-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காங்கேயனோடையில் வசிக்கும் 143 விதவைகளுக்கான உலர் உணவு வழங்கும் திட்டம் 2015
காங்கேயனோடை: கடநந்த 18.01.2015ம் திககதி ஞாயிற்றுக் கழமை பி.ப. 4.00 மணியளவில் பின்வரும் ஒழுங்கின்படி நடைபெற்றது. இதன் போது பள்ளிவாயல்களின் தலைவர்கள் நிர்வாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மீஸான் ஶ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர், செயலாளர் உப்பட நிறுவனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
கத்தாரில் “இறை நியதிகளின் பார்வையில் 2015ஜனாதிபதித் தேர்தல்” நிகழ்வு
– பஹத் ஜூனைட் டோஹா: இறை நியதிகளின் பார்வையில் 2015ஜனாதிபதித் தேர்தல்” என்ற கருப்பொருளில்’ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையம் கத்தார் ‘(SLIC Qatar) இன் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ்எதிர்வரும் 23 ஆம்திகதி வெள்ளிக்கிழமை (23 Jan. 2015), கத்தர் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் (FANAR) ‘பின் ஸயித்’ கேட்போர் கூடத்தில் மாலை 7.30முதல் 10.00 வரை நடைபெறும்.
-
மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து கலாசார அமைச்சின் புதிய செயலாளராக திருமதி ரஞ்ஜினி நடராஜபிள்ளை கடமையை பொறுப்பேற்றார்
– ஏ.எல்.எம்.தாஹிர் கொழும்பு: மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து கலாசார அமைச்சின் புதிய செயலாளராக திருமதி ரஞ்ஜினி நடராஜபிள்ளை இன்று (21) அமைச்சுக் காரியாலயத்தில் தனது கடமையை பொறுபேற்றுக் கொண்டார். இதன் போது அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.எம். நயீமுதீன் உதவிச் செயலாளர் கே. நிகரில்காந்த் ஆகியோரும் படத்தில் காணலாம்.
-
தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நிறுத்தம்
கொழும்பு: கடந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் எவ்வித மேலதிகமான வீண் செலவுகளின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். தயட்டகிருல போன்ற வீண் செலவுகள் நிறுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
-
பிரான்ஸ்: தாக்குதலில் பொதுமக்களை காப்பாற்றிய முஸ்லிம் ஊழியருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை
பரிஸ்: பரிஸ் நகரில் யூதப் பெருவணிக அங்காடி ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்த பலரைக் காப்பாற்றிய மாலி நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் கடை ஊழியர் ஒருவருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
-
மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல்: ரனில் விக்ரமசிங்க
கொழும்பு: புதிய பிரதமர், ரனில் விக்ரமசிங்க, அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பகிர்வை விஸ்தரிக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறார். சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்ட விரிசல் சுமார் 30 ஆண்டுகால உள்நாட்டுப்போராக வழிவகுத்ததற்கு ஒரு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வாக அவர் தமிழ் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப் பரவலை விஸ்தரிக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறார்.
-
“ஜனவரி 30 இற்குள் காத்தான்குடி நகரசபை ஊழலை நிரூபியுங்கள், இல்லாவிடின் வாபஸ் பெற வேண்டும்”
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையில் எதிர்கட்சி சார்பில் சுயோட்சைக் குழு ஒன்றில் நகர சபை உறுப்பினர்களாக செயற்படும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ச்சியாக நகர சபையில் ஊழல், ஊழல் என்று கூறி வருவதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.
-
KCDAயின் வேண்டுகோளுக்கினங்க கிம்மாவினால் குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு
– ஊடகப்பிரிவு, KCDA கல்குடா: கல்குடா பிரதேசத்தில் சமூக சேவைகள் அடிப்படையில் பல வேலைத்திட்டங்களை செய்துவரும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனமானது அன்மையில் அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் உம்ரா கடமையினை நிறைவேற்ற சென்றிருந்தவேளை அதன் செயலாளர் ஜனாப். ஐ.எம். றிஸ்வின்
-
உரிமைகள் மறுக்கப்பட்ட ஐ.தே. கட்சி மட்டு மாவட்ட ஆதரவாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – சட்டத்தரணி எம்.ஐ.எம். அஸ்வர்
எம்.ஐ.எம். அஸ்வர் மட்டக்களப்பு: அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பூரண அதரவோடு களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெற்று ஜனாதிபதியாகிய அதே வேளை ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களின் சுய ரூபத்தை மீண்டும் இறைவன் அம்பலப்படுத்தியுள்ளான்: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலளார்கள் சந்திப்பு ஒன்று அதன் காரியாலயத்தில் நடைபெற்றபோது முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-
தேர்தல் காலத்தில் பயன்படுத்தவிருந்த ஆயுதங்கள் மீட்பு
கொழும்பு: பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை இன்று திறந்த பொலிஸார், அங்கிருந்து துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், ஹெல்மட்டுகள் மற்றும் ஜக்கட்டுகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
-
NFGG என் மீது முன்வைத்த இரண்டு ஊழல் குற்றச்சாட்டுக்களை உடனடியாக இலஞ்ச ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவும் – பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் நடாத்திய ஊடவியலாளர் மகாநாட்டில் என் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.