Category: Your Kattankudy
-
முதியோர் தினத்தை முன்னிட்டு விசேட தேவையுடையோருக்கான முச்சக்கர சைக்கிள் கையளிப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு விசேட தேவையுடைய முதியோருக்கு அவர்களது மேம்பாட்டுக்காக பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வையினால் சுயதொழில் முயற்சிக்காக முதியோருக்கு முற்சக்கர சைக்கிள் கையளித்து வைக்கப்பட்டது.
-
காத்தான்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி பிரிவின் ஏற்பாட்டில் அஸ் ஸஹ்றா பாலர்பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலத்தின் போது பெறப்பட்ட படங்களை காணலாம்.
-
அமெரிக்கா பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
கொழும்பு: பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் (Green Card Lottery) என்று அழைக்கப்படும் 2015 அதிஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித்திட்டம், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.
-
விலங்கினங்களில் கண்டறியப்படாத பல இலட்சம் கிருமி வகைகள்
விலங்கினங்களிடம் நாம் இதுவரை கண்டறியாத இலட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நோய்க் கிருமிகள் இருக்கக் கூடிய வெளவால் இனத்தை அமெரிக்க மற்றும் பங்காளாதேஷ் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
-
புலமைப்பரிசில் பெறுபேறு இன்று இணையத்தில் வெளியாகும்
கொழும்பு: இவ்வருடம் முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் உலக சிறுவர் தினத்தன்று வெளியிட்டு வைக்கப்படுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும்.
-
நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி அதிபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு: சென். மேரிஸ் கல்லூரி அதிபர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்டெடு க்கப்பட்டுள்ளார். கல்லூரி வளாகத்தில் நேற்றுக் காலை 7.30 – 7.50 மணிக்கு இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிபரின் காரியாலயத்திற்கு அருகிலுள்ள குளியலறை யிலிருந்து இவர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
-
காரோட்டினால் கருப்பை பாதிப்பு: சவுதியில் எச்சரிக்கை
ரியாத்: கார் ஓட்டும் பெண்களுக்கு கருப்பை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று சவுதி அரேபிய மதகுரு ஒருவர் எச்சரித்துள்ளார். சவுதிப் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கக் கோரும் புதிய பிரச்சார இயக்கம் ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே, மதகுரு ஷேக் சாலேஹ் அல் லொகால்டன் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
-
மிஸ்வாக் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – (தொடர் 3)
– அகமட் ஆஸிர் Arak எனப்படும் மரக்குச்சியைக் கொண்டு பல்துலக்கும் முறை இற்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடைமுறையில் இருந்ததாகச்சான்றுகள் உள்ளன. பல்வைத்தியத் துறைவரலாற்றில், இஸ்லாமியப் பல்வைத்தியத்துறை என்ற தலைப்பின்கீழ், மத்திய கிழக்குநாடுகளைச் சேர்ந்தமுஸ்லிம்கள்ப ல்துலக்குவதற்காக மரக்குச்சிகளையும்
-
PMGG யின் தொடரும் அரசியல் தளம்பல்கள்..
– அவதானி காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இறுதியாக கடந்த வாரம் இடம்பெற்ற வட மாகாணசபையில் தனது கட்சி சார்பாக ஒருவரை நியமித்து தமிழரசுக் கட்சியுடன் கூட்டமைத்து போட்டியிட்டிருந்தது. எனினும் எதிர்பாராத தோல்வியைத் தழுவியுள்ள தமது பிரதிநிதிக்கு எப்படியாவது போனஸ் ஆசனத்தில் வட மாகாண சபைக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுக்க அதிக பிரயத்தனங்கள் எடுத்த போதிலும்,
-
வெளிநாட்டு தூதரகங்களை உளவு பார்த்த சமந்தா
நைரோபி: கென்யாவில் நடந்த தாக்குதலில் பிண்ணனியாக இருக்கக்கூடும் என கருதப்பட்ட வயிட் விடோ சமந்தா தென் ஆப்ரிக்க தலைநகரில் வெளிநாட்டு தூதரகங்களை நோட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது. கென்யாவின் நைரோபியில் உள்ள மாலில் அல் ஷபாப் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 67 பேர் பலியாயினர்.
-
ஈ.பி.டி.பிக்கு அரசியல் நாகரீகம் தெரியும் – சிறீதரனின் குற்றச்சாட்டு கண்டனத்துக்குரியதாகும்!
பழுலுல்லாஹ் பர்ஹான் வன்னி: தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது வன்னியிலும், தீவகப்பகுதியிலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும், வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட படுதோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்களைத் தாக்கி வருவதாகவும். இத்தாக்குதல்
-
தந்திச் சேவை நாளை முதல் நிறுத்தப்படும்!
கொழும்பு: நாடு முழுவதிலுமுள்ள தபால் நிலையங்களில் நாளை (அக்டோபர் முதலாம் திகதி) முதல் தந்திச் சேவை (டெலிக்கிராம்) நிறுத்தப்பட்டுள்ளதென தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார். தந்திச் சேவையை நிறுத்துவது தொடர்பாக தபால் திணைக்களம் மற்றும் இலங்கை தொலைதொடர்பு நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் உடன்பாடொன்று காணப்பட்டுள்ளன.