Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மைத்திரியின் மாத்தறை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஒலிபெருக்கி இணைப்பைத் துண்டித்த பொலிஸாரின் அடாவடி!

    மாத்தறை: மாத்தறை உயன்வத்தை விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முன்னிட்டு பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி கருவிகளுக்கான வயர் இணைப்புகளை பொலிஸார் துண்டித்துள்ளனர். கூட்டத்திற்கான ஒலிபெருக்கிகளை பிரதேசத்தில் பொருத்த சட்டரீதியான அனுமதிகள் பெறப்பட்டிருந்தது.

  • ‘நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்திற்கான தேசிய பங்களிப்பினை முஸ்லிம் சமூகமும் செய்ய வேண்டும்’- பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    NFGG ஊடகப்பிரிவு கடந்த 02.12.2014 அன்று கொழும்பில் பொது வேட்பாளர் மைத்திரி அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் நடாத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தின்போது அதன் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.

  • KCDAயினால் வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கல்

    KCDA கல்குடா: மட்டக்களப்பு  மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியில் சமூக சேவைகள், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கல்குடா கலாசார அபிவிருத்தி  நிறுவனத்தின்  வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் திட்டத்தில் 2014.12.03 ஆந்திகதி புதன்கிழமை இரண்டு மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

  • ஊர் வீதி விஸ்தரிப்பு வேலைத்திட்டம்

    எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடியின் பழைய கல்முனை வீதி என அழைக்கப்படும் பிரதான பாதையான ஊர் வீதியானது நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் குண்றும் குழியுமாக காணப்படுவது பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

  • கோப்பிளுத்த தலைவன்

    – கவிஞர் காத்தூரி சாணக்கியம் பேசும் சாமர்த்தியன் சமுகத்தின் தலைமையேற்ற சம்யுக்தியன் ஆகாயம் போயுதிர்ந்த தலைமைக்குப் பின் ஆதாயம் கண்டுகொண்ட அரும்புத்திரன்.

  • மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றவும்: கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்

    கொழும்பு: கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கொழும்பு மாநகர முதல்வருக்கு சட்டக்கடிதத்தை அனுப்பியுள்ளது. மாநகர முதல்வர் ஏ.ஜே.எம் முஸம்மிலுக்கு இந்தக்கடிதம் நேற்று அனுப்பபட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற தயங்கினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

  • ‘மின்னல் நிகழ்ச்சியும், திரு. ரங்காவும்’: மஹாராஜா நிறுவன தலைவருக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்துள்ள கடிதம்

    மன்னார்: மன்னார், வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனம் மின்னல் நிகழ்ச்சி தொடர்பில் தமது அதித கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கடந்த சில வாரங் களாக தனியார் தொலைக்காட்சியான சக்தியில் இடம் பெறும் மினன்ல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் வலிந்து தேவையற்ற முஸ்லிம் ஒட்டு மொத்த சமூகத்தினையும் அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பிலேயே இந்த அமைப்புக்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி மஹாராஜா நிறுவன தலைவருக்கு பதிவுத்தபாலில் தனித் தனி கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

  • அபுதாபியில் அமெரிக்க ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை!

    – AF- 90 அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷொப்பிங் மோல் ஒன்றில் பள்ளி ஆசிரியையான அமெரிக்க பெண்ணை இனந்தெரியாத பெண் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். கத்தியால் குத்தியவர் ஃபர்தா அணிந்திருந்ததால் அவர் யார் என்பது தெரியவில்லை.

  • “எதிர்வரும் 8ம் திகதியின் பின்னரும் நானே ஜனாதிபதி”

    எம்பிலிபிட்டி: எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டி பொதுச் சந்தை கட்டட அங்குரார்ப்பண வைபவத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதியின் பின்னரும் நானே ஜனாதிபதி அதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

  • பலஸ்தீன தேசத்திற்கு பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

    பரீஸ்: பலஸ்தீனத்தை ஒரு தேசமாக ஏற்;கும் தீர்மானத்திற்கு பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். எனினும் ஓர் அடையாள தீர்மானமாக இருக்கும். இதனை கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் பாராளுமன்றங்களும் பலஸ்தீனத்தை அங்கீகரிக்க தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

  • நாளை முதல் 3ஆம் தவணை பாடசாலை விடுமுறை

    கொழும்பு: அரசாங்கப் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை நாளை (5) யுடன் முடிவடைகின்றது. இதேவேளை 2015ம் ஆண்டிற்கான முதலாந் தவணையானது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்கு ஜனவரி 05ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

  • “முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்”

    கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள கிழக்கின் முஸ்லிம் தனிமாவட்ட கொள்கையை ரணில் விக்கிரமசிங்கவும், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நிராகரித்துள்ளதால், தாங்கள் தொடர்ந்தும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பு சார்பாகப் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்தவுக்கே ஆதரவு அளிப்பதை உறுதியளித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

←Previous Page
1 … 605 606 607 608 609 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar