-
மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொள்வதற்கு சல்மான் கானுக்கு 200 கோடி அன்பளிப்பு
சமீரா ரெட்டியையும அழைத்துவர முயற்சி!! கொழும்பு: ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பொலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இருநூறு கோடி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை கொழும்பை வந்தடைந்த சல்மான் கான் , கொழும்பு பொரளையில் நடைபெற்ற ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
-
பொதுவேட்பாளர் மைத்திரியுடன் மேலும் ஐந்து ஆளும் கட்சி பிரதேச தலைவர்கள் இணைவு
தம்புள்ளை: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் மேலும் 5 ஆளும் கட்சியின் பிரதேச தலைவர்கள் இணைந்து கொண்டனர். தம்புள்ளை மாநகர சபையின் பிரதி மேயர் குசும்சிறி ஆரியதிலக்க மற்றும் மாநகர சபை உறுப்பினர் எச்.எம். ரூபசிங்க ஆகியோர் நேற்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியில் இணைந்து கொண்டனர்.
-
காத்தான்குடி மாணவன் அர்ஷாட் ஸஜா கணிதப் பிரிவில் 3 ‘ஏ’ பெறுபேறுகள் பெற்று மாவட்டத்தில் முதலாவது இடம்!
– நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் கையூம் அர்ஷாட் ஸஜா எனும் மாணவன் கடந்த 2014, க.பொ.த. (உ/த) பரீட்சையில், கணிதப் பிரிவில் 3 பாடங்களிலும் 3 ‘ஏ’ பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்திருப்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாவது இடத்தையும் பெற்றிருக்கின்றார்.
-
மஹிந்தவின் ஏழு ஆடம்பர மாளிகைகளையும் பொதுமக்கள் பார்வைக்கு காட்டுவேன் – ஏறாவூரில் மைத்திரி
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: திங்கட்கிழமை (29) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கு விஜயம் செய்த பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, கிழக்குமாகாணசபை பிரதித் தவிசாளரான எம்.எஸ். சுபைர் அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றினார்.
-
சமய வித்தியாசங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வானொலி நாடக திட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் ”எனக்கு இயல்பிலேயே முஸ்லிம்களைப் பிடிக்காது. நான் வாழ்ந்த சமூகத்திலிருந்து முஸ்லிம் சமூகம் தொடர்பாக நான் அறிந்தவைஇ கேட்டவை மற்றும் பார்த்தவை யாவும் முஸ்லிம்கள் மீது எனது அபிமானத்தை அதிகம் குறைத்திருந்தன. எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும் முஸ்லிம்கள் பற்றிய எனது அதிருப்தியையும் வெறுப்பையும் நான் வெளியிடத் தயங்குவதில்லை.
-
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் இருக்கும் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையிலுள்ள தற்காலிக முகாமில் இருக்கும் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 28-12-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை மீரா பாலிகா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
-
முஸ்லிம் காங்கிரஸின் மைத்திரி ஆதரவும் பெரும்பான்மை அரசியல் உணர்வலையும்
I.L.M. றிபாஸ் கொழும்பு: அரசியல் களம் தினம் தோறும் ஆச்சர்யங்களாலும் அதிர்ச்சியாலும் நிரம்பி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இலங்கை தேசத்திற்கான ஒரு ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் முஸ்லிம் அரசியல்தான் மிகவும் பிரபல்யமான பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதற்குக் காரணம் முஸ்லிம் அரசியலின் பல கூறுகள் கட்டம் கட்டமாக அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபட்டு தலைப்புச் செய்திகளாக அதிர்ச்சியூட்டிக் கொண்டிருப்பதாகும்.
-
இன்று மாத்திரம் எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சார 3 அலுவலகங்கள் மீது தாக்குதல்
கொழும்பு: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் மூன்று தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் திங்களன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மஹியங்கனைய, தெனியாய மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார் காரியாலயங்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் மூன்றாம் கட்ட பணிகள்
– அல் – மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அதன் அன்டிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் மூன்றாம் கட்ட பணிகள் நேற்று (29.12.2014) இடம்பெற்றது. அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியினது பணிப்புரைக்கமைய ஆயிரம் குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அல் மனார் சமூக சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.
-
ஆட்சி மாற்றத்திற்கான பொது எதிரணியில் முஸ்லிம்கள் சார்பாக முதலாவது இணைந்து கொண்டது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே: காத்தான்குடியில் ராஜித
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி தேர்தல் காரியாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கைகளின் கிழக்கு மாகாண விஜயத்தின் ஒரு கட்டமாகவே அவரின் இந்த விஜயம் இடம்பெற்றது.
-
ராஜபக்ஷ அரசுக்கு சரியானதொரு பாடம் புகட்டியுள்ளார் நண்பர் அமீர் அலி: ஓட்டமாவடியில் மைத்திரி
எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து ஓட்டமாவடியில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (29) திங்கட் கிழமை இடம் பெற்றது.
-
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் விடுமுறை ஜனவரி மாதம் 11 வரை நீடிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: ஏதிர்வரும் 2015 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் இறுதித் தவணை விடுமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி டப்ளியு. தீனுல் ஹசன் (பஹ்ஜி) தெரிவித்தார்.