uniform Resource Indicator, URL URL Uniform Resource Locator, internet address US United States USAF United States Air Force USB Universal Serial Bus USSR Union of Soviet Socialist Republics UTF Unicode Transformation Format UTI Urinary Tract Infection VAT Value Added Tax VCD Video Compact Disc VCR Video Cassette Recorder VDU Visual Display Unit VGA Video Graphics Array/Adaptor VHF Very High Frequency VHS Video Home System VID Video VIN Vehicle Identification Number VIP Very Important Person VNC Virtual Network Computing VOA Voice Of America VPN Virtual Private Network VTL Visible Thong Line W8 Wait WAP Wireless Access Point WAREZ Cracked/pirate software WEP Wireless Encryption Protocol WET BACK Illegal immigrant WEY Dude, buddy WHO World Health Organization WIFI Wireless Fidelity, wireless internet WPA Wi-Fi Protected Access WPM Words Per Minute WW1 World War 1 WW2 World War 2 WWE World Wrestling Entertainment WWF World Wrestling Federation (now WWE) WWW World Wide Web XHTML Extensible Hyper-Text Markup Language XLS MS Excel file extension XML eXtensible Markup Language XVID Video format YEA Yes YMCA Young Mens Christian Association YMMA Young Mens Muslim Association YMHA Young Mens Hindu Association YMBA Young Mens Buddhist Association ZA Pizza ZAIN Beautiful (Arabic) ZTA Zeta Tau AlphaQR Code
Quick Response Code (QR Code) எனப்படும் இக்குறியீடானது அச்சுவார்ப்புரு (Matric Barcode) அல்லது இரு பரிமான-அளவு (2D) வார்ப்புரு மூலமாகக உருவாக்கப்பட்ட இன்றைய நவீன குறியீடாக அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இக்குறியீடு கைத்தொழில் நிறுவனங்களின் உள்ளார்ந்த (Internal) உற்பத்திகளில் இவை ஈடுபடுத்தப்பட்டு வந்தன. மோட்டார் வாகண உற்பத்திகள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை அடையாளப் படுத்திக் கொள்ள அல்லது அதன் பயன்பாடுகளை அறிந்து கொள்ள இக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதன் பின்னர் காலத்தின் தேவை, அதீத தொழிநுட்ப வளர்ச்சி, வியாபாரம் போன்றவற்றின் காரணமாக தொழிற்சாலைக்கு வெளியில் இக்குறியீடுகள் புழக்கத்தில் வந்தன. முதன் முதலாக Toyota நிறுவனம் தங்களது உதிரிப்பாகங்களுக்காக 1994ல் இக்குறியீட்டினை அறிமுகப்படுத்தி தொழிற்சாலை மட்டத்தில் மாத்திரம் ஈடுபடுத்தியிருந்தது. வெள்ளைப் பிண்ணணியில் (White Background) கறுப்பு கோடுகளால் வரையப்படும் இக்குறியீடானது சதுரவடிவமுடையது. பைணரி, அல்பா நியூமெரிக் போன்ற தரவுகளை (Data) க் கொண்டு தயாரிக்கப்பட்டவை.
இன்றைய உலகச் சந்தையில் கைத்தொலைபேசி பாவனையாளர்களின் நன்மை கருதி இக்குறியீடுகள் உற்பத்தியாளர்களால் தாயாரிக்கப்பட்டு வருகின்றன. இக் குறியீட்டு வாசிப்புமாணியை (Reading Meter) தங்களது கைத்தொலைபேசிகளில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். எனினும் கைத்தொலைபேசிக்கான விரைவான இனையத்தள வசதிகளைக் கொண்டுள்ள நாடுகளுக்கே இவை பொருந்தும். அமெரிக்காவில் 14 மில்லியன் கைத்தொலைபேசிப் பாவணையாளர்கள் 2011ல் இக்குறியீட்டினைப் பயன்படுத்தி வருகின்றனர் என அமெரிக்காவின் கொம்ஸ்கோர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரியாவில் 10 மில்லியன் வாடிக்கையாளர்களும் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் சுமார் 33 சத வீதமானோரும் இக்குறியீட்டினால் நன்மையடைந்து வருகின்றனர். நுகர்வோரைக் கவரும் இலகுவான ஓர் வியாபாரச் சேவையாகவும் உலகில் இக்குறியீடு முதல் இடத்தைப் பெறுகின்றது.
பத்திரிகை அல்லது சஞ்சிகைகளில் குறித்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தி சம்பந்தமான விளம்பரங்களை வழங்கி இக்குறியீட்டையும் வழங்கும் பட்சத்தில், நுகர்வோர் குறித்த பொருட்களை அறிந்து கொள்ள, கொள்வனவு செய்து கொள்ள மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள இக்குறியீடு உதவுகின்றது. குறித்த நிறுவனத்துக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் செலவுகளையும் நேரங்களையும் மற்றும் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொள்வதற்கான செலவுகளைத் தவிர்ப்பதிலும் நுகர்வோருக்குப் பங்களிப்புச் செய்யும். வீட்டில் இருந்து கொண்டே அல்லது வேலைத் தளங்களில் இருந்கொண்டே நுகர்வோர் இதன் மூலம் பயனடைய முடியும். பத்திரிகைகளில் வெளிவரும் ஆக்கங்கள், செய்திகள் போன்றவற்றிற்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உடன் தெரியப்படுத்தமுடியும். காகிதம், பேனா, முத்திரை என்று பதில் அனுப்பும் தேவையோ, தபால் போய்ச்சேரும் நாட்களோ வாசகர்களுக்கு தேவைப்படாது. வயதுக் கட்டுப்பாட்டுப் பொருட்களை பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் தான் விரும்பும்படி கட்டுப்பாடின்றி கொள்வனவு செய்ய முடிவதால் இதற்கு ஒரு மாற்றுத் திட்டத்தினை நடைமுறைப் படுத்த இக்குறியீட்டாளர்கள் தற்பொழுது யோசித்து வருகின்றனர்.
