-
மாத்தளையின் மக்கள் தொகையில் எட்டிலொரு பங்குக்கு நாய்களின் பெருக்கம்
மாத்தளை: கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் தொடர்பாக நாடெங்கும் பரவலாக பொது மக்களால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தெருநாய்களால் மக்களுக்கு உண்மையிலேயே பெரும் தொல்லைதான். வீதியால் செல்லும் மக்களை நாய்கள்துரத்துவதுண்டு. சில நாய்கள் துரத்திக் கடிப்பதுமுண்டு. அதுவே விசர்நாயாக இருந்து விட்டால் நிலைமை இன்னும் பயங்கரம்!
-
ஹஜ் வணக்கத்தை விமர்சித்ததால் தனது அமைச்சரை வெளியேற்றும் பங்களாதேஷ் அரசு!
– MJ டாக்கா: ஹஜ் வணக்கத்தை விமர்சித்தமைக்காக பங்களாதேஷின் தொலைத்தொடர்பாடல் அமைச்சர் அப்துல் லத்தீப் சித்தீக் என்பவரை பங்களாதேஷ் அரசாங்கம் அமைச்சரவையிலிருந்து தூக்குவதற்கு 24 மணிநேர அவகாசத்தை அப்துல் லத்தீபிற்கு விதித்துள்ளது.
-
விராது-ஞானசார இணைவும் இலங்கை முஸ்லிம்களின் ஆபத்துக்களும்.. சவுதி கெஸட் வெளியிட்ட செய்தி
றியாத்: இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் மாநாடும், மியன்மாரின் விராது தேரரின் பங்களிப்பும், இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் கவனயீனமும், இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பற்றி சவுதி அரேபியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகையான சவுதி கெஸட் செய்தி வெளியிட்டிருக்கிறது.
-
“முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு வீசா அனுமதி அளித்தமைக்காக நன்றி: பொது பல சேனா அமைப்போடு சேர்ந்து இயங்குவோம்”
கொழும்பு: இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டை நடத்தியது.
-
சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிப்பு: பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் அவர்களின் பிரேரனை சபையில் நிறைவேற்றம்
– எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: நாளை புதன்கிழமை (01.10.2014) மலரவிருக்கும் ஓக்டோபர் 01 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் நவீன சிறுவர் பூங்காவினை சிறுவர்களுக்கு இலவசமாக பயன்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
-
“காத்தான்குடி ஜாமியத்ததுல் பலாஹ் அறபிக்கல்லூரி பல முன்னேற்றப்பாதையில் காலடி எடுத்துவைக்கவுள்ளது”- தலைவர் அலியார் றியாதி
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியத்ததுல் பலாஹ் அறபிக்கல்லூரி பல முன்னேற்றப்பாதையில் காலடி எடுத்து வைக்கவுள்ளதாகம், தகவல் தொழிநுட்பம் கனிணி போன்ற கற்கை நெறிகளை தொடரவுள்ளதாகவும் அதன் தற்போதய தலைவர் மௌலவி ஏ எல் எம் அலியார் றியாதி நேற்று இடம்பெற்ற பிரதேச ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
-
புலமைப் பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளைப் பெற்று ஏறாவூர் மாணவர்கள் இருவர் ஏறாவூர் கோட்ட மட்டத்தில் முதலாமிடம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: இலங்கை கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2014 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் கோட்ட மட்ட மாணவர்கள் இருவர் 186 புள்ளிகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
-
அல்மனாரின் வரலாறு காணாத மாவட்ட குர்ஆன் மணனப்போட்டியும் பரிசளிப்பும்
– அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: எமது அல் மனார் நிறுவனம் வரலாற்றில் முதற் தடவையாக மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் உள்ள அனைத்து ஹாபிழ்கள் மற்றும் ஹாபிழாக்களை உள்ளடக்கியதாக அல் குர்ஆன் மனன போட்டியொன்றினை 3 பிரிவுகளாக நடாத்தியது. சர்வதேச தரத்திற்கு ஒப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி கடந்த 17, 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் காலை 7:00 மணி தொடக்கம் இரவு 09:00 மணிவரை காத்தான்குடி, அல் மனார் நிறுவன அர் ராஸித்…
-
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக பேராதெனிய கலஹா சந்தி முன்பாக ஆர்ப்பாட்டம்
– பேராதெனிய நிருபர் கண்டி: பேராதெனிய, பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் 12.00 மணியளவில் பேராதெனிய கலஹா சந்தி முன்பாக நடைபெற்றது. மாலபே தனியார் கல்லூரியின் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை முறை பயிற்சி (Hospital Training)) வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
-
‘எனது முதன்மை ஆசானும், மூத்த ஊடகவியலாளருமான அலியார் முஸம்மிலின் மறைவையிட்டு கவலையடைகின்றேன்’- சட்டத்தரணி ஹரீஸ்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: ஒழுக்க ரீதியில் என்னை ஆளுமைப்படுத்தி தலைமைத்துவப் பண்புகளை பயிற்றுவித்த எனது முதன்மை ஆசானும், மூத்த ஊடகவியலாளருமான அலியார் முஸம்மிலின் மறைவையிட்டு கவலையடைகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஹொங்கொங்கில் வன்முறைக்கு மத்தியிலும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டம் நீடிப்பு
ஹொங்கொங்: ஹொங்கொங்கில் ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசின் உத்தரவையும் பொருட்படுத்தாமல் வீதிகள் மற்றும் வர்த்தக மையப்பகுதியை முடக்கி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
‘மாப்பிள்ளைகளது அபிலாசைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும்’- வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களின் கல்வி போராட்டத்தின் பின்னனி
மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கு காரணம் மாணவர்களை பிழையான அரசியல் வன்முறை சார் கலாச்சாரத்துக்குள் தூண்டுவதே – எம்.ரீ.எம்.பாரிஸ் (செயலாளர், மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம்) வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியினை அண்மைக்காலமாக சற்று ஆராய்வோமானால் வெற்றியின் பாதைகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.