-
வவுனியா சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் வித்தியாலயத்தில் பள்ளிவாயல், கட்டடம் அமைச்சர் றிஷாத்தினால் திறந்து வைப்பு
வவுனியா: வவுனியா சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் வித்தியாலயத்தில் 1கோடி 60 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி பாடசாலை கட்டிடம்,சவூதி அரேபியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிறுவனம் என்பனவற்றின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக்கான பள்ளிவாசல் என்பன இன்று திறந்து வைக்கப்பட்டது.
-
கிராமத்துக்குஒருமில்லியன்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: வீடமைப்பு சமுர்த்தி அமைச்சினூடாக கிராமத்துக்கு ஒரு மில்லியன் என்கின்ற நிகழ்ச்சித்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் இலங்கையில் இருக்கின்ற 14009 கிராம சேவையாளர் பிரிவுகள் நன்மையடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பேனாட் சற்று முன்னர் காலமானார்
– MJ மெல்போன்: அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், பிரபல உலகப் புகழ்பெற்ற முன்னாள் வர்ணனையாளருமான ரிச்சி பேனாட், சற்று முன்னர் காலமானதாக அவுஸ்திரேலியா அறிவித்திருக்கின்றது. இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.
-
19 ஏழு உப பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு
கொழும்பு: 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் உள்ள இரு சரத்துக்களிலுள்ள 7 உப பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற வியாக் கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
-
19- திருத்தம் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு
பொலனறுவை: அரசியலமைப்பின் 19 வது திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19 வது திருத்தம் சமர்பிக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
-
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் மாபெரும் வியாபார சந்தை ஆரம்பித்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மற்றும் ‘சேவ் த சில்ரன்’ நிறுவனங்கள் இணைந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வியாபார சந்தை 09-05-2015 நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
“வன்னி மாவட்ட மக்களுக்காக கடந்த காலங்களில் 15 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன”: அமைச்சர் ரிஷாத்
– வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கென கடந்த காலங்களில் 15 ஆயிரம் வீடுகள் வரை பல்வேறு நிறுவனங்கள் நிர்மாணித்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரான றிசாத் பதியுதீன், இதில் அதிகமான வீடுகள் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
-
சாய்ந்தமருதில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அங்குரார்ப்பணம்
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் சாய்ந்தமருதில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது.
-
பௌத்த தர்மத்தினூடாக தேச நலனில் அக்கறை செலுத்திய தேரரின் மறைவையிட்டு கவலையடைகிறோம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: பௌத்த தர்மத்தின் காவலனாக உயர் அந்தஸ்தில் இருந்துகொண்டு நாட்டின் ஐக்கியம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, மீள் இணக்கப்பாடு என்பனவற்றிற்காக பாரிய பங்களிப்புச் செய்த அஸ்கிரிய பீட மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் அவர்களின் மறைவையிட்டு நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம்.
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் NFGG பிரதிநிதிகளைச் சந்தித்தனர்
NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர்கள் தொடர்பான அதிகாரி ரொசினா தமன்வெல மற்றும் இலங்கைக்கான அமெரிக்க உயரிஸ்தானிகராலய அரசியல் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி ஜோசப் செல்லர் ஆகியோர் இன்று (09.04.2015) நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத் மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
-
மகா நாயக்க தேரரின் மறைவுக்கு தேசிய சூறா சபை அனுதாபம்
எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் அதி கௌரவ உடகம சிறி புத்தரகித்த மாகா நாயக்க தேரரின் மறைவு தொடர்பில் தேசிய சூறா சபை மிகவும் கவலையடைந்துள்ளதாக தேசிய சூறா சபை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கும் மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஏ.எல்.எம்.தாஹிர் கொழும்பு: கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கும் மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சுக் காரியாலத்தில் இடம்பெற்றதாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.