இந்த குறியீட்டினை தாங்களும் வடிவமைக்க முடியும். QR Generators எனப்படும் இணையத்தளங்கள் மூலமாக இவற்றை இலகுவாக வடிவமைக்க முடியும். இதற்காக பல இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் வாழும் அதிகமான மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். இலங்கையிலும் இன்று QR Code பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாணயமாற்று விகிதங்களை அறிந்துகொள்ள /Money Exchange:
பொது அறிவுகள் / General Knowledges:
www.general-knowledge-quiz.co.uk
க.பொ.த. உ/த, சா/த மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் செய்முறைகள் மற்றும் பயிற்சிகளுக்கு:
பேரழகி கிளியோபட்ரா
கிளியோ பட்ரா உண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ள வர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக அரசியல் நிலைமை யும் சுவாரசியம் தரக்கூடியவை.
கிளியோபட்ராவின் காலம் கி.மு. 69 லிருந்து 30 வரை என்று வரலாற் றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபட்ரா.
சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபட்ரா வுக்கு முன்னால் ஏழு கிளியோபாட் ராக்கள் இருந்திருக்கிறார்கள் என்ப தால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபட்ரா என்றே குறிப்பிடப் பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறாத பேரையும் புகழையும் இவள் எப்படிப் பெற்றாள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்:
முதலாவது, இவளது புத்திசாலித் தனம் அடுத்த காரணம், அழகு, அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள்.
வெறும் முப்பத்தொன்பது வயது வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். மிகச் சிறிய வயதிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.
உதாரணமாக வான சாஸ்திரம், சோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் இரசாயன மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான பர்ஃப்யூம்களைக் (செண்ட்) கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள்.
இது போதாதென்று ஒன்பது மொழிகளில் எழுத, பேச, படிக்கவும் தெரியும். கிளியோபாட்ராவின் தந்தையான டாலமிக்கு வயதானதும் தன் மகளைப் பட்டத்தில் அமர்த்த விரும்பியிருக்கிறார். அந்தக் காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. ஆகவே கிளியோபாட்ராவையும், அவளது தம்பியான டாலமியையும் சேர்த்து அரியணையில் உட்கார வைத்தார். அதாவது, கூட்டணி ஆட்சி!
இதில் இன்னொரு விடயமும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டுமல்ல அப்போது தம்பியுடன் சேர்ந்தும் ஆளமுடியாது! ஒரு வழி யாரையாவது கல்யாணம் பண்ணிக்கொண்டு கணவன் மனைவியாக வேண்டுமானால் ஆட்சி செய்யலாம். ஆகவே கிளியோபாட்ரா, தன் 10 வயதுத் தம்பியான அந்த டாலமியையே திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக, பதினெட்டு வயது ராணி, பத்து வயது ராஜா ஆட்சியெல்லாம் நான்றாகத் தான் நடந்தது.
ஆனால் அந்தச் சிறிய பையன் மனத்தைச் சில பேர் கெடுத்துவிட் டார்கள். அவனுக்கு இன்னும் நான்கைந்து வயது கூடுவதற்குள், அமைச்சர்களாக இருந்த சிலர் நீ உன் அக்காவைத் துரத்தியடி முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய நீ சும்மா இருப்பதில் என்ன பெருமை இருக்கிறது? என்று தூண்டி விட்டார்கள்.
ஆகவே, அந்த கனிஷ்ட டாலமியாகப்பட்டவன் தன் முன்னாள் அக்கா இன்னாள் மனைவி என்றும் பாராமல் கிளியோபாட்ராவுக்கு எதிராக ஒரு சிறிய புரட்சியைத் தூண்டிவிட்டு அவள் உயிருக்கு உலை வைத்தான். தப்பிப் பிழைக்க விரும்பிய கிளியோபாட்ராவை சிரியாவுக்குத் தப்பியோட வழிவிட்டான். இந்தச் சமயத்தில்தான் (கி. மு. 48) ஜூலியர் சீசர் எகிப்துக்கு வருகிறார். சீசருக்கு அறிமுகம் வேண்டியதில்லை அல்லவா? மாபெரும் ரோமானிய வீரர். அலெக்சாண்டருக்கு நிகராக சரித்திரத்தில் கொண்டாடப்படுகின்றவன் சீசர்.
தன் எதிரி ஒருவனைப் பழி வாங்கத் தேடிக் கொண்டு எகிப்துக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டாள் கிளியோபாட்ரா. அவரை வைத்து எப்படியாவது எகிப்து பீடத்தை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த கிளியோபாட்ரா, மிகுந்த நாடகத்தனம் கொண்ட அதே சமயம் கவித்துவமான ஒரு உத்தியையும் கண்டுபிடித்தாள். தன் சேடிப்பெண் ஒருத்தியை அழைத்து ஒருபெரிய தரைவிரிப்புக்குள் தன்னை வைத்துச் சுருட்டி, உருட்டி தூக்கிக்கொண்டு போகச் சொல்லி, சீசருக்கு முன்னால் உருட்டித் திறந்து விடச் சொன்னாள்.
மாபெரும் வீரரே! இதோ உங்களுக்கான பரிசு! அசந்துபோனார் சீசர் பேரழகி! கண்டதும் காதல் என்பார்களே. அதுபோல் கிளியோபட்ராவுக்கு சீசரைக் காதலிப்பதிலேயோ கல்யாணம்செய்து கொள்வதிலேயோ எந்தவித ஆட்சேபனையும் இருக்கவில்லை.
