-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க அவர்களை NFGG சந்தித்துக் கலந்துரையாடியது
NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நேற்று (06.04.2015) மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியது.
-
மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய பூர்வீக காணிகளின் நிலை…?
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் / ஏ.எல்.டீன் பைரூஸ் மண்முனை: அண்மைக்காலமாக மண்முனைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய பூர்வீக காணிகளென்பது எடுப்பார் கைப்பிள்ளை போன்று கையாளப்படுவதை எங்களால் அவதானிக்க முடிகின்றது.
-
“சீனியர் வீரர்களைப் பழிவாங்கினார் வக்கார் யூனுஸ்”: அப்துல் ரசாக்
லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீரர்களுக்கு எதிரான நடவடிக்கையில், பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அப்துல் ரசாக் முன்வைத்துள்ளார்.
-
‘சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்கு சகல தகுதிகளும் உண்டு’: யஹ்யா காண்
சாய்ந்தமருது: எமது சாய்ந்தமருது கல்விமான்கள், புத்துஜீவிகள், தேவைக்கும் மேலதிகமான மக்கள் தொகை, பிரதேச செயலகம், தேசிய பாடசாலைகள், எத்தனையோ அரசாங்க காரியாலயங்கள் உள்ள ஒரு இடம் .ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு தனிப்பட்ட சுயநலதுக்காக நமக்கு கிடைக்க வேண்டிய மாநகர சபையோ, நகர சபையோ, பிரதேச சபையோ தடுக்கப்பட்டு வந்தது என்பது எல்லோரும் அறிந்த விடயம்.
-
சவூதியில் இலங்கை பணிப்பெண் கொலை! சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை
மஸ்கெலியா: சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே இவ்வாறு சவூதிக்கு பணிபெண்ணாக சென்று அங்கு உயிரிழந்துள்ளார்.
-
திக்ரித் மனிதப் புதைகுழிகள் தோண்டப்படுகின்றன
திக்ரித்: இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளிடம் இருந்து திக்ரித் நகரை அரசாங்க படைகளும், ஷியா ஆயுதக்குழுக்களும் மீளக்கைப்பற்றியதை அடுத்து, அங்கு மனிதப் புதைகுழிகள் என்று சந்தேகிக்கப்படும் 12 இடங்களை ஈராக்கிய தடயவியல் குழுக்கள் தோண்ட ஆரம்பித்துள்ளன.
-
திருமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
– பஹ்மி யூஸூப் திருகோணமலை: தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு 06/04/2015 அன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் உள்நாட்டுபோக்குவரத்து பிரதியமைச்சரும் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ்.எம்.எஸ்.தௌபீக் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பரிசில்களையும் வெற்றி கேடயங்களையும் வழங்கி வைத்ததார்.
-
வடக்கில் ஒரு வீட்டையேனும் கட்டாது 1740 இலட்ச ரூபாய் மோசடி
– எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: சுனாமியின் பின்னர் வடக்கில் வீடுகளை அமைப்பதற்காக கடந்த அரசாங்க காலத்தில் 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமொன்றின் மூலம் ஒரு வீட்டையேனும் கட்டாது 1740 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவமொன்று தொடர்பில் மூன்று பேரை பொலீஸ் விசேட விசாரணைக் குழு கைது செய்துள்ளதோடு அதனோடு சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் பிரதிநிதியொருவரையும் கைது செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
-
பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக சோமசுந்தரம் கோகுலதாசன்
– ஏ.எல்.எம். தாஹிர் கொழும்பு: பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக சோமசுந்தரம் கோகுலதாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களால் இன் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-
“மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக துணிச்சலுடன் மீள்குடியேற்றத்தை சந்தித்த மக்கள் புதுக்குடியிறுப்பு மக்களே”: அமைச்சர் றிஷாத்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்தில் முதலாவதாக துணிச்சலுடன் மீள்குடியேற்றத்தை சந்தித்த மக்கள் புதுக்குடியிறுப்பு மக்கள் என பாராட்டு தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணித் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் சில நாட்கள் அரசியல் பதவி இல்லைாமல் இருந்ததால் இந்த மக்களுக்கு கிடைக்கவிருந்த வீடமைப்பு திட்டத்தினையும் திருப்பி அனுப்பிய சம்பவத்தையும் காணமுடிந்ததாகவும் கூறினார்.
-
இஸ்ரேல் விடுவித்த பாதி வரிப் பணத்தை ஏற்க பலஸ்தீன அதிகார சபை மறுப்பு
ஜெரூஸலம்: பலஸ்தீன அதிகார சபைக்கு சொந்தமான பல நூறு மில்லியன் டொலர் வரிப் பணத்தை இஸ்ரேல் முழுமையாக விடுவிக்காவிட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி.) செல்லப் போவதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பலஸ்தீனம் ஐ.சி.சியில் இணைய நடவடிக்கை எடுத்ததை அடுத்தே பலஸ்தீன அதிகார சபைக்கு சேரவேண்டிய மாதாந்த வரிப்பணத்தை இஸ்ரேல் கடந்த ஜனவரியில் முடக்கியது.
-
எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சைக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி
கொழும்பு: எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்சித் தலைவர்களுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் இன்றையதினம் இது தொடர்பில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்பப்படுகிறது.