-
ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் முதல்வர் ஷெய்ஹூல் பலாஹ் அப்துல்லாஹ் றஹ்மானிக்கு காதிமுல் இல்ம் (கல்விச் சேவகன்) பட்டம், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு காதிமுல் உம்மத் (சமூக சேவகன்) பட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 20-06-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு புதிய காத்தான்குடி அல் மனார் அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா மற்றும் றமழான் மாத ஒன்று கூடல் வைபவத்தில் முஸ்லிம் சமூகத்துக்காக பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றிவரும் இரு சமூக சேவையாளர்களுக்கு பட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
-
காத்தான்குடியில் கதீப்மார் இமாம்களுக்கான நம்பிக்கை நிதியம் அமைக்க பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் கதீப்மார் இமாம்களுக்கான நம்பிக்கை நிதியம் அமைக்க பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்திற்கு 5 (ஐந்து) இலட்சம் ரூபாய் நிதியை பணமாக அன்பளிப்பு செய்துள்ளார்.
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் றமழான் மாத ஒன்று கூடலும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் றமழான் மாத ஒன்று கூடல் வைபவமும் 20-06-2014 நேற்று வெள்ளிக்கிழமை இரவு புதிய காத்தான்குடி அல் மனார் அர் ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
‘பிரபாகரன் இருந்திருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை நேர்ந்திருக்காது என்று பேருவளையில் ஒரு தாய் என்னிடம் கூறினார்’ : வ.மா.சபை உறுப்பினர் அஸ்மின் (கானொளி)
யாழ்: முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக மக்கள் முன்னணி தகவல் தொடர்பு மையம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.உறுப்பினர்கள் கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தனர்.
-
அளுத்கமை கலவரம்: இரகசிய குறுந்தகவலை அம்பலப்படுத்தினார் அசாத் சாலி
– SHM கொழும்பு: அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் வெலிப்பன வன்முறைச் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். அவர் இதேபோல் எத்தனையோ தடவை கூறியிருக்கிறார். ஜனாதிபதி சொன்னதைச் செய்ததே இல்லை என்கிறார் அசாத் சாலி.
-
1958ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்சுற்றில் முதலாவது தடவையாக வெளியேறுகிறது இங்கிலாந்து
றியோ: தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் கோஸ்ட்டாரிக்கா, இத்தாலியை 1-0 எனும் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குள் அந்த அணி நுழைந்துள்ளது.
-
காத்தான்குடியில் மீனவர்களுக்கான தோணி ஓட்ட நிகழ்வு!
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: உள்ளுராட்சி தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை ஏற்பாடுசெய்த விளையாட்டு நிகழ்ச்சியின் ஓர் அங்கமான மீனவர்களுக்காக தோணி ஓட்டம் இன்று காத்தான்குடி 1ம் குறிச்சி ஆற்றங்கரைப்பகுதியில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் ஏற்பாட்டில் -மட்டு-மாவட்டத்தில் 100 வறிய முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு 3 வது வருட புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு 03 வது வருட புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு 20-06-2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி நஸீலா ஹாட்வெயார் முன்றலில் இடம்பெற்றது.
-
மெற்றோபொலிடென் கல்லூரியின் புதிய கட்டட திறப்பு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: மெற்றோபொலிடென் கல்லூரியின் புதிய கட்டடம் வெகு விமர்சையாக நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டது. அத்தோடு சர்வதேச ‘எட்ஹட்’ நிறுவனத்தின் உயர் டிப்லோமா கற்கை நெறிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அட்டுல் கெஷப் -நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து பேச்சு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அட்டுல் கெஷப், வெள்ளிக்கிழமை முற்பகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
-
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்ணன்டஸ் டெரன்கோ தலைமையிலான தூதுக்குழுவினர்- அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து பேச்சு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்ணன்டஸ் டெரன்கோ, வெள்ளிக்கிழமை (20) மாலை இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி சபினய் நந்தி மற்றும் தூதுக்குழுவினர் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
-
அளுத்கம சம்பவத்துக்கு எதிரான வவுனியா ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் கலைக்கப்பட்டது
வவுனியா: அளுத்கம சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளியன்று பிற்பகல் வவுனியா நகர பள்ளிவாசல் முன்னிலையில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் துரத்தியடித்துள்ளனர்.