-
பலவந்தமாக வெளியேறப்பட்ட வடபுல முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும்
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: கடந்த 1990ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுத்து அவர்களின் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
-
கலை-கலாசார மண்டபம் திறப்பு விழா
ஹில்மி மஃரூப் கிண்ணியா: இஸ்லாமிய விழாக்கள், கூட்டங்களை நடாத்த கலை-கலாசார மண்டபம் இன்று காலை 8.00 மணியளவில் உத்தியோகப்பூர்வமாக கிண்ணியா நகர சபை தவிசாலரும் இலங்கை கணிய மணல் கூட்டுத்தாபனத்தின் (W/D) பணிப்பாளருமான கௌரவ Dr. ஹில்மி மஃரூப் யினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடியில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் 15-05-2015 இன்று வெள்ளிக்கிழமை இரவு அதாவது தற்போது காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பொது மக்களுக்காக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விஷேட கூட்டத்தில் ‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’ தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், இன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
-
பேராதனை பல்கலைக்கழக மருத்துவக் கண்காட்சி ஆகஸ்ட்டில்
– சகாப் ஸஜாத் கண்டி: இயற்கை குடிகொண்டிருக்கும் தெற்காசியாவின் முன்னனி பல்கலைக்கழகமான போராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் 12 வருடங்களின் பின்னர் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் மாபெரும் மருத்துவக் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வைத்திய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான வைத்தியர் சம்பத் தென்னகோன் கடந்த செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தின் செனட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
-
“மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் திட்டமிட்ட வெளியேற்றத்தையும் இனச்சுத்திகரிப்பையும் ஆதரிக்கின்றனர்”
அம்பாறை: “மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் திட்டமிட்ட வெளியேற்றத்தையும் இனச்சுத்திகரிப்பையும் ஆதரிக்கின்றனர்” என அ இ ம காங்கிரஸின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சித்தீக் நதீர் ஊடகச்செய்திகளுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவிப்பதாவது, 30 வருட யுத்தத்தின்போது முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் தமிழர்கள்க்குமிடையில் உறவுப்பாலமாக செயற்பட்டு நாட்டின் நலனையும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் உணர்ந்து செயற்பட்டார்கள்.
-
சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: 2015ம் ஆண்டுக்கான தமிழ், சிங்கள புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி கூடுதலான சேமிப்பு வைப்புக்களை சேமித்து அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
-
தயம்மும் செய்வது எப்படி? (வீடியோ)
வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள்: 10.05.2015 (ஞாயிற்றுக்கிழமை) (நன்றி: சுவனப்பாதை)
-
18 வயது மாணவி புங்குடுதீவில் படுகொலை: பாழடைந்த வீட்டினுள் சடலம் கண்டுபிடிப்பு!
ஊர்காவற்துறை: புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற பாடசாலை மாணவியே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலைக்கு சென்றவர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
-
234 உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு
கொழும்பு: உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று முதல் 234 உள்ளூராட்சி சபைகள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.இது தொடர்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார்.
-
போர் வெற்றி தினத்தின் பெயர் மாற்றம்
கொழும்பு: உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இலங்கை அரசின் சார்பில் போர் வெற்றிநாளாக கடைபிடிக்கப்பட்டுவந்த மே மாதம் 19ஆம் தேதியை பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட தினமாக கொண்டாடுவதற்கு தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது.
-
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக கலாநிதி சபீனாவை நியமிக்கவும்! ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு அவசரத் தீர்மானம்!!
காத்தான்குடி: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தராக கலாநிதி சபீனா இம்தியாசை நியமிக்குமாறு கோரி ஜனநாயகக் கட்சியின் காத்தான்குடி மண்டல மத்திய குழு அவசரத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. நேற்று (14.05.2015) வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மத்திய குழுவின் அவசரக்கூட்டத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தர் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு,