-
கா.பொ.த.உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சி
கொழும்பு: ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து கா.பொ.த.உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சியினை இவ்வருடமும் நடாத்தவுள்ளது.இது தொடர்பான விவரங்கள் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
உங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் ‘ஸ்மார்ட் போன்’கள்
– SHM லண்டன்: உங்களை அறியாமலேயே அண்ட்ரொய்ட் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோரின் விவரம் கூகுளால் கண்காணிக்கப்பட்டுவருகிறது. இதனால் தனி நபர்களின் ரகசியம் மீறப்படுகிறது.
-
ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் பரீட்சாத்திகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
கொழும்பு: உயர்தரப் பரீட்சார்த்திகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு மனித உரிமை ஆணைக்குழுவிடம் சில பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்துள்ளனர். உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவதனால் ஏனைய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பௌத்த பிக்குவான தேவகிரியே சந்திசேவர தேரர் தெரிவித்துள்ளார்.
-
குருக்கள்மடம்: தோண்டப்படும் ஜனாஸாக்கள்.. இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டதா?
– அபூஸைனப் காத்தான்குடி: கடந்த 1990ம் ஆண்டு மட்டு-கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கும் குருக்கள்மடம் எனும் தமிழ் கிராமத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, புதைக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களின் ஜனாஸாக்களை தோண்டி எடுக்கும் முயற்சிகள் சுமார் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருகின்றன.
-
2020இல் தனிநபர் வருமானம் 7500 அமெரிக்க டொலர்!!
கொழும்பு: பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து இவ்வருடம் நிறைவுறும் இவ்வேளையில் 7.8 வீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ள இலங்கை, 2020 ஆம் ஆண்டாகும் போது தனிநபர் வருமானமாக 7500 அமெரிக்க டொலர்களையும்.
-
எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் மஹேலவுக்கு தங்கத்துடுப்பு வழங்கி ஜனாதிபதி கெளரவம்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
-
இஸ்ரேல்-பலஸ்தீன் தரப்புக்கிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை எட்டாக்கணி: இஸ்ரேலின் தாக்குதல் தொடரலாம்!
– MJ கெய்ரோ: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கிடையில் கடந்த 5 நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த போர்நிறுத்தம் உள்ளுர் நேரப்படி இன்றிரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. இன்று திங்கட்கிழமை எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல்-பலஸ்தீன் இருதரப்புக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை என கெய்ரோவின் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
‘கருமலையூற்று பள்ளிவாசல் மழையினாலேயே இடிந்து விழுந்துள்ளது’
திருகோணமலை: இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் சீனன்குடாவை அண்மித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தினால் இடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் முஸ்லிம்கள் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் இராணுவம் மறுத்துள்ளது.
-
முஸ்லிம் இளைஞரை மணந்த யூதப்பெண்! இஸ்ரேலில் பரபரப்பு!
– SHM டெல் அவிவ்: இஸ்ரேலில் போர்பதற்றமான சூழ்நிலையில் யூதப்பெண் ஒருவர் முஸ்லீம் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இஸ்ரேலில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கத்தார் ஸனாஇய்யாவில் ‘இஸ்லாமிய வாலிபனே’ என்ற தலைப்பில் ஈமானிய அமர்வு
டோஹா: கத்தார் ஸனாஇய்யாவில் -‘இஸ்லாமிய வாலிபனே என்ற தலைப்பில் இன்று 18 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஈமானிய அமர்வு பனார் இஸ்லாமிய கலாச்சார் நிலையம் ஸனாஇய்யா கிளையில் இடம்பெறும் இதனை அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி ) நிகழ்த்துவார்.
-
மட்டு-குருக்கள்மடம் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை நவம்பர் 24 திகதிக்கு ஒத்திவைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் களுவாஞ்சிக்குடி: களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியில் 1990 ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை நவம்பர் மாதம் 24 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
‘சுனாமி பேபி 81’ அபிலாஷ் நேற்று பரீட்சைக்குத் தோற்றினார்
மட்டக்களப்பு: ‘சுனாமி பேபி 81’ என்று பத்து வருடங்களுக்கு முன்னர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அபிலாஷ் மட்டக்களப்பு செட்டிப் பாளையத்தில் உள்ள பாடசாலையில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளான்.