-
WEDF இன் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற வலைப்பந்தாட்டம்
– WEDF கொழும்பு: பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் (WEDF), யு.எஸ்.ஐட் நிறுவனத்தின் அனுசரணையுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவிகள் பங்கு கொண்ட சுற்றுலாவொன்று அன்மையில் அன்மையில் நடைபெற்றது.
-
“மேடையை போட்டு என்னை ஏசுவதை விட்டுவிட்டு எனது பேச்சுக்களுக்கு விளக்கம் தாருங்கள்”: ஹிஸ்புல்லாஹ் (ஒலிப்பதிவு)
– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: மேடையை போட்டு என்னை ஏசுவதை விட்டுவிட்டு ஒன்று மஹிந்தவுக்கு ஏசுங்கள் அல்லது மைத்திரிக்கு ஏசுங்கள் அல்லது அரசாங்கத்திற்கு ஏசுங்கள் நான் தேர்தலில் போட்டியிடவில்லை-எனது பேச்சுக்களுக்கு விளக்கம் தாருங்கள் என எதிர்கட்சியினருக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேற்று வியாழக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
-
5000 அதிரடிப்படை உட்பட 71,000 பொலிஸார் தேர்தல் கடமைகளில்!
கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 5 ஆயிரம் விசேட அதிரடிப்படை உட்பட 71,100 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் 6 ஆம் திகதி முதல் தேர்தல் கடமையில் ஈடுபட இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
-
தமிழ் தேசிய கூட்டமிப்பு உறுப்பினர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ள மஹிந்தவின் பல கோடி ‘டீல்’!
யாழ்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று யாழிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இழுத்துப் போடுவதற்கு பல கோடிகளில் அரசு பேரம் பேசி வருவதாகத் தெரிய வருகிறது. ஆயினும் கோடிகளுக்கும் சொகுசு வாகனங்களுக்கும் தாம் ஒரு போதும் விலை போகப் போவதில்லை என்றும் வாக்களித்த தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யாது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொடர்ந்தும் தமது போராட்ட பயணம் தொடருமென்றும் தெரிவித்துள்ளனர்.
-
மஹிந்தவின் இன்றைய யாழ் தேர்தல் பிரச்சாரத்திற்காக 450 இ.போ.ச. பஸ்கள் வரவழைப்பு!!
யாழ்ப்பாணம்: ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக இன்றையதினம் யாழ் குடாநாட்டுக்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள நிலையில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு மக்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் 450 பஸ்கள் யாழ்.குடாநாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
-
காத்தான்குடி கெண்ட் அகடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா!
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி Kent Academy of English நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற்றது. அதன் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எச். பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,
-
“ஜனாதிபதியை மாற்றுவோம் என முடிவு செய்வது முட்டாள்தனமானது”: ஹிஸ்புல்லாஹ்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் அதற்காக கணவனையே மாற்ற முயற்சிப்பது சரியா இவ்வாறு கேள்வி எழுப்பினார் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ எம் ஹிஸ்புல்லா நேற்று காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தார்.
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலயம் காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலயங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
-
சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மக்கள் சேவைக்கான உறுதி மொழி
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: மலர்ந்துள்ள 2015ம் ஆண்டு புதுவருடத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மக்கள் சேவைக்கான புதுவருட உறுதி மொழியினை மேற்கொள்ளும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று (01) இடம்பெற்றது.
-
எதிர் வரும் ஒன்பதாம் திகதி வீதியில் நிற்கப் போகும் மைத்திரிக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்.
-டீன் பைரூஸ்- காத்தான்குடி;காத்தான்குடி 06 ஜென்னத் மாவத்தையில் சமூர்தி பயானிகளுக்கான 2500/= ரூபாய் வழங்கும் நிகழ்வு இன்று 01.01.2015 வியாழக்கிழமை)ஜென்னத் பாலா பாடசாலை மண்டபத்தில் முன்னால்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்றது.
-
‘தமக்குத் தேவை நல்லாட்சியே’: ஹகீம்
கொழும்பு: அரசாங்கத்திடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தமது கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தீர்மானித்தமையினாலேயே என, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்க தமது கட்சிக்கு எந்தவொரு தேவையும் இல்லை எனவும், தமக்குத் தேவை நல்லாட்சியே எனவும் அவர் கூறியுள்ளார்.