-டீன்பைரூஸ்-
காத்தான்ககுடி: காத்தான்குடி வரலாற்றில் மிக நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வரும் சிறுவர்களுக்கான பெருநாள் பஸார் நிகழ்வு இம்முறை காத்தான்குடி நகர சபையின் அனுசரணையுடன் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை)மைதானத்தினில் நடைபெறுகிள்றது. ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிபிலி பாறுாக் Eng ,காத்தான்குடி நகர முதல்வர் அல்ஹாஜ் SHMஅஸ்பர் JP , கௌரவ முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் KLM பரீட் JPஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய காத்தான்குடி அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,காத்தான்குடி நகர சபையின் உறுப்பினருமான கௌரவ அல்ஹாஜ் HMM பாக்கீர் BA/JP தலைமையில் இடம் பெறும் நிகழ்வுகள் மூன்று தினங்களுக்கு தொடராக இடம்பெறவுள்ளது.
இம்முறை இடம் பெறுகின்ற பெருநாள் பஸார் நிகழ்வுகள் யாவும் புதிய காத்தான்குடி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் நடை பெற்று வருகின்றது.
Published by









Leave a comment