-
ரொக்கட் அச்சத்தால் ஓடி ஒழியும் இஸ்ரேலிய மக்கள்
– MJ ஜெரூஸலம்: அயர்ன் டோமின் ஏவுகணை எதிர்ப்பு ராடார் சமிக்கை மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ரொக்கட்டுக்களையும் தாண்டி, ஹமாஸின் நவீன ரக ரொக்கட்டுகள் இஸ்ரேல் பிரதேசங்களில் தினமும் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருப்பதால், அயர்டோமை நம்பியிருந்த இஸ்ரேலிய மக்கள் தற்பொழுது நம்பிக்கை இழந்து, பாதுகாப்பான இடங்களுக்குள் ஓடி ஒழிந்துவரும் நிலை ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பை விமர்சித்து வருகின்றன.
-
செய்தியாளர் கொலைக்கு கோபமாக இரங்கல் தெரிவித்து விட்டு கோல்ப் விளையாடச் சென்ற ஒபாமா!
– SHM வாஷிங்டன்: அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் போலி படுகொலைக்கு இரங்கலும், இஸிஸ் தீவிரவாதிகளை ஒழிப்போம் என்று கோபமாகவும் பேசி அறிக்கை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, அதன் பின்னர் கோல்ப் விளையாடப் போனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உமர் சன சமூக நிலையத்தின் கீழ் இயங்கிவரும் அல்-உமர் பாலர் பாடசாலை பாலர்களின் 2014 மாபெரும் உளவள ஆக்கத்திறன் கண்காட்சி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உமர் சன சமூக நிலையத்தின் கீழ் இயங்கிவரும் அல்-உமர் பாலர் பாடசாலை பாலர்களின் 2014 மாபெரும் உளவள ஆக்கத்திறன் கண்காட்சி புதிய காத்தான்குடி -06 அல்-உமர் பாலர் பாடசாலையில் 22-08-214 வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
-
இஸ்ரேலுக்குள் மாயமாய் விழும் ஹமாஸின் ரொக்கட்டுக்கள்
– MJ டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக காஸாவிலிருந்து ஹமாஸினால் ஏவப்படும் ரொக்கட்டுக்கள், இஸ்ரேலின் அயர்ன் டோமின் கண்காணிப்புக்களிலிருந்து மறைந்து மாயமாய் இஸ்ரேல் நகரங்களுக்கு தொடர்ந்தும் வீழ்ந்து வெடிக்கின்றன.
-
பிரயாணிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு – கல்முனை மஞ்சன்தொடுவாய் பிரதான வீதியில் ஜாமிஉல் கர்னி ஜூம்மா பள்ளிவாயல் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வெளி ஊரிலிருந்து வரும் பிரயாணிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு –கல்முனை
-
கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில் ‘மஸ்ஜிதுல் Bபஹ்ர்’ பள்ளிவாயல் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் பூநொச்சிமுனை: ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில் ‘மஸ்ஜிதுல் Bபஹ்ர்’ பள்ளிவாயல் 22-08-2014 இன்று வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையுடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
-
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றுகிடையே ஊவா தேர்தல் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
– PMGG ஊடகப்பிரிவு கொழும்பு: ஊவா மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய தேசிய கட்சிக்கும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (22) வெள்ளிக்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
-
‘லட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க ஐநா தவறிவிட்டது’- நவி பிள்ளை
ஜெனீவா: உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
-
வடிகான் மற்றும் அதன் அபிவிருத்தி வேலைகளை பார்வையிடுவதற்காக கொரியா நாட்டில் இருந்து நிபுணர் குழுவினர் வாழைச்சேனை,ஓட்டமாவடி பிரதேசங்களுக்கு விஜயம்
– எம்.ரீ.எம்.பாரிஸ் வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று,ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு ஆகிய இரு பிரதேச சபை எல்லைகுற்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்கள் வெள்ள அனர்த்த காலங்களின் போது வடிகான் அமைப்பின்றி பல்வேறு பட்ட துன்பங்களையும், கஸ்டங்களையும் அனுபவித்து வந்தனர்.
-
ஐஸ் குளியலுக்கு சம்மதித்துள்ள பிரபலங்கள்
நியூயோர்க்: ஏ.எல்.எஸ். நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐஸ் பக்கெட் சவாலை பல பிரபலங்கள் ஏற்றுள்ளனர். ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
எகிப்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சவுதி, ரஷ்யாவை சேர்ந்த 33 பயணிகள் பலி!
– SHM கெய்ரோ: எகிப்து நாட்டில் இரு பஸ்கள் மோதிய விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். இதில் சவுதி அரேபியா, எமன், ரஷ்ய நாட்டுக்காரர்களும் அடங்குவர். எகிப்து நாட்டின் சார்ம் அல்-செயிக் பகுதியிலிருந்து புறப்பட்ட பஸ்சும், நிலே டெல்டா பகுதியில் இருந்து புறப்பட்ட மற்றொரு பஸ்சும், இன்று அதிகாலை சினாய் என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
-
காஸாவில் மக்களைக் கொல்வதற்கான ஒருநாள் செலவு இஸ்ரேலுக்கு 60 மில்லியன் டொலர்கள்!
– MJ டெல் அவிவ்: காஸா மக்கள்மீது போர் மேற்கொள்வதற்காக இஸ்ரேலுக்கு நாளொன்றுக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றன. இராணுவம், மருத்துவம், ஆயுததளபாடங்கள் மற்றும் இராணுவப் புலனாய்வு போன்ற விடயங்களுக்கு நாளொன்றுக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இஸ்ரேலுக்குச் செலவாகின்றன.