அவளது நோக்கமெல்லாம், எகிப்து ஆட்சிப்பீடத்தை மீண்டும் பிடிப்பது அதற்கு சீசர் உதவ முடியுமானால் அவரைக் காதலிப்பதில் ஒரு தடையும் இல்லை! கசக்குமா சீசருக்கு? இயல்பிலேயே மாவீரர் அல்லவா? இதென்ன பிரமாதமான காரியம்? இதோ ஒரே நாளில் எகிப்து ஆட்சியை உன்னுடையதாக்கி விடுகிறேன் பார் என்று போர் அறிவிப்பு வெளியிட்டு விட்டார்.
யுத்தத்தில் அந்த டாலமிப் பையன் தோற்கடிக்கப்பட்டதையும் கிளியோபட்ரா மீண்டும் எகிப்து ராணியானதையும் ஹொலிவுட் சினிமாக்கள் மிகவும் பரவசத்துடன் காட்டி மகிழ்ந்தன. ஒரு தேரிலிருந்து சீசர் அந்தப் பையனின் தலையைக் கொய்து தூக்கி எறிவது போலவும் அது பறந்து போய் ஒரு மலை முகட்டில் முட்டி கீழே ஆற்றில் விழுவது போலவும் காட்டுவார்கள்.
இதெல்லா உண்மையா என்பது தெரியாவிட்டாலும் கிளியோபாராட்ரா மீண்டும் எகிப்து ராணியானது மட்டும் நிஜம். அவளது தம்பியும். கணவனுமான டாலமி அந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதும் உண்மையே. மீண்டும் எகிப்தின் மணி முடியைப் பெற்ற கிளியோபாட்ரா, தொடர்ந்து சீசருடன் வாழ்ந்தாள். ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள்.
அந்தக் குழந்தைக்கு டாலமி சீசர் என்று இரண்டு கணவர்களின் பெயரையும் சேர்த்து வைத்து சீராட்டி வளர்க்க ஆரம்பித்தாள். அந்தக் குழந்தை சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ராவின் வயிற்றைக் கீறி, சீசராலேயே வெளியே எடுக்கப்பட்டது. முதல் முதலில் சத்திரசிகிச்சை மூலம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச் செய்தது சீசர்தான் என்பதாலும்தான் இன்றைக்கு வரை மருத்துவத்துறை சத்திரசிகிச்சை மூலம் பிரசவம் பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது!
திருமணத்துக்குப் பிறகு கிளியோ பாட்ரா தனது நம்பிக்கைக்குரிய மந்திரிகள் சிலரிடம் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை அவ்வப் போது கொடுத்துவிட்டு அடிக்கடி சீசருடன் ரோமுக்குப் போய் விடுவாள்.
திடீரென்று ஆட்சி ஞாபகம் வந்ததும் கிளம்பி எகிப்துக்கு வந்துவிடுவாள். அப்போது சீசர் பின்னாலேயே புறப்பட்டு எகிப்துக்கு வந்துவிடுவார். இது ரோமானிய முக்கியஸ்தர்களுக்குப் பெரிய எரிச்சலைத் தந்தது ஒரு முகூர்த்தம் பார்த்து அவருக்கு விஷம் வைத்துக்கொன்று விட்டார்கள்.
Source: Thinakaran article
Country Code List
Country | ISO Country Codes | Country Code | Population (Rank of 237) | Area Sq. Km (Rank of 237) | GDP $USD (Rank of 237) |
---|---|---|---|---|---|
Afghanistan | AF / AFG | 93 | 28,396,000 (43) | 652,230 (42) | 22.27 Billion (114) |
Albania | AL / ALB | 355 | 3,639,453 (129) | 28,748 (145) | 21.81 Billion (116) |
Algeria | DZ / DZA | 213 | 34,178,188 (36) | 2,381,741 (12) | 232.9 Billion (48) |
American Samoa | AS / ASM | 1 684 | 65,628 (204) | 199 (215) | 575.3 Million (210) |
Andorra | AD / AND | 376 | 83,888 (200) | 468 (197) | 3.66 Billion (166) |
Angola | AO / AGO | 244 | 12,799,293 (69) | 1,246,700 (24) | 110.3 Billion (62) |
Anguilla | AI / AIA | 1 264 | 14,436 (219) | 91 (224) | 108.9 Million (218) |
Antarctica | AQ / ATA | 672 | 0 (236) | 14,000,000 (2) | 0 (228) |
Antigua and Barbuda | AG / ATG | 1 268 | 85,632 (199) | 443 (201) | 1.657 Billion (188) |
Argentina | AR / ARG | 54 | 40,913,584 (31) | 2,780,400 (9) | 573.9 Billion (23) |
Armenia | AM / ARM | 374 | 2,967,004 (137) | 29,743 (143) | 18.77 Billion (125) |
Aruba | AW / ABW | 297 | 103,065 (194) | 180 (217) | 2.258 Billion (180) |
Australia | AU / AUS | 61 | 21,262,641 (54) | 7,741,220 (7) | 800.2 Billion (18) |
Austria | AT / AUT | 43 | 8,210,281 (92) | 83,871 (114) | 329.5 Billion (36) |
Azerbaijan | AZ / AZE | 994 | 8,238,672 (91) | 86,600 (113) | 77.61 Billion (76) |
Bahamas | BS / BHS | 1 242 | 309,156 (176) | 13,880 (161) | 9.093 Billion (151) |
Bahrain | BH / BHR | 973 | 727,785 (162) | 741 (191) | 26.82 Billion (111) |
Bangladesh | BD / BGD | 880 | 156,050,883 (7) | 143,998 (95) | 224 Billion (49) |
Barbados | BB / BRB | 1 246 | 284,589 (180) | 430 (202) | 5.425 Billion (156) |
Belarus | BY / BLR | 375 | 9,648,533 (86) | 207,600 (86) | 114.1 Billion (61) |
Belgium | BE / BEL | 32 | 10,414,336 (78) | 30,528 (141) | 389.3 Billion (29) |
Belize | BZ / BLZ | 501 | 307,899 (177) | 22,966 (152) | 2.536 Billion (176) |
