-
ஜனாதிபதி மஹிந்தவுக்கு தவறிவரும் முஸ்லிம்களின் ஆதரவுகள்
கொழும்பு: ‘சிறுபான்மையினர் மத்தியில் இருந்து வரவேற்பை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். பலஸ்தீன போராட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டு வந்தமையால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது.
-
‘சமூக ஒற்றுமையை கொச்சைப்படுத்தாதீர்’- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவது அரசாங்கத்தின் சதியென அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.
-
பறிபோன அரசியல் பலத்தை ஒன்றுபட்டு பெற்றுக் கொள்ள கிடைத்துள்ள சந்தர்ப்பம்!!
கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அத்துமீறல்கள் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் இடம் பெற்றுவரும் நிலையில் மற்றுமொரு மாகாண சபை தேர்தலை மக்கள் எதிர் கொள்ள தயாராகின்றனர். கடந்த சில மாதங்களாக பேசப்பட்டுவந்த பொதுபலசேன அமைப்பின் தாக்குதல்கள் தொடர்பில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கனிப்புக்கள் இந்த தேர்தல் முடிவில் மக்களின் தீர்ப்பாக அமையும் என்பது எதிர்வு கூறல்களாகும்.
-
போதைப்பொருள் பாவனையை தடுக்க ஏறாவூர் பொலிசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை வழங்க தயார் – கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் சுபைர்
அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சென்ற வாரமும்இஇன்றும் குடுஇகஞ்சா போன்ற போதைபொருட்களுடன் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்த ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி விக்ரமநாயக்க அவர்களை நேரடியாக சந்தித்த கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் நன்றி தெரிவித்ததோடு, ஏறாவுரின் அனைத்து போதைப் பொருள் பாவனைகளையும் நிறுத்துவதற்கு என்னால் முடிந்த உதவிகளையும் செய்யத் தயார் என்றும் தெரிவித்தார்.
-
‘ஜனாதிபதி அழைத்தால் அரசியலில் ஈடுபடுவேன்’- கோத்தபாய
கொழும்பு: ஜனாதிபதி அழைத்தால் அரசியலில் ஈடுபடுவேன். இல்லையென்றால் நாட்டுக்காக தொடர்ந்தும் ஏனைய வழிகளில் சேவையாற்றுவேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுமதியளித்தால் அரசியலில் ஈடுபடுவேன் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
-
காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான், எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியின் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 25 வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் மனிதாபிமான மற்றும் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் 1990ஆம் ஆண்டு
-
புல்மோட்டை மண்ணின் முதலாவது கலாநிதிக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும்
– பஹ்மியூஸூப் புல்மோட்டை: ஜாமியா நளீமிய்யாவின் முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் கலாநிதி அப்துல் முத்தலிப் முஹம்மது மிஹ்ழார் (நளீமி) அவர்கள் தமது கலாநிதிப் பட்டத்திற்கான கற்கை நெறியை மலேஸியாவின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் மத ஓப்பீட்டாய்வுத் துறையில் நிறைவு செய்துள்ளார்.
-
காஸாவுக்கான பிரமாண்டமான லண்டன் ஆர்ப்பாட்டம்! 24 மணித்தியாலத்திற்குள் 4.5 மில்லியன் பவுண்ஸ் நிதி கோரல்!
– MJ லண்டன்: நேற்று நிறைவடைந்த 72 மணித்தியால இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னர், இன்று அதிகாலையிலிருந்து இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டிக்கும் முகமாக லண்டனில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டமொன்று இரண்டாவது தடவையாக இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
-
பிரட்மேனின் 64 வருட சாதனையை முறியடித்த சங்ககார!
– SHM கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார இரட்டை சதம் அடித்து அசத்திய நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் பிரட்மேன் சாதனையையும் அவர் தகர்த்துள்ளார். ஒரே டெஸ்ட்டில் 190 ஓட்டங்களுக்கும் மேல் ஓட்டங்கள் எடுத்த சாதனையில்தான் பிரட்மேனை முந்தியுள்ளார்.
-
காஸா: 3 பள்ளிவாயல்கள் தகர்ப்பு! 5 பேர் ஷஹீத்
– MJ காஸா: 72 மணிநேர போர் நிறுத்தத்தை அடுத்து, இஸ்ரேல் இன்று அதிகாலை தொடக்கம் காஸா மீது ஆர்டிலரி ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தாக்குதலில் காஸா நகரின் 3 பள்ளிவாயல்கள் தகர்க்கப்பட்டிருப்பதுடன், 5 பேர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்.
-
ஈராக்கின் ‘இஸ்லாமிய கலீஃபத்’ மீது அமெரிக்காவின் திடீர் திருப்பம் ஏன்?
– AF-90 பக்தாத்: ஈராக்கில் இஸிஸ் போராளிகள் மீது திடீரென அமெரிக்கா விமான தாக்குதல் நடத்த முடிவெடுக்கப்பட்டதும், அதன் பின்னணி தகவல்களும் வெளியாகியுள்ளன. ஈராக்கில் இஸிஸ் போராளிகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோது அமைதி காத்த நாடு அமெரிக்கா. ஆனால் இன்றோ நிலைமை மாறியுள்ளது.
-
போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேலின் வான் தாக்குதல் தொடர்கிறது
– MJ காஸா: 72 மணித்தியால இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தின் பின்னர் இன்று சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேல் காஸாவின் 20 இடங்களை இலக்குவைத்து ஆர்டிலரிகளை குண்டுகளை ஏவிவருகிறது. உயிர்ச்சேதங்கள் இதுவரை தெரியவில்லை.