– MJ
லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் செவ்வாய்க்கிழமை (04) ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் தினமாக மத்திய லண்டன் பள்ளிவாயல் அறிவித்திருக்கிறது. காலை 9 மணியிலிருந்து தொழுகைக்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிவாயல்கள் ஏற்பாடு செய்திருக்கின்றன. சனத்திரளைக் கருத்திற்கொண்டு மத்திய இலண்டன் பள்ளிவாயலில் மாத்திரம் 6 பெருநாள் தொழுகைகளும் குத்பாக்களும் காலை 7 மணியிலிருந்து நண்பகள் 12 மணிவரை இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.