Benin | BJ / BEN | 229 | 8,791,832 (90) | 112,622 (102) | 12.83 Billion (138) |
Bermuda | BM / BMU | 1 441 | 67,837 (203) | 54 (226) | 4.5 Billion (161) |
Bhutan | BT / BTN | 975 | 691,141 (163) | 38,394 (137) | 3.524 Billion (168) |
Bolivia | BO / BOL | 591 | 9,775,246 (84) | 1,098,581 (29) | 43.27 Billion (91) |
Bosnia and Herzegovina | BA / BIH | 387 | 4,613,414 (119) | 51,197 (129) | 29.7 Billion (105) |
Botswana | BW / BWA | 267 | 1,990,876 (146) | 581,730 (48) | 27.06 Billion (110) |
Brazil | BR / BRA | 55 | 198,739,269 (5) | 8,514,877 (6) | 1.993 Trillion (9) |
British Indian Ocean Territory | IO / IOT | 0 (236) | 54,400 (128) | 0 (228) | |
British Virgin Islands | VG / VGB | 1 284 | 24,491 (215) | 151 (219) | 853.4 Million (205) |
Brunei | BN / BRN | 673 | 388,190 (175) | 5,765 (173) | 20.25 Billion (121) |
Bulgaria | BG / BGR | 359 | 7,204,687 (98) | 110,879 (105) | 93.75 Billion (67) |
Burkina Faso | BF / BFA | 226 | 15,746,232 (61) | 274,200 (75) | 17.82 Billion (127) |
Burma (Myanmar) | MM / MMR | 95 | 48,137,741 (26) | 676,578 (41) | 55.13 Billion (86) |
Burundi | BI / BDI | 257 | 8,988,091 (89) | 27,830 (147) | 3.102 Billion (172) |
Cambodia | KH / KHM | 855 | 14,494,293 (65) | 181,035 (90) | 27.94 Billion (108) |
Cameroon | CM / CMR | 237 | 18,879,301 (58) | 475,440 (54) | 42.75 Billion (93) |
Canada | CA / CAN | 1 | 33,487,208 (37) | 9,984,670 (3) | 1.3 Trillion (14) |
Cape Verde | CV / CPV | 238 | 429,474 (171) | 4,033 (176) | 1.626 Billion (189) |
Cayman Islands | KY / CYM | 1 345 | 49,035 (207) | 264 (210) | 1.939 Billion (181) |
Central African Republic | CF / CAF | 236 | 4,511,488 (120) | 622,984 (45) | 3.198 Billion (170) |
Chad | TD / TCD | 235 | 10,329,208 (79) | 1,284,000 (22) | 15.86 Billion (130) |
Chile | CL / CHL | 56 | 16,601,707 (60) | 756,102 (39) | 244.5 Billion (44) |
China | CN / CHN | 86 | 1,338,612,968 (1) | 9,596,961 (5) | 7.973 Trillion (2) |
Christmas Island | CX / CXR | 61 | 1,402 (231) | 135 (221) | 0 (228) |
Cocos (Keeling) Islands | CC / CCK | 61 | 596 (234) | 14 (233) | 0 (228) |
Colombia | CO / COL | 57 | 45,644,023 (28) | 1,138,914 (27) | 395.4 Billion (28) |
Comoros | KM / COM | 269 | 752,438 (161) | 2,235 (180) | 751.2 Million (207) |
Republic of the Congo | CG / COG | 242 | 4,012,809 (127) | 342,000 (64) | 15.35 Billion (131) |
Democratic Republic of the Congo | CD / COD | 243 | 68,692,542 (18) | 2,344,858 (13) | 20.64 Billion (120) |
Cook Islands | CK / COK | 682 | 11,870 (222) | 236 (214) | 183.2 Million (215) |
Costa Rica | CR / CRC | 506 | 4,253,877 (123) | 51,100 (130) | 48.32 Billion (88) |
Croatia | HR / HRV | 385 | 4,489,409 (121) | 56,594 (127) | 82.39 Billion (72) |
Cuba | CU / CUB | 53 | 11,451,652 (72) | 110,860 (106) | 108.2 Billion (63) |
Cyprus | CY / CYP | 357 | 796,740 (159) | 9,251 (171) | 22.7 Billion (113) |
Czech Republic | CZ / CZE | 420 | 10,211,904 (80) | 78,867 (116) | 265.2 Billion (42) |
Denmark | DK / DNK | 45 | 5,500,510 (110) | 43,094 (134) | 203.6 Billion (50) |
Djibouti | DJ / DJI | 253 | 516,055 (168) | 23,200 (151) | 1.885 Billion (183) |
Dominica | DM / DMA | 1 767 | 72,660 (202) | 751 (189) | 719.6 Million (208) |
Dominican Republic | DO / DOM | 1 809 | 9,650,054 (85) | 48,670 (132) | 78 Billion (75) |
Timor-Leste | TL / TLS | 670 | 1,131,612 (155) | 14,874 (160) | 2.52 Billion (177) |
Ecuador | EC / ECU | 593 | 14,573,101 (64) | 283,561 (74) | 107.7 Billion (64) |
Egypt | EG / EGY | 20 | 83,082,869 (15) | 1,001,450 (31) | 443.7 Billion (26) |
El Salvador | SV / SLV | 503 | 7,185,218 (99) | 21,041 (154) | 43.63 Billion (90) |
Equatorial Guinea | GQ / GNQ | 240 | 633,441 (165) | 28,051 (146) | 22.95 Billion (112) |
Eritrea | ER / ERI | 291 | 5,647,168 (109) | 117,600 (101) | 3.945 Billion (165) |
Estonia | EE / EST | 372 | 1,299,371 (152) | 45,228 (133) | 27.41 Billion (109) |
Ethiopia | ET / ETH | 251 | 85,237,338 (14) | 1,104,300 (28) | 68.77 Billion (79) |
Falkland Islands | FK / FLK | 500 | 3,140 (227) | 12,173 (165) | 105.1 Million (219) |
Faroe Islands | FO / FRO | 298 | 48,856 (208) | 1,393 (183) | 1000 Million (198) |
Fiji | FJ / FJI | 679 | 944,720 (157) | 18,274 (157) | 3.579 Billion (167) |
Finland | FI / FIN | 358 | 5,250,275 (113) | 338,145 (65) | 193.5 Billion (53) |
France | FR / FRA | 33 | 64,057,792 (21) | 643,427 (43) | 2.128 Trillion (8) |
French Polynesia | PF / PYF | 689 | 287,032 (179) | 4,167 (175) | 4.718 Billion (160) |
Gabon | GA / GAB | 241 | 1,514,993 (151) | 267,667 (77) | 21.11 Billion (118) |
Gambia | GM / GMB | 220 | 1,782,893 (148) | 11,295 (167) | 2.272 Billion (179) |
Gaza Strip | / | 970 | 1,551,859 (149) | 360 (205) | 11.95 Billion (141) |
Georgia | GE / GEO | 995 | 4,615,807 (118) | 69,700 (121) | 21.51 Billion (117) |
Germany | DE / DEU | 49 | 82,329,758 (16) | 357,022 (63) | 2.918 Trillion (5) |
Ghana | GH / GHA | 233 | 23,832,495 (47) | 238,533 (82) | 34.2 Billion (99) |
Gibraltar | GI / GIB | 350 | 28,034 (214) | 7 (235) | 1.066 Billion (196) |
Greece | GR / GRC | 30 | 10,737,428 (74) | 131,957 (97) | 343 Billion (33) |
Greenland | GL / GRL | 299 | 57,600 (206) | 2,166,086 (14) | 1.1 Billion (193) |
Grenada | GD / GRD | 1 473 | 90,739 (196) | 344 (206) | 1.161 Billion (192) |
Guam | GU / GUM | 1 671 | 160,595 (187) | 544 (196) | 2.5 Billion (178) |
Guatemala | GT / GTM | 502 | 13,276,517 (68) | 108,889 (107) | 68.58 Billion (80) |
Guinea | GN / GIN | 224 | 10,057,975 (81) | 245,857 (79) | 10.6 Billion (146) |
Guinea-Bissau | GW / GNB | 245 | 1,533,964 (150) | 36,125 (138) | 904.2 Million (202) |
Guyana | GY / GUY | 592 | 772,298 (160) | 214,969 (85) | 2.966 Billion (173) |
Haiti | HT / HTI | 509 | 9,035,536 (88) | 27,750 (148) | 11.5 Billion (144) |
Honduras | HN / HND | 504 | 7,792,854 (93) | 112,090 (103) | 33.72 Billion (101) |
Hong Kong | HK / HKG | 852 | 7,055,071 (100) | 1,104 (184) | 306.6 Billion (39) |
Hungary | HU / HUN | 36 | 9,905,596 (82) | 93,028 (110) | 196.6 Billion (52) |
Iceland | IS / IS | 354 | 306,694 (178) | 103,000 (108) | 12.71 Billion (139) |
India | IN / IND | 91 | 1,166,079,217 (2) | 3,287,263 (8) | 3.297 Trillion (4) |
Indonesia | ID / IDN | 62 | 240,271,522 (4) | 1,904,569 (17) | 914.6 Billion (15) |
Iran | IR / IRN | 98 | 66,429,284 (19) | 1,648,195 (19) | 841.7 Billion (17) |
Iraq | IQ / IRQ | 964 | 28,945,657 (40) | 438,317 (59) | 103.9 Billion (65) |
Ireland | IE / IRL | 353 | 4,203,200 (125) | 70,273 (120) | 188.4 Billion (54) |
Isle of Man | IM / IMN | 44 | 76,512 (201) | 572 (195) | 2.719 Billion (175) |
Israel | IL / ISR | 972 | 7,233,701 (97) | 22,072 (153) | 201.4 Billion (51) |
Italy | IT / ITA | 39 | 58,126,212 (23) | 301,340 (72) | 1.823 Trillion (10) |
Ivory Coast | CI / CIV | 225 | 20,617,068 (56) | 322,463 (69) | 33.85 Billion (100) |
Jamaica | JM / JAM | 1 876 | 2,825,928 (138) | 10,991 (168) | 20.91 Billion (119) |
Japan | JP / JPN | 81 | 127,078,679 (10) | 377,915 (62) | 4.329 Trillion (3) |
Jersey | JE / JEY | 91,626 (195) | 116 (222) | 5.1 Billion (158) | |
Jordan | JO / JOR | 962 | 6,342,948 (104) | 89,342 (112) | 31.61 Billion (102) |
Kazakhstan | KZ / KAZ | 7 | 15,399,437 (62) | 2,724,900 (10) | 175.8 Billion (56) |
Kenya | KE / KEN | 254 | 39,002,772 (33) | 580,367 (49) | 61.51 Billion (83) |
Kiribati | KI / KIR | 686 | 112,850 (190) | 811 (187) | 579.5 Million (209) |
Kosovo | / | 381 | 1,804,838 (147) | 10,887 (169) | 5 Billion (159) |
Kuwait | KW / KWT | 965 | 2,691,158 (139) | 17,818 (158) | 149.1 Billion (57) |
Kyrgyzstan | KG / KGZ | 996 | 5,431,747 (112) | 199,951 (87) | 11.61 Billion (143) |
Laos | LA / LAO | 856 | 6,834,942 (102) | 236,800 (84) | 13.98 Billion (134) |
