-
‘ஷில்போதயம் 2014’ கொழும்பில் ஆரம்பம்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஷில்போதயம் 2014’ தேசிய கைப்பணிக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் மேற்படி கண்காட்சியும் விற்பனை சந்தையும் நேற்றைய தினம் (28) ஆரம்பமாகியது.
-
பெண் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்துரைத்தார்
பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
-
தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பில் இரு பெரும்பான்மை கட்சிகளும் பொறுப்பற்று செயல்படுகின்றன – மனோ கணேசன்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இந்த அரசு இன்று வாக்குறுதிகளை மீறுவதில் உலக சாதனை செய்துள்ளது. உள்நாட்டில் நமது மக்களை மட்டுமல்ல, வெளிநாட்டிலும் அது உலக அரசுகளை ஏமாற்றுகிறது. இந்த கொடுங்கோல் அரசை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் வேறு எவரையும் விட தமிழ், முஸ்லிம் மக்களுக்கே அதிக தேவை உள்ளது.
-
ஏறாவூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் இருப்பதால் முன்கூட்டியே ஏறாவூர் பொதுச் சுகாதார பணிமனையும், ஏறாவூர் பொலிசாரும் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஏறாவுரின் பல பகுதிகளிலும் இன்று மேற்கொண்டனர்.
-
கட்டாரில் ‘சுவன மாளிகை’ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி (28-08-2014) வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
காத்தான்குடியில் வெள்ளிக்கிழமையும் வெளிச்சாப்பாடுதான்…?
– MJ காத்தான்குடி: தற்பொழுது காத்தான்குடியில் உம்மா, மூத்தம்மா, உம்மம்மா போன்ற பெயர்களுக்கு ஏற்ப தாய்மார்களைத் தேட வேண்டி இருக்கின்றது. இப்போதெல்லாம் மம்மி, உம்மி, டடா உம்மா, மமா, மம்மா என்றெல்லாம் தனித் தனி சுருதிகளில் தாய்மார்களுக்கு பெயர் வந்துவிட்டது.
-
இப்படியே போனா என்ன ஆவது….? தாய்ப்பாலில் ஐஸ் பக்கெட் சவாலை நிறைவேற்றிய நடிகை!
– SHM நியுயோர்க்: ஐஸ் பக்கெட் சவாலை இப்போது பெருமைக்காக பிரபல்யமாக்க ஆரம்பித்து விட்டனர் சிலர். நல்ல நோக்கத்திற்காக என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட இதை வைத்து இப்போது பலரும் விளம்பரம் தேட ஆரம்பித்துள்ளனர்.
-
இஸிஸ் அமைப்புக்கு எதிரான போர்: அமெரிக்காவுடன் கைகோர்க்கும் 7 நாடுகள்!
– SHM பக்தாத்: ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டுப் போரை நடத்தி வரும் இஸிஸ் இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தில் குதிக்க அமெரிக்காவுடன் 7 நாடுகள் கை கோர்த்துள்ளன. ஈராக், சிரியாவில் சுன்னி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை ஆயுதப் போரின் மூலம் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசமாக பிரகடனம் செய்துள்ளது இஸிஸ்.
-
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான ஓர் அரிய சந்தர்பம்
– எம்.ரீ.எம். பாரிஸ்
-
காத்தான்குடியில் குரங்குகளை சுட்டுக் கொல்லத் திட்டம்
காத்தான்குடி: வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுட்டுத்தள்ள அரசிடம் துப்பாக்கியை கேட்டுள்ளது காத்தான்குடி நகரசபை. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் நாளாந்தம் அதிகரித்து வரும் இத்தொல்லையை கட்டுப்படுத்த குரங்குகளை சுடுவதற்கு காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளது.
-
இஸ்லாமிக் சென்ரரின் ஹஜ், உம்ரா செயன்முறை விளக்கக் கருத்தரங்கு
– Islamic Centre Kattankudy
-
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிவாரணப் பணிகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கையில் அண்மைக்காலமாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் தீய சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.