-டீன் பைரூஸ்-
காத்தான்குடி: புதிய காத்தான்குடி கர்பலா வீதியில் அமைந்துள்ள (RGF) றிப்கா தையல் தொழிற்சாலை (28.03.2014 வெள்ளிக்கிழமை) காலை 07.30 மணிக்கு சங்கைக்குறிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.அப்துல்லா (றஹ்மானி) அவர்களினால் உத்தியபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வின் உரையாற்றிய றிப்கா தையல் தொழிற்சாலையின் பணிப்பாளர் அல்ஹாஜ் பீ.எம்.முகம்மது சஹாப்தீன் வறுமையை ஒழித்திட வேறு நாடுகளுக்கு அடிமைத் தொழிலுக்காக செல்வதை தடுத்திட,உழைக்கும் கரங்களுக்கு உதவிடும் எங்கள் கண்ணி முயற்சியே இதுவாகும்.
எமது தொழிற்காலையில் இலவசமாக பயிற்சிகளை முடித்தக் கொண்ட சுமார்150 பெண்கள் உள்ளனர்.அவர்களுக்கான சாற்றிதழ் வழங்கும் நிகழ்வு ஒன்றினையும் நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.எமது தயாரிப்புக்களின் விற்பனை வீதம் அதிகரிக்கப்படுகின்ற போது மேலும் கஷ்டமான பல யுவதிகளுக்கு இங்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிபிலி பாறூக்,ஆசிரிய ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ்.அப்துல் கபுர்(மதளி)கவிமணி புஹாரி(பலாஹி) அல்ஹாஜ்.MTM காலித் jp (கா.ப.மு.நி.சம்மேளனம்)உட்பட பல உலமாக்கள்,தொழில் அதிபர்கள்,வர்த்தகர்கள்,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தோழிற்சாலை தொடர்பான விடயங்களில் பங்கேற்க முஸ்லிம்,சிங்கள அதிகாரிகள் பலர் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
காத்தான்குடியில் பல உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்ற நிலையில் முதல்தடவையாக பல வகையான கைபெனியங்களை உற்பத்தி செய்யும் தொழற்சாலை ஒன்று திறங்கப்படுவதானது சிட்டிஒப் காத்தான்குடியின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Published by











Leave a comment