Latvia | LV / LVA | 371 | 2,231,503 (141) | 64,589 (124) | 38.86 Billion (97) |
Lebanon | LB / LBN | 961 | 4,017,095 (126) | 10,400 (170) | 44.06 Billion (89) |
Lesotho | LS / LSO | 266 | 2,130,819 (142) | 30,355 (142) | 3.293 Billion (169) |
Liberia | LR / LBR | 231 | 3,441,790 (132) | 111,369 (104) | 1.526 Billion (191) |
Libya | LY / LBY | 218 | 6,310,434 (105) | 1,759,540 (18) | 88.83 Billion (70) |
Liechtenstein | LI / LIE | 423 | 34,761 (210) | 160 (218) | 4.16 Billion (164) |
Lithuania | LT / LTU | 370 | 3,555,179 (130) | 65,300 (123) | 63.33 Billion (82) |
Luxembourg | LU / LUX | 352 | 491,775 (169) | 2,586 (179) | 39.37 Billion (96) |
Macau | MO / MAC | 853 | 559,846 (167) | 28 (230) | 18.14 Billion (126) |
Macedonia | MK / MKD | 389 | 2,066,718 (144) | 25,713 (150) | 18.78 Billion (124) |
Madagascar | MG / MDG | 261 | 20,653,556 (55) | 587,041 (47) | 20.13 Billion (122) |
Malawi | MW / MWI | 265 | 14,268,711 (66) | 118,484 (100) | 11.81 Billion (142) |
Malaysia | MY / MYS | 60 | 25,715,819 (46) | 329,847 (67) | 384.3 Billion (30) |
Maldives | MV / MDV | 960 | 396,334 (174) | 298 (209) | 1.716 Billion (185) |
Mali | ML / MLI | 223 | 12,666,987 (70) | 1,240,192 (25) | 14.59 Billion (133) |
Malta | MT / MLT | 356 | 405,165 (173) | 316 (207) | 9.962 Billion (148) |
Marshall Islands | MH / MHL | 692 | 64,522 (205) | 181 (216) | 133.5 Million (217) |
Mauritania | MR / MRT | 222 | 3,129,486 (135) | 1,030,700 (30) | 6.308 Billion (153) |
Mauritius | MU / MUS | 230 | 1,284,264 (153) | 2,040 (181) | 15.27 Billion (132) |
Mayotte | YT / MYT | 262 | 223,765 (183) | 374 (204) | 953.6 Million (201) |
Mexico | MX / MEX | 52 | 111,211,789 (11) | 1,964,375 (16) | 1.563 Trillion (11) |
Micronesia | FM / FSM | 691 | 107,434 (192) | 702 (192) | 238.1 Million (213) |
Moldova | MD / MDA | 373 | 4,320,748 (122) | 33,851 (140) | 10.67 Billion (145) |
Monaco | MC / MCO | 377 | 32,965 (211) | 2 (237) | 976.3 Million (200) |
Mongolia | MN / MNG | 976 | 3,041,142 (136) | 1,564,116 (20) | 9.476 Billion (150) |
Montenegro | ME / MNE | 382 | 672,180 (164) | 13,812 (162) | 6.816 Billion (152) |
Montserrat | MS / MSR | 1 664 | 5,097 (226) | 102 (223) | 29 Million (223) |
Morocco | MA / MAR | 212 | 34,859,364 (35) | 446,550 (58) | 136.6 Billion (58) |
Mozambique | MZ / MOZ | 258 | 21,669,278 (52) | 799,380 (36) | 18.94 Billion (123) |
Namibia | NA / NAM | 264 | 2,108,665 (143) | 824,292 (35) | 13.25 Billion (135) |
Nauru | NR / NRU | 674 | 14,019 (220) | 21 (232) | 60 Million (221) |
Nepal | NP / NPL | 977 | 28,563,377 (42) | 147,181 (94) | 31.08 Billion (103) |
Netherlands | NL / NLD | 31 | 16,715,999 (59) | 41,543 (135) | 672 Billion (20) |
Netherlands Antilles | AN / ANT | 599 | 227,049 (182) | 800 (188) | 2.8 Billion (174) |
New Caledonia | NC / NCL | 687 | 227,436 (181) | 18,575 (156) | 3.158 Billion (171) |
New Zealand | NZ / NZL | 64 | 4,213,418 (124) | 267,710 (76) | 116.7 Billion (60) |
Nicaragua | NI / NIC | 505 | 5,891,199 (108) | 130,370 (98) | 16.79 Billion (129) |
Niger | NE / NER | 227 | 15,306,252 (63) | 1,267,000 (23) | 10.04 Billion (147) |
Nigeria | NG / NGA | 234 | 149,229,090 (8) | 923,768 (33) | 335.4 Billion (35) |
Niue | NU / NIU | 683 | 1,398 (232) | 260 (212) | 10.01 Million (226) |
Norfolk Island | / NFK | 672 | 2,141 (228) | 36 (229) | 0 (228) |
Northern Mariana Islands | MP / MNP | 1 670 | 88,662 (197) | 464 (198) | 900 Million (204) |
North Korea | KP / PRK | 850 | 22,665,345 (50) | 120,538 (99) | 40 Billion (94) |
Norway | NO / NOR | 47 | 4,660,539 (116) | 323,802 (68) | 275.4 Billion (40) |
Oman | OM / OMN | 968 | 3,418,085 (133) | 309,500 (71) | 66.98 Billion (81) |
Pakistan | PK / PAK | 92 | 176,242,949 (6) | 796,095 (37) | 427.3 Billion (27) |
Palau | PW / PLW | 680 | 20,796 (217) | 459 (199) | 164 Million (216) |
Panama | PA / PAN | 507 | 3,360,474 (134) | 75,420 (118) | 38.83 Billion (98) |
