-
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவன் கௌரவிக்கப்படாதது ஏன்?
– ஏறாவூர் அபூ பயாஸ் காத்தான்குடி: “EDUCATION DEVELOPMENT FORUM & WORLD ASSEMBLY OF MUSLIM YOUTH” எனும் WAMY அமைப்பினரால் நேற்று (12) காலை 09.00 மணிக்கு பொலநறுவ, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மொழி ரீதியிலான 2014 , ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து சான்றிதழும்,பதக்கமும் அணிவிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
-
க.பொ.த சாதாரண தர பரீ்ட்சை எழுதிய மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய புள்ளிவிபரவியல் கற்கைநெறி
மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் சம்மாந்துறை: க.பொ.த சாதாரண தர பரீ்ட்சை எழுதி விட்டு கலை-மற்றும் வர்த்தக பிரிவில் உயர்தரம் கற்க இருக்கும் மாணவர்களின் முழுக் கவனத்திற்கு. அதாவது கடந்த காலங்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் Z புள்ளி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்தில் எதிர் கொள்ளும் சவால்களையும் நாம் யாவரும் நன்கு அறிவோம்.
-
தனிக் கூட்டணியில் மஹிந்தவின் அரசியல் வியூகம்
கொழும்பு: தனியான கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தம்மை தெரிவு செய்யாவிட்டால், தனியான கூட்டணி ஒன்றை அமைத்து போட்டியிட முன்னாள் ஜனாதிபதி ஆயத்தமாகி வருகின்றார்.
-
வன்னி மாவட்டத்தில் உள்ள மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக்களின் இணைத் தலைவராக அமைச்சர் றிசாத் ஜனாதிபதியினால் நியமனம்
– இர்ஷாத் ரஹ்மதுல்லா கொழும்பு: மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி இணைப்பு குழுவின் இணைத் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸி்ன் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அல்-அதாலா பௌண்டேஷன் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் பெறுவதற்கான உதவி
– M. பழீல் அப்துல் கபூர் காத்தான்குடி: காத்தான்குடி அல்-அதாலா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (11.04.2015) PMGGயின் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.
-
மன்னார் கரிசல் மக்களுக்கான வீடுகள் கையளிப்பு
– இர்ஷாத் ரஹ்மதுல்லா வன்னி: குவைத் நாட்டினை சேர்ந்த தனவந்த பெண்மணியொருவர் தனது தாயாரின் நினைவாக மன்னார் கரிசல் மக்களுக்கான வீடமைப்பு திட்டமொன்றினை வழங்கியுள்ளார். இலங்கையில் இயங்கிவரும் ஜமாத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவிடத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் முன்வைத்த தேவைப்பாடுகள் தொடர்பில் அந்த அமைப்பு குவைத் சகாத் நிதியத்தின் உதவியுடன் இதனை பெற்றுக் கொடுத்துள்ளது.
-
ஸம்ஸம் நீரைப் பெறுவதானால் கடவுச்சீட்டு அவசியம்
– MJ ஜித்தா: உலக அதிசயங்களுள் பிரதானமாகவும், உலக முஸ்லிம்களின் அற்புதப் பாணமாகவும் கருதப்படும் “ஸம்ஸம் நீரைக் கொள்வனவு செய்ய வேண்டுமானால், பிரயாணிகள் தங்களது கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்” என்பதாக மன்னர் அப்துல்லாஹ் ஸம்ஸம் திட்டக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
-
அரசியலுக்குள் சிக்கியுள்ள சுன்னாகத்து நீர்? பருகலாமா? இல்லையா? என்பதில் ஒரே குழப்பம்!!
சுன்னாகம்: கடந்த ஒரு வருடமாக நிலவி வரும் சுன்னாகம் நீர்ப்பிரச்சினை தற்போது அரசியலுக்குள்ளும் சிக்குண்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் நீரைப் பருகுவதா இல்லையா எனும் இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டு சிக்கித் தவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவ்விடயம் உள்ளூர் பிரதேச மட்டத்திலான அரசியல்வாதிகள் சிலருக்கும் வைத்திய அதிகாரிகள் சிலருக்குமிடையேயான போட்டித் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது.
-
பாகிஸ்தானில் பாலம் கட்டிக்கொண்டிருந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பாலம் கட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்தித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.
-
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் அமெரிக்கா – கியூபா அதிபர்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவும் கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் ஒருவர் மற்றவரிடம் பகைமையும் அவநம்பிக்கையும் பாராட்டியும் வந்த நிலையில், இவ்விரு நாடுகளின் அதிபர்களும் இன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.
-
பாலாவி கரம்பை ஏ முகாமில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் புத்தளம்: றிசாத் பதியுதீன் என்கின்ற ஒரு அமைச்சர் எமக்கு கிடைக்காமல் போயிருந்தால் வடக்கில் எமது தாயகத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க முடியாது என மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பிர் அப்துல் காதர் நவ்பீல் தெரிவித்தார்.
-
அக்குறனை ஜாமிஅஹ் றஹ்மானிய்யஹ் அறபுக் கல்லூரியின் 2015-2016 புதிய மாணவர்கள் அனுமதி பற்றிய விபரம்
பழுலுல்லாஹ் பர்ஹான் அக்குறனை: அக்குறனை ஜாமிஅஹ் றஹ்மானிய்யஹ் அறபுக் கல்லூரியின் 2015-2016 புதிய மாணவர்கள் அனுமதி பற்றிய விபரம் இத்துடன் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.