காத்தான்குடி: எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல்விடயங்களை கண்கானிக்கவென பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் விசேட அழைப்பினில் அமைச்சர் சுசில்பிரேம் ஜெயந்த இன்று மாலை காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார்.
காத்தான்குடி 05 பதுரியா ஜூம்ஆ பள்ளி சதுக்கத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தேர்தல் காரியாலயம் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் மெளலவி அல்ஹாஜ் ஏ.ஜே. அப்துர் ரஊப் (மிஸ்பாஹி), முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பனர் சந்திரகாந்தன், ஏறாவுர் நகர பிதா அலிஸாஹர் மெளலானா, காத்தான்குடி பிரதி நகர முதல்வர் எம்.ஜெசீம், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட் உட்பட உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







Leave a comment