திருகோணமலை: தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு 06/04/2015 அன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் உள்நாட்டுபோக்குவரத்து பிரதியமைச்சரும் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ்.எம்.எஸ்.தௌபீக் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பரிசில்களையும் வெற்றி கேடயங்களையும் வழங்கி வைத்ததார்.
மேலும் இந்நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.என்.விஜேந்திரன் அவர்களும் விசேட அதிதிகளாக திரு.ஏ.செல்வநாயகம் ( பிரதிக் கல்வி பணிப்பாளர்), என்.நூர் முஹம்மட் ( நகர சபை உறுப்பினர் ), அல்ஹாஜ் எம்.பி.எம் முஸ்தபா (ஓய்வுபெற்ற அதிபர்), என் எம் மஹ்சூம் ( பிரதியமைச்சரின் இணைப்பாளர் ) எம்.எம்.முத்தலிப் ( தலைவர் மத்திய SLMC குழு ) கலந்து கொண்டு பரிசில்களையும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்கள்.
Published by




Leave a comment