Papua New Guinea | PG / PNG | 675 | 6,057,263 (106) | 462,840 (55) | 13.21 Billion (136) |
Paraguay | PY / PRY | 595 | 6,995,655 (101) | 406,752 (60) | 28.89 Billion (107) |
Peru | PE / PER | 51 | 29,546,963 (39) | 1,285,216 (21) | 247.3 Billion (43) |
Philippines | PH / PHL | 63 | 97,976,603 (12) | 300,000 (73) | 317.5 Billion (37) |
Pitcairn Islands | PN / PCN | 870 | 48 (235) | 47 (228) | 0 (228) |
Poland | PL / POL | 48 | 38,482,919 (34) | 312,685 (70) | 667.9 Billion (21) |
Portugal | PT / PRT | 351 | 10,707,924 (75) | 92,090 (111) | 236.5 Billion (47) |
Puerto Rico | PR / PRI | 1 | 3,971,020 (128) | 13,790 (163) | 70.23 Billion (78) |
Qatar | QA / QAT | 974 | 833,285 (158) | 11,586 (166) | 91.33 Billion (69) |
Romania | RO / ROU | 40 | 22,215,421 (51) | 238,391 (83) | 271.4 Billion (41) |
Russia | RU / RUS | 7 | 140,041,247 (9) | 17,098,242 (1) | 2.266 Trillion (6) |
Rwanda | RW / RWA | 250 | 10,473,282 (77) | 26,338 (149) | 9.706 Billion (149) |
Saint Barthelemy | BL / BLM | 590 | 7,448 (224) | 0 (238) | 0 (228) |
Samoa | WS / WSM | 685 | 219,998 (184) | 2,831 (178) | 1.049 Billion (197) |
San Marino | SM / SMR | 378 | 30,324 (212) | 61 (225) | 1.662 Billion (187) |
Sao Tome and Principe | ST / STP | 239 | 212,679 (186) | 964 (185) | 276.5 Million (212) |
Saudi Arabia | SA / SAU | 966 | 28,686,633 (41) | 2,149,690 (15) | 576.5 Billion (22) |
Senegal | SN / SEN | 221 | 13,711,597 (67) | 196,722 (88) | 21.98 Billion (115) |
Serbia | RS / SRB | 381 | 7,379,339 (95) | 77,474 (117) | 80.34 Billion (74) |
Seychelles | SC / SYC | 248 | 87,476 (198) | 455 (200) | 1.715 Billion (186) |
Sierra Leone | SL / SLE | 232 | 6,440,053 (103) | 71,740 (119) | 4.285 Billion (162) |
Singapore | SG / SGP | 65 | 4,657,542 (117) | 697 (193) | 237.3 Billion (46) |
Slovakia | SK / SVK | 421 | 5,463,046 (111) | 49,035 (131) | 119.5 Billion (59) |
Slovenia | SI / SVN | 386 | 2,005,692 (145) | 20,273 (155) | 59.34 Billion (84) |
Solomon Islands | SB / SLB | 677 | 595,613 (166) | 28,896 (144) | 1.078 Billion (194) |
Somalia | SO / SOM | 252 | 9,832,017 (83) | 637,657 (44) | 5.524 Billion (155) |
South Africa | ZA / ZAF | 27 | 49,052,489 (24) | 1,219,090 (26) | 491 Billion (25) |
South Korea | KR / KOR | 82 | 48,508,972 (25) | 99,720 (109) | 1.335 Trillion (13) |
Spain | ES / ESP | 34 | 40,525,002 (32) | 505,370 (52) | 1.403 Trillion (12) |
Sri Lanka | LK / LKA | 94 | 21,324,791 (53) | 65,610 (122) | 91.87 Billion (68) |
Saint Helena | SH / SHN | 290 | 7,637 (223) | 308 (208) | 18 Million (224) |
Saint Kitts and Nevis | KN / KNA | 1 869 | 40,131 (209) | 261 (211) | 777.7 Million (206) |
Saint Lucia | LC / LCA | 1 758 | 160,267 (188) | 616 (194) | 1.778 Billion (184) |
Saint Martin | MF / MAF | 1 599 | 29,820 (213) | 54 (227) | 0 (228) |
Saint Pierre and Miquelon | PM / SPM | 508 | 7,051 (225) | 242 (213) | 48.3 Million (222) |
Saint Vincent and the Grenadines | VC / VCT | 1 784 | 104,574 (193) | 389 (203) | 1.07 Billion (195) |
Sudan | SD / SDN | 249 | 41,087,825 (29) | 2,505,813 (11) | 88.08 Billion (71) |
Suriname | SR / SUR | 597 | 481,267 (170) | 163,820 (92) | 4.254 Billion (163) |
Svalbard | SJ / SJM | 2,116 (229) | 62,045 (125) | 0 (228) | |
Swaziland | SZ / SWZ | 268 | 1,123,913 (156) | 17,364 (159) | 5.702 Billion (154) |
Sweden | SE / SWE | 46 | 9,059,651 (87) | 450,295 (56) | 344.3 Billion (32) |
Switzerland | CH / CHE | 41 | 7,604,467 (94) | 41,277 (136) | 316.7 Billion (38) |
Syria | SY / SYR | 963 | 20,178,485 (57) | 185,180 (89) | 98.83 Billion (66) |
Taiwan | TW / TWN | 886 | 22,974,347 (49) | 35,980 (139) | 712 Billion (19) |
Tajikistan | TJ / TJK | 992 | 7,349,145 (96) | 143,100 (96) | 13.16 Billion (137) |
Tanzania | TZ / TZA | 255 | 41,048,532 (30) | 947,300 (32) | 54.25 Billion (87) |
Thailand | TH / THA | 66 | 65,905,410 (20) | 513,120 (51) | 547.4 Billion (24) |
