Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ரடவிருவோ அமைப்பு அங்குராரர்ப்பணக் கூட்டம்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: வெளிநாடுகளில் தொழில் புரியும், தொழில் புரிய செல்ல இருக்கம், வெளிநாடு சென்று திரும்பியிருப்பவர்களினதும், அவர்களது குடும்பங்களினதும் நலன்கள் குறித்து ரடவிருவோ அமைப்பு அங்குராரர்ப்பணக் கூட்டம் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் இடம் பெற்றபோது கிராம அதிகாரி என்.எம்.ரஸ்மி விளக்கப்படுத்துவதையும், அருகில் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டவர்ளையும் படத்தில் காணலாம். 

  • மட்டக்களப்பு மாவட்ட ரிதிதென்ன அபூபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயல் திறப்பு.

    -டீன் பைரூஸ்- ரிதிதென்ன: மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமாக அமைந்துள்ள ரிதிதென்னையில் (28.03.2014 வெள்ளிக்கிழமை) அபூபக்கர் சித்தீக் ஜீம்ஆ பள்ளிவாயல் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ். ஹிஸ்புல்லாவினால் திறந்து வைக்கப்பட்டது. பள்ளிவாயல் திறப்புவிழாவுடன் ஜூம்ஆ தொழுகையும் காத்தான்கு இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவர் அலியார் (றியாழி) அவர்களினால்ஆரம்பித்துவைக்கப்பட்டது.

  • வேறு நாடுகளுக்கு அடிமை தொழிலுக்காக பெண்கள் செல்வதை தடுக்கும் நோக்கில் றிப்கா தையல் தொழிற்சாலை காத்தான்குடியில் ஆரம்பம்.

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி: புதிய காத்தான்குடி கர்பலா வீதியில் அமைந்துள்ள (RGF) றிப்கா தையல் தொழிற்சாலை (28.03.2014 வெள்ளிக்கிழமை) காலை 07.30 மணிக்கு சங்கைக்குறிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.அப்துல்லா (றஹ்மானி) அவர்களினால் உத்தியபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • காத்தான்குடியில் மர ஆலையொன்று தீக்கிரை – விமானப்படையின் தீயணைப்புப் பிரிவின் உதவியோடு வேகமாகப் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; விளையாட்டு அரங்கிற்கு அருகாமையில் அட்வேகட் அப்துல் காதர் மாவத்தையில் அமைந்துள்ள றபீக் மர ஆலை 28-03-2013 இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளது.

  • ஜனாதிபதியின் உத்தரவின்பேரில் இந்திய மீனவர்கள் விடுதலை

    அபூஹக் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார். இந்தியாவுடனானா நல்லெண்ண நடவடிக்கையாகவே ஜனாதிபதி இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் ஏ.எப்.பி செய்தித்தாபனத்திடம் தெரிவித்துள்ளார்.

  • ‘நமது வாழ்க்கைக்கு அர்த்தம் ஏற்படுத்தும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் பயிற்சிப் பட்டறை

    ஏ.எல்.எம்.தாஹிர் கொழும்பு: நமது வாழ்க்கைக்கு அர்த்தம் ஏற்படுத்தும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளில் பயிற்சிப் பட்டறை ஒன்று இன்று (27) மீள்குடியேற்ற அமைச்சின் செயளாலர் ஜனக சுகததாச தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது மனோதத்துவ பயிற்சியாளர் சந்தன குணவர்தன விரிவுரை நிகழ்த்தினார். எம்மால் செய்ய முடியாதது எதுவுமில்லை, நாம் எதற்கும் தயார்,

  • முஸ்லிம் காங்கிரஸின் அனுசரணை இல்லாது சாய்ந்தமருதிர்க்கான பிரதேச சபை வழங்க முடியுமா?? ஒருக்காலும் முடியாது அல்ஹாஜ் U. K. நாபீர் சவால்..!!

    கத்தாரில் இருந்து முஹம்மது காமில் டோஹா: கடந்த வாரம் கத்தார் நாட்டின் சனையா 44 இல் நடைபெற்ற புலம் பெயர்ந்து வாழும் உறவுகளுடனான உறவுப்பாலம் நிகழ்ச்சி கல்முனைக்குடி சகோதரர் ஜெசீம் பூட்டோ வினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நாபீர் பவுண்டேசன் அமைப்பின் தலைவரும் சமூக சேவகருமான பொறியியலாளர் அல்ஹாஜ் U. K. நாபீர் அவர்கள் கலந்து கொண்டு தனது எதிர்கால அரசியல் பிரவேசம், சமூகத்துக்கான அபிவிருத்தி மற்றும் எதிர்கால பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கருத்துக்களையும் அவர்களின்…

  • தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ‘தப்லீக் சகோதரர்களே! குர்ஆன் ஹதீஸில் ஒன்றுபடுவோம்’ எனும் தலைப்பில் விஷேட மார்க்க சொற்பொழிவு நாளை காத்தான்குடியில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 28.03.2014 நாளை வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜும்ஆ பள்ளிவாயலில் விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகர்களில் ஒருவர் அஷ்-ஷஹீத் அஹமத் லெப்பை ஹாஜியார் ‘வாழ்வும் பணியும்’ நூல் வெளியீட்டு விழா நாளை காத்தான்குடியில்

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி: காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களாற் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் மர்ஹூம் அஷ்-ஷஹீத் அஹமத் லெப்பை ஹாஜியார். அன்னார் மறைந்து சுமார் 25 வருடங்கள் கடந்த விட்ட பின்னும் அன்னாரின் நினைவலைகள் இன்னும் எவருடைய மனதை விட்டும் நீங்க வில்லை என்பதுதான் யதார்த்தம்.

  • தம்புள்ள பள்ளிவாசல் மீது கைக் குண்டுத் தாக்குதல்!

    தம்புள்ள: தம்புள்ள பள்ளிவாசல் மீது நேற்றிரவு 8.45 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிவாசல் பின்பகுதி மூலமாக மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதலினால் பள்ளிவாசலுக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • வருடாந்தம் 6 இலட்சம் சவூதி நாட்டவர்கள் தொழில் சந்தையினுள் பிரவேசம் – திண்டாடுகிறது சவூதி அரசு

    –அபூஹக்- சவூதி: வருடாந்தம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்யும் 6 இலட்சம் சவூதி நாட்டவர்கள் தொழில் சந்தையினுள் பிரவேசிப்பதாகவும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் சவூதி அரசாங்கம் பாரிய சவால்களை எதிநோக்குவதாகவும் சிரேஷ்ட தொழில் அமைச்சு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

  • நள்ளிரவில் மயானத்தில் நின்றிருந்த இளைஞைர்கள் – பிணமொன்றை தோண்டி எடுக்கச் சென்றிருக்கலாம் என சந்தேகம் 

    -அபூஹக்-  வெலிமட:மண்வெண்டியொன்றை எடுத்துக்கொண்டு வெலிமட, புஹுல்பொல பொது மயானத்தில் நின்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படும் இளைஞைர்களுள் ஒருவரை பொது மக்களின் உதவியுடன் கைது செய்துள்ளதாக வெலிமட பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

←Previous Page
1 … 795 796 797 798 799 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar