காத்தான்குடி: காத்தான்குடி சமூக கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (SEEDO) ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.பீ.எம். ஜௌபர் தலைமையில் அண்மையில் புதிய காத்தான்குடி பகுதியில் சிரமதானப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் அதன் அங்கத்தவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக இப்பகுதிகளை சிரமதானம் மூலம் துப்பரவு செய்ய வேண்டிய நிலையில் இப்பணி இந் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது என பல பொது மக்களும் இம்முயற்சிக்கு நன்றி தெரிவித்தனர்.
Published by



Leave a comment