-
‘ஹஜ் வீசா முடிவதற்குள் ஹாஜிகள் வெளியேறவும்’ – சவுதி அரேபியா
– MJ றியாத்: இம்முறை ஹஜ் கடமைக்காக 1.4 மில்லியன் வெளிநாட்டினர் சவுதி அரேபியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றனர். இவர்களுள் அனேகமானவர்கள் ஹஜ் கடமையை முடித்துவிட்டு, உரிய நேரத்தில் தங்களது சொந்த நாடுகளுக்குப் பிரவேசித்துவிடுவர். ஆனாலும் சிலர், வேலைவாய்ப்பைக் கருத்திற்கொண்டு வீசா காலாவதியாகியும் சவுதியில் இருக்க முயற்சிப்பதும் வழமையானவையே.
-
பின்லேடன் உடல் மிதக்காமல் இருக்க 300 இறாத்தல் சங்கிலியை வைத்து கடலில் வீசிய அமெரிக்கா
– AF-90 வாஷிங்டன்: அல் கய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் உடலை ஒரு பையில் போட்டு அதில் 300 இறாத்தல் எடை உள்ள சங்கிலிகளை வைத்து கடலில் வீசியதாக முன்னாள் சி.ஐ.ஏ. தலைவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விசேட தேவையுடையோர் மற்றும் விதவைகளுக்கான OSAவின் உழுஹிய்யா நிகழ்வு
– OSA காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA) கடந்த நான்கு வருடங்களாக வருடந்தோரும் நடாத்தி வருகின்ற உழுஹிய்யா நிகழ்வின் தொடரில் இன்று(7) காலை அமைப்பினது தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் சங்கைக்குரிய உலமாக்கள் மற்றும் பிரமுகர்களின் பங்கு பற்றுதலுடன் மிகவும் சிறப்பான நடைபெற்றது.
-
‘LED’ விளக்கைக் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
– SHM ஸ்டொக்ஹோம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நீல ஒளியை உமிழும் டயோடுகளை (அதாவது லெட் எனப்படும் LED விளக்குகள்) கண்டுபிடித்ததற்காக இந்தாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
பலத்த சண்டையின் பின்னர் சிரியா-துருக்கியின் முக்கிய போடரைக் கைப்பற்றியது இஸிஸ்
– MJ கோபேன்: சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலே அமைந்துள்ள கோபேன் எனும் முக்கிய இடத்தை இஸிஸ் அமைப்பினர் தற்பொழுது கைப்பற்றியுள்ளனர். இச்சண்டையின் பின்னர் அங்குள்ள 3 மாவட்டங்களையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
-
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் மனிதவள நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரத்த தானம் நிகழ்வு
புத்தளம்: ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் மனிதவள நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரத்த தானம் நிகழ்வு நேற்று (2014.10.07) செவ்வாய்க்கிழமை புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்ற போது இரத்த தானம் செய்பவர்களையும், வைத்தியர்கள் பரிசோதிப்பதையும், படங்களில் காணலாம்.
-
கிழக்கு மண்ணின் எமது ஊடக உறவுகளை காத்த மண்ணில் ஒன்றாக காணக்கிடைப்பது பெரும் பாக்கியமே….
-டீன்- பைரூஸ்- காத்தான்குடி; புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெறவுள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல்களுக்கான சகல ஏற்பாடுகள் யாவும் அல்லாஹ்வின் உதவியோடு புர்த்தி செய்யப்பட்டுள்ளதாக போரத்தின் தலைவா் சமூக சேவையாளர் கௌரவ அல்ஹாஜ் மௌலவி SMM முஸ்தபா(பலாஹி) JP தெரிவித்தார்.
-
சிறுவர்களுக்கான ஹஜ் பெருநாள் பஸார் கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக்கினால் திறந்து வைக்கப்பட்டது
-டீன்பைரூஸ்- காத்தான்ககுடி: காத்தான்குடி வரலாற்றில் மிக நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் சிறுவர்களுக்கான பெருநாள் பஸார் நிகழ்வு இம்முறை காத்தான்குடி நகர சபையின் அனுசரணையுடன் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை)மைதானத்தினில் நடைபெறுகிள்றது. ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிபிலி பாறுாக் Eng ,காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் SHMஅஸ்பர் JP , கௌரவ முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் KLM பரீட் JPஆகியோர் கலந்து கொண்டனர்.
-
உ/த. பரீட்சையில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அரசு தீர்மானம்
கொழும்பு: க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக வேண்டியே ஆசிரிய உதவியாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.
-
காத்தான்குடிக்கு ஏன் இதுவரைக்கும் ஓர் தீயணைப்பு வாகனம் கிடைக்கப்பெறவில்லை? தவிசாளர் அஸ்பரிடம் கேள்வி
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: சுமார் 15 ஆயிரம் குடும்பம் மற்றும் 60,000 சனத்தொகையினைத் தொடும் காத்தான்குடி பிரதேசத்திற்கு எப்போது தீயணைப்பு வாகனம் கிடைக்கப்போகிறது என இப்பகுதியில் வாழும் பலர் அங்கலாய்க்கின்றனர். அண்மையில் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட இத்தீயணைப்பு வாகனம் ஏன் காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்படவில்லை?
-
இளம் குர்திஷ் பெண் போராளியின் தற்கொலைத் தாக்குதலில் 33 இஸிஸ் படையினர் பலி!
– AF – 90 டமஸ்கஸ்: ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக குர்திஷ் பெண் போராளி ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 33 ஐ.எஸ். போராளிகள் பலியாகியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ள இஸிஸ், தனி இஸ்லாமிய தேசத்தை பிரகாடனம் செய்து தொடர்ந்து அட்டூழியங்களை நிகழ்த்தி வருகிறது.
-
ஆசிய விளையாட்டு போட்டி முடிந்ததும் மாயமான 4 இலங்கை ஹொக்கி வீரர்கள்!
– MJ இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த உடனேயே 4 இலங்கை ஹொக்கி வீரர்கள் தலைமறைவாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தென்கொரியாவின் இன்சியானில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.