-
சாய்ந்தமருதில் செக்றோ ஸ்ரீலங்காவின் தலைமைத்துவ பயிற்சி வகுப்பு
ஸாஹிர் கரீம் சாய்ந்தமருது: செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை நடாத்தியது. இதில் செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா விரிவுரை நடாத்தினார்.
-
மாற்று மருத்துவ ஆரோக்கிய வழிமுறை எனும் தொனிப்பொருளில் ஹோமியோபதி இலவச மருத்துவ சிகிச்சை முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாற்று மருத்துவ ஆரோக்கிய வழிமுறை எனும் தொனிப்பொருளில் ஹோமியோபதி இலவச மருத்துவ சிகிச்சை முகாமொன்றும் 24-01-2015 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
-
இரத்ததானம் மற்றும் இரத்தம் பாய்சுதல் ஓர் இஸ்லாமிய பார்வை
– Dr. A. L. A. அஹ்மட் ஷியாம் (MBBS) இஸ்லாம் மனித உயிர் பாதுகாக்கப்படுவதை விரும்புகிறது. மனிதனது மனவேதனை, தாங்க முடியாத துன்பநிலை என்பவற்றுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிசெய்கிறது. மேலும் மனிதனது அமைதி, பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படுவதை வழியுருத்துகிறது.
-
இரத்ததான நிகழ்வு
அன்புப் பொதுமக்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி: எமது MSW நிறுவனத்த்தினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று எதிர்வரும் 01.02.2015 அதாவது நாளை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி மெத்தைபள்ளி வித்தியாலயத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
-
ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டினுடைய இஸ்லாமிய அறிஞர்கள் குழு காத்தான்குடிக்கு விஜயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டினுடைய இஸ்லாமிய அறிஞர்கள் குழு காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளனர்.
-
நேற்று மாலை சாய்ந்தமருதில் “நல்லாட்சி முன்னணி” சந்திப்பில் குளறுபடி செய்தவர்கள் கைசேதப்படுவார்கள்!
– மஸிஹுத்தீன் இனமுல்லாஹ் சாய்ந்தமருது: நல்லாட்சி விழுமியங்களை ஜனாநயக அரசியல் கட்டமைப்புக்குள் உள்வாங்கச் செய்து தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலோடு முஸ்லிம் அரசியலை முரண்பட்டுக் கொள்ளாது நகர்த்துகின்ற வேலைத்திட்டத்தினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாரிய அர்ப்பணிப்புக்களோடு முன்னெடுத்துச் செல்கின்றது.
-
காத்தான்குடி (SEEDO) சமூக கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (SEEDO) ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.பீ.எம். ஜௌபர் தலைமையில் அண்மையில் புதிய காத்தான்குடி பகுதியில் சிரமதானப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
-
தரம் 1இல் பிள்ளைகளைச் சேர்க்கும் போது அநீதியான முறையில் பணம் வசூலிப்பா?
1988 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழையுங்கள் கொழும்பு: பெற்றார்களிடம் அநீதியான முறையில் பணம் வசூலிக்கும் அதிபர்கள் குறித்து மாகாண சபைகளிடமோ அல்லது கல்வி அமைச்சின் 1988 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தகவல் வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
-
“தமிழ் – முஸ்லிம் தரப்பு இணைந்தே கிழக்கில் ஆட்சி அமைக்க வேண்டும்”
கொழும்பு: கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முஸ்லிம்களோ, முஸ்லிம்களைத் தமிழர்களோ விட்டுவிட்டு நிர்வாகத்தை அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். இனியும் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் புறக்கணித்துவிட்டு ஆட்சி அமைப்பது ஆரோக்கியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
-
கோட்டாவின் 8 பில்லியன் வங்கிக் கணக்கு: விசாரணை தொடர்கிறது
கொழும்பு: அரச பொது நிதிக்குச் சேரவேண்டிய சுமார் 8 பில்லியன் பணத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது சொந்தப் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வைத்திருந்த விவகாரம் குறித்து விசாரணைகள் நடந்துவருகின்றன. புதிய இராணுவத் தலைமையகத்தை அமைப்பதற்காக இந்தப் பணத்தை தனது பெயரில் உள்ள கணக்கில் வைத்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார்.
-
அதிபர்களுக்கான இராணுவ பயிற்சியை நிறுத்த முடிவு
கொழும்பு: பாடசாலை அதிபர்களுக்கு (தலைமை ஆசிரியர்கள்) இராணுவ முகாம்களில் வழங்கப்பட்டுவரும் தலைமைத்துவ பயிற்சியை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தின் பிரகாரம் ஏற்கனவே பயிற்சியை முடித்துக் கொண்ட அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ தரத்திலான கேர்ணல் மற்றும் கெப்டன் படிநிலைகளும் இரத்து செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
உறுதி பதிவு முறையில் உள்ள குறைபாடுகளே காணிப்பிரச்சினைக்குக் காரணம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
ஏறாவூர்: காணி வளம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட முக்கியம் வாய்ந்த வளமாக கருதப்படுகிறது. இவ் வளமானது சனத்தொகை அதிகரிப்பது போல பெருக முடியாத வளமாக உள்ளதால் இதனைப் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.