-
OSA மதிப்பீட்டுக் குழுவின் துல்லியமான கணிப்பீட்டின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட புதிய காத்தான்குடி கரையோரப் பிரதேச மக்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கள்
– OSA புதிய காத்தான்குடி: தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரடியாக விஜயம் செய்த காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் (OSA) மதிப்பீட்டுக்குழுவின் துல்லியமான கணிப்பீட்டின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட புதிய காத்தான்குடி கரையோரப் பிரதேச மக்களுக்கான உலருணவுப் பொதிகள் நேற்று (28.12.2014) மு.ப. 11.00 மணியளவில் அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
-
அல் மனார் நிறுவனத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் இரண்டாம் கட்ட பணிகள்
– அல்- மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: அல் மனார் நிறுவனம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் இரண்டாம் கட்ட பணிகள் நேற்று (28.12.2014) இடம்பெற்றதாக சமூக சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியினது பணிப்புரைக்கமைய புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் சுற்றுப்பறங்கள் மற்றும் பரீட் நகரங்களைச் சேர்ந்த
-
களைகட்டப் போகும் கிழக்கு அரசியலும் மீண்டும் கனவாகப் போன முஸ்லிம் காங்கிரஸின் கணக்குகளும்!
இனியவன் லாகிர் நப்ரிஸ் நீண்ட கால அமைதிக்கு பின், அரசுடனும் எதிர் கட்சி உடனும் இருபதுக்கு மேற்பட்ட பல சுற்று பேச்சுக்களின் பின் இன்று காலை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வாய் திறந்தது. பொதுவேட்பாளர் மைத்திரிக்கு தனது கட்சி இன் முழு ஆதரவு என்று தெரிவித்தார்.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு றிசாத் பதியுதீன் பாராட்டு
இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் இன்று அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்கும், நாட்டின் நல்லாட்சிக்குமாக எடுத்திருக்கும் முடிவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வரவேற்றுள்ளதுடன், தமது பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.
-
காத்தான்குடி சமூக, பொருளாதார, கல்வி அபிவிருத்தி அமைப்பின் (SEEDO) வெள்ள அனர்த்த பணிகள்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடைமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளில் அவ்வமைப்பின் தலைவர் ஜனாப் ஏ. பி. எம். ஜௌபர் ஜே. பி தலைமையில் அதன் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
-
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்
பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஐயன்கேணி தமிழ் பிரிவு, ஐயன்கேணி முஸ்லிம் பிரிவு, அப்துல் மஜீத் மாவத்தை, ஹிஜ்ரா நகர் உள்ளிட்ட பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் – முஸ்லிம் மக்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 28-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை ஐயன்கேணி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் வைத்து பார்வையிட்டார்.
-
தற்காலிக முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டு உலர் உணவுப் பொதிகளை வழக்கி வைத்தார்
பழுலுல்லாஹ் பர்ஹான் கிரான்குளம்: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இரண்டு தற்காலிக முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 28-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
-
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமைகளை நேரில் பார்வையிட்டார் வ.மா.சபை உறுப்பினர் அஸ்மின்
NFGG ஊடகப்பிரிவு மன்னார்: நாட்டின் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பிரதேசங்களிலும் வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்க இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
-
உணர்ச்சி அரசியல் ஒரு போதும் உதவாது! சமூகங்களிடையே பகமையை ஏற்படுத்த நினைக்கும் தலைமைகளின் பின்னால் முஸ்லிம்கள் அணி திரளக் கூடாது
அப்துல் காதர் மசூர் மௌலானா கொழும்பு: இன்றைய நாட்களில் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் எனச் சொல்லப்படுகின்றவர்கள் எதிரணியின் பக்கம் தாவுவது எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கும் முழு சமூகத்திற்கும் எந்த வித நன்மையை ஏற்படுத்தி விடப் போவதில்லை. மாறாக, முஸ்லிம்களை எதிர்காலத்தில் துரோகிகளாகவும், நாட்டு பற்றற்றவர்களாகவும், வாக்கு மாறுகின்றவர்களாகவும் மாற்று சமூகத்தினர் மென்மேலும் நினைக்கவே இந்த தலைவர்களின் தாவல்கள் வழிகோலும் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்தாகும்.
-
முஸ்லீம் காங்கிரஸ் மக்களுடன் மக்களுக்காகவே முடிவுகளை எடுக்கும் – ஹரீஸ் எம்.பி
ஹாசிப் யாஸீன் கொழும்பு: கட்சியின் பல மட்டங்களுடனும் நடாத்தப்பட்ட நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் மக்களிளுடைய அபிலாஷைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தோ்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கான தீர்மானத்திற்கு வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
-
பழமொழி இன்னும் பழுதாகவில்லை
அபூ அஸ்ஜத் கொழும்பு: அரசியலில் நீண்டகால நண்பனும் இல்லை, துரோகியுமில்லை என்ற பழமொழி இன்னும் பழுதாகவில்லை. குறிப்பாக தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் பெரும்பான்மை அரசியல் தலைமைகள் சிறுபான்மை அரசியல் கட்சிகளை சிறை பிடிப்பது அன்று தொட்டு இன்றுவரை இருந்தாலும், இன்றைய அரசியலில் அவைகள் செல்லாக்காசாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.