-
இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்
கொழும்பு: தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடைமுறையை உடனடியாக மீண்டும் அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கடந்த (டிசம்பர் மாதம்) 29 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) மேலதிக செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்ன
-
“முஸ்லிம் விரோதிகளின் கூடாரமே மைத்திரி அணி”: அஸ்வர்
கொழும்பு: முஸ்லிம் விரோதிகளான அத்துரலிய தேரர், சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேக்கா, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து அரசியல் செய்ய ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீனுக்கு எவ்வாறு மனம் வந்ததென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
“முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிப்பதற்கு எவராலும் முடியாது”
கொழும்பு: முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து பிரிப்பதற்கு எவராலும் முடியாது. அவ்வாறு பிரிப்பதற்கு சிலர் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே தோல்விகளையே கண்டுள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். வரலாற்றில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வந்தன. இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போதும் இந்த முயற்சிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
-
ஆளும் கூட்டணியிலிருந்து கட்சிதாவிய முஸ்லிம் அமைச்சர்கள் தெளிவுபடுத்துவார்களா..?
– அபூ ஸைனப் கொழும்பு: ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 நாள் தேர்தல் விஞ்ஞாபனம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விஞ்ஞாபனத்தில் 100 நாட்கள் செயற்பாடுகளில் 87வது நாளில் மிருக வதைக்கு எதிரான சட்டம் இலங்கையில் அமல்படுத்தப்படும் என்பதாகவும், இதன் பிரகாரம் ஆடு, மாடு போன்ற மிருகங்களை அறுப்பதற்கு தடை விதிக்கும் சட்டம் அமல் படுத்தப்படும் என்பதாகவும் ஆளும் தரப்பினரால் குறித்த மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆதாரம் காட்டி முஸ்லிம் மக்களை நோக்கி பிரச்சாரம்…
-
சவுதி மன்னர் அப்துல்லாஹ் மருத்துவமனையில் அனுமதி
றியாத்: சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ், பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் அவரது உடல்நிலை குறித்த எந்தத் தகவலையும் மன்னரின் மாளிகை வெளியிடவில்லை. ‘மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று அரச தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை அடுத்து, அங்குள்ள பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
-
மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்: ஒலிவடிவம்
– ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதேசத்தில் 31-12-2014 நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தொடர்பில் முதற்தடவையாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய முழுமையான உரை இங்கு பதிவேற்றப்படுகிறது.
-
‘மக்களின் அரசியல் விழிப்புணர்வே நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதற்கானஅத்திவாரமாகும்’- அக்குறனைக் கூட்டத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு அக்குறனை: ‘இன்று அரசியலில் அதிகம் பேசப்படுகின்ற ஒன்றாக நல்லாட்சி என்கின்ற பதம் மாறியிருக்கிறது. ஆனால், மக்களின் அறிவுபூர்வமான அரசியல் விழிப்புணர்வே நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அத்திவாரமாகும்’ என அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
குளியாப்பிட்டியில் மைத்திரி: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா குளியாப்பிட்டி: பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டுள்ள மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் குளியாப்பிட்டியில் சற்று முன்னர் நிறைவுற்றது.
-
புத்தளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மைத்திரியின் பிரச்சாரக் கூட்டம்
புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியின் பங்காளிகளாக புத்தளம் தொகுதி மக்களையும் இணைத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு வந்திருந்ததை காணமுடிந்தது.
-
காத்தான்குடி பிரதேசத்தில் 7 பாடசாலைகளில் 5228 மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முதற்கட்டமாக 7 பாடசாலைகளில் 5228 மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 31-12-2014 புதன்கிழமை 7 பாடசாலைகளில் இடம்பெற்றது.