Category: Your Kattankudy
-
மில்லியன் கணக்கான பயணிகளின் நெஞ்சைத் தொட்டுச் சென்ற கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவம்!
-MJ லண்டன்: உலக புகழ்பெற்ற செய்தி ஊடகமான பி.பி.சி. ஆங்கிலச் செய்திச் சேவை நேற்று மாலை இலங்கையில் இடம்பெற்ற கிரான்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் செய்தியை தலைப்பிட்டிருந்தது. உலகில் விமானங்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் மில்லியன் கணக்கான பிரயாணிகள் இச்சம்பத்தை வாசித்து வருகின்றனர்.
-
திருகோணமலை வைத்தியசாலை காவலாளி சிலரின் இங்கிதமற்ற வார்த்தைப் பிரயோகம்
இன்று (11.08.2013) மதியம் திருகோணமலை வைத்தியசாலைக்கு உறவினர் ஒருவரை பார்க்க சென்ற போது நடந்த சம்பவம் – முன்னோடி திருகோணமலை: திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் நோயாளியை அழைத்து செல்வதற்றகாக வந்திருந்த தூரப்பிரதேச முற்சக்கரவண்டி ஓட்டுனருக்கு திருகோணமலை வைத்தியசாலையின் நடைமுறை தெரியாமல் தனது முற்சக்கரவண்டியை வைத்தியசாலையின் பிரதான வாயிலின் ஊடாக குறிப்பிட்ட ஓர் இரு மீட்டர் தூரம் வளாகத்தினுள் கொண்டு சென்று விட்டார்.
-
கிரேண்ட் பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : றிசாத் பதியுதீன்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: கொழும்பு கிரேண்ட் பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், இது குறித்து இன்று பிரதமர் தி.மு.ஜயரத்னவையும் சந்தித்துள்ளார்.
-
கிரான்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவம்: ஜனீவாவுக்கு அறிக்கை
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது பௌத்தசிங்கள இனவாத கும்பல் ஒன்று சுற்றிவளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இச் சம்பவமானது கண்டிக்க தக்கதும் இது குறித்து இலங்கை அரசை பொறுப்புக் கூறும் வகையில் தூதரகங்கள் செயற்பட வேண்டும். என ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் முஸ்லிம் நாடுகளின் தூதரகங்களுக்கு எழுதிய கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
-
வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது போகுமென்ற பயத்தை கொண்டுள்ள வாக்களார்களுக்கான விண்ணப்பம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: பிரதேசத்தில் இருக்கும் நிலைமை காரணமாக ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது போகுமென்ற பயத்தை கொண்டுள்ள வாக்களார்கள் வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையாளரின் அனுமதியினை கோறும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்தவர்கள் தமது விண்ணப்பங்களை நாளை 12 ஆம் திகதி மாலை 4.00 மணிக்குள் தேர்தல் செயலகத்தில் கையளிக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டியுள்ளது.
-
இறைவனின் ஆலயங்களை பாதுகாக்கும் உன்னத பணிக்காக திறன்டு வாருங்கள்
கொழும்பு, கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் தாக்குதல் – களத்தில் SLTJ கொழும்பு: கொழும்பு, க்ரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினர் காவியுடையணிந்த காடையர்களுடன் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக திரண்டனர்.
-
முஸ்லிம்களை கூறுபோட வானொலியிலும் திடலிலும் முழங்கியவர்கள் பேரினவாதத்துக்கு எதிராக முழங்க மறுப்பது ஏன்?
– இஸ்மாயீல் ஏ. முனவ்வர் கொழும்பு: இலங்கையின் முஸ்லிம்கள் மீதான பேரினவாத்தின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறதே தவிர, குறைந்தபாடில்லை. நேற்று மாலை கிராண்பாஸ் பள்ளிவாயலின் மீது மேற்கொள்ளப்பட்ட பேரினவாதத்தின் தாக்குதல் கொழும்பையே அதிரவைத்தது.
-
இன்று ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான பெருநாள் பஸார்-தவிசாளர் அஸ்பர்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஆற்றங்கரை குபாப் பகுதியில் இடம்பெற்று வரும் நோன்புப் பெருநாள் பஸாரின் இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கு பெருநாள் பஸார் ஒதுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து வெற்றிநடை போடும் நடு ஆற்றில் மிதக்கும் உணவகம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்தில் 2013ம் ஆண்டு இம்முறை நோன்புப் பெருநாள் பஸாரில் காத்தான்குடி நகர சபையினால் ஆரம்பிக்கப்பட்ட நடு ஆற்றில் மிதக்கும் உணவகம் அல்லாஹ்வின் உதவியால் வெற்றிப்பாதையில் நடைபோடுகிறது.
-
‘மட்டு பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திரன் இனக்குரோதத்துடன் செயற்படுகின்றார்’- தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விபரிக்கிறார் ஜுனைட் நளீமி
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த இருநாட்களாக ஏற்பட பிறைக்குழப்பம் ஓரளவு சிந்தனையை விட்டு அகழவேண்டும் என்பதற்காக ஒரு மாற்று சூழலில் பெருநாளை கொண்டாடலாம் என்று இன்று எனது உறவினருடன் காத்தான்குடிக்குச் சென்றேன். காத்தான்குடி நகர வரவேற்பு பதாதைக்கருகில் போக்குவரத்து பொலிஸார் ஒருவர் எனது மோட்டார் சைக்கிலை இடைமறித்தார்.
-
பொலிஸ் ஊரடங்கில் கிராண்ட்பாஸ்…(விரிவான செய்தி)
கொழும்பு: கொழும்பு கிரான்பாஸ் பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் பள்ளி ஒன்றின் மீது பௌத்த பிக்குமார் நடத்திய தாக்குதலில் பள்ளிக்கு தேசம் ஏற்பட்டதுடன் அருகில் இருந்த ஐந்து வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
-
ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்த 10 மணித்தியாலத்துக்குள் மற்றுமொரு பள்ளி வாயல் தாக்குதல்
-AK 42 கொழும்பு: இன்று கொழும்பு, கிராண்ட்பாஸ் ஜூம்ஆ பள்ளிவாயல் பேரினவாதிகளால் தாக்கப்பட்டிருக்கின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வேடிக்கை பார்த்து நின்றமை மக்களை ஆத்தரமூட்டியதாக பள்ளிவாயல் நிர்வாகிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.