-
மட்டக்களப்பு உறுகாமம் புதூர் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் உறுகாமம்: ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் புதூர் பிரதேசத்தில் 30-12-2014 நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
-
மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து புத்தளத்தில் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து புத்தளம் போல்ஸ் வீதி, மஸ்ஜிதுல் ஹூதா பள்ளி மைதானத்தில் இன்று மாலை இடம் பெறவுள்ள மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொது அணியின் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
-
“மனசாட்சியின் விருப்பில் வாக்களிக்க சொன்ன மு.கா. மைத்திரிக்கு மாறியது ஏன்?”
கொழும்பு: தொடங்கிய போது இருந்த நிலைமை இப் போது இல்லை. நிலைமைகள் மாறிக்கொண்டு வருகின்றன. எதிரணி வேட்பாளர் அமோகமாக வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போது ஆட்டங்காணத் தொடங்கியுள்ளது. எப்படியாவது மஹிந்தவே வெல்லுவார் என்ற எண்ணம் இப்போது வேறு வடிவெடுக்கத் தொடங்கியிருக்கிறது. நீதியான ஒரு தேர்தலிலும் வாக்குகளின் எண்ணிக்கையில் மஹிந்த வெல்வது உறுதியாகிக் கொண்டு வருகிறது.
-
மங்களகம மங்களராம மஹா வித்தியாயலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை காரியாலயத்துடன் கூடிய வகுப்பறைக்கட்டிடம் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் செங்கலடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மங்களகம பிரதேசத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவி தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 30-12-2014 நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தார்.
-
தேர்தல் தினத்தன்று பொலனறுவையில் குண்டர்களை களமிறக்கும் மஹிந்த அணி
கொழும்பு: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குகளை கொள்ளையடித்து, பொலனறுவையில் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் வழிநடாத்தலுடன், இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
-
“தேர்தலின் போது முறைகேடு செய்தால் வாக்குப் பதிவு ரத்து”: மகிந்த தேசப்ரிய
கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது வாக்கெடுப்பு நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால் அங்கு வாக்குப்பதிவு ரத்துச் செய்யப்பட்டு மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமென்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்தார்.செவ்வாய்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
வவுனியாவில் மைத்திரி: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹமத்துல்லா வவுனியா: எதிர்வரும் 9 ஆம் திதகி மலரப்போகும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியில் இந்த நாட்டு மக்கள் அளப்றிய நன்மைகளை அடையவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலஙகை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் இந்த நாட்டில் நல்லாட்சியினை தோற்றுவிக்கும் வேலைத்திட்டத்திற்காக நிபந்தனைகளற்ற ஆதரவினை அவருக்கு எமது கட்சி வழங்க முன்வந்ததாகவும் கூறினார்.
-
மைத்திரிபால சிறிசேன மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இன்று மன்னாருக்கு வருகைத்தந்த எதிர்கட்சிகளி்ன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களை அவரு இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடுவதையும், இந்த சந்திப்பி்ல் கலந்து கொண்ட முன்னால் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருான றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற ரவி கருநாயக்க ஆகியோரையும் படங்களில் காணலாம்.
-
பிரதேச கலாசார விழாவும் மருதோன்றி நூல்வெளியீட்டு நிகழ்வும்
KCDA கோறளைப்பற்று: கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் நடாத்தும் பிரதேச கலாசார விழாவும், மருதோன்றி நூல்வெளியீட்டு நிகழ்வும் இன்ஷாஅல்லாஹ் 2014.12.30 ஆந்திதகி புதன்கிழமை (நாளை) பி.ப. 3.00 மணிக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற இருப்பதால் அனைவரையும் கலந்து சிறப்பிக்கமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-
‘மஹிந்தவை அகற்றி விட்டு மைத்திரியை ஆட்சியில் அமர்த்துவது எமது நோக்கமல்ல’ – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘மஹிந்தவை அகற்றி விட்டு மைத்திரியை ஆட்சியில் அமர்த்துவது இங்கு எமது நோக்கமல்ல. ஒரு ஆட்சிமாற்றத்தின் மூலம் சிறந்த ஆட்சிமுறை மாற்றத்தை ஏற்படுத்துவதும் அதன் மூலம் அனைத்து மக்களும் இந்நாட்டில் சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழுவதற்கான சூழலை எற்படுத்துவதுமே எமது நோக்கமாகும்.’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
அமைச்சர் சுசில்பிரேம் ஜெயந்த காத்தான்குடிக்கு விஜயம்: பதுரியா கோட்டையிலும் கட்சி் காரியாலயம் திறப்பு
காத்தான்குடி: எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல்விடயங்களை கண்கானிக்கவென பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் விசேட அழைப்பினில் அமைச்சர் சுசில்பிரேம் ஜெயந்த இன்று மாலை காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார்.