-
ஐரோப்பிய சம்பியன் லீக் இறுதிப்போட்டிக்கு பார்ஸிலோனா தகுதி
– MJ மியூனிக்: நேற்றிரவு பேயர்ன் மியூனிக் மைதானத்தில் இடம்பெற்ற பேயர்ன் மியூனிக்-பார்ஸிலோனா ஆகிய அணிகளுக்கிடையிலான ஐரோப்பிய சம்பியன் லீக் அரையிறுதிப்போட்டியின் நொக்கவுட் சுற்றில் பேயர்ன் மியூனிக் அணியை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து, பார்ஸிலோனா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கின்றது.
-
கட்டாரில் -விஷேட பயான் நிகழ்ச்சி
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி
-
மீள் குடியேற்றம் செய்யப்படும் மன்னார் பகுதிக்கு NFGG கள விஜயம்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மன்னார்: மன்னார் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச் சாட்டுகள் தொடர்பில் விடயங்களை நேரில் கண்டறியும் கள விஜயம் ஒன்றினை நேற்று (12.05.2015) NFGG மேற்கொண்டது. மன்னார் முசலி பிரதேசத்தில் முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்காக வில்பத்து சரணாலய காட்டுப்பகுதி அழிக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு கடந்த சில வாரங்களாக பலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
-
திருமலை ஊடகவியலாளர் யாசீம் தாக்கப்பட்டமைக்கு கிழக்கு ஊடக சங்கம் கண்டனம்
– கிழக்கு ஊடக சங்கம் மட்டக்களப்பு: திருகோணமலை மாவட்ட செய்தியாளரான அப்துல் சலாம் யாசீம் செய்தி சேகரிக்கச் சென்ற வேளையில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை குறித்து கிழக்கு ஊடக சங்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
-
இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் நூதனசாலையை மாற்றியமைக்கக்கோரி நகர சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையும், மக்கள் அழுத்தப் போராட்டமும்
NFGG ஊடகப்பிரிவு, புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
-
பிரதியமைச்சர் நிரஞ்சன் காலமானார்
கொழும்பு: சுகயீனம் காரணமாக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதியமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.
-
இலங்கையில் உயர் மட்ட வரிசையில் உள்ள நபர் ஒருவரை கொலை செய்வதற்கு தீவிரமான சூழ்ச்சிகள்
கொழும்பு: இலங்கையில் உயர் மட்ட வரிசையில் உள்ள நபர் ஒருவரை கொலை செய்வதற்கு தீவிரமான சூழ்ச்சிகள் மேற்கொண்டிருப்பதாக சர்வதேச புலனாய்வு சேவை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. சர்வதேச புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய கடந்த அரசாங்கத்தில் பல மோசடிகளுடன் தொடர்புபட்ட நபர்கள் இச்சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
-
7.4: நேபாளத்தில் மீண்டும் ஒரு பெரிய பூகம்பம்!!
கத்மாண்டு: நேபாளத்தை மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் தாக்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த புதிய பூகம்பத்தின் அளவு 7.4 புள்ளிகள் என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 30 செக்கன்களுக்கு இது நீடித்துள்ளது.
-
சாய்ந்தமருதில் ஹரீஸ் எம்.பியின் ரூபா 7 மில்லியன் நிதியில் புதிய மைதானம் துரிதமாக அபிவிருத்தி!
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருதில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்திருந்த தாமரை மைதானத்திற்குள் கடந்த சுனாமி அனர்த்தத்தினால் சேதமாக்கப்பட்ட வைத்தியசாலையும், பாடசாலையும் நிர்மாணிக்கப்பட்டதனால் இம்மைதானம் இல்லாமல் ஆக்கப்பட்டது. இதனால் கடந்த 11 வருட காலமாக சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களும், கழகங்களும் மைதானமின்றி கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
-
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய நவாஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய எம்.எச் நவாஸ் 40 வருட சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். மூதூரைப் பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அதிபர் எம்.எச் நவாஸ் தனது ஆரம்பக்கல்வியை மூதூர் மத்திய கல்லூரியிலும், உயர்தரக்கல்வியை வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் கற்றார்.
-
வில்பத்து விவாகரத்தில் அரசாங்கம் நியாயமாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும்
– மஸிஹூதீன் இனாமுல்லா கொழும்பு: வில்பத்து விவாகரத்தில் அரசாங்கம் நியாயமாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும், வில்பத்து தேசிய வனத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி முஸ்லிம் கிராமம் முஸ்லிம்களது மீள் குடியேற்றத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும்.
-
இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் உறவை புதுப்பிக்க இரு நாட்டு சபைகளும் இணக்கம்
லாஹூர்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் சஹாரியார் கான் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்குப் பின்னர் அரசியல் காரணங்களால் இரு நாடுகளிடையிலான கிரிக்கெட் உறவு பாதிக்கப்பட்டது.