Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு ஜனாதிபதி மஹிந்தவே பொருத்தமானவர்”: மசூர் மெளலானா

    கொழும்பு: முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு பொருத்தமான தலைவரென்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்கவுள்ளதாக இனங்களுக்கிடையிலான நல்லுறவுக்கான தேசிய வேலைத் திட்டத்தின் இணைத் தலைவர் அப்துல் காதர் மசூர் மெளலானா தெரிவித்தார்.

  • “3வது தடவை வெற்றியீட்டியதும் எவரையும் பழிவாங்கமாட்டேன்”

    கொழும்பு: “எவரையும் பழிவாங்கும் எண்ணம் எனக்கு இல்லை. இதுவரை நான் அப்படி நடந்து கொண்டதும் இல்லை” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.ஊடக முக்கியஸ்தர்களைச் சந்தித்த ஜனாதிபதி கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். தேர்தலில் வெற்றிபெற்றால் எதிர்க் கட்சியினரை பழிவாங்குவீர்கள் என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறதே?

  • அப்துர் ரஊப் மௌலவி ஏன் நிரூபிக்க முன்வரக் கூடாது…?

    – முஹிப்பீன் காத்தான்குடி: 1979 ஆம் ஆண்டிலிருந்து ‘வஹ்ததுல் வுஜூத்’ எனும் எல்லாம் அவனே எனும் அத்வைதக் கொள்கையை காத்தான்குடியில் பிரச்சாரம் செய்து, அக்கொள்கையை தனக்கு முடியுமானவரை நிலைநாட்டிவரும் அப்துல் ஜவாத் அப்துர் ரஊப் மௌலவி, தற்பொழுது தனது கொள்கைக்கு எதிரான பிரச்சாரங்களையும் சவால்களையும் சந்திக்க முடியாமல் இருந்து வருவதை உலகளவில் மக்கள் அவதானித்து வருகின்றனர்.

  • கல்முனை ஸாஹிறா கல்லூரி பழைய மாணவர் கட்டார் கிளை நடாத்தும் தொழில்வாய்ப்புக் கருத்தரங்கு!

    – MSM. முஸாதிக் குறிப்பு: இக்கருத்தரங்கிற்கு சமூகமளிப்பவர்கள் தங்களது சி.வி. (CV) யுடைய பிரதிகளை எடுத்து வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். மேலதிக விபரங்களுக்கு பின்வரும் விளம்பரத்தைக் காண்க.  தொடர்புகளுக்கு:

  • ஆணைக்குழுவினால் பொலிசாருக்குப் பயிற்சி

    மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள், சிறுவர் பொலிஸ் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கான செயலமர்வு 05.12.2014 இன்று மட்டக்களப்பு கிறீன்காடன் ஹோட்டலில் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது. நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. இந்துகருணாரட்ண மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் கலந்து கொண்டனர்.

  • அபுதாபி அமெரிக்க ஆசிரியை கொலை: கொலையாளிப் பெண் கைது, பல மர்மங்கள் வெளியாகின!

    – AF-90 அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷொப்பிங் மோலில் அமெரிக்க ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற பர்தா அணிந்த பெண்ணை பொலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்தவர் இபோல்யா ரயன் (37). விவாகரத்தான அவர் கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள ‘புட்பிரிண்ட்ஸ் ரெக்ரூட்டிங்’ என்ற ஆசிரியைகளை பணியமர்த்தும் நிறுவனம் மூலம் அபுதாபி வந்துள்ளார்.

  • “நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றமும் நமது பங்களிப்பும்” NFGGயின் மாபெரும் பொதுக்கூட்டம்

    – NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: “நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றமும் நமது பங்களிப்பும்” என்ற தலைப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (05.12.2014) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு PMGGயின் மக்கள் அரங்கில் இடம்பெறவுள்ளது.

  • இவ்வார இறுதியில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் ‘ஸ்னோ’வை முதன் முதலாக மக்கள் எதிர்பார்க்கலாம்!

    – MJ லண்டன்: இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் தற்பொழுது குளிர் காலம் ஆரம்பித்துள்ளது. சாதாரண வெப்பநிலை 5 செல்சியஸில் இருந்து மைனஸ் 5 வரைக்கும் அன்மைய வாரங்களில் இங்கிலாந்தின் ஒரு சில பிரதேசங்களில் வெப்பநிலை குறைந்து சென்றது. குளிர்கால பருவத்தில் சாதாரணமாக வெப்பநிலை பூச்சியத்தை விடவும் மைனஸ் நிலைக்குச் செல்வது வழமையானது.

  • எதிர்வரும் வாரத்தில் அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்!

    கொழும்பு: பாராளுமன்றில் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏ.எச்.எம்.அஸ்வர் இராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த வெற்றிடத்தை தமது உறுப்பினரைக் கொண்டு நிரப்ப அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலயத்தின் நாற்பெறும் விழாக்கள்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலயத்தின் நாற்பெறும் விழாக்கள் 04-12-2014 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. அஷ்-ஷூஹதா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார்.

  • விடைத்தாள் திருத்துபவரை குழப்பமடைய செய்யும் விதத்தில் பரீட்சை எழுத வேண்டாம்!

    கல்வி வாழ்க்கையில் உயர்வடைவதற்கு பரீட்சைகள் உதவுகின்றன. அந்த வகையில் ஓ.எல். பரீட்சை என்பது முதலாவது தலைவாசல் என்பதில் சந்தேகமில்லை. இப்பரீட்சைதான் நமது பதினொரு வருட கல்வி வாழ்க்கையின் அடையாளம். இதில் வெற்றிபெறவில்லையாயின் நீங்கள் படித்ததற்கு அடையாளம் இல்லாமல் போய்விடும்.

  • “தங்கத்தால் பெறும் மகிழ்ச்சிபோல் தங்கமான தேசத்தை உருவாக்கித் தருவேன்”

    கொழும்பு: “தங்கத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுறும் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தங்கம் போன்ற தேசமொன்றை உருவாக்கித் தருவேன்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்குத் தமிழ் மக்களிடம் தெரிவித்தார். புலிகள் உங்களிடம் ஏமாற்றிப்பெற்றுக் கொண்ட தங்கத்தை நாம் அரசுடமையாக்கிக் கொண்டிருக்க முடியும். எனினும் நாம் அப்படிச் செய்யவில்லை”.

←Previous Page
1 … 604 605 606 607 608 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar