-
செட்டிப்பாளையம் கடற்கரையில் கரையொதுங்கிய 50 அடி நீளமான திமிங்கிலம்!
களுவாஞ்சிகுடி: மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (16) மாலை பாரியதொரு மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ச் தெரிவித்தார்.
-
ஜனாதிபதித் தேர்தலும் முஸ்லிம் அரசியலும்
– ILM. றிபாஸ் ஜனாதிபதித் தேர்தல் வருமா வராதா என பல வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. ‘வரும் ஆனா வராது’ போன்ற நையாண்டிகளும் உலவுகின்றன. ஊவாமாகான சபைத் தேர்தல் முடிவுகள் எதிர்கட்சிகளுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது அதன் பெறுபேறாக அரசைவிட முழுவீச்சில் எதிர்கட்சிகள் தேர்தல் ஒன்றிக்கு தயாராகும் முஸ்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கு மருத்துவ முகாம்
– ஸகாப் சஜாத் கல்முனை: கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு மிக விமரிசையாக நேற்று கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கு மருத்துவ உடற் பரிசோதனை (Health Checkup) முகாம் ஒன்று நடைபெற்றது.
-
‘கல்வி அமைச்சின் 2008/45 சுற்றறிக்கையின் நன்மைகள் அனைத்தையும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் சகலருக்கும் முழுமையாக வழங்கக் வேண்டும்’
– இர்ஷாட் ரஹ்மதுல்லா சம்மாந்துறை: கல்வி அமைச்சின் 2008/45 சுற்றறிக்கையின் நன்மைகள் முழுவதையும் பலருக்கு வழங்கியுள்ள சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், சிலருக்கு அதனை முழு மையாக வழங்க மறுத்து வருகின்றது. அதனால் அவர்கள் தொடர் நன்மைகள் பலவற்றை இழக்கும் பரிதாக நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
-
2020இல் ஒரு இலட்சம் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க திட்டம்
கொழும்பு: 2020 ஆம் ஆண்டிற்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதியாகும் மாணவர் தொகையை ஒரு இலட்சமாக அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் அதற்கான செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்தார்.
-
சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும் ஆண்டுப் பொதுக்கூட்டமும் இன்றாகும்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும், ஆண்டுப் பொதுக்கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.
-
றியாத் அமெரிக்க உத்தியோகத்தர் மீதான தாக்குதல்: கொலையாளியின் விபரம்
– MJ றியாத்: கடந்த செவ்வாய்க்கிழமை றியாத்தில் இடம்பெற்ற இரு அமெரிக்க பிரஜைகள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நபரை றியாத் பொலிஸார் ஸ்தலத்தில் கைது செய்தனர். அப்துல் அஸீஸ் அல் ரஷீட் எனும் 24 வயதுடைய சவுதிப் பிரஜையான இவர், அமெரிக்காவில் பிறந்தவர் எனவும், பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் எனவும் சவுதி உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
-
கல்முனையில் உலக உளநல தின நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் கல்முனை: உலக உளநல தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உடல் நலப்பிரிவின் ஏற்பாட்டில் உலக உளநல தின நிகழ்வுகள் பணிமனையின் கூட்ட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
-
யு.ஏ.இ யில் எபோலா எச்சரிக்கை!
– MJ டுபாய்: மொரக்கோ ஊடாக பயணித்து, டுபாய் விமான நிலையம் வந்து சேர்ந்த ஆபிரிக்க நாடான லைப்ரீயா பயணி ஒருவருக்கு எபோலா இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சுகாதார சோதணைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு வயிற்றுப்போக்கு தீவிரமாக இருந்த போதிலும், உடல் வெப்ப நிலை சராசரியாகவே இருந்தது.
-
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உதவி கோரல்
திருகோணமலை: திருகோணமலை, கடல்முக வீதி, இல 06 என்ற முகவரியைச் சேர்ந்த வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த செல்வி கதிரேசன் ஞானமலர் (வயது 45) அவர்களின் இரு சிறுநீரகமும் பாதிப்படைந்துள்ள நிலையில் Dr. A.W.M.Wazil (MBBS, (S.L) MD (Col) MRCP (UK) சிகிச்சை பெற்றுவருகின்றார்.