தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 11 மாணவிகள் சித்தி

zaviya grade 5 (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: 2014ம் ஆண்டு இடம்பெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 11 மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர் இதில் முதலாவது இடத்தைப்பெற்ற எம்.அம்னா பர்ஹத் எனும் மாணவி 184 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 16வது இடத்தைப் பெற்றுள்ளார்.

இதில் இரண்டாவது இடத்தைப் பெற்ற எம்.எப்.எப்.ஹனா எனும் மாணவி 182 புள்ளிகளைக் பெற்று மாவட்ட மட்டத்தில் 25வது இடத்தைப் பெற்றுள்ளார்.

zaviya grade 5 (2)

இவர்களோடு காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த எம்.எப்.எப்.சஹா 171, எம்.என்.எப்.நஸீஹா 169, எம்.ஜெ.பாத்திமா 168, டி.எப்.ஸஹ்றா 164, எம்.என்.எப்.ஸஹ்லா 164, எம்.ஆர்.எப்.ஹிக்மா 163, ஏ.ஏ.எப்.சபா 163, என்.எப்.நப்றின் 162, எம்.எம்.எப்.சம்லா 160 ஆகியோரோடு அவர்களுக்கு கற்ப்பித்த ஆசிரியை ஜனாபா அயீஷா முஸம்மில் உட்பட காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் ஜனாபா நயீமா அப்துல் ஸலாம் ஆகியோரை படங்களில் காணலாம்.

zaviya grade 5

Published by

Leave a comment