-
இஸ்லாமிய ஆடை அணிந்ததற்காக பல்கலைக்கழக சவுதி மாணவி இங்கிலாந்தில் தாக்கப்பட்டு கொலை!
– MJ எசக்ஸ்: இங்கிலாந்தில் எசக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சவுதி அரேபியா நாட்டவரான நாஹிட் அல்மானியா எனும் 31 வயதுடைய மாணவி, 52 வயது பிரித்தானிய நபர் ஒருவரால் பலமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
வட்டரக்க விஜித தேரர் தாக்குதலுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கண்டனம்!
– PMGG ஊடகப்பிரிவு தேசிய பலசேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் தாக்கட்டமைக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக NFGG இன்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
‘இன்றைய போட்டியில் கொஸ்டாரிக்காவை வீழ்த்தினால் இங்கிலாந்து இராணியின் முத்தம் வேண்டும்’ – மரியோ பலட்டொலி
– SHM றியோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கொஸ்டாரிகாவை வென்றால் தமக்கு இங்கிலாந்து ராணியின் முத்தம் தேவை என்று இத்தாலி வீரர் மரியோ பலோடெலி விசித்திர விருப்பம் தெரிவித்துள்ளார்.20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இரவு இத்தாலி- கொஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன.
-
‘பொது பல சேனாவை முற்றாகத் தடை செய்யுங்கள்’ எனக் கூறி காத்தான்குடியில் ஜூம்மா தொழுகையின் பின்னர் ஆர்பாட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அளுத்கம , பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா போன்ற இனவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக பொது பல சேனாவை முற்றாகத் தடை செய்யுங்கள் எனக் கூறி 20-06-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
-
தனது மனைவியிடம் சில்மிஷம் புரிந்தவர்களை களத்தில் ஓர் கை பார்த்தார் சகிப் அல் ஹஸன்: விளையாட்டரங்கில் சம்பவம்!
– S-90 டாக்கா: பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரம் ஷகிப் அல் ஹசனின் மனைவி உம்மி அகமது சிஷிரிடம் சில்மிஷம் செய்ததாக தொழிலதிபரின் மகன் ஒருவரை பங்களாதேஷ் பொலீஸார் கைது செய்துள்ளனர்.ஜூன் 15ம் தேதி இந்தியா, வங்கதேசம் இடையே நடந்த ஒரு நாள் போட்டியின்போது மிர்பூர் மைதானத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார் அந்த நபர்.
-
பலஸ்தீன் அகதிப் பெண்ணை மணக்கிறார் துபாய் இளவரசர்
– AF-80 துபாய்: பலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் அகதியை மணக்கவிருக்கிறார் துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகம்மது அல் மக்தூம். கலிலா எனும் இவர் பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேல் தாக்குதலில் வீட்டை இழந்து தெருக்களில் தங்கி கஷ்டத்தை அனுபவித்தவர். இவரைத்தான் தற்போது துபாய் இளவரசர் மணம் புரியவுள்ளார்.
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது கழிவு வீச்சு
யாழ்ப்பாணம்: யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது இன்று காலை கழிவு எண்ணெய் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
‘ஜேர்மனிதான் உலகக் கிண்ணத்தை வெற்றிபெறும்’: கோஹ்லி
மும்பை: உலகக்கிண்ண கால்பந்து தொடரில் கிண்ணத்தை ஜேர்மனி அணி வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோஹ்லி கூறியுள்ளார். இந்த ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகள் பிரேசிலில் நடந்து வருகின்றன. இப்போட்டிகள் ரசிகர்களை மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்களையும் கவர்ந்துள்ளது.
-
காத்தான்குடி பேரீச்சம் பழங்கள் ஆர்வத்துடன் மக்களால் பறிக்கப்பட்டது!
– MJ காத்தான்குடி: இரண்டாம் நாள் ஹர்த்தாலான நேற்றைய தினம் (19-06-2014) காத்தான்குடி பிரதான வீதியில் அறுவடைக்குத் தயாராகக் காத்திருக்கும் பேரீச்சம்பழங்களை மக்கள் ஆர்வத்துடன் பறித்துச் செல்வதைப் படங்களில் காணலாம்.
-
நேற்றைய ஹர்த்தால்: ஆடிப்போன அரசாங்கமும், அசந்துபோன முஸ்லிம் தலைவர்களும்…
– A. அப்துல் ஹமீட் கொழும்பு: பயங்கரவாதி பொதுபல சேனாவையும், அதற்கு ஆதரவாகச் செயற்படும் அரசாங்கத்தையும் கண்டித்து மாபெரும் ஹர்த்தால் ஒன்றை நேற்று அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் பிரதேசங்கள் மேற்கொண்டிருந்தன.
-
அளுத்கம சம்பவம்… நகரசபை உறுப்பினர் பாக்கீர் சமர்ப்பித்த கண்டணப் பிரேரணையும் உரையும்
பழுலுல்லாஹ் பர்ஹான் அளுத்கம: அண்மையில் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் பொதுபலசேனா, சிங்கள ராவய போன்ற பௌத்த தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன குரோத நடவடிக்கைகளைக் கண்டித்து காத்தான்குடி நகரசபையின் விசேட கூட்டத்தில் நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் HMM. பாக்கீர் சமர்ப்பித்த கண்டணப் பிரேரணையும் அது தொடர்பான உரையும்.
-
தர்கா நகர், அளுத்கம போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட குழு விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் அளுத்கம: தர்கா நகர், அளுத்கம பகுதிகளில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து விசாரித்து ஆறுதல் கூறவும், தேவைகள் அறிந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட குழுவொன்று அதனது பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்களின் தலைமையில் நேற்று 2014.06.18 ஆம் திகதி புதன் கிழமை சென்று வந்தது.