-
எதிர்வரும் 6ம் திகதி அரசாங்க, வங்கி விடுமுறை தினமாக அறிவிப்பு!
கொழும்பு: இலங்கையில் ஹஜ் பெருநாள் எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான விசேட அரசாங்க சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை (6ம் திகதி) அரசாங்கம் மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஹஜ் இன்று ஆரம்பம்
– AF-90 மக்கா: உலகெங்கும் இருந்து புனித மக்காஹ் நகரில் சுமார் 1.3 மில்லியன் மக்கள் ஒன்றுதிரண்டுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை ஹஜ் கடமை ஆரம்பமாகிறது. துல் ஹஜ்ஜின் எட்டாம் நாளில் புனித ஆலயத்தை தரிசித்து, ஹஃபதுல்லாஹ்வை தவாபு செய்தபின்னர், இன்றிரவு (8ம் இரவு) மினாவில் மக்கள் தங்குவர். அதன் பின்னர் 9ம் தினமான நாளை வெள்ளிக்கிழமை அரபாவில் ஹாஜிகள் ஒன்றுகூடுவர்.
-
“சிறுவர்கள் சுதந்திரமாக வாழும் சிறந்த நாடு இலங்கை”- ஜனாதிபதி
கொழும்பு: கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் சிறுவர் தினம் போன்ற நிகழ்வுகள் நடத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஐ.நா.வின் சிறுவர் உரிமை தொடர்பான சாசனத்திற்கிணங்கவே ஒக்டோபர் முத லாம் திகதி சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
-
இந்தோனேசியாவின் ‘உழ்ஹிய்யா சேல்ஸ் கேர்ள்’
– MJ ஜகார்த்தா: எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, உழ்ஹிய்யா கொடுப்பதற்காக மாடுகளைக் கொள்வனவு செய்வதற்காக தங்களது பண்ணைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் முகமாக இந்தோனேசியாவின் டீபொக் பண்ணையின் காட்சியறையில் குறித்த நிறுவனம் ‘சேல்ஸ் கேர்ள்ஸ்’ களை வேலைக்கமர்த்தியிருக்கின்றது.
-
ஜம்ரத் புதிய பாலம்: மணிக்கு 5 இலட்சம் பேரை உள்ளடக்கும்!
– MJ மக்கா: ஹஜ் கடமையின் ஓர் அம்சமான மினாவில் கல்லெறியும் நிகழ்வுக்காக தற்பொழுது புதிய ஜம்ரத் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. “இப்பாலம் ஒரு மணித்தியாலத்துக்கு ஐந்து இலட்சம் மக்களைக் உள்ளடக்கக் கூடியது” என இளவரசர் மன்சூர் பின் மிடெப் தெரிவித்துள்ளார்.
-
என்ன மனிதர்கள் இவர்கள்?
– I.L.M. றிபாஸ் அண்மையில் ஒரு சகோதரரை சந்திப்பதற்காக காங்கேயனோடைக் கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. அந்த ஊரின் தெற்கு எல்லையில் ஒரு அழகான பள்ளிவாயலோடு எழில் கொஞ்சும் முறையில் கட்டப் பட்டுள்ள “ஈரான் சிட்டி” என அழைக்கப் படும் வீடமைப்பு திட்டத்தில் அவர் வசிக்கிறார். அந்தப் பிரதேசம் பார்ப்பதற்கு அழகாகவும் ஊரின் உஸ்னத்தோடு ஒப்பிடும் போது ஆறுதலாகவும் இருந்ததது.
-
‘இலங்கையின் சமகால அரசியல் நிலைப்பாடும் மாற்று அரசியல் வேலைத்திட்டத்தின் அவசியப்பாடும்’ என்ற தலைப்பில் NFGGயின் பிரமுகர்கள் சந்திப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இலங்கையின் சமகால அரசியல் நிலைப்பாடும் மாற்று அரசியல் வேலைத்திட்டத்தின் அவசியப்பாடும் என்ற தொனிப்பொருளில் பிரமுகர்களுடனான சந்திப்பு ஒன்று நேற்று 29.09.2014 மாலை 6.30 மணியளவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொழும்புக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
“குடும்ப ஆட்சி நடைபெறுவதால் ஜனாதிபதியின் குடும்பத்தினர் என்ன நடக்கிறது என்பது கூட அறியாதவர்களாக இருக்கின்றனர்”
கொழும்பு: நாட்டில் தற்போது குடும்ப ஆட்சி நடைபெறுவதால் ஜனாதிபதியின் குடும்பத்தினர் என்ன நடக்கிறது என்பது கூட அறியாதவர்களாக இருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய போட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
முஹம்மட் சியாம் எனும் 18 வயது முஸ்லிம் இளைஞனை 13 தினங்களாக காணவில்லை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இலக்கம் 476, ஹிழுறியா ஜூம்மா பள்ளிவாயல் வீதி , மஞ்சந்தொடுவாய்,மட்டக்களப்பு எனும் முகவரியில் வசிக்கும் றவூப் முஹம்மட் சியாம் வயது 18 முஸ்லிம் இளைஞனை கடந்த 19-09-2014 திகதி தொடக்கம் 01-10-2014 இன்று வரை காணவில்லை என அவரின் தந்தை இப்றாஹீம் றவூப் தெரிவித்தார்.
-
காத்தான்குடியில் உலக சிறுவர் தின நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாடு முழுவதும் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களினால் சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றன.
-
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 11 மாணவிகள் சித்தி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2014ம் ஆண்டு இடம்பெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 11 மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர் இதில் முதலாவது இடத்தைப்பெற்ற எம்.அம்னா பர்ஹத் எனும் மாணவி 184 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 16வது இடத்தைப் பெற்றுள்ளார்.
-
முதியோரும் சிறுவரும் நாட்டின் விலைமதிப்பற்ற சொத்துகள்
சிறுவர், முதியோர் தினம் இன்று கொழும்பு: சர்வதேச முதியோர் தினமும், சிறுவர் தினமும் உலகெங்கும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றன.