-
“கிழக்கு என்பது முஸ்லிம் காங்கிரசின் தாயகம், அங்கு எழும்புக்கின்ற அலை என்பது முஸ்லிம் காங்கிரசின் அலையாகும்”: சபீக் ரஜாப்டீன்
– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அதன் தேசிய அமைப்பாளரும், தேசிய நீர் வழங்கள் அதிகார சபையின் உபதலைவருமான சபீக் ரஜாப்டீனுடனான நேர்காணல் கடந்த 30.03.2015 திங்கட் கிழமை கொழும்பு ரட்மலானையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கள் அதிகார சபையில் இடம் பெற்றது. அதன் விலாவாரியான விடயங்கள் எமது வாசகர்களுக்காக.
-
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் விஷேட உதவித் திட்டங்கள்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மன்னார்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களுடைய பிரணாம அடிப்படையிலான நிதி கொடுப்பனவின் கீழ் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் மத ஸ்தலங்கள் என்பனவற்றுக்கு விஷேட உதவித்திட்டங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
-
மக்கள் ஆணையைப் பெறாத சந்திரிகா தீர்மானம் எடுக்க முடியாது
கொழும்பு: மக்கள் ஆணை எதையும் பெற்றுக் கொள்ளாத சந்திரிகா குமாரதுங்கவுக்கு நாட்டைப் பற்றிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது என ‘பிலிதுறு’ ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மம்பில கேள்வி யெழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷவை பேராசைக்காரர் என்று விமர்சிக்கும் எந்த அருகதையும் சந்திரிகாவுக்குக் கிடையாது என்றும் தெரிவித்தார்.
-
கமலினி செல்வராஜன் நேற்று காலமானார்
கொழும்பு: இலங்கையின் புகழ்பெற்ற ஒலி/ஒளிபரப் பாளரும் நடிகையுமான கமலினி செல்வராஜன் நேற்று கொழும்பில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 62. கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த கமலினி செல்வராஜன் நேற்றுக் காலை காலமானார். இவரது பூதவுடல் கொழும்பு பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பொது மக்கள் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்த முடியும்.
-
ஆதரவு வழங்குவதாக கூறி காலை வாரிவிட்டனர்
கொழும்பு: திறைசேரி உண்டியல் அனுமதி வழங்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சியினர் உறுதிமொழி வழங்கியிருந்த போதும் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்திருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
-
18 வருடங்களாக அடைபட்டிருந்த இலங்கை பெண் நாடு திரும்புகிறார்
கொழும்பு: சவூதி அரேபிய கிராமத்தில் பணிப் பெண்ணாக தொழில்புரிந்த ஆர் பேமவதி என்ற பெண் 18 வருடங்கள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்து இன்று 08 ஆம் திகதி காலை இலங்கை திரும்புகிறார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டில் ரியாத் திலுள்ள தூதராலயம் மேற்கொண்ட முயற்சியின் பலனாகவே இந்தப் பெண்ணை விடுவித்துக் கொள்ள முடிந்துள்ளது. இந்தப் பெண் வேலைசெய்த இடத்திலிருந்தே மீட்கப்பட்டாள்.
-
அரசாங்கத்தின் நிதிப்பிரேரணை 21 வாக்குகளால் தோற்கடிப்பு!!
கொழும்பு: 400 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வெளியிட்டு அரசாங்கத்திற்கு கடன் பெறுவது தொடர்பான உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் மீதான தீர்மானத்தை அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணை நேற்று 21 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
-
“பணத்திற்காக பழங்குடியினர் மரம் வெட்டச் செல்கின்றனர்”
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டப்போனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகிறது. இருந்தும் வேறு வேலை ஏதும் செய்ய முடியாத சூழலில் இருக்கும் பழங்குடியினரும், மலைப் பகுதிகள் அருகே வசிக்கும் ஏழை மக்களும் இத்தொழிலுக்குச் செல்வது தொடர்வதாக மலைவாழ் மக்களுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
-
காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரியின் ஏற்பாட்டில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்திற்கான சீருடை வழங்கும் நிகழ்வு
– ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரியின் கல்வி ,கலை கலாச்சார,சமூக சேவை பிரிவினால் பல்வேறு பட்ட சமூகப்பணிகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதன் ஓர் அங்கமாக காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்திற்கான சீருடை வழங்கும் நிகழ்வு (07.04.2015 செவ்வாய்) கல்லூரியில் அதன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தலைமையில் நடைபெற்றது.
-
பாகிஸ்தானில் இடம் பெற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் கலந்துரையாடல்களின் போது எடுக்கப்பட்ட படங்கள்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் இஸ்லாமாபாத்: இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபலசிறிசேன தலைமையிலான அமைச்சர்கள் பாகிஸ்தானில் இடம் பெற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் கலந்துரையாடல்களின் போது எடுக்கப்பட்ட படங்கள்.
-
ஏறாவூர் தௌஹீத் ஜமாஆத்தின் ஏற்பாட்டில் விஷேட பயான் நிகழ்வு எதிர் வரும் சனிக்கிழமை
எம்.ரீ.எம்.பாரிஸ் ஏறாவூர்: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11.04.2015ம் திகதி சனிக்கிழமை ஏறாவூர் ஆயிஷா பள்ளிவாசலில் பெண்கள், ஆன்கள் இரு சாராருக்கும் விஷேட பயான் நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வில் இலங்கையின் பிரபல மார்க்க சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் எஸ்.எம். அப்துல் ஹமீட் (ஷரயீ) கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
-
ஏறாவூர் நகர சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிப்பிரமாணம்
எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் ஏறாவூர்: ஏறாவூர் நகர சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.