Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கை சவூதி அரேபிய நாட்டு தூதரகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அனுதாபக் குறிப்பினை எழுதினார்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அண்மையில் காலஞ்சென்ற சவூதி அரேபிய நாட்டு மன்னர் மர்ஹூம் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் நினைவாக கொழும்பிலுள்ள இலங்கை சவூதி அரேபிய நாட்டு தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு புத்தகத்தில் ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது அனுதாபக் குறிப்பினை 27-01-2015 செவ்வாய்கிழமை எழுதினார்.

  • ‘சபை நடவடிக்கைகளை முறையான பரிசோதனைக்கு உட்படுத்த உடன்பட்டால் ஊழல் மோசடிகளை நிரூபிக்க முடியும். தவிசாளர் தயாரா?’: NFGG சவால்

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘காத்தான்குடி நகரசபையின் கடந்த கால நடவடிக்கைகளை முழுமையான, முறையான நிதிப்பரிசோதனைக்கும், தொழில்நுட்ப பரிசோதனைக்கும் உட்படுத்த அதன் தவிசாளர் உடன்பட்டால் மாத்திரமே ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியும். அதற்கு அவர் தயாரா என்பதனை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • வார உரைகல் பிரதம ஆசிரியரின் வீட்டின் மீதான தீவைப்பு முயற்சியை NFGG வன்மைக்கக் கண்டிக்கிறது

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: வாரஉரைகல் பிரதம ஆசிரியர் பூவி ரஹ்மத்துல்லாவின் வீட்டுக்குத் தீவைத்த வன்முறை சம்பவத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையான கண்டிப்பதாக அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • மாறிவரும் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை: கொழும்பில் சர்வதேச மாநாடு

    கொழும்பு: மாறிவரும் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் இன்று (27.1.2015) செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.

  • “பாரத லக்ஸமனை கொன்றது கோத்தாவே”

    கொழும்பு: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவை எவ்வாறு கொலை செய்தார் என நபரொருவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கோத்தபாயவுடன் கூட இருந்த நபரே இவ்வாறு பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் 59வது ஜனன தினம் இன்றாகும்.

  • புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்கள் நாடுதிரும்பி பணிகளை தொடர்வதற்கான சூழலை உருவாக்குக

    – பெரோஸ் முகமட் கொழும்பு: கடந்த காலங்களில் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள் நாடுதிரும்பி நாட்டுக்காக தமது பணிகளை தொடக்கூடிய சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • ஸ்ரீலங்கன் விமானசேவையின் புதிய தலைவர் பதவியேற்பு

    – எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் விமான சேவை இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீலங்கன் விமானசேவையின் புதிய தலைவராக திரு.அஜித் டயஸ் பதவியேற்றார். இந் நிகழ்வு ஸ்ரீலங்கன் விமானசேவையின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

  • “கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவிருக்கும் முதலமைச்சர் பதவியை அம்பாறை மாவட்டதிற்கே வழங்கப்பட வேண்டும்”: NK றம்ழான்

    காத்தான்குடி: கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவிருக்கும் முதலமைச்சர் பதவியை அம்பாறை மாவட்டதிற்கே வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

  • கே.பீ .ஐ கைது செய்வதா? இல்லையா? – மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளது

    – எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை விநியோகம் செய்தவரும் அவ்வியக்கத்தின் பிரதானியுமான குமரன் பத்மநாதன் என்ற கே.பீ ஐ கைது செய்வது அல்லது விசாரணை செய்வது தொடர்பில் எதிர்வரும் ஐந்தாம் (05) திகதி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இருவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று (27) கட்டளை பிறப்பித்துள்ளது. 

  • இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோரல்

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர்- 06 A, 305, போக்கர் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சகோதரர் அப்துல் நாசர் என்பவரின் எட்டு மாத வயதுடைய அப்துல்லாஹ் என்ற குழந்தைக்கு பிறப்பிலிருந்தே இருதய நோய் இருந்து வருவதால் கொழும்பு லேடி றிச்வே வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்திய போது “இருதய வால்பு மாற்று சத்திர சிகிச்சை செய்யவேண்டும் ‘என்று வைத்தியர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

  • கட்டார் வாழ், வாகனம் ஓடுகின்ற என் சகோதரர்களுக்கான ஓர்முக்கிய செய்தி

    டோஹா: கட்டார் நாட்டின் புதிய போக்கு வரத்து சட்டத்தின் படி, வலது பக்கமாக முந்திச்செல்பவர்கள் மற்றும் முன்னால் உள்ள வாகனத்திற்கு உரிய இடைவெளி விட்டு நிறுத்தாத பட்சத்தில் பின்வருமாறு தண்டனைக்கு உள்ளாகப்படுவார்கள்.

  • போகொல்லாகம வேண்டாம் – நிக்கவரெட்டிய ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வீதியில் இறங்கினர்

    – எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நிக்கவரெட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளராக நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

←Previous Page
1 … 541 542 543 544 545 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar