-
முஸ்லிம் அரசியல் முன்னெடுப்புகளில் உள்ள தடைகளும், யாதார்த்தங்களைப் புரிந்து கொள்ளுதலும்
டாக்டர்: ஐ. எல். எம். றிபாஸ் காத்தான்குடி: நமது தேசத்தில் பல அரசியல் ஒழுங்குகள் பற்றிய கருத்தாடல்கள் உள்ளன அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல் பற்றிய கருத்தாடல்கள் மிக அதிகமாக முஸ்லிம் சமூகத்துக்குள் பேசப்பட்டுள்ளது. பேசப்பட்டும் வருகிறது. கள அரசியலில் உள்ளவர்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய இயக்கங்கள், அறிவியல் தளத்திலுள்ளோர், சமுக ஆர்வலர்கள் என பலதரப்பாரும் தமது பின்புல சிந்தனாதிக்கத்துக்கும்,வாசிப்புக்கும், அனுபவத்திற்கும், எல்லாவற்றிக்கும் மேலாக தனி மனித நம்பிக்கைகளுக்கும் இயைபாக அரசியல் கருத்துகளை கொண்டிருக்கின்றனர்.
-
‘அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம் ‘என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் – அப்பாஸி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அல்மனார்: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 09/04/2015 வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
‘ஞானபீட விருது’ பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானர்
சென்னை: தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் இந்தியாவில் இலக்கியத்துக்கான அதியுயர் விருதான ஞானபீட விருதைப் பெற்றவருமான ஜெயகாந்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானர். அவருக்கு வயது 81. கடலூரில் 1934 ஆண்டு பிறந்த அவருக்கு சிறு வயதிலிருந்து பாரதியாரின் படைப்புகள் மற்றும் இடதுசாரி சித்தாந்தங்கள் மீது அதிக ஆர்வம் இருந்தது.
-
இதற்கு யார் பொறுப்பு..?
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள பல வீதிகள் அரை கொங்கிறீட் வீதியாக போடப்பட்டுள்ளபோதிலும் அதன் அருகிலுள்ள வடிகான் மூடிகள் தரம் குறைந்தவையாக காணப்படுவதாக பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதற்கான காரணம் அவ்வீதிகளால் கணரக வாகனங்கள் சென்று மூடிகளை சேதப்படுத்துவதை காணமுடிகின்றது.
-
நாகூர் ஈ.எம்.ஹனிபா
– AK-79 காத்தான்குடி: நாகூர் ஈ.எம். ஹனிபா என்றழைக்கப்பட்ட இஸ்மாயீல் முகம்மது ஹனீபா நேற்று காலமானார். ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’. 1960 களில் இருந்து தென் இந்தியாவில் புகழ்பெற்றிருந்த போதிலும், இலங்கையில் ஈ.எம். ஹனீபா 1970களின் பிற்பாடு புகழ்பெற்றிருந்தார்.
-
விஸ்டன் : மிகச் சிறந்த 5 கிரிக்கட் வீரர்களில் மெத்தியுஸ், சங்கா தெரிவு
கொழும்பு: 2015 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த ஐந்து கிரிக்கட் வீரர்களில் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் இடம்பெற்றுள்ளார். அதேவேளை நடப்பாண்டுக்கான உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்ககார தெரிவாகியுள்ளார்.
-
பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாதிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன்”
கொழும்பு: “பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாதிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன்” என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவத்தி தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் 18 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த ஆர். பிரேமவத்தி என்னும் இலங்கை பணிப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
-
பேருந்தில் கைது செய்யப்பட்டு, காட்டில் கொல்லப்பட்டனர்: தொடரும் சந்தனக் கடத்தல் தாக்குதல் மர்மம்!
திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்து உள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஏழுபேர் ஆந்திர மாநில எல்லையில் கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கி.மா.சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அன்று எடுத்த தீர்க்க தரிசனமான முடிவினால் இன்று கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை சமூகம் பெற்றுள்ளது: முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் தெரிவிப்பு
ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தனக்கு கிடைத்த அத்தனை வசதி, வாய்ப்புகளையும் உதரித்தள்ளிவிட்டு எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் சமூகத்தின் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு முதலமைச்சர் விடயத்தில் அவர் எடுத்த தீர்மானத்தின் காரணமாகவே இன்று கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
-
சம்மேளனத்தையும் அதன் உத்தியோக பிரதி நிதிகளையும் அவமானப்படுத்தியதாக அறிந்து மிகவும் கவலையடைவதுடன் அதற்காக எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
தலைவர்/ செயலாளர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் காத்தான்குடி அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
-
அஸ்கிரிய மகாநாயக்க தேரர் காலமானார்
– எம்.ஐ. அப்துல் நஸார் கண்டி: அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிகாய பிரிவின் பிரதம சங்க நாயக்கர் அதி பூஜ்ஜிய உடகம சிறி புத்தரகித்த மாகா நாயக்க தேரர் இன்று காலை (08) காலமானார்.சிங்கப்பூரில் மௌன்ட் எலிசபத் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளதாக தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்தார்.
-
சத்திர சிகிச்சையின்போது மின்சாரம் துண்டிப்பு – நோயாளியொருவருக்கு பாதிப்பு
– எம்.ஐ. அப்துல் நஸார் காலி: காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவில் சத்திர சிகிச்சையொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பற்றரியின் உதவியுடன் குறித்த சத்திர சிகிச்சையினை தொடர்ந்து மேற்கொண்ட போதிலும் மேலும் 40 நிமிடங்கள் வரையிலேயே அந்த பற்றரி இயங்கக்கூடிய சக்தியை கொண்டிருந்ததாகவும் சத்திர சிகிச்சையின் பின்னர் இயந்திர சாதனங்களை இயக்குவதற்கு மின்சாரம் இல்லாமலிருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.