-
இஸ்லாமிய இளைஞசர் முன்னணியினால் நிகழ்த்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு
– FM.பர்ஹான் கொழும்பு: இஸ்லாமிய இளைஞசர் முன்னணியினால் 19/08/2014 ம் அன்று நிகழ்த்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் Dr. பவ்சுள் ஹக் அவர்களால் நடத்தப்பட்டது.
-
‘அர்ஷின் நிழலில்’ தொடர்-2 என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி (21-08-2014) வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
‘இன்னுமொரு அமெரிக்கரை சிறைப்பிடித்திருக்கிறோம்:முடிவு அமெரிக்காவின் கையில்’ -இஸிஸ்
பக்தாத்: இஸிஸ் போராளிகள் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரை தலையைத் துண்டித்துப் படு கொலை செய்துள்ளனர். மேலும் ஒரு அமெரிக்கரையும் தாங்கள் சிறை பிடித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்க ஊடகவியலாளரை சிரச்சேதம் செய்யும் இஸிஸ்
லண்டன்: சிரியாவில் ‘இஸ்லாமிய அரசு’ போராளிகளால் கொல்லப்பட்ட அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் ஃபாலியின் தாய், தனது மகன் சிரியா மக்கள் படும் இன்னல்களை வெளியே கொண்டுவரும் பணியில் தனது உயிரை இழந்திருக்கிறார் என்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
-
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டு- மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட 4000 வீடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த வீடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் 19-08-2014 நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரால் சுவரொட்டிகள்
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடியில் நேற்று இவ்வாறு சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) ஒட்டப்பட்டிருந்தன. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பலஸ்தீனத்திற்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையை அதிமேதகு ஐனாதிபதி அவர்கள் ஏற்று 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவி வழங்க முன்வந்தமைக்காக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரால் நன்றி தெரிவிப்பதாக அச்சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
அல் மனார் நிறுவனத்தின் ரமழான் விஷேட அறிவியியல் போட்டி நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தில் இடம்பெற்ற விஷேட அறிவியியல் போட்டி நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 24-08-2014 அன்று பி.ப.4.00 மணிக்கு அல் மனார் வளாக அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் ஏ எல் எம் மும்தாஸ் மதனி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.
-
மக்கள் சேவைக்காக தம்மை அர்பணித்து ஓய்வு பெற்ற இலங்கை வங்கியின் ஊழியர்களுக்கு கௌரவம்
எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: இலங்கை வங்கியின் 75வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை வங்கியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் ஊழியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வங்கி ஓட்டமாவடி கிளையின் முகாமையாளர் பிரான்சிஸ் திருச்செல்வம் தலைமையில் (19.08.2014) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வங்கி கட்டிடத்தில் நடைபெற்றது.
-
வான்தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்! ஹமாஸின் ரொக்கட் இஸ்ரேலுக்குள் வீழ்ந்து வெடித்தது!!
– MJ டெல் அவிவ்: திங்கட்கிழமை கெய்ரோவில் இடம்பெற்ற இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் தரப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 6 நாட்களின் பின்னர் நேற்று செவ்வாய்கிழமை மாலை இஸ்ரேல் காஸாவை நோக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
-
இடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு செல்கிறது
திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்இ அங்கு பல்கட்சி உறுப்பினர்கள் சென்று பார்வையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
‘திருமணம் செய்யப் போகும் பெண் குளிப்பதை ஒளிந்து நின்று பார்க்கலாம்’ எகிப்தில் சலபி ஒருவரின் ஃபத்வா! சர்ச்சையில் மக்கள்!!
– SHM கெய்ரோ: எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு மதத் தலைவர் அறிவித்துள்ள வித்தியாசமான ஃபத்வா அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒருவருக்கு வருங்காலத்தில் மனைவியாகப் போகும் பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது அதை மறைந்து நின்று ரசித்துப் பார்ப்பது தவறில்லை என்று இந்த ஃபத்வா அதாவது மத நெறிமுறை கூறுகிறது.