-
இஸ்ரேல்-ஹமாஸ் மீண்டும் யுத்த நிறுத்தம்: பாரிய நெருக்கடியில் இஸ்ரேல்!
– MJ காஸா: எகிப்தின் வேண்டுகோளிற்கிணங்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையிலான யுத்த நிறுத்தம் உள்ளுர் நேரப்படி இரவு 7மணிக்கு, 26-08-2014 செவ்வாய்க்கிழமையிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் இஸ்ரேல் நகரங்களில் தொடர்ந்தும் ஏவுகணை அபாய சமிக்கை ஒலிகள் கேட்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
-
அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை: இ-சிகரெட்டுக்கள் என்றால் என்ன?
லண்டன்: இ-சிகரெட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுகள் வழமையான புகையிலை சிகரெட்டுக்களை புகைக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான மாற்றுவழி என்று விளம்பரப்படுத்தப்படுவதை நிறுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை உருவாக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரியுள்ளது.
-
மதுபான விற்பனையை ஒழிக்கும் கேரளா மாநிலம்!
– SHM திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நேற்று இரவு முதல் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. இதனால் நேற்று பகல் முழுவதும் சலுகை விலையில் இருக்கும் களஞ்சிய மதுபானங்கள் விற்றுத் தீர்த்தனர் கடை உரிமையாளர்கள்.
-
சொனி நிறுவனத்தின் இணையத்தளம் இஸிஸ் அமைப்பால் முடக்கப்பட்டது!
– AF-90 டோக்கியோ: சொனி நிறுவனத்தின் ‘ஒன்லைன்’ இசை மற்றும் விளையாட்டு இணையத்தளங்கள் முடக்கப்பட்டதுடன், அந்நிறுவன நிர்வாகிக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.
-
‘ஐஸ் Bபக்கட்’ கேளிக்கையில் உயிரைவிட்ட முதலாவது இளைஞன்!
– MJ லண்டன்: ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கமருன் லன்காஸ்டர் எனும் 18 வயதுடைய இளைஞன் ‘ஐஸ் Bபக்கட்’ சவாலில் தனது உயிரைவிட்ட பரிதாபம் ஸ்கொட்லாந்தை மாத்திரமன்றி முழு உலகையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது.
-
அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லுாரிக்கு புதிய பயிலுனர்கள் அனுமதி
– ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: கற்பித்தல் தேசிய டிப்ளோமா (2014-2016) ஆம் கல்வியாண்டுக்கான புதிய பயிலுனர்களை சேர்த்துக்கொள்வதற்கான பதிவுகள் கடந்த 2014.08.23,24 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில் இடம்பெற்றது.
-
ஹாஜிகளுக்கான பொது பயான் நிகழ்ச்சி-2௦14
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இவ்வருடம் (2௦14) புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்து, அனுமதிபெற்ற காத்தான்குடியைச்சேர்ந்த ஹாஜிமார்களின் நலன் கருதி வழமைபோன்று நடைபெற்றுவரும் ‘ஹஜ்ஜாஜிகளுக்கான பொது பயான்’ நிகழ்ச்சி இம்முறையும் இன்ஷா அழ்ழாஹ் கீழ்வரும் ஒழுங்குப்பிரகாரம் நடைபெறவுள்ளதாக மௌலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) தெரிவித்தார்.
-
கொழும்பு புறக்கோட்டையில் மிதக்கும் வர்த்தகத் துறைமுகம் திறப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஆசியாவின் ஆச்சரியம் நோக்கிய அபிவிருத்தி செயற்திட்டமாக கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் வர்த்தகத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது.
-
இலங்கை இளைஞர் பாரளுமன்றத்தின் 10 ஆவது அமர்வு எதிர்வரும் 30ம்,31ம் திகதிகளில் மஹரகம இளைஞர் நிலையத்தில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மஹரகம: இலங்கை இளைஞர் 2ஆவது பாரளுமன்றத்தின் 10 ஆவது அமர்வு எதிர்வரும் 30ம்,31ம் திகதிகளில் மஹரகம இளைஞர் நிலையத்தில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் இடம்பெறும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா தெரிவித்தார்.
-
தப்பியோடிய ‘குடு நிலான்’ விமான நிலையத்தில் கைது
கொழும்பு: ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதாகிய நிலையில் தப்பியோடிய தேவகே துசித்த எனும் குடு நிலான் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவு இவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
-
‘மீண்டும் ஜனாதிபதியாக வர மகிந்தவுக்கு தகுதியில்லை’- சரத் சில்வா
கொழும்பு: இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-
ஈரான் அணு உலையை வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!
தெஹ்ரான்: ஈரான் அணு உலையை வேவு பார்த்த இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஈரானின் அணு உலைகளில் மின்சார உற்பத்தி மட்டுமின்றி பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களும் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய உலகின் சில நாடுகளில் ஒன்றான இஸ்ரேல், அந்நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை எல்லாம் பறிமுதல் செய்து அழித்துவிட வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றது.