-
வாக்களிப்பது உங்கள் உரிமை: வாக்களிப்பது எவ்வாறு?
கொழும்பு: இலங்கை ஜனநாயக குடியரசின் ஏழாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ எதிர்வரும் 08 ஆம் திகதி நாடுமுழுவதும் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 19 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் அதிகூடிய வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
-
நான்காம் வாரமும் மைத்திரியே முன்னிலையில்!!
‘ஜனாதிபதித் தேர்தல் 2015’ அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் கடந்த நான்கு வாரங்களாக எமது இணையத்தளம் ஜனாதிபதித் தேர்தல் கருத்து கணிப்பை எமது இணையத்தள வாசகர்கள் ஊடாக நடாத்தி வந்தது. எமது வாசகர்களின் ‘ஒன்லைன்’ வாக்களிப்பின்படி, தொடர்ந்து நான்காவது வாரமாகவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவே முன்னிலையிலிருக்கின்றார்.
-
தேர்தல் பிரசார பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு
கொழும்பு: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகின்றது. எனவே பிரதான அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் இறுதி பிரதான கூட்டங்களும் ஏனைய பிரசார நடவடிக்கைகளும் இன்றைய தினம் சூடுபிடித்துள்ளன.
-
சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களும் தேர்தல் அவதானங்களும்
கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை சென்றுள்ள சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் திங்கட்கிழமை 5-ம் திகதி முதல் தங்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கவுள்ளனர். நாட்டின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவுடனும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களுடனும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள், தங்களின் பணிகள் தொடர்பாக கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.
-
மைத்திரியை ஆதரித்து இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி ஊர் வீதியில் இன்று
காத்தான்குடி: ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனாவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து இன்று 05-01-2015 திங்கள் மாலை மாபெரும் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் இடம்பெற இருக்கின்றது.
-
காத்தான்குடியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பிரதேச தேர்தல் காரியாலங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
-
ஸனாஇய்யாவில் வாராந்த இஸ்லாமிய வகுப்புக்கள்
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
-
பொலன்னறுவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் பொலன்னறுவை: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 04-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி பொலன்னறுவை தேசிய விளையாட்டுத் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
-
நாளை காத்தான்குடியில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் 05.01.2015 நாளை திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
-
‘தீர்மானம் எடுத்து விட்ட மக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் எதற்க்காக?’: ஏறாவூரில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு ஏறாவூர்: ‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்கள் தெளிவான தீர்மானத்துடன் இருக்கிறார்கள். அப்படியென்றால் இம்மக்கள் மத்தியில் பரவலான தேர்தல் பிரச்சாரங்களை நடாத்த வேண்டிய தேவை ஏன் இருக்கிறது..?’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
-
மக்களுக்கு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்குள் பேசிய போது செவிடன் காதில் ஊதிய சங்கை போன்று ஜனாதிபதி பொருட்படுத்தமால் போனார்: றிசாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா கஹடோவிட்ட: இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஆட்சி மாற்றத்துக்கு விருப்பம் கொண்டுள்ள நிலையில் இந்த சர்வாதிகார ஜனாதிபதியினை தோல்வியடையச் செய்து மைத்திரியின் ஆட்சியினை ஏற்படுத்தவே இம்மக்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர், முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
-
ஹிஸ்புல்லாஹ் பற்றி ஜே.வி.பி. நியுஸ் இணைய தளமொன்றில் இன்று பிரசுரிக்கப்பட்டுள்ள செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை – ஊடகவியலாளர் நூர்தீன்
எம்.எஸ்.எம்.நூர்தீன் காத்தான்குடி: காத்தான்குடியை அழிக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் சகாக்கள் என தலைப்பிட்டு எனது பெயரை பயன் படுத்தி ஜே.வி.பி. நியுஸ் எனும் செய்தி இணைய தளமொன்றில் இன்று (4.1.2015) செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.