காத்தான்குடி: காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு 03 வது வருட புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு 20-06-2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி நஸீலா ஹாட்வெயார் முன்றலில் இடம்பெற்றது.
காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் தலைவர் ஐ.எல்.அக்பர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய அறபு கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷேய்க் ஏ.எம்.அலியார் (றியாதி) கலந்து கொண்டார்.
இதன் போது பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்கின்ற 100 வறிய மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்கின்ற சில மாணவர்களுக்கும் ,அறபுக் கல்லூரிகளில் கல்வி கற்கின்ற சில மாணவர்களுக்கும் இதன் போது புலமைப்பரிசில் நிதி வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், ,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயூட் காலத் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா (பஹ்ஜி),காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அப்கர்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்பை,முன்னாள் வட்டார கல்வி அதிகாரி எம்.ஐ.சின்னலெப்பை,முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் சித்தீக் உட்பட உலமாக்கள, ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Published by




Leave a comment