கொழும்பு: இலங்கையில் ஹஜ் பெருநாள் எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான விசேட அரசாங்க சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை (6ம் திகதி) அரசாங்கம் மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஹஜ் பெருநாளை ஒக்டோபர் 6ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. முன்னர் ஹஜ் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை என குறிப்பிடப்பட்டிருந்ததால் அன்றைய தினமே அரச விடுமுறையாகக் குறிப்பிடப்பட்டது.
Published by

Leave a comment