Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஒட்டகப் பால் அருந்துவதில் ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்!

    – SHM கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒட்டக பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதிகமான அமெரிக்கர்கள் தற்பொழுது ஒட்டகப் பாலை மருத்துவ நோக்கம் கருதி அருந்திவருகின்றனர். இம் மாநில மக்கள் ஒட்டக பாலை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த வினியோகஸ்தரான டெசர்ட் ஃபார்ம்ஸ் நேரடியாகவும், 40க்கும் மேற்பட்ட கடைகள் மூலமாகவும் ஒட்டக பாலை விற்பனை செய்து வருகிறது.

  • ‘அல்லாஹ் என்ற சொல்லை, தங்களது கடவுளைக் குறிக்கப் பல நூற்றாண்டுகளாகவே தாங்கள் பயன்படுத்திவருகிறோம்’

    கோலாலம்பூர்: மலேசியாவில் சிறுபான்மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை மலேசியா உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

  • ‘தனது மரணத்தின் மூலம் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால், மரணத்தை எதிர்நோக்க தயார்’

    கொழும்பு: தனது மரணத்தின் மூலம் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால், மரணத்தை எதிர்நோக்க தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

  • இலங்கையில் தமிழ், முஸ்லிம் அமைப்புக்களைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சி!

    கொழும்பு: இலங்கையில் செயற்படும் இனவாத அமைப்புகள் என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.

  • போர்த்துக்கள் உலகக் கிண்ணப்போட்டிகளிலிருந்து வெளியேறும் என எதிர்பார்த்த அந்த இறுதி நிமிடத்தில் ….

    – MJ றியோ: சற்று முன்னர் இடம்பெற்ற போர்த்துக்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இடையிலான உலகக் கிண்ணப்போட்டியின் ஆரம்ப குழுப் போட்டியில், அமெரிக்கா-போர்த்துக்கள் அணிகள் மோதின.

  • காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய நிருவாக சபை – 2014

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2014 ம் ஆண்டிற்கான பொதுச்சபைக்கூட்டமும் நிருவாக சபைத்தெரிவும் காத்தான்குடி-03, முகைதீன் மெத்தை ஜூம்ஆப்பள்ளியில் இடம்பெற்றது. 

  • நேற்று இடம்பெற்ற சக்தியின் மின்னல் நிகழ்ச்சியின் காணொளி

  • முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்ற முறையில் செயற்படுவது தெட்டத்தெளிவாகிறது

    – றஹ்மத்துல்லா முஹம்மத் இர்ஷாத்  கொழும்பு: இலங்கையின் பேருவளை மற்றும் அளுத்கம பகுதியில் இடம் பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்ற முறையில் செயற்படுவது தெட்டத்தெளிவாகிறது.சிங்கள இனவாத காடையர்களால் நன்கு திட்டமிடப்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த உரை அதற்கு போதுமானது.

  • ‘பேரினவாத தீய சக்திகள் -முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அழிவு நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயற்படுகின்றனர்’ – சிப்லி பாரூக்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக மேட்கொள்ளப்படும் அநியாயமான அநீதிகளுக்கு எதிராக எல்லா வகையிலும் அவரவர் சக்திக்குட்பட்ட அளவுக்கு இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக எல்லோரும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் விடுத்துள்ள ஊடக அறிக்கை தெரிவித்துள்ளார்.

  • ரொனால்டோவின் உலக சாதனையை சமன் செய்தார் குளோஸ்

    – SHM றியோ: பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் உலகக்கிண்ண கோல் சாதனையை சமன் செய்தார் ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ்  ரொனால்டோ உலகக்கிண்ணப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலகக்கிண்ணங்களில் விளையாடி 15 கோல்கள் அடித்து சாதனையை நிலைநாட்டிருந்தார்.

  • பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது விழா:   பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரை (ஒலிவடிவம்)

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் றமழான் மாத ஒன்று கூடல் வைபவத்தில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரையின் முழுமையான ஒலிவடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

  • இங்கிலாந்தில் கொல்லப்பட்ட சவூதி மாணவியின் ஜனாஸாவைப் பெற, பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் விமான நிலையத்தில்…

    – MJ அல்-ஜவ்ஃப்: கடந்த செவ்வாய்க்கிழமை, இங்கிலாந்தின் எசக்ஸ் பல்கலைக்கழக மாணவி நாஹிட்அல்மானியா எனும் 31 வயதுடைய சவுதிப்பிரஜை, கொல்செஸ்டர் எனும் இடத்தில் பலமாக குத்தப்பட்ட கொலைசெய்யப்பட்டார். அவரது ஜனாஸா நேற்று சனிக்கிழமை அல்-ஜவ்ஃப் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தது.

←Previous Page
1 … 728 729 730 731 732 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar