-
ஜனாதிபதி மைத்திரி பாகிஸ்தானுக்கு விஜயம்
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான், தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமவீர, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, வாணிப, கைத்தொழில் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகிஸ்வர
-
‘பிரான்ஸில் மஸ்ஜித்களின் எண்ணிக்கையை இரு மடங்காக்க வேண்டும்’
பரிஸ்: பிரான்ஸில் இருக்கும் மஸ்ஜித்களின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் முஸ்லீம் மதத்தலைவர் ஒருவர் கோரியுள்ளார். பிரான்ஸின் இஸ்லாமிய சமூகத்தின் தேவைகளுக்கு பிரான்ஸில் தற்போது இருக்கும் 2,200 மஸ்ஜித்கள் போதுமானவையாக இல்லை என்று பிரென்சு முஸ்லீம் கவுன்சிலின் தலைவரும் பரிஸ் மசூதித் தலைவருமான டாலில் அபூபக்ர் தெரிவித்துள்ளார்.
-
கட்டாரில் ‘நபிவழியில் நம் தொழுகை தொடர் ‘ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) பனார்: கட்டாரில் நபிவழியில் நம் தொழுகை தொடர் ‘ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு நாளை 6 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.
-
கிழக்கு ஊடக சங்கத்துடனான சந்திப்பில் ஓப்பனைகள் இல்லாமல் மனந்திறந்தார் மட்டுஅரசாங்க அதிபர்
கிழக்கு ஊடக சங்கம் மட்டக்களப்பு: கிழக்கு ஊடக சங்கத்தின் பிரதான நிர்வாகிகளுக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ். எம். சார்ள்ஸ் அம்மையாருக்கும் இடையிலான அறிமுகச் சந்திப்பொன்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
-
அமைச்சர் றவூப் ஹக்கீம் அல்-கிம்மா நிறுவனத்திற்கு விஜயம்
– எம்.ரீ.எம். பாரிஸ் கல்குடா: கல்குடா அல்-கிம்மா நிறுவனத்திற்கு நேற்று (04) சனிக்கிழமை ,நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்திஅமைச்சர் ரவூப் ஹக்கீம்,கிழக்குமாகாணமுதலமைச்சர் அல்-ஹாஜ் நஸீர் ஹாபிஸ் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான சிப்லி பாறுக்,அலிசாஹிர் மௌலானா,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் வை.எல்.எம். முபீன் உள்ளிட்டஅரசியல் பிரமுகர்கள் விஜயமென்றினை மேற்கொண்டிருந்தனர்.
-
பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப் பட்டறை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்று கடந்த (03.04.2015) காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
-
வன்னி அரசியலில் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா….’
– வன்னிகுரலான் வன்னி: அரசியலில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று கேள்வி கேற்பது உண்மையாக இருக்கும்.வளர்த்தகடா மார்பில் குத்திக் கொண்மே இருக்கின்றது என்பதற்கு நல்லதொரு உதாரணமாக வன்னி மாவட்டத்தின் அரசியலில் காணமுடிகின்றது.வன்னி மாவட்டத்தில் தற்போது சிலரால் பேசப்படும் அரசியல் பேச்சுக்களில் எந்தளவு மக்கள் தாக்கம் காண்டுள்ளனர் என்று கள ஆய்வினை மேற்கொண்டு பார்த்தால் அது மிகவும் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கின்றது.
-
யு.ஏ.ஈ. பொருளாதாரக் கண்காட்சி: இலங்கை சார்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பங்கேற்பு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா டுபாய்: ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பொருளாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த வருடாந்த முதலீட்டாளர்களுக்கான கூட்டமும், மற்றும் கண்காட்சியும் அண்மையில் துபாயில் அமைந்துள்ள சர்வதேச கூட்ட அரங்கில் இடம் பெற்றது. ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பிரதி ஜனாதிபதியும், பிரதமருமான ஷேய்க் முஹம்மத் பின் ராசிட் அல் மக்தும் தலைமையில் இடம் பெற்ற இந்த அமர்வில் 140 நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
-
“இஸ்லாமிய வரையறைகளுக்கு முரண்படாத வகையில் காத்தான்குடி நூதன சாலை அமையப்பெற வேண்டும்”: NFGG வேண்டுகோள்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: “நூதனசாலையில் சிலைகளை அமைக்கும் விடயத்தில் உலமாக்களின் வழிகாட்டுதல்களை நிராகரித்து மார்க்கத்துக்கு விரோதமான நடவடிக்கைளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இஸ்லாத்திற்கு முரண்படாத வகையில் சமுக நோக்கத்தை நிறைவு செய்யத்தக்க ஒன்றாக காத்தான்குடி நூதனசாலையை அமைப்பதற்கு அவர் ஒத்துழைக்க வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) காத்தான்குடி செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி பிரதேசத்தில் ஊடகத்துறையில் கடமையாற்றுபவர்களிடமிருந்து அங்கத்துவ விண்ணப்பங்கள் கோரல்
காத்தான்குடி: எதிர்வரும் காத்தான்குடி மீடியா போரத்தின் 16 வது வருடாந்த மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பிரதேசத்தில் ஊடகத்துறையில் கடமையாற்றுபவர்களிடமிருந்து அங்கத்துவ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
-
மட்டக்களப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய முழுமையான உரையும் அதன் தமிழாக்கமும்: (ஒலிப்பதிவு)
– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: 04-04-2015 நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய முழுமையான உரையும் அதன் தமிழாக்கமும்.ஓடியோ ஒலிப்பதிவு இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
வறுமையின் கொடூரம் குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பு சர்நீதியா
– எம்.எஸ்.எம். நூர்தீன் மட்டக்களப்பு: மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக செல்கின்ற ஆண்கள் பெண்கள் என பலரும் கை நிறைய சம்பாதித்து பணம் பொருள் என்பவற்றுடன் ஊர் திரும்புகின்றனர். சிலர் பல கஸ்டங்களுடன் வெறும் கையுடன் நாடு திரும்புகின்றனர். தமக்கான இல்லமொன்றை அமைப்பதற்காக தனது குடும்பத்தை வாழ வைப்பதற்காக பொருளாதாரத்தை ஈட்டுவதற்காக என இவ்வாறு பல நோக்கங்களுக்காக வெளிநாடு செல்கின்றனர்.