Togo | TG / TGO | 228 | 6,019,877 (107) | 56,785 (126) | 5.118 Billion (157) |
Tokelau | TK / TKL | 690 | 1,416 (230) | 12 (234) | 1.5 Million (227) |
Tonga | TO / TON | 676 | 120,898 (189) | 747 (190) | 549 Million (211) |
Trinidad and Tobago | TT / TTO | 1 868 | 1,229,953 (154) | 5,128 (174) | 29.01 Billion (106) |
Tunisia | TN / TUN | 216 | 10,486,339 (76) | 163,610 (93) | 81.71 Billion (73) |
Turkey | TR / TUR | 90 | 76,805,524 (17) | 783,562 (38) | 902.7 Billion (16) |
Turkmenistan | TM / TKM | 993 | 4,884,887 (114) | 488,100 (53) | 29.78 Billion (104) |
Turks and Caicos Islands | TC / TCA | 1 649 | 22,942 (216) | 948 (186) | 216 Million (214) |
Tuvalu | TV / TUV | 688 | 12,373 (221) | 26 (231) | 14.94 Million (225) |
United Arab Emirates | AE / ARE | 971 | 4,798,491 (115) | 83,600 (115) | 184.3 Billion (55) |
Uganda | UG / UGA | 256 | 32,369,558 (38) | 241,038 (81) | 39.38 Billion (95) |
United Kingdom | GB / GBR | 44 | 61,113,205 (22) | 243,610 (80) | 2.226 Trillion (7) |
Ukraine | UA / UKR | 380 | 45,700,395 (27) | 603,550 (46) | 339.8 Billion (34) |
Uruguay | UY / URY | 598 | 3,494,382 (131) | 176,215 (91) | 43.16 Billion (92) |
United States | US / USA | 1 | 307,212,123 (3) | 9,826,675 (4) | 14.26 Trillion (1) |
Uzbekistan | UZ / UZB | 998 | 27,606,007 (44) | 447,400 (57) | 71.67 Billion (77) |
Vanuatu | VU / VUT | 678 | 218,519 (185) | 12,189 (164) | 988.5 Million (199) |
Holy See (Vatican City) | VA / VAT | 39 | 826 (233) | 0 (238) | 0 (228) |
Venezuela | VE / VEN | 58 | 26,814,843 (45) | 912,050 (34) | 357.4 Billion (31) |
Vietnam | VN / VNM | 84 | 86,967,524 (13) | 331,210 (66) | 241.7 Billion (45) |
US Virgin Islands | VI / VIR | 1 340 | 109,825 (191) | 1,910 (182) | 1.577 Billion (190) |
Wallis and Futuna | WF / WLF | 681 | 15,289 (218) | 142 (220) | 60 Million (220) |
West Bank | / | 970 | 2,461,267 (140) | 5,860 (172) | 11.95 Billion (140) |
Western Sahara | EH / ESH | 405,210 (172) | 266,000 (78) | 900 Million (203) | |
Yemen | YE / YEM | 967 | 23,822,783 (48) | 527,968 (50) | 55.28 Billion (85) |
Zambia | ZM / ZMB | 260 | 11,862,740 (71) | 752,618 (40) | 17.5 Billion (128) |
Zimbabwe | ZW / ZWE | 263 | 11,392,629 (73) | 390,757 (61) | 1.925 Billion (182) |
GDP: Gross Domestic Produts / மொத்த உள்நாட்டு உற்பத்தி
THE WORLD’S GREATEST PEOPLE / உலகின் சிறந்த தலைவர்கள்
அமெரிக்க வரலாற்றாசிரியரான Michael H. Hart என்பவர் 1992ல் உலகின் சிறந்த தலைவர்கள் 100 பேர்களை ஒவ்வொரு நாடுகள் தோரும் ஆராய்ந்து வரிசைப்படுதி இருந்தார். அவர் வரிசைப்படுத்தியவர்களுள் இறைத்தூதர்கள், விஞ்ஞானிகள், மதத்தலைவர்கள், நோபல்பரிசு பெற்றவர்கள், நாட்டின் தலைவர்கள் என 100 பேர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். அவரது வெளியீட்டின் Epilogue எனும் இறுதி உரையில் பின்வரும் 10 பேர்களை உலகின் சிறந்த மனிதர்கள் என இவ்வாறு வரிசைப்படுத்தி இருந்தார்.
rank | Name | Profession / reputation | Country | Died |
1
|
Muhammad | prophet and founder of the Islamic faith | Saudi Arabia | c.632 |
2 | Sir Isaac Newton | scientist, pioneer of gravity, motion theories | Britain | 1727 |
3 | Jesus Christ | prophet and founder of Christianity | Palestine | c. 29 X |
4 | Gautama Buddha | founder of Buddhism | Nepal | c. 483 BC |
5 | Confucius | founder of Confucianism | China | c. 479 BC |
6
|
St. Paul of Tarsus | Christian theologian influential in spreading Christianity outside of the Middle East | Turkey | c. 67 |
7 | Tsai Lun | inventor of paper | China | 121 |
8 | Johannes Gutenberg | inventor of the printing press | Germany | 1468 |
9 | Christopher Columbus | explorer, first European to discover North America | Italy/Spain | 1506 |
10 | Albert Einstein | scientist, founder of theory of relativity | Germany | 1955 |
NOBEL PRIZE LIST:
2011
2010
For more details, மேலதிகத் தகவல்களுக்கு: www.nobelprize.org
INTERNATIONAL POLICE – INTERPOL: www.interpol.int
pls input the A/L past papers