காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்
கடந்த 5 நாட்களில் 128 கொரோனா வைரஸ்
தொற்றாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை
நண்பகல் வரை 13.10.2020 சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 08 ஆம் திகதி புதன்கிழமை கம்பஹா
மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸ்
தொற்றுக்குள்ளான 82 பெண்கள்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது காத்தான்குடி ஆதார
வைத்தியசாலையின் விஷேட கொரோனா
வைரஸ் சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ்
தொற்றாளர்கள் அனைவரும் கம்பஹா
மாவட்டத்திலுள்ள தனியார் ஆடைத்
தொழிற்சாலையில் பணிபுரியும் நாட்டின்
நாலாபுறங்களையும் வசிப்பிடமாகக் கொண்ட
பெண்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள்
மேலும் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் முதலாம் அலை
பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா
வைரஸினால் பீடிக்கப்பட்டு இலங்கையின்
நாலாபுறங்களிலுமிருந்தும் அழைத்தச்
வரப்பட்ட நோயாளர்களுக்கு
சிகிச்சையளிப்பதற்காக காத்தான்குடி ஆதார
வைத்தியசாலையில் விஷேட கொரோனா
வைரஸ் சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.