-
“19வது திருத்தச்சட்டம் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை”
கொழும்பு: முன்மொழியப்பட்டிருக்கும் 19வது திருத்தச்சட்டமூலம் நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லையென சட்டமா அதிபர் யுவாஞ்சன் வசுந்தரா விஜேதிலக நேற்று உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
-
மலேசியாவில் தீவிரவாத சந்தேகத்தில் 17 நபர்கள் கைது
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார்கள் எனும் சந்தேகத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறையின் தலைவர் கூறுகிறார்.கோலாலம்பூரில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த இவர்களில் இருவர் அண்மையில்தான் சிரியாவில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து திரும்பியிருந்தனர் என காலித் அபுபகர் தெரிவித்துள்ளார்.
-
100 வயதில் நீச்சல் சாதனை புரிந்தார் ஜப்பானிய மூதாட்டி
டோக்யோ: நூறு வயதில் சாதனை என்பது அபூர்வம். அதுவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து விளையாட்டுத்துறையில் சாதனை என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.அப்படியான ஒரு சாதனையைத்தான் ஜப்பானைச் சேர்ந்த மீக்கோ நகாயோக்கா செய்துள்ளார். உலகளவில் 1500 மீட்டர் தூரத்தை நூறு வயதில் முதலில் நீந்தியவர் எனும் பெருமையும் வரவேற்பையும் மீக்கோ நகாயோக்கோ பெற்றுள்ளார். 25 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளத்தில் அவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.
-
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கத்தை அமைப்பதற்கான பொது வேலைத் திட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பாடசாலையானது 01.03.1911 ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டு விழாக்கண்ட பாடசாலையாகும். இப்பாடசாலையில் கல்விகற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று சமுகத்தில் உயர் நிலையில் உள்ளார்கள். இவ்வாறு கல்விக் கண் திறந்த இப்பாடசாலையில் பழைய மாணவர் சங்கமொன்று இயங்கு நிலையில் இல்லாமை பெரும் குறையாகும்.
-
காத்தான்குடி நகர அபிவிருத்தி திட்டத்திற்கான விசேட கூட்டமும் களப்பயணமும்
– ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு திணைக்களத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடலும் களப்பயனமும் எதிர்வரும் (09.04.2015 வியாழன்) அன்று காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
-
முச்சக்கரவண்டி – லொறி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணம்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் புளிச்சாக்குளம்: இன்று புளிச்சாக்குளம் பகுதியில் இடம் பெற்ற முச்சக்கரவண்டி – லொறி விபத்தில் மரணமான ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஜனாஸா நல்லடக்கம் புத்தளம் மன்னார் வீதி வேப்பமடு நிவ்சிட்னி முகாம் மையவாடியில் இரவு இடம் பெற்றது.
-
ஜனாதிபதிக்கு பாகிஸ்தானில் செங்கம்பள வரவேற்பு
கராச்சி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை பாகிஸ்தானை வந்தடைந்தார்.
-
தேர்தலின் பின்னர் ஐ.தே.க. பலமான கட்சியாக மிளிரும் : அம்பாறையில் ரணில் தெரிவிப்பு
அம்பாறை: எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் ஒரு பலம் பொருந்திய கட்சியாக மிளிரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
-
எதிர்கட்சித் தலைவர் பதவியை பெறுவதில் நியாயம் உள்ளது: சம்பந்தர்
கொழும்பு: எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று அதன் தலைவர் சம்பந்தர் கூறுகிறார்.
-
தேவ அதிரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கு எமது வாழ்த்துக்கள்
புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மட்டக்களப்பு: தமது முன்னைய இனவாதக் கருத்துக்களை விலக்கிக்கொண்டு தமிழ் – முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து ‘கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற பெயரில் புதிய ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றினை அமைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தேவ அதிரன் அவர்கள் முன்வந்துள்ளமையானது, தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
-
ஜேர்மன் நூலகத்தில் பல ஆண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்த இறைத்தூதர் காலத்து குர்ஆன் பாகங்கள் ஆய்வில் நிரூபணம்
பேர்லின்: இறைத்தூதர் முஹமது நபி (ஸல்) காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பேர்லின் அரச நூலகத்தில் பல ஆண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த குர்ஆன் பாகங்கள் சூரிச்சில் இருக்கும் ஆய்வுகூடத்தில் சோதனையிடப்பட்டுள்ளது.
-
சயீட் அஜ்மல் மீண்டும் பாகிஸ்தான் அணியில்
லாஹூர்: பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மலின் பந்துவீச்சு முறையானது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தெரிவித்ததையடுத்து, அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். பங்களாதேஷ் சுற்றுப் பயணத்துக்கான பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.