-
கணிதத்தின் உயரிய விருதை முதல் முறையாக வென்ற ஈரானிய பெண்!
நியுயோர்க்: கணிதத்தின் நோபல் விருது என்று வர்ணிக்கப்படும் பீல்ட்ஸ் பதக்கத்தை முதல் முறையாக பெண் ஒருவர் வென்றுள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் ஈரான் நாட்டு கணிதவியலாள ரானா மரியம் மிர்சக்கானி என்பவரே அதனை வென்றுள்ளார்.
-
‘இஸிஸ் அமைப்பால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை’-இந்தியா
– AF-90 டெல்லி: இஸிஸ் அமைப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய நகரங்களில் இஸிஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எந்த உளவு எச்சரிக்கையும் நமக்கு இதுவரை இல்லை.
-
மறைந்த எஸ்.எல்.எம். ஹஸன் அஸ்ஹரி ஒரு பண்முக ஆளுமை உள்ள தலைமை, சிந்தனையாளர். அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் இரங்கல் செய்தி
பழுலுல்லாஹ் பர்ஹான் வாழ்வும் மரணமும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பது நமது ஈமானிய கோட்பாடு. மறைந்த ஹஸன் மௌலவி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஊடாக பல வடிவங்களில் சேவைகளையும், ஆளுமைகளையும், இஸ்லாமிய நற்சிந்தனையும் தந்தான். இன்று அல்லாஹ்வின் நாட்டப்படி நம் மத்தியிலிருந்து ஒரு சிறந்த உலமா, நாவலர், சேவை செம்மல், புரவலர் எனப் போற்றப்படும் சகோதரர் ஹஸன் மௌலவி நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரது மறைவால் புகழ் பூத்த கிண்ணியா மண், வளம்மிக்க கிழக்கு மாகாணம்…
-
படுவான்கரையில் மோதல்: பொலிஸ் ஜீப் எரிப்பு – 11 பேர் காயம்
படுவான்கரை: மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பனையறுப்பான் கிராமத்தில் பொலிஸாருக்கும் கிராம மக்களுக்குமிடையிலான மோதலில் 7 பொலிஸாரும் 4 கிராமவாசிகளுமாக 9 பேர் காயமடைந்து மட்டக்களப்பு மற்றும் மகிழடித்தீவு அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
தோப்பூர் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தது NFGG
PMGG ஊடகப்பிரிவு தோப்பூர்: யுத்த காலத்தில் வீடுகளை இழந்து, நீண்ட காலமாக நஷ்டஈடுகள் எதனையும் பெற்றுக்கொள்ளாது துன்பப்பட்டிருந்த தோப்பூர் பிரதேசமக்களுக்கு NFGG இடைக்கால நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தோப்பூர் பிரதேச மக்கள் NFGGயின் தலைமைத்துவ சபைக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
-
‘நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு என் அம்மாவின் மரணம்தான் காரணம்’ விரிவாக விளக்குகிறார் யுவன்
– AF-90 சென்னை: நான் இஸ்லாத்திற்கு மாறக் காரணமே என் அம்மாதான். தொழுகை நேரங்களில் என் அம்மாவே என்னுடன் இருப்பது போல உணர்கிறேன், என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
-
20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ‘கர்பலா அவனியு’ வீதி- மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஜெய்க்கா வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் முன்மொழியப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கர்பலா அவனியு வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு 12-08-2014 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி நூரானிய்யா ஜூம்மா பள்ளிவாயல் முன்பாக இடம்பெற்றது.
-
புதிய காத்தான்குடி பதுறியா சதுக்கத்திற்கான அடிக்கல் நட்டி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2014 -விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி பதுறியா சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 12-08-2014 நேற்று செவ்வாய்க்கிழமை மாலை புதிய காத்தான்குடி பதுறியா பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.
-
வசதி குறைந்த 300 தமிழ்-முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தால் வசதி குறைந்த குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 300 தமிழ்-முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு 12-08-2014 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
பொத்துவில் உப –வலயக் கல்வி அலுவலகம் திறந்துந்துவைப்பு
– ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத் பொத்துவில்: உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தீர்க்கதரிசனமான அபிவிருத்தி வழிகாட்டலில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூவின மக்களும் வாழ்ந்து வருகின்ற பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான உப –வலயக் கல்வி அலுவலகம் வைபவரீதியாக மிகவும் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது.
-
‘முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதனை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் கொக்கரிக்கின்றார்கள்’
காத்தான்குடி: ‘முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதனை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் கொக்கரிக்கின்றார்கள்’ இவ்வாறு மு.காவின் காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார். ஊவா மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமைப்படுவதற்கான முதல் வித்து விதைக்கப்பட்டுள்ளது. இது இத்தேர்தலின் பின்னர் விடியும் நாளில் முழுநாட்டுக்கும் பறைசாட்டும்.
-
‘இந்திய தேயிலை தூள்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள்’
மும்பை: இந்தியாவில் உற்பத்தியாகும் பெரும்பாலான தேயிலை தூளில் உயிரைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக ‘க்ரீன் பீஸ